Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழரின் மரபு கலை சிலம்பாட்டம், உடுக்கு பயனை, போன்ற பாரம்பரிய கலைகளின் குருவாக இருந்துகொண்டு பல மாணாக்கர்கள் யாழ்மண்ணிற்கு அளித்த மண்ணின் மைந்தனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற போராளி கடற்படைதளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணாவுமாகிய சிவலிங்கம் என்றழைக்கப்படும் கலாபூசணம் தில்லையம்பலம் தவராசா இன்று காலை 2.30மணியளவில் இவ்வுலகைவிட்டு சென்றுள்ளார். இவருக்கு எனது கண்ணீர் கலந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  2. மூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்! மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐராவதம் மகாதேவன் 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார்.இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்த…

  3. எழிலனின், தந்தை... காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார். கிளிநொச்சியில் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாக…

  4. அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்!… முருகபூபதி. கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக – இலங்கை – புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார் முருகபூபதி. “பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்.” எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும…

    • 1 reply
    • 1.2k views
  5. இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018 எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர். முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர…

    • 8 replies
    • 1.8k views
  6. யாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் : October 9, 2018 திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார். அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடு…

  7. "மேகம் கருக்கையிலே.." புகழ் காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் சென்னை: பழம் பெரும் நடிகர் "வெள்ளை சுப்பையா" உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். வெள்ளை சுப்பையா, எஸ்.வி.சுப்பைய…

    • 2 replies
    • 1.3k views
  8. யாழ் இந்து கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு சரவணமுத்து பொன்னம்பலம் காலமானார். Mr.Saravanamuthu Ponnampalam, Retired Principal and Sydney OBA Patron, has passed away in Sydney Posted on: 23/07/2018 (Monday) Mr.Saravanamuthu Ponnampalam, the Retired Principal and the Patron of Sydney OBA, has passed away in Sydney on Monday, the 23rd July 2018, at around 8.30 PM at his residence in Westmead. He leaves behind his loving wife Dr.Gunapoopathy, son Dr.Visakan, daughter in law Komathy Visakan, and grand children Seyon, Yuvan, and Tharini. His funeral details will be notified later. …

    • 3 replies
    • 661 views
  9. யாழ் கள கனடா வாழ் உறவான சபேஷ் இனது தந்தையார் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார் எனும் செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கின்றேன் இங்கு. அன்னாரின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு விரைவில் எடுத்து வரப்பட்டடு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிய முடிகின்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை தகவல்கள் கிடைத்தவுடன் அறியத் தருகின்றேன். தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

  10. எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு! 'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை. இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோ…

  11. தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கு கண்ணீர்அஞ்சலி கண்ணீர் அஞ்சலிகள்.. 

    • 22 replies
    • 2.2k views
  12. பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran சென்னை: இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்…

    • 21 replies
    • 5.1k views
  13. யாழிணைய கருத்துக்களப் பொறுப்பாளர் நிழலியின் மாமியார் காலமானார். நிழலியினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் யாழ் நாமும் பங்குகொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.

  14. பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் காலமானார் பிரபல பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஞாயிறன்று காலமானார். இவருக்கு வயது 81. உடல் நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் இன்று காலமானார். பல மறக்க முடியாத திரைக்காவியங்களை அளித்தவர் சி.வி.ராஜேந்திரன். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். மதுராந்தகம் அருகே சித்தமுர் இவரது சொந்த ஊர். இவர் மனைவி பெயர் ஜானகி. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் உள்ளதால் இறுதிச் சடங்கு இவர் வந்தவுடன் நடைபெறும் என்று தெரிகிறது. சி.வி.ராஜேந்திரன் படங்களில் வசனம் எழுதிய சித்ராலயா கோபு கூறும…

  15. அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார். ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும் மூத்த சைவத்தமிழறிஞருமான திருமதி வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்று (13.03.2018) காலை காலமானார். கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டார். ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமைசேர்த்தவராவார். ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் தனித்துவம் வாய்ந்தவராகச் செயற்பட்டார். தமிழ்நாடு மயிலாடு…

  16. தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு! *இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர் *இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் *முதலாவது : திரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்…

  17. ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்! ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த படைப்பாளியாக இவர் கருதப்படுகின்றார். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு‘, (அனுபவக் கட்டுரைகள்) , ‘வானத்தைப் பிளந்த கதை‘, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்க…

    • 8 replies
    • 1.4k views
  18. http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம் என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில். A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens. (GOOGLE MAPS STREET VIEW) A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said. The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when…

    • 20 replies
    • 2.5k views
  19. ஏ.இ. மனோகரன் காலமானார் சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-…

  20. ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018 யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விர…

    • 42 replies
    • 4.3k views
  21. ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்! ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர். 1964ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை நிறுவிய இவர் ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில்லையூர் செல்வராசான் எழுதிய “கண்மணி ஆடவா ..“ என்ற பாடல் (https://www.youtube.com/watch?v=9MmnlgjcI-0) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை தென்றலும் புயலும் என்ற…

  22. யாழ்.கள உறவான... poet என்ற பெயரில் உள்ள, வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் சகோதரி, அண்மையில் காலமாகி விட்டதாக அறிந்தோம். அவரின் பிரிவால் துயருறும் ஜெயபாலன் அவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  23. மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்! சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர…

  24. நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி…

    • 3 replies
    • 961 views
  25. அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி ஜெயமோகன் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார். மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.