Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராகிய நீர்வை பொன்னையன், இன்று வியாழக்கிழமை மாலை காலமானார். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பன்முகப் பார்வை கொண்ட இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலிலும் உறுதியாகத் தடம்பதித்து நின்றார். யாழ்ப்பாணம், நீர்வேலியில் 1930 ஆண்டில் பிறந்த இவர், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டத்தையும் பெற்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நரவ-பனனயன-கலமனர/175-247491 ========================= நீர்வை பொன்னையன் கதைகள் http://www.noolaham.org/wiki/index.php/நீர்வை_பொன்னையன்_கதைகள் இவரது நூல்கள்[தொகு] மேடும் பள்ளமும் (1…

  2. அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி :: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்.! ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார். அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் ச…

  3. எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு! 'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை. இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோ…

  4. 'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் - - வ.ந.கிரிதரன் - - 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) - வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை. வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று. அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன். அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்த…

  5. 15/8/2006 ஆண்ரூ முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரகாவியமான லெப்.கேணல் முகிலனுக்கு வீரவணக்கங்கள்.

    • 5 replies
    • 1.7k views
  6. நெல்சன் மண்டேலா அவர்கள் தனது 94வது வயதில் மரணமடைந்துள்ளதாக செய்தியொன்று தெரிவித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். நெல்சன் மண்டேலா Nelson Mandela 2008 இல் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 முன்னவர் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 முன்னவர் அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அரசியல் கட்சி ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பிறப்பு 18 சூலை 1918 (அகவை 94) முவெசோ, தென்னாப்பிரிக்கா வாழ்க்கைத் துணை எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா (1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்…

  7. உணர்ச்சிக் கவிஞர் காசியாணந்தன் அவரகளினால் இயற்றப்பட்டு, நேற்றைய தினம் காலமான உயர் திரு. ஜீவன் ஜோசப் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட பாடல் இது. 70களில் இலங்கை முழுவதும் மட்டக்களப்பின் பெருமையை பறைசாற்றி ஒலித்த பாடல் இது. காலமான ஜீவன் சேர் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. மட்டக்களப்பின் ஒரு மிகப் பெரிய அடையாளத்தை நாம் இழந்துவிட்டுள்ளோம். நன்றி.நிராஜ் டேவிட்

  8. பிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் சகோதரனுமான கணேஸ் காலமாகியுள்ளார். அண்மைக் காலமாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காலமாகியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ்மிக்க நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகனாக இவர் வலம்வந்துள்ளார். விடுதலைப்புலிகளின் போராட்ட காலங்களில் இவரின் குடும்பம் பல அளப்பரிய சேவைகளை செய்துள்ளதுடன், கணேஸ் கலையின் வெளிப்பாடாக பல விருதுகளையும் பெற்…

    • 5 replies
    • 1.6k views
  9. மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவில…

    • 4 replies
    • 671 views
  10. கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

  11. எழுத்தாளர், வானொலி, நாடக, திரைப்பட நடிகர், ஆய்வாளர் என பல்துறையிலும் தன்னை ஈடுபடுத்திய கலைஞர் ‘மாருதி’ சிசு நாகேந்திரன் அவர்கள் 10.02.2020இல் காலமானார்

  12. சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன். ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ஆசிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராகவும் திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தன். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளியோர்க்கு வழங்கியவர். கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்…

    • 4 replies
    • 1.1k views
  13. அஞ்சலி: கி.ராஜநாராயணன் May 18, 2021 கி.ரா மறைந்ததாக இணையத்தில் செய்தி. சமஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறது. சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றித்தன இருந்தார். தசைகளின் இயக்கமும் குறைந்து வந்தது. ஆனாலும் பெரியவர், சாவே இல்லாதவர் என்று நம்பத்தான் உள்ளம் விரும்புகிறது. நோய்க்காலம், எவரும் சென்று சந்திக்கவேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்வேன். எனக்கே சந்திக்கவேண்டுமென ஆசையிருந்தது. ஆனால் கி.ரா இளையவர்கள், வாசகர்கள் சந்திக்க வருவதை விரும்பினார். உற்சாகமாகி நினைவுகளை பெருகவிட்டு பேசிக்கொண்டிருப்பார். அவருடைய விருப்பப்படி கோபல்லகிராமம் மலையாள மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். இப்போது இச்செய்தி. வணங்கு…

  14. மாவீரர்வீரவேங்கை முரசொலியின்(தர்மதுரை அரிகரன்) 90ம் நாள் வீர நினைவுகள்! கலாநிதி தர்மதுரை குடும்பத்திற்கு கனிஷ்ட புதல்வனாக துணுக்காய் மாவட்டத்தில் 1984ம் ஆண்டு வீரப் பிறப்பெடுத்தான் முரசொலியென்னும் அரிகரன். மிகவும் கெட்டித்தன மாணவனாக மல்லாவி மத்திய கல்லூரியில் தரம் 1 இருந்து 13ம் ஆண்டுவரை கல்விபயின்று தந்தையின் வழியில் வைத்தியராக வரவேண்டும் என்ற கனவில் தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகளின் மருத்துவசேவையில் தன்னை அர்ப்பணித்தான். வீரவேங்கை முரசொலியின் பிரிவில் வாடும் குடும்பத்தார்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்! -நண்பர்கள்

  15. அஞ்சு என்கின்ற கவிஞையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என் மனதையும் தொட்டது அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் (ஆக்கம் அஞ்சு) எனது அம்மா சுனாமி நடந்த வேளை... அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள், அங்கவீனம் இல்லாத சிறார்கள் என்று 12 பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தா .அதில் 4 பெண் பிள்ளையும் 1 ஆண் பிள்ளையும் இராணுவத்தினர் போட்ட குண்டுத் தாக்குதலுக்கு இரையாகி விட்டார்கள் . எல்லோரையும் என் தம்பிகளாகவும் தங்கைகளாகவுமே நானும் ஏற்றுக் கொண்டேன். ஒரு தங்கச்சி எனக்கு கடிதம் போட்டா அவாக்கு 7 வயது. அவவுக்கு சொந்த அக்கா ஒருவர் இருக்கிறா.(own) அவாக்கு 9 வயது. அதனால் என்னை பெரியக்கா என்று சொல்லுறன் என்று. பெரிய அக்கா என்று தான் கடிதம் போடுவா. இப்போது யாரும் இல்லை எனக்கு. ஆரம்பத…

    • 4 replies
    • 1.5k views
  16. Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 04:36 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இன்றையதினம் அதிகாலை காலமானார். நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/180742

  17. டென்மார்க் கிளையின் முனைப்பான செயற்பாட்டாளர் திரு. செபஸ்ரியான் செல்வராஜா 17.08.2006 அன்று அகாலமரணம் அடைந்துவிட்டார்.டென்மார்க்க

    • 4 replies
    • 1.8k views
  18. நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று.. 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது…

  19. ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்…. February 23, 2019 2017 தை 14 ,15 இல் கனடாவில் இடம்பெற்ற, கருணா வின்சென்ட்டின் கண்காட்சியை முன்னிட்டு வெளிந்த கட்டுரையை இங்கு நினைவு கூர்கிறோம்… கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து Jan 13, 2017 @ 13:52 Edit கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் த…

  20. மாவீரர் தமிழரசனின் வீரவணக்க நாள் சாதி ஒழிப்புப்போரை முன்னெடுத்து தமிழ் மக்கள் விடுதலையை வென்றெடுக்கப் போராடிய மாவீரர் பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நாள் (01.09.1987) தோழர்களே! சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்! தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்! தோழர் தமிழரசன் – அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார். இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சா…

  21. நம்பவே கடினமான செய்திகள்.. முகநூலில்.. யாழ் இந்து இணையத்தில்.. படிக்கக் கிடைத்தது. யாழ் மத்திய கல்லூரி மற்றும் ஐங்கரன் சேரின் (ஐங்கரநேசன் வட மாகாண சபை அமைச்சர்) யுனிவேர்சல் தனியார் கல்வி நிறுவனம் உட்பட சிலவற்றில் கல்வி கற்பித்த.. விஞ்ஞான ஆசிரியர் பாலா மாஸ்டர் (செம பகிடி விடுவார்) கடந்த மாதம் (ஜூலை 2015) இறைவனடி சேர்ந்து விட்டதாக யாழ் மத்திய கல்லூரி முகநூல் பக்கத்தில் இருந்து அறியக் கிடைக்கிறது. மதிப்புக்குரிய ஆசான் பாலசுப்பிரமணியம் என்ற பாலா சேருக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.. அவரின் ஆத்மா நித்திய சாந்திய அடைய பிரார்த்தனைகளும். மேலும்.. யாழ் இந்துக் கல்லூரி (2013 இல் இருந்து வேம்படிக்கு இடமாற்றப்பட்டிருந்தவர்) விலங்கியல்/உயிரியல் ஆசிரியர் பாஸ்கரன் அவர்களும் கடந்த ஆண்டி…

  22. 29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். puthinam

  23. 02.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் லவன்(நிலவன் - லீமா) அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் இன்று.

  24. இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார். Image captionசற்சொரூபவதி நாதன் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.