Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார் சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். பதிவு: ஜூன் 19, 2020 15:46 PM சென்னை, தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 87. இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம். பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர…

  2. ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.! ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/மூத்த-பெண்-எழுத்தாளர்-பத/ கண்ணீர் அஞ்சலிகள் ..

  3. யாழ் இந்து கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு சரவணமுத்து பொன்னம்பலம் காலமானார். Mr.Saravanamuthu Ponnampalam, Retired Principal and Sydney OBA Patron, has passed away in Sydney Posted on: 23/07/2018 (Monday) Mr.Saravanamuthu Ponnampalam, the Retired Principal and the Patron of Sydney OBA, has passed away in Sydney on Monday, the 23rd July 2018, at around 8.30 PM at his residence in Westmead. He leaves behind his loving wife Dr.Gunapoopathy, son Dr.Visakan, daughter in law Komathy Visakan, and grand children Seyon, Yuvan, and Tharini. His funeral details will be notified later. …

    • 3 replies
    • 661 views
  4. ஈழநாதம், வெள்ளிநாதத்தின் துணை ஆசிரியராகவும், மக்கள் நாளேட்டின் செய்தியாளராகவும் பணியாற்றிய க.ஜெயசீலன் (வயது 27) நேற்று அகாலச்சாவடைந்தார். கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திப் பகுதியில் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் அவர் சிக்கியதில் இந்த விபரீதம் நேர்ந்தது. இவருக்கு விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கியிருக்கின்றனர். படுகாயமடைந்த நிலையில் இவர், கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இல: 12, ஆனந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர் க.ஜெயசீலன் (வயது 27) துடிப்…

    • 2 replies
    • 1.5k views
  5. "மேகம் கருக்கையிலே.." புகழ் காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் சென்னை: பழம் பெரும் நடிகர் "வெள்ளை சுப்பையா" உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். வெள்ளை சுப்பையா, எஸ்.வி.சுப்பைய…

    • 2 replies
    • 1.3k views
  6. எந்தவிதமான பயங்கரவாதியும் மதிப்பளிக்கும் இடம் வைத்தியசாலை ஆனால் 21/10/2007 அன்று அகிம்சை தேசத்தின் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் அட்டூழியம் செய்த படைகளால் வைத்தியர் தாதியர் நோயாளர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர் என எந்த பாகுபாடு காட்டாமல் சன்னங்களால் துளைத்து பலியெடுத்த 20 ஆண்டு நாள் இன்று அன்று ராஜீவ் காந்தியின் பயங்கரவாதத்தால் தம் உயிரை துறந்த எம் உறவுகளுக்கு 20வது ஆண்டு நினைவஞ்சலிகளை மிக்க வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்

  7. எழுத்தாளர் கோவை ஞானி காலமானார் கா.சு.வேலாயுதன் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86. கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவைய…

  8. சிறீலங்காவில் பெற்றோலின் விலை உயர்வு சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான பெற்றோலிய கூட்டுத்தாபனங்களில் எதிர்வரும் ஈண்டில் இருந்து பெற்றோலியத்தின் விலை அண்ணளவாக ரூ5 ஆல் அதிகரிக்கும் என சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். ஆனாலும் டீசலின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சியே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.3k views
  9. யாழ்பாணம் வண்ணார்பேட்டை பண்ணையை சொந்த இடமாகவும் பிரான்ஸ் (பாரிஸ்) வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் பிள்ளை விஜயன் (விசயப்பு) இன்று 12/4/2020 காலமானார். என்ற செய்தி கேட்டவுடன் விசயப்புவின் நினைவுகளின் அதிர்வலைகள் என்னுள் உயிர்த்தது. ஒரு சிலரே மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள்,அதில் ஒருவர் இந்த சிதம்பரம் பிள்ளை விஜயன். 1995 ம் ஆண்டில் இவரை சந்திப்பதற்கு சென்றேன். Belleville இல் பர்ஹான் அவர்களின் இல்லத்தில் இவர் தங்கியிருந்தார் .அங்கு வைத்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் . ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியவர்களை அந்த நாட்டின் சட்டம், மொழி ,தெரியாத காரணத்தால் அவர்களை சுரண்டி பிழைப்பவ…

    • 2 replies
    • 998 views
  10. அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் காலமானார். On Nov 14, 2022 தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று (13) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர்.…

  11. யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் இராசையா மறைந்தார்.! யாழ்ப்பாணத்தின் மூத்த பிரபல்யமான ஓவியர் ஆ.இராசையா இன்று காலமாகியுள்ளார். புற்று நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது.. "ஓவியர் பற்றிய இந்த வரலாறு - 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது" 16.08.1946 இல் அச்சுவேலியில் ஆசை – செல்லம்மா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த ஓவியர் இராசையா தற்போது இல 36, பண்டாரிக்குளம் வீதி, நல்லூரைத் தனது வாழ்பதியாகக் கொண்டுள்ளார். இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் இவர் பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர். அச…

  12. திருகோணமலை கட்டைபறிச்சான் கிராந்திமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலில் நேற்று வீரச்சாவடைந்த மேஜர் பரணியிற்கு எம் வீரவணக்கம்

    • 2 replies
    • 2.5k views
  13. காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் உயிரிழப்பு 28 Views காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவரது மகன் மாகாலிங்கம் உசாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மீண்டு வந்தவர். பின்னர் இவர் தாயகத்தில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களிலும் தனது மகனை தேடி நீதி கேட்டு கலந்து கொண்டார். இந்த நிலையிலே இவர் நேற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாம…

  14. இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது. ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா …

  15. அன்று வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில் பட்டது. "உமர் மறைவு" பற்றிய செய்தி அது .. சற்று திக்கித்து சுதாகரித்து சுட்டியை க்ளிக் பண்ணுவதற்குள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி மறைந்தன.. என்னவாயிற்று துபாயில்தானே இருந்தார்..ஏதாவது விபத்தாகவிருக்குமே?..மத்தியகிழக்கு நாடுகளில் வேலையிலிருப்போர் விபத்து மரணம் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதைவிட அண்மையில்தான் கார்த்திகேயன் என்று ஒரு வலைப்பதிவர்கூட பெங்களுரில் விபத்தில் பலியாகியிருந்தார்.எனவே பல எண்ணங்கள்.. பின்னர் அந்த மறைவு பற்றிய முப்தியின் பதிவைப் பார்த்த பே?து கூட அதில் ஆரம்பத்தில் மறைவு தவிர வேறு போதிய விபரம் கிடைக்கவி…

    • 2 replies
    • 2.2k views
  16. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி சத்யானந்தன் நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று கூறலாம். 18ம் நூற்றாண்டில் மகாண்டோ என்னும் மிகவும் சிறிய கிராமம் புயந்தியஸ் என்னும் ஒரு குடும்பத்தினரால் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்ட சிறு நகரமாக உருவெடுக்கிறது. ஜோஸ் அர்காடியோ புயந்தியா குடும்பத் தலைவர். அவர் கிராமத்தின் மையமாகவும் தலைமையாகவும் செயற்படுவரும் ஆவார். அந்தக் கிராமத்தின் மிகப் பெரிய தனி…

  17. பதிவு ஒன்று: அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை. இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை ந…

  18. பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நினைவஞ்சலி விபரங்களுக்கு http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108

  19. ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி jeyamohanSeptember 28, 2025 ரமேச்ன் 2023 விஷ்ணுபுரம் விழாவில் ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று ந…

  20. அஞ்சா நெஞ்சன் சதாமுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  21. இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காலமானார் ! 02 Oct, 2022 | 09:52 AM இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காமானதா அவரது குடும்பத்வர்கள் தெரிவித்தனர். தர்சன் தர்மராஜ் தனது 41 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இன்று (2) அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏராளமான சிங்கள தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சிங்கள, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தர்சன் தர்மராஜ். சிறந்த நடிகர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தர்சன் தர்மராஜின் மறைவுக்கு திரையுலகப் பிரமுக…

  22. எனது ஜீவன் ஒன்றுதான்... மனைவி ஜீவாவுக்கு இளையராஜாவின் பாட்டு! இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜீவாவின் உடல் சொந்த ஊரான பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜீவா மீது மிகுந்த பிரியம் கொண்ட ராஜா, பல பாடல்களை ஜீவாவை நினைத்துதான் மெட்டு அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதயக்கோயில் படத்தில் 'இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ...' என்ற பாடலில் எனது 'ஜீவன்' நீயடி... என்றும் புதிது... என்ற வரிகளை என் மனைவி ஜீவாவை மனதில் வைத்துத் தான் எழுதினேன் என்று முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுள்ளார் இசையமைப்பாளர் இளையரா…

  23. பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்! AdminDecember 9, 2022 தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் அவர்களின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் நேற்று (08.12.2022) காலமானார். யாழ்.தென்மராட்சி, கொடிகாமம் வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக நேற்றுக் காலமானார். http://www.errimalai.com/?p=79992

  24. பிரபல சித்த மருத்துவர் கதிரவேற்பிள்ளை சரவணமுத்து காலமானார் ஜவெள்ளிக்கிழமைஇ 2 மார்ச் 2007இ 19:23 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ வன்னியின் பிரபல சித்த மருத்துவரும் வாண வேடிக்கை கலைஞருமான கதிரவேற்பிள்ளை சரவணமுத்து அவரது 73 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.34 மணிக்கு சுகவீனம் காரணமாக காலமானார். வன்னியின் தொன்மையான சித்த மருத்துவத் தலைமுறையில் வழிவந்த இவர் சிறந்த மூலிகை மருத்துவராக விளங்கினார். சித்த மருத்துவத்துடன் வாண வேடிக்கைக்கான சாதனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கைவரப்பெற்றவராகவும் கும்மி கோலாட்டம் உட்பட்ட பாரம்பரியக் கலை வடிவங்களில் துறை தோய்ந்தவராகவும் இவர் விளங்கியிருந்தார். புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.