அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
-
- 2 replies
- 884 views
-
-
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும் May 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி 1965 மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற …
-
- 2 replies
- 272 views
-
-
தமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா? கே. சஞ்சயன் / 2020 பெப்ரவரி 14 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறுகிய கால இடைவெளிக்குள், இரண்டாவது தடவையாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கௌரவமான, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முதல் முறையாக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நரேந்திர மோடி, கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் அதனையே கூறியிருக்கிறார். இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, தமிழ் …
-
- 2 replies
- 867 views
-
-
14 JUL, 2025 | 03:59 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெர…
-
-
- 2 replies
- 434 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்! August 28, 2025 — கருணாகரன் — அரசியல் மோசடிகள் பலவிதமானவை. அத்தகைய மோசடிகளை, தவறுகளை, குற்றங்களை இழைத்தவர்கள் எல்லாம் இலங்கையில் தண்டனை பெறும் காலமொன்று உருவாகியுள்ளது. ‘அரகலய‘ என்ற மக்கள் எழுச்சி உருவாக்கிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. அதுவே ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அத்தகைய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ வேண்டும். நிகழும். அப்படி நிகழ்ந்தால்தான் மோசடிக்காரர்களும் பிற்போக்கானோரும் சமூக விரோதிகளும் விலக்கப்படுவார்கள், தண்டனைக்குள்ளாக்கப்படுவர். தமிழ்த் தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருபவர் சிவஞானம் சிறிதரன். எத்தகைய கூச்சமும் தயக்கமும்…
-
- 2 replies
- 298 views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன் 23 நவம்பர் 2013 மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த நிலைமையிலேயே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் பாரதத்தின் பிடிக்குள் அடங்கியிருந்த இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசிடமிருந்து கைநழுவி சர்வதேசமயப்படுகின்றதா என்ற சந்தேகமும், நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாட்டையடுத்து எழுந்துள்ளது. கொழும்பு மாநாட்டுத் தலையிடி பொதுநலவாய அமைப்பி;ன் உறுப்பு நாடு என்ற வகையில் அந்தஸ்து ரீதியாக கொழும்பில் நடைபெற்ற பொது…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.! இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்க ஒரு சமூகமாக விளங்குகின்றனர். இம்மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சிறப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன. இது தொடர்பில் வெளிநாட்டவர்களே பல சமயங்களில் வியந்து பாராட்டி இருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இந்திய வம்சாவளி மக்களில் சிலர் தமது தனித்துவத்தையும், சிறப்புக்களையும் உணராது மெதுமெதுவாக பௌத்த கலாசாரத்தை பின்பற்றி சிங்கள மயமாகும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் இவர்கள…
-
- 2 replies
- 850 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவாக….. ஈழத்தை திரும்பிப்பார்த்தல்…! முள்ளிவாய்க்காலில் பெற்றெடுத்த போராட்டக்குழந்தைகளை வளர்த்தெடுத்தல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பரவியிருந்த பௌத்தம் இன்று தமிழர்களை அழித்துத் துடைக்க ஈழமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. அன்று வெளிக்கடைச் சிறையில் தமிழர்களின் உடல்கள் புத்தர் சிலைக்குமுன் வெட்டப்பட்டதுண்டங்களாக பலியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து எழுந்ததே கடந்த கால்நூற்றாண்டு காலப்போர். இன்று ஈழமெங்கும் தமிழர்களின் எலும்புக்குவியல்கள் மண்மூடிக்கிடக்க புத்தர் சிலைகள் வேக வேகமாக நிறுவப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்னும் கால்நூற்றாண்டுக்கு கட்டியம் கூற வேண்டியது உலகத்தமிழர்களின் பொறுப்பாகிறது. இந்தியமோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனத்தி…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
மாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 27 , ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை, புதிய தலைமை என்பது, இளம் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற விடயம், முன்னிறுத்தப்படுகின்றது. உரிமைப் போராட்டத்தை, வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட சமூகத்தில் புதிய, நம்பிக்கையான, இளம் தலைவர்கள் எழுந்து வருவது, உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்; வரவேற்கப்பட வேண்டியது ஆகும். இது குறித்து, மாற்றுக் கருத்துகள் இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு சமூகமாக, அதுவும் 70 ஆண்டுகளுக்கும…
-
- 2 replies
- 640 views
-
-
[size=5]தமிழர்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகிறதா?[/size] [size=4]-கே.சஞ்சயன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண அரசாங்கம் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அரசியல்தீர்வு ஒன்றை அடைவதற்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக அவர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவுமே இப்போது முன்னெடுக்கப்படாத சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியமானதொன்றாகவே கருதப்படத்தக்கது. ஏனென்றால், போர் முடிவுக்கு வந…
-
- 2 replies
- 775 views
-
-
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்…
-
-
- 2 replies
- 741 views
-
-
"மதமென்னும் போதை!!" "மதமென்னும் போதை தலைக்கு ஏற மதிகெட்டு நிலை மாறிய போர்த்துக்கேயர் மக்களை கூட்டி பதவிகள் கொடுத்து மரணத்தை காட்டி ஆசைகள் சொல்லி மதம் மாற்றிய யாழ்ப்பாண வரலாறு மனிதா நான் உனக்கு சொல்லவா ?" "எம் மதமும் சம்மதம் என்றாய் எல்லா ஊரும் எம் ஊரென்றாய் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எம் பண்பாட்டை ஏன்தான் விற்றாய் எருமைமாடாய் குளிர்காய சோம்பேறி பிடித்ததோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 782 views
-
-
"விழித்தெழு தமிழா!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு] [ஏப்ரல் 2004 பொதுத் தேர்தலில், தமிழர் கூட்டணி, ஓரு அணியில் ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக) வடக்கு மற்றும் கிழக்கில் 22 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது இன்று இது ஒரு தூர கனவாகி, சென்ற 2019 அது 11 ஆக, அரைவாசியாக மாறியதை எனோ இன்னும் அவர்கள் உணரவில்லை? அப்படி என்றால் இந்த 14 நவம்பர் 2024 இல் ??] "உறக்கம் என்பது விழிகள் காணட்டும் உள்ளம் என்றுமே விழித்தே இருக்கட்டும் உயிரற்ற அரசியல் தலைமை ஒழியட்டும் உயர்ந்த ஒற்றுமை நாட்டி உழைக்கட்டும்!" "அடுப்படியிலே அடைந்து கிடந்தது போதும் அழகு வடிவமே வெ…
-
-
- 2 replies
- 365 views
-
-
ஸ்ரீலங்காவின் அரசதலைமையினாலும் அதன் பாராளுமன்றின் மூன்றில் இரண்டிலும் அதிகமான பெரும்பான்மை பலமான பௌத்த சிங்கள பாசிச வெறியர்களாலும் , அந்நாட்டின் அதி உயர் கட்டமைப்புகளில் மிக முக்கியமானதாக உள்ள நீதித்துறையே முற்றுமுழுதாக சீர்குலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஜனநாயகத்தை ஆழக்குழி தோண்டிப்புதைத்துவிட்டு காட்டாச்சியை முழுமையாக உறுதிப்படுத்துவதான சர்வாதிகாரத்தை தன் தலையில் வைத்தாடுகிறார் மஹிந்த. இதன் மூலமாக அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் பல செய்தியைகளை உரக்கக்கூறி உள்ளார். இதில், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை அல்லது குறிப்பாகக் கூறுவதாயின் தமிழர்களை தவணை முறையில் அழித்தொழிப்பதற்கான வலுவினை சிங்கள அரசு உறுதிப்படுத்தி விட்டது என்பதுவே முக்கியமான செய்த…
-
- 2 replies
- 664 views
-
-
எழுக தமிழ் என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:53 (பகுதி - 01) இன்றைய தினம், 2019 செப்டெம்பர் 16ஆம் திகதி, காலையில் யாழ். முற்றவௌியில், தமிழர் மரபுரிமைப் பேரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பில், குறித்த பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில், சமகாலத்தில் இலங்கை வாழ் தமிழினம் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சினைகளையும் சவால்களையும் அது கோடிட்டுக்காட்டி நிற்கிறது. ‘தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள், விளைபுலங்கள், வன்கவர்வு செய்யப்பட்டு, தமிழர் மரபில் அந்நிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த, காரண இடுகுறிப் பெயர்கள் மாற்றப்பட்டு, சிங்களப் புனை பெயர்கள் இடப்பட்டு, திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங…
-
- 2 replies
- 835 views
-
-
கவர்ச்சியான வங்குரோத்து அரசியல் -என்.கே. அஷோக்பரன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பற்றிக் கூறும்போது, “அவர்கள், தமது வழக்கை, மிகச் சிறப்பான வகையில் வாதிடவல்ல சட்டத்தரணிகள்; ஆனால், அவர்களுக்கு அர்த்தமுள்ள சலுகைகளை ஈர்த்து எடுத்துக்கொள்ளத் தெரியாது” என்று கூறியதாகச் சில பதிவுகள் கிடைக்கின்றன. இதற்குத் தீவிர தமிழ்த் தேசிய தலைமைகள், உடனடியான பதிலைக் கொண்டிருப்பார்கள். அது, “எமது அரசியல் என்பது, சலுகைகளுக்கு அடிபணியும் அரசியல் அல்ல; மாறாக, கொள்கை வழி பயண…
-
- 2 replies
- 705 views
-
-
ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது. உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. …
-
- 2 replies
- 666 views
- 1 follower
-
-
ஓராண்டுக்குள் ரணில் தீர்வு தருவாரா? எக்க ராஜ்ய? – நிலாந்தன். அடுத்த ஓராண்டுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளர் அதை வரவேற்றிருக்கிறார். அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்திருக்கிறது.ரணிலும் கூட்டமைப்பும் மீண்டும் “எக்க ராஜ்ய” என்ற தீர்வைக் கொண்டுவர முயற்சிப்பதாக விமர்சித்திருக்கிறது. முன்னாள் சமாதான தூதுவர் எரிக்.சூல் ஹெய்ம் அண்மையில் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக பொறுப்பை ஏற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகையின் உள்நோக்கம் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டது என்ற ஊகம் பரவலாக உண்டு. 2015 ஆம…
-
- 2 replies
- 349 views
-
-
[size=5]மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size] [size=4]வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன : 1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் 2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம் 3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன. இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் : 01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..[/size] [size=4]02. இரண்டா…
-
- 2 replies
- 887 views
-
-
தேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும் - நிலாந்தன் 15 செப்டம்பர் 2013 மாகாணசபை தேர்தல் பரப்புரைக்களத்தில் ஒரு இனமான அலையை தோற்றுவிப்பதில் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறிவருவதாகவே தோன்றுகின்றது. தனிப்பட்ட முறையில் கடிதங்கள், குறுந்தகவல்கள் என்பன படித்த வாக்காளர்களை நோக்கிப் பறந்து வந்துகொண்டிருக்கின்றன. இணையப்பரப்பில்தான் கூடுதலான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் இணையப்பரப்பில்தான் விவகாரங்கள் அதிகம் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால் வழமையான கறுப்புவெள்ளை அரசியலின் பிரகாரம் இணையப்பரப்பானது அதிகமதிகம் வசைவெளியாக மாறியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அதிகபட்ச விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் ஒப்பீட்டளவில் அதிகபட்சம் ஜனநாயகமானதாக இண…
-
- 2 replies
- 522 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர், இரா.சம்பந்தன் வெளியிட்டிருந்த புதுவருடச் செய்தியில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிறிலங்கா அரசின் அடிவருடிகளால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகளுக்குள் எமது மக்கள் சிக்கிவிடக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கைகள் வலுவடைந்திருக்கின்ற சூழலிலேயே இரா.சம்பந்தன் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இப்படியொரு வைரஸ் வாதம் நீண்டகாலமாகவே தமிழ் சூழலில் உயிர்வாழ்ந்து வருகிறது. தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதி…
-
- 2 replies
- 687 views
-
-
தமிழர்களும் அனைத்துலக சமுகமும் - நிலாந்தன் 12 ஜனவரி 2014 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' தமிழர்கள் எப்பொழுதும், பெருமையோடு நினைவு கூரக்கூடிய ஒரு வாக்கியம். அது யுகங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கும். கணியன் பூங்குன்றனாரின் அந்த வாசகம் ஒரு தீர்க்க தரிசனமும் கூட. ஈழத்தமிழர்கள், யாதும் ஊராகப்போய்விட்டார்கள். ஏறக்குறைய, நாலில் ஒரு; ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து விட்டார். அதாவது, தமிழர்கள் யாதும் ஊராகப் போய்விட்ட்டார்கள். ஆனால், யாவரும் கேளிரா? இல்லை. அங்கே தான் பிழைக்கிறது. தமிழர்கள் யாதும் ஊராகப் போனதுவரை கணியன் பூங்குன்றனாரின், தீர்க்க தரிசனம் பாதியளவில் சரி. ஆனால், யாவரும், தமிழர்களுக்கு கேளிர் அல்ல. அதாவது நண்பர்கள் அல்ல. எல்லாரும் தமிழர்களுக்கு நண்பர்களாக இருந்திரு…
-
- 2 replies
- 789 views
-
-
இந்தியாவுக்கு இது நல்ல செய்தி; அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது அமெரி்க்க அரசின் உள்துறை அமைச்சக்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கரோனா பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளி…
-
- 2 replies
- 903 views
-