Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அ…

  2. [Wednesday, 2011-07-06 21:51:16] பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

  3. யாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.

  4. Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

    • 61 replies
    • 4.1k views
  5. மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்! சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர…

  6. பிரபல இலங்கை ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார். பொன்மணி குலசிங்கம் நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88. இசைப் பட்டதாரியான இவர், தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார். 1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாட்டாளர், மேலதிக இயக்குனர், இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார். பல முன்னணி அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை இவர…

  7. மட்டக்களப்பு பெரியபுல்லுமலை பகுதியில் விசேட அதிரடிப்படையினருடனா சண்டையில் வீரச்சாவடைந்த 11 போராளிகளுக்கும் என் வீரவணக்கம் ஈழவன்

  8. தமிழ்ச்செல்வன் அண்ணா இருந்திருந்தால் மக்களிடம் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது. எப்படியாவது தெம்பூட்டும் வார்த்தைகளால் மக்களை அரவணைத்திருப்பார். அவர் இல்லை என்பது சோகமானதாக இருந்தாலும், அவரின் இலட்சியப்பாதையில் வெற்றி பெறுவதே அவரின் ஆத்மாவிற்கு செய்யக் கூடிய ஒரே ஒரு கடமையாகும். காலம்காலமாக எம் போராட்டத்தில் பல மூத்த தளபதிகளை இழந்தபோதும், அது மீண்டும் வீறு கொண்டு எழுந்ததே வரலாறு. இம்முறையும் அது மாறாது.

    • 11 replies
    • 3.3k views
  9. "தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலி........... விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் நடிகை ரேணுகா முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........

  10. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்

  11. குடித்து ரொம்பக் காலம் ஆயிற்றே என்று, சென்ற வாரத்தில் ஒருநாள் மதியம் ரெமி மார்ட்டினுடன் அமர்ந்தேன். தொட்டுக்கொள்ள ஒரு சாலட் செய்தேன். தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, கோவைக்காய், ஸுக்னி, ஆலிவ் காய், முட்டைக்கோஸ், கேரட் (துருவியது), கேப்ஸிகம் ஆகிய ஒன்பது அயிட்டங்களை பொறுமையாக வெட்டிப் போட்டு, எலுமிச்சைப் பழம் பிழிந்து செய்த சாலட். அப்போதுதான் குஷ்வந்த் சிங்கின் மரணச் செய்தி வந்தது. 'என்ன ஓர் ஒற்றுமை?!’ என்று நினைத்துக்கொண்டேன். குஷ்வந்த், தன்னை ஒரு குடிகாரன் என்றும், ஸ்த்ரீலோலன் என்றும் சொல்லிக்கொண்டவர். 'எனக்கு ராகிமால்ட் வேண்டாம்; சிங்கிள் மால்ட் விஸ்கி போதும்’ என்பார். பெண்களைப் பற்றி, தனது 97-ம் வயது முடிந்தபோது இப்படிச் சொன்னார், 'பெண்களை தாயாகவும், சகோதரியாகவும், ப…

  12. சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய 'நம்மால் முடியும் தம்பி நம்பு' என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். http://news.vikatan.com/?nid=12112#cmt241

  13. உணர்ச்சிக் கவிஞர் காசியாணந்தன் அவரகளினால் இயற்றப்பட்டு, நேற்றைய தினம் காலமான உயர் திரு. ஜீவன் ஜோசப் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட பாடல் இது. 70களில் இலங்கை முழுவதும் மட்டக்களப்பின் பெருமையை பறைசாற்றி ஒலித்த பாடல் இது. காலமான ஜீவன் சேர் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. மட்டக்களப்பின் ஒரு மிகப் பெரிய அடையாளத்தை நாம் இழந்துவிட்டுள்ளோம். நன்றி.நிராஜ் டேவிட்

  14. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவு- வைகோ இரங்கல் 19 Views மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார். ஐ.நா.மன்றத்தில் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் ஆய்வு உதவிய…

  15. தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் சாவடைந்துள்ளார்! March 27, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/tempsnip.jpg தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் இன்று (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார். http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/FB_IMG_1648414187254-191x300.jpg …

  16. அஞ்சலி: ஆ. வேலுப்பிள்ளை (1936 - 2015) உறுதிகொண்ட நெஞ்சினர் எம்.ஏ. நுஃமான் தமிழறிஞர், பேராசிரியர் வேலுப்பிள்ளை இன்று நம்முடன் இல்லை. நவம்பர் முதலாம் தேதி அவர் காலமானார் என்ற செய்தியை அவரது மாணவர்களும் தமிழியல் ஆய்வாளர்களும் கவலையோடு எதிர்கொண்டனர். அவர் நெடுநாள் நோய்ப்படுக்கையில் இருக்கவில்லை. அமெரிக்காவில் சன் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள தனது வீட்டில் குளியலறையில் விழுந்ததனால் ஏற்பட்ட தலைக்காயம் அவரது மரணத்துக்குக் காரணம் எனத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தவகையில் அது எதிர்பாராத திடீர் மரணம்தான். இறக்கும்போது அவருக்கு வயது 79. இன்னும் சில ஆண்டுகளாவது அவர் …

  17. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் ரா.கிரிதரன் முதல் முறை பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்தபோது சட்டைப் பையில் அவர் வைத்திருந்த பலவிதமான வண்ணப் பேனாக்கள் முதலில் ஈர்த்தன. சென்னை உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலில் அவர் உட்கார்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மூன்று மேஜைகள் தாண்டி நான் உட்கார்ந்திருந்தேன். தூரத்திலிருந்து பார்த்ததும் அவர்தானோ என சந்தேகம் இருந்ததால் அவரைப் பார்த்தபடி காலியாக இருந்த சீட்டைத் தேடி உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் அடிக்கடி அங்கே வருவார் என்பதோ, அடுத்தஇரண்டு வருடங்களில் பல முறை பார்க்கப்போகிறேன் என்பதோ உணராதிருந்தேன். ஒரு பிரபலத்தை திடீரெனப் பொது இடத்தில் சந்தித்தால் வரும் பதட்டம் இருந்தது. என்னுடன் வந்த வடக்கத்திய நண்பருக்கு சந்தேகமாகவே இருந…

  18. தமிழரின் மரபு கலை சிலம்பாட்டம், உடுக்கு பயனை, போன்ற பாரம்பரிய கலைகளின் குருவாக இருந்துகொண்டு பல மாணாக்கர்கள் யாழ்மண்ணிற்கு அளித்த மண்ணின் மைந்தனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற போராளி கடற்படைதளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணாவுமாகிய சிவலிங்கம் என்றழைக்கப்படும் கலாபூசணம் தில்லையம்பலம் தவராசா இன்று காலை 2.30மணியளவில் இவ்வுலகைவிட்டு சென்றுள்ளார். இவருக்கு எனது கண்ணீர் கலந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  19. அண்ணா அண்ணா தமிழ்ச்செல்வன் அண்ணா அஞ்சலிப்பாடலுடன் என் கண்ணீர் அஞ்சலிகள் http://www.dailymotion.com/video/x3dgsl_an...lvan-anna_music

  20. இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி அவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வல்லமை படைத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் ஸ்ரீ ஆ.சந்தானகிருஷ்ணன் அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார். ஈழமணி திருநாட்டின் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தன் தந்தையாரான ஸ்ரீ ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றவர். அமரர்களான இசை மேதைகள் வலங்கைமான் ஸ்ரீ ஏ.சண்முகசுந்தரம்பிள்ளையும், ஸ்ரீ ஏ.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள். காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் ஓய்வுபெற…

  21. Started by akootha,

    [size=4]தெய்வநாயகம் என்றவுடனே நம் தமிழ் உணர்வாளர்களுக்கு நினைவுக்கு வருவது தி நகர் தெய்வநாயகம் பள்ளி தான் .உச்ச கட்டமாக ஈழத்தில் போர் நடந்த நேரத்தில் கருணாநிதி அரசின் கெடுபிடியால் ,ஈழ படுகொலை குறித்த நிகழ்ச்சிகளை நடத்த பொது இடத்திலும், தனியார் இடங்களிலும் எவரும் அனுமதி மறுத்த நிலையில் , ஈழம் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு தன் கதவை திறந்து விட்டது இப்பள்ளி நிகழ்ச்சி ,பொது கூட்டம் என கேட்டதற்க்கெல்லாம் அனுமதித[/size][size=4]ததோடு .அதர்க்கு மிக குறைந்த வாடகையாக 1000,2000 மட்டுமே வாங்கினர், என்பது ஈழம் சார்ந்த தமிழக போராட்ட வரலாற்றில் பதிவான செய்தி.[/size] [size=4]ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவிய கண்காட்சியாகாட்டும் 2010,2011 நடத்திய மாவீரர் தின நிகழ்வு ,பல கருத்தரங்குகள் ,ந…

  22. அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி ஜெயமோகன் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார். மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.…

  23. பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார் சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். பதிவு: ஜூன் 19, 2020 15:46 PM சென்னை, தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 87. இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம். பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர…

  24. இலக்கிய வழிகாட்டியாகவும் பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் தமிழ்த் தேசியச் சான்றோராகவும் விளங்கிய தோழர் தி.க.சி. அவர்கள் 25.03.2014 அன்று இரவு காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தோழர் தி.க.சி. அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய லெனினியத்தின் மீது நீங்காத பற்றுறுதி கொண்ட தோழர் தி.க.சி., அந்தந்த மண்ணுக்கேற்ப மார்க்சியம் பயன்படுத்தப்படவேண்டும் - வளர்க்கப்படவேண்டும் என்ற தெளிவில் உறுதியாக இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக தி.க.சி. அவர்களோடு எனக்கும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. தமிழர் கண்ணோட்டம் இதழில் வரும் கட்டுரைகள் மற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.