எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
வடக்கு பௌத்தம் யாருடையது? ஜெரா படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக…
-
- 1 reply
- 921 views
-
-
குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ… ஜெரா படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை (தகரம், கிடுகு, பனையோலை, பழைய சேலை, பெட்சீற், பிளாஸ்ரிக் தகடுகள், காட்போர்ட் மட்டை, சிப்போர்ட் என பல கலவைகளால் அந்தக் கூடுகளின் கூரைகளும், சுவர்களும் காப்பிடப்பட்டிருக்கின்றன) அடையும் சின்னச் சின்ன சந்துபொந்துகளெல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள். எப்போதோ நடந்த கோயில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
எம் மண்ணின் உலக சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ************************************************ ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவே...கானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகே…
-
- 0 replies
- 829 views
-
-
தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் …
-
-
- 12 replies
- 4.5k views
-
-
தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.பொது நூலகம் இனவெறிபிடித்த காடையர்களினால் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருத…
-
- 5 replies
- 1k views
-
-
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கமாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க …
-
- 4 replies
- 2k views
-
-
இலங்கைத் தீவாகப் பரிணமிக்காத காலத்தே... சு.கி. ஜெயகரன் பனியுகங்களின் போதும், கற் காலத்தவர் வாழ்ந்த காலத்திலேயும், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன் வரையிலும், இலங்கை அன்று இந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இருந்தது. சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த ஆதிமனிதயினத்தவர், அன்றிருந்த தென்னிந்திய - இலங்கை ஒன்றுபட்டிருந்த நிலப்பரப்பில் பரந்திருந்த சதுப்புநிலக்காடுகள், புல்வெளிகள், மணல்வெளிகள் எங்கும் திரிந்து, வேட்டையாடியும், உணவு தேடியும் அவ்வப்போது அங்கு தங்கியும் வாழ்ந்திருந்தனர். கடைசிப் பனியுகத்திற்குப்பின் கடல் மட்டம் உயர்ந்து, இலங்கை தலைநிலத்திலிருந்து அறுபட்டுத் தீவாக உருவாகியது. அதற்குப்பின், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிறுசிறு அலைகளாக, சிறுசிறு குழுக்களாக தரை வழியாக வந்து க…
-
- 1 reply
- 1.7k views
-
-
போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? எத்தனை இசைப்பிரியாக்களில் உன் இச்சை அடங்கும்...? எத்தனை கிருஷாந்திகளில் உன்னாசை முடங்கும்...?? கூறு புத்தா... கூறு!!! எங்கள் அப்பாவிப் பெண்களை... ஏன் கூறுபோட்டாய் கூறு?! ஓ... புத்தனே...! உன் விழிகளை அகலத் திற...! உலகமே பார்க்கும்... உன் புதல்வர்கள் செய்த மகா கொடுமைகளைப் பார்!!! கண்களை மூடிக்கொண்டு... தியானமென்று நடிக்காதே...! தலையில் கைவைத்து... ஆனந்…
-
- 1 reply
- 695 views
-
-
நான்கு வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்தது போலவே இன்னும் இருக்கிறது அளிக்கம்பை கிராமம். ஆனாலும், ஆங்காங்கே சிறிது சிறிதாக சில மாற்றங்கள். இருந்த போதும், அளிக்கம்பை மக்களின் வாழ்க்கை எப்போதும் போல் வரண்டே கிடக்கிறது. அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபை பிரிவுக்குட்பட்டது அளிக்கம்பைக் கிராமம். வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 306 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்தக் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளில் அதிகமாவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதற்கு அவர்களின் வாழ்க்கை சான்றாக இருக்கிறது. அளிக்கம்பை பிரதேசத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், சில ‘தார்’ வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனாலும், முறையான பராமரிப்புகள் இல்லாமை காரணமாக அந்த வீதிகள…
-
- 2 replies
- 2.1k views
-
-
http://youtu.be/cyb2MhspJFw
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழப்புயல்கள் வழங்கும் பாடல் : முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ... குரல் : நாதன் (நெதர்லாந்து) பாடல் வரிகள் : ஈழப்பிரியன் (ஜேர்மனி) இசை : சேகர் - தமிழ்சூரியன் (நெதர்லாந்து) Eelappuyalkal Presents Song: Mullivaaikkaal Solliya Sethi... Vocal : Nathan (Netharland) Lyrics:Eelappriyan (Germeny) Music:Sekar - Tamilsooriyan (Netharland) https://www.youtube.com/watch?v=RzZNccVNBHc
-
- 2 replies
- 912 views
-
-
இது எந்த ஊருங்கப்பா? இணையத்தில் மதுரையில் பொறியியல் சம்பந்தமான திட்ட வேலைகளை தேடியபோது இந்த படங்கள் கிடைத்தன.. ஒரு மாதத்திற்கு முன் எடுத்த இந்த படங்களில் மிளிர்வது இது உங்கள் தாய் மண் போல் தெரிகிறது... சரி பாருங்கள் உறவுகளே..!
-
- 8 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால்: துயரத்தின் முகவரி ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கை முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2013ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் போயிருந்தேன். திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த அந்த இடத்தைப் பார்த்தபோது, வரலாறு கண்ணீர்சிந்திய இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். ஏற்கெனவே இணையத்தில் வெளியாகிய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்த இடந்தான். என்றாலும், நேர்முகமாகப் பார்த்தபோது வார்த்தைகளில் சொல்லிவிட இயலாத வலியை அனுபவித்தேன். தென்னை மற்றும் பனைமரக் குற்றிகளால் அரணமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் உட்சரிந்திருந்தன. மண்ணுள் புதையுண்ட துணிகளதும் நீலநிறக் கூடாரத்துண்டுகளதும் சிறிய பகுதிகள் வெளியி…
-
- 1 reply
- 606 views
-
-
ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர். 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம…
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கையின் இரவுகளும் வெள்ளைவான் கடத்தல்களும் கருணாகரன் லீனா மணிமேகலையின் 'White Van Stories' (வெள்ளைவான் கதைகள்) - கொடிய வாழ்க்கையின் நேரடிச்சாட்சியம் வயதை மீறி, ஒடுங்கிய கன்னங்களோடும் ஒளிமங்கிய கண்களோடும் ஓர் இளம் பெண், கையிலே தன்னுடைய கணவரின் படத்தை ஏந்திக் கண்ணீர் விட்டபடி கதறி அழுது கொண்டிருக்கிறாள். அவளின் இடுப்பில் ஒரு குழந்தை. அவளுடைய கால்களைப் பற்றி அணைத்தபடி இன்னும் இரண்டு பிள்ளைகள். ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய கணவரைத் தேடிக்கொண்டிருக்கிறாள். 2009 இல் ஒரு முன்னிரவில் திடீரென அவர்களின் வீட்டுக்கு வந்த யாரோ அவளுடைய கணவரைக் கடத்திக் கொண்டு போனார்கள். அவள் அழுது புலம்பினாள். காற்றிலே அவளுடைய குரலும் அவளுடைய கணவரைக் கடத்திச் சென்ற 'வாகனத்தின்' சத்தமும் கரை…
-
- 0 replies
- 697 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும்! படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை. எப்போதோ நாங்கள் போயிருப்போம். இத்தனை வருட காலமாக எமது நிலத்துக்கு போய்சேர்வதற்காகவே காத்திருக்கிறோம். எமக்கு எமது நிலம்தான் வேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பிள்ளை. சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபா நிதி ஒதுக்கியிருப்பதாக உயர்நீதி…
-
- 2 replies
- 637 views
-
-
இப்படியொரு அம்மாக்கள்… ஜெரா காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி சேகரிக்கும்போதும், அந்தத் தாய்களின் ஒருநாள் எப்படியானதென்றோ, அந்தக் குடும்பங்களின் ஒரு இரவு எப்படியானதென்றோ யாரும் நினைத்துப் பார்த்ததுண்டா? உதாரணத்துக்கு ஒரு தாயின் நாளொன்றை அனுபவித்ததுண்டா? அந்த வாழ்தலை கற்பனைகூட செய்துபார்க்க தவறியவர்கள் கட்டுரையினுள் நுழையலாம். முதல் நாள் இரவு எப்போது முடிந்ததென்று அந்த அம்மாவுக்கு தெரி…
-
- 4 replies
- 1.3k views
-
-
இயக்கச்சி - காணாமற்போன 'வல்லியக்கன்' கருணாகரன் 'வல்லியக்கனைத் தெரியுமா? ஒரு காலம் உங்கள் ஊரில் வல்லியக்கன் என்றொரு கோயில் இருந்தது. பிறகு அது மருவி அந்தக் கோயில் கிருஷ்ணன் கோவிலாகி விட்டது' என்றார் பொ.ரகுபதி. பொ.ரகுபதி இலங்கையின் புகழ்மிக்க வரலாற்றுத்துறைப் பேராசிரியர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வல்லியக்கன் என்ற சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி அவர் செய்த ஆய்வு 'வல்லியக்கனும் வல்லிபுரநாதரும்' என்ற நூலாக வந்திருக்கிறது. ரகுபதி குறிப்பிட்டுள்ளதைப்போல வல்லியக்கன் கோயில் இருந்த இடத்தில் இப்பொழுது மல்வில் கிருஷ்ணன் குடியமர்த்தப்பட்டிருக்கிறார். வல்லியக்கனை வழிபட்டவர்கள் இன்று அங்கேயில்லை. பதிலாக இப்பொழுதிருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்கு ஏகப்பட்டவர்கள் பங்காளர்களாக இருக்கிறார்கள். இ…
-
- 4 replies
- 1.7k views
-
-
எட்டு வருடங்களாக அகதியகளாயிருக்கும் சம்பூர்மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- 27 ஏப்ரல் 2014 சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து நேற்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தங்கள் ஊருக்குத் திரும்பாமல் அகதிமுகாங்களில் வாழும் இந்த மக்களின் போராட்டம் என்பது உக்கிரமானதொரு வாழ்தலே. ஈழத் தலைநிலம் திருகோணமலை மாவட்டத்தின் இத் துயர் என்பது ஒட்டுமொத்த ஈழம்மீதும் படிந்திருக்கும் பெருந்துயர். உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம்…
-
- 0 replies
- 528 views
-
-
ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்… யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுமிகள் தொடர்பிலும் அவர்களைக் கொண்டு வந்து இணைந்து விடுவோர் தொடர்பிலும் நிர்வாகத்தினர் தகுந்த ஆதாரங்களைக் கேட்டு ஆராயாமல் இணைத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா அருகில் இயங்கி வரும் மடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்…
-
- 4 replies
- 808 views
-
-
வணக்கம் உறவுகளே எம் கள கவி நாயகன் கவிதையின் வரிகளில் முள்ளிவாய்க்கால் கோரத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான பாடலின் முன்னோட்டம் ......... நன்றிகள்.
-
- 0 replies
- 930 views
-
-
(நன்றி: மனசாட்சி எனும் வலைப்பூவில் இருந்து..!!) “சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம். 2008ல் ஈழத்தமிழர்கள் மீதான ஈர்ப்பில் “சிலோன் முதல் ஈழம் வரை“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். 2009ல் போரின் உச்சத்தால் அதை அப்படியே மூடிவைத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் போருக்குபின் 2012ல் தொகுப்பின் இறுதி பகுதியை முடித்திருந்தேன். புத்தகத்தின் உள் தலைப்புகள்.......... 1.இலங்கை வரலாறு. 2.சுதந்திர தீவான இலங்கை. 3.மலையக மக்களின் வாழ்வும் துயரமும். 4.இன கலவரம். 5.ஆயுத குழுக்கள். 6. விடுதலைப்புலிகள். 7. இந்தியாவி (ல்) ன் காதல்!. 8. இராஜிவ் காந்தி கொலை!. 9. தமிழகத்தின் நிலை. 10. சண்டையும் சமாதானமும். 11. தமீழிழம் நோக்கி . . . . . 12. தளபதிகள் - துரோகிகள். 13. …
-
- 14 replies
- 9.6k views
-
-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்துவம் இருக்கின்றன. அதை மேலாதிக்கம் என்பது அடக்கி தன்வசப்படுத்த முயல்கின்றன. ஒரு காலத்தில் கிரந்தமொழியான சமஸ்கிருதம் செய்தததை இன்று ஆங்கிலம் செய்கின்றது.அதை விட மேலாக. நாளைக்கும் இனவுனர்வு இருந்தால் யாராவது போராடுவார்கள். ஒரு இனத்தின் அழிவு, ஒரு மொழியின் அழிவு என்பது பேசும் மக்கள் அளவே கணிக்கின்றது. ஒரு மொழியைப் பேசுபவர்கள் இல்லாது போனால், அந்த மொழி அழிந்துவிடுகின்றது. பார்ப்பானர்களைத் தமிழர் இல்லை எனத் திராவிடம் தமிழர்களின் அளவினைக் குறைக்க முயல்வதாகவே என் சந்தேகம் உள்ளது. இதில் முதலாவதாக இணைக்கப்படுபவர்கள் தோடா மொழி பேசுபவர்கள். இன்று இவர்களின் சனத்தொகை 600 பேரிலும் குறைவு. இவர்கள் தமிழ்மொழியைப் பேசுவர்களாக மாறிக் கொண்டுள்ளனர். இரு…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கை படையில் இணைக்கப்பட்ட வீராங்கனைகளை பயிற்சியின் போது இராணுவ பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாக வெளியான வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது இந்த வீடியோ காட்சிகள் யூடிப்பில் வெளியான நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு அநுரதபுரத்தில் வைத்து புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவத்தில் தண்டனைகள் இருக்கின்ற போதும் குறித்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட தண்டனையை போல உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு இராணுவ தளபதி உத்த…
-
- 0 replies
- 1.2k views
-