நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 'திடீர் என முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு பெரிய பிரச்னை எதனால் நடந்தது?’ என இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம் கேட்டோம். ''கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள் என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடிப்பது இல்லை. எங்கள் நிம்மதியை மெள்ள மெள்ள பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது பிரச்னை வெடித்ததற்குக் காரணமே ஒரு புத்த பிக்குவால்தான். ஒன்ற…
-
- 6 replies
- 941 views
-
-
அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்.. 11/14/2018 இனியொரு... இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது. மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்க…
-
- 0 replies
- 940 views
-
-
இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தம…
-
- 10 replies
- 940 views
-
-
திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது. இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது. என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது. சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால், இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர்…
-
- 2 replies
- 940 views
-
-
அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்! இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்க…
-
- 1 reply
- 938 views
-
-
தமிழக மாணவர் ஒருவருடன் அண்மையில் கதைத்த போது, அவர்கள் உண்ணாவிரதமிருக்க முடிவுசெய்து, மரியாதையின் நிமித்தம் அந்த நிறுவனத்தின் ஒரு பொறுப்பதிகாரியிடம் தமது முடிவை அறிவிக்க கும்பலாக சென்றபோது, அவர் மாணவர் போராட்டத்தை தடுக்க பல வழிகளில் முயன்றாராம். (அவர் காங்கிரஸ் அடிவருடி என்கிறார்கள் அந்த மாணவர்கள்). அவர்களின் உரையாடல் சுருக்கமாக (1) முதலில் அவர், இதை நீங்கள் 2009 மே இல் செய்திருக்க வேண்டும் - இப்ப செய்வதில் அர்த்தம் இல்லை, எனவே நீங்கள் அரசியல் நோக்குடன் செய்கிறீர்கள் - எனவே அனுமதிக்க முடியாது என்றாராம் மாணவர்கள் அப்ப செய்த தவறை இப்பவும் செய்ய விரும்பவில்லை என்றனராம் (2) அடுத்ததாக எமது நிர்வாக மேலிடம் இதை விரும்பவில்லை என்றாராம் அதற்கு மாணவர்கள், நீங்களும் தமிழன்…
-
- 0 replies
- 935 views
-
-
கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் - செய்தி. . திரு கோத்த பாய அவர்களே, ”சிறையில்தான் ஜெயபாலனின் மீதி வாழ்வு முடியும்” என்ற தீர்மானத்தோடு 2013 நவம்பரில் என்னைக் கைது செய்தீர்கள். தேசிய சர்வதேச அழுத்தத்தால் என்னை விடுதலை செய்தபோதும் என் கடவுச் சீட்டில் கரும்புள்ளி வைக்க உத்தரவிட்டீர்கள். மீண்டும் எனது மண்ணுக்கு வர உங்கள் ஆட்ச்சி கவிழும்வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. . இப்ப நீங்க தேர்தலில் நிற்க்கப்போகும் செய்தி வந்திருக்கு. நீங்க வெற்றி பெற்றால் நான் இலங்கைக்கு வரமுடியுமா? என்னை மீண்டும் கைது செய்வீர்களா? . சென்றமுறை “ஜெயபாலன் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை ஆனால் உங்களுக்கு தமிழரையும் முஸ்ல…
-
- 5 replies
- 934 views
-
-
கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு: (இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம் பகிருங்கள். திமுக, என்ற உதவாக்கரை கட்சிகளையும் அப்புறப்படுத்துவோம்) 1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார் 2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது. 3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது 4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் 5. கரு…
-
- 2 replies
- 934 views
-
-
இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நீண்ட ஆய்வுக்கட்டுரையில் நடே…
-
- 1 reply
- 933 views
-
-
தேசிய நல்லிணக்கத்துக்கு சிங்கள தேசத்துக்கு இதைவிட வேறு ஏதும் சின்னமோ புகைப்படமோ தேவையில்லை. என்ன மாதிரியாக ஒரு வாஞ்சையுடன் அந்த கொடியை ஏந்தியபடி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வு மேடையில் ஆட்டிக்காட்டுகிறார். இந்த சிங்கக் கொடியை நந்திக் கடலின் ஓரத்தில் நீண்ட கம்பத்தில் எந்தவொரு இடைஞ்சல்களுமின்றி பறக்கவிடுவதற்காக சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறுதிநேர கதறல்கள் இந்த மேதின ஆட்டத்தில் சம்பந்தனின் காதில் விழாமலேயே போயிருக்கும். இந்த சிங்கக்கொடியின் கீழேதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் சௌ;துள்ளோம். எனவே அந்த கொடியை ஏந்திப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என அவரின் சட்டத்தரணித்தனமான வாதம் கேட்கலாம். பயமுறுத்தலின் கார…
-
- 1 reply
- 932 views
-
-
கலைஞர் முதல் வலைஞர் வரை - சி. சரவண கார்த்திகேயன்கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் ஆங்கிலத்தில் இருந்தது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது அது. ஆதரவாளர்களிடம் இருந்து வாழ்த்துகளும் வரவேற்புகளும் பெருகத் தொடங்க, சிறிது நேரத்தில், திமுக மாநில மாநாடு நடைபெரும் நகரின் சாலைபோல் மாறிவிட்டது ட்விட்டர் டைம்லைன். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களை எந்தவொரு பிரபலத்தாலும் புறக்கணித்துவிடமுடியாது என்பதற்கு கலைஞர் ஓர் உதாரணம். சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனப்படும் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் அத்தியாவசியமாகி ரொம்ப காலம் ஆ…
-
- 0 replies
- 930 views
-
-
இணைய வேண்டிய நேரமிது! - மு. வீரபாண்டியன்First Published : 08 Jul 2011 01:37:51 AM IST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் கடந்த 18,19 ஆகிய இரு தினங்கள் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்றதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருமைப்பாட்டையும், அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஜூலை 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரியக்கங்களை நடத்திட, கட்சி அணிகளையும், பொதுமக்களையும், அறைகூவி அது அழைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்காக உடனடிச் செயல் திட்டமாகவும், எதிர்கால அரசியல் தீர்வாகவும் சில முன்மொழிவுகளைக் கூற, இந்திய நாட்டின் பிரதமரை கட்சியின் உயர்மட்டக் குழு சந்திப்பது எனவும…
-
- 0 replies
- 929 views
-
-
சிந்துவாசினி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை BBC/DEBALIN ROY Image caption சஞ்சாலி `வரலாற்றில் முதன்முதலாக எரிக்கப்பட்ட பெண் யார்? எனக்குத் தெரியாது ஆனால் கடைசியாக எரிக்கப்பட்ட பெண்ணாக யாராக இருப்பார் என்பது தான் என்னுடைய கவலை கடைசியாக எரிக்கப்பட்டது யாராக இருக்கும்?' - சஞ்சாலியின் தாயார் அனிதாவின் அழுகுரலைக் கேட்டபோது, ராமசங்கர் `வித்ரோஹி'யின் வரிகள் என் மனதில் தோன்றின…
-
- 2 replies
- 929 views
-
-
இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு, ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும் சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள், முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்…
-
- 9 replies
- 927 views
- 1 follower
-
-
தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? வணக்கம் தமிழ்நெஞ்சங்களே! "தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? " என்ற தலைப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிற்குமிடையில் மறைமுகமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களும், அந்த நாடுகளினால் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விடயமும் என்ன என்பதையும், உண்மையில் தாயகத்தில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? என்பதையும் ஒவ்வொரு தமிழ்மகனும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இருப்பதினால், க…
-
- 5 replies
- 927 views
-
-
அணுகுண்டால் வல்லரசு அந்தஸ்த்தை காட்ட முடியாத புதிய உலகம் வருகிறது.. அணு வல்லரசுகள் தமது வல்லரசுத் தன்மையை இழக்க ஆரம்பிக்கின்றன.. ஈரானிய அமைச்சர் அப்துல் ஸாலியின் கருத்து இதை மேலும் வலியுறுத்துகிறது… தற்போது வடக்கு ஆபிரிக்கா – மத்திய கிழக்கு வட்டகையில் பரவியுள்ள மக்கள் புரட்சியானது அணு குண்டை வைத்திருந்தால் ஆட்சியை பாதுகாக்கலாம் என்ற பழையகால எண்ணத்திற்கு பலத்த அடி போட்டு வருகிறது. மேலை நாடுகளின் சூழ்ச்சியால் தமது நாடு சீரழிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அணு குண்டை வெடித்துக் கொள்வதே ஒரே வழி என்று கருதிய உலகம் மெல்ல மெல்ல அந்தக் கொள்கை தவறானது என்பதைப் புரிந்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக நேற்று ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அக்பர் ஸாலி ஜெனீவாவில் வ…
-
- 0 replies
- 927 views
-
-
-
அண்ணன் திருமா அவர்களுக்கு, அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கியுள்ளீர்கள். இதையே நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரோ, ஏன் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னரோ முழங்கியிருந்தால் நாங்களும் ஆ...வென்கிற வாயுடன் கைதட்டி அண்ணன் திருமா வாழ்க என்று வானதிரக் கத்தியிருப்போம். ஆனால் ஈழத்தமிழரிடமிருந்த இறுதி நம்பிக்கைகள் மட்டுமல்ல. எங்கள் உறவுகளையும் இருபத்தையாயிரத்திற்கு மேல் இழந்துபோய் மிகுதி மூன்று இலட்சம் உறவுகளையும் முட்கம்பி வேலிகளுக்குள் நாளுக்கு நாள் விசாரணையின் பெயராலும் வியாதிகளாலும் இழந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் 5 ம் கட்ட ஈழப்போர் என்கிற முழக்கம் மீதம் இருக்கின்ற ஈழத்தமிழர்களையும் கட்டம் கட்டம…
-
- 2 replies
- 925 views
-
-
எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது! பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் எ…
-
- 0 replies
- 925 views
-
-
அன்று முதல் இன்று வரையுள்ள டக்ளஸ் பற்றிய ஒரு பதிவு........ இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்…
-
- 2 replies
- 924 views
-
-
சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. சீனா 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பண்டைய வரலாறு. என்னதான் பழமையான நாடாக இருந்தாலும் அயல் நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதுடன், மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட ஒரு போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நாடாகத்தான் சீனா விளங்குகிறது. எடுத்துக் காட்டாக திபெத்திய மக்களின் திபெத் நிலப்பகுதியை 1950களில் சீனா வன்முறையாக ஆக்கிரமித்து, இதனால், அவர்களின் அரசியல் சமய தலைமை வெளியே செல்ல வேண்டி வந்தது. அதன் பின்னர் அவர்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு அவர்களின் தனித்துவ மொழி, சமய, பண்பாட்டு முறைகள் சீரளிவுக்கு உள்ளாகியது சீனா. சீனாவில் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை படை, 1950 இல் திபெத்தில் நுழைந்தது கிட்…
-
- 4 replies
- 924 views
-
-
பிட்டும் தேங்காய்ப்பூவும்.! August 26, 2023 ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியல்…! — அழகு குணசீலன்— கிழக்கில் நீறுபூத்த நெருப்பாய் கிடந்த தமிழ்- முஸ்லீம் இனவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது. சாம்பலைத்தட்டி தணலாக்கி எரியவைத்தவர் தமிழரசு எம்.பி.சாணக்கியன் இராசமாணிக்கம் என்று அவர் மீது முஸ்லீம்கள் பழியைப் போட்டாலும் ஒட்டுமொத்த பழி தமிழர்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. “பிட்டும் தேங்காய்ப்பூவும்” கதை கேட்டுக் கேட்டு , எழுதி எழுதி புளித்துப்போன ஒன்றுதான். ஆனாலும் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் அது இன்னும் பேசப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதே அதன் சமூக- அரசியல் விஞ்ஞான முக்கியத்துவம்.கிழக்கின் …
-
- 6 replies
- 924 views
-
-
ஜனாதிபதி சிறிசேனவின் திரிசங்குநிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கின்றபோதிலும், அவை தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாதவராக இருக்கிறார் என்று புதிய ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது. சபைக்குள் அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரும் இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை முதலில் ஊடகங்கள் வாயிலாகக் கிளப்பியவர் முன்னாள் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் ஜனாதிபதியுடனும் அவரது தற்போதைய நேச சக்திகளான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முகாமுடனும் நெருக்கத்தைப் பேணுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜனா…
-
- 0 replies
- 923 views
-
-
THE TRUTH THAT WASN'T THERE http://youtu.be/oTAoXYrOHkg
-
- 0 replies
- 923 views
-
-
மேதகு எழுச்சி, வடக்கை நோக்கி நகரும் சீனா அமெரிக்காவில் பசில் ராஜபக்சே|பொய்யா விளக்கு நிராகரிக்கப்படுகிறதா ?AROOS,போர் இயல் ஆய்வாளர் OPEN TALK
-
- 0 replies
- 922 views
-