நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது. இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அதன் வடிவத்தால் ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றும் ‘இந்தியாவின் கண்ணீர் துளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் சிறிய இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும். சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு…
-
- 2 replies
- 441 views
-
-
நிக்சன் வழமை போன்று சகலரையும் சாடி நிற்கிறார். இலங்கை காலம் காலமாக இந்தியாவை ஏமாற்றுவது இந்தியா சிங்களவருடன் பேசும் போது தயவாகவும் தமிழருடன் பேசும் போது வெருட்டலுடனும் பேசுவதை போட்டுடைக்கிறார்.
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
சிறிய முதல்: நிறைவான வருமானம் நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம். ஆனால் நாம் எங்கள் வீட்டில் எப்ப கோழிக்கறி ஆக்குவார்கள். வீட்டில் யாருக்காவது சுகயீனம் என்றால் இல்லை என்றால் கோழிக்கு சுகயீனம் என்றால் மட்டுமே. கோழிக்கு சுகயீனம் என்றால் மற்றக் கோழியையும் பிடித்து சமைப்போமா இல்லை அதுகும் எப்ப தூங்கி விழுமோ அப்பதான் கோழிக்கறி. வேள்வி, தீபாவளி தான் ஆட்டுக்கறி. இப்படி கால்நடைகள் வளர்ப்பில் அனுபவம் நிறையவே உண்டு. கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத…
-
- 55 replies
- 13.4k views
-
-
புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் - இளைஞர்கள் முன்னிலையில் ஜனாதிபதி Published By: NANTHINI 19 FEB, 2023 | 05:27 PM தேர்தலின்போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த இளைஞர்கள் குழு நாட்டின் பி…
-
- 0 replies
- 813 views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசாங்கத்தின் புதிய வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும் Feb 08, 20150 -நிர்மானுசன் பாலசுந்தரம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராட…
-
- 1 reply
- 393 views
-
-
போதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 13 புதன்கிழமை, மு.ப. 12:56 Comments - 0 பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் போதைப் பொருள் பரவுவது தொடர்பாக, தென் பகுதி அரசியல்வாதிகளைக் குறைகூறி, ஓரிரு நாள்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இலங்கையில் பெயர் பெற்ற பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்ஹ ஆராச்சிகே மதுஷ் லக்ஷித்த என்பவனும் அவனது முக்கிய சகாக்களுமாக 30 பேருக்கு மேற்பட்டவர்கள், டுபாயில் நட்சத்திர ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற, மதுஷின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். …
-
- 0 replies
- 728 views
-
-
மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது. இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர். தமிழர்களது நலனில் அதிதீவிர அக்கறையும் பாசமும் கொண்ட தி.மு.க. காங்கிரசு மார்சிட் கம்யுனிட்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கூண்டோடு கொன்று புதைக்கப்பட்டு மூன்று வருடங்கள் மு…
-
- 0 replies
- 596 views
-
-
அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே Maatram Translation on October 17, 2019 பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார். தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்ஷ கூறாத வ…
-
- 2 replies
- 452 views
-
-
[size=4]ஜூலை 1983 சம்பவம் என்று இலங்கை அதைப் பதிவு செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு இது கறுப்பு யூலை (கருப்பு ஜீலை). திருநெல்வேலியில் எல்.டி.டி.ஈ. நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக நிகழ்த்திய வன்முறைச் செயல் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சிங்களர்களின் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மிருகத்தனம் என்று மட்டுமே அதை அழைக்க முடியும்.[/size] [size=1] [size=4]அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ஜீலை 24 அன்று ஆரம்பித்தார்கள். மொத்தம் ஏழு நாள்கள். தமிழன் என்று ஓர் இனமே இருக்கக் கூடாது என்னும் உக்கிரம் அவர்களிடம் தெரிந்தது. அந்த ஏழு நாள்களில் எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவானது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், எத்தனை தமிழர்கள் இறந்துபோயிருப்பார்கள் எ…
-
- 0 replies
- 983 views
-
-
‘வாழ்க்கையில் துயரங்களை மட்டுமே கடந்துவந்ததால, இந்த வெற்றியும் சந்தோஷமும் எனக்கு வரமா இருக்கு. கண்கள் மின்னுகின்றன பரிதாவுக்கு. விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம்பிடித்த வெற்றியாளர்! அப்பா, அம்மா எனக்கு வெச்ச பேர், பிரேமலதா. சிதம்பரத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி. மியூசிக் கிளாஸ் எல்லாம் போனதில்லைன்னாலும், கேள்வி ஞானத்தால ஸ்கூல்ல படிக்கும்போதே நல்லா பாடுவேன். மியூசிக் தெரிஞ்ச என் கிளாஸ் டீச்சர் கொஞ்சம் இசை கத்துக்கொடுத்தாங்க. எங்கப்பா முயற்சியால சில கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சு வருஷ டிப்ளோமா இன் மியூசிக் கோர்ஸில் சேர்ந்தேன். அங்க என்கூடப் படிச்ச முகமது இக்பாலும் நானும் காதலிச்…
-
- 0 replies
- 342 views
-
-
-
- 2 replies
- 616 views
-
-
பெற்றோர்களை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டமொன்றை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பிள்ளைகளால் பராமறிக்கப்படாமால் தனிக்கப்படும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இங்கு 60 வயதுக்கு மேலான முதியவர்கள் 16 கோடியே 70 இலட்சம் பேரும் 80 வயதுக்கு மேல் 10 இலட்சம் பேரும் உள்ளதாக தெரிவிக்கிகப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு குழந்தை சட்டம் சீனாவில் அமுலில் உள்ளது. இதனால், ஒரு பிள்ளை மட்டுமே கொண்ட குடும்பங்களில் அப்பிள்ளை வளர்ந்து தம் இருப்பிடம்விட்டு வேறு இடங்களுக்கு செல்வதால் பெற்றோர் கவனிக்கப்படாமல் விடப்படும்…
-
- 3 replies
- 512 views
-
-
9 ஜனவரி பாரிஸ் நகரில் மீண்டும் ஒரு அரச பயங்கரவாதம். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பின் நிறுவன உறுப்பினர் Sakine Cansiz மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் Fidan Dogan மற்றும் Leyla Soylemez படுகொலை செய்யப்பட்டார்கள். குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டம் தமிழீழ மக்களின் விடுலை போராட்டம் போல் நிலம், மொழி, கலை, கலாச்சாரம், உரிமை பாதுகாப்பு போராட்டமாகும். நாம் தமிழீழ தாயகத்திற்காக போராடுவது போல் அவர்களும் குர்திஸ்தான் நாட்டின் உருவாக்கதிட்காக போராடுகிறார்கள். அவர்களும் சர்வதேச புவியல் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்த்த மரியாதையை கொண்டவர்கள், எமது மக்களின் அற்பணிப்பில், எமது போராட்டத்தில் பல வழிகளில் ஒன்ற…
-
- 8 replies
- 692 views
-
-
முன்னாள் யாழ்ப்பாண சிங்கள இராணுவத் தளபதியும் அங்கு இனச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்ட முக்கிய தளபதிகளில் ஒருவரருமான Maj. Gen. G.A. Chandrasiri. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாபக்கேடு என்பது அதன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய உளவு அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டாயிற்று. தமிழீழ விடுதலை என்ற ஒரே இலட்சியத்தை அடைய 25 அமைப்புக்களை உருவாக்கி தமிழர்களின் பலத்தை பிளவுபடுத்திய போதே அது வெளிப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஒரு ஆதங்கம்.. அவர்களும் தமிழர்கள் தானே.. இப்பவாவது திருந்தமாட்டார்களா என்ற ஒரு நப்பாசையோடு மக்களின் அவலத்தின் மீது நின்று கொண்டு இதை எழுதுகின்றேன். தமது கோடிக்கணக்கான சொத்துக்களை.. விலை மதிக்க முடியாத உயிர்களை.. மீளப் பெற முடியாத உடற்பா…
-
- 9 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன். September 3, 2021 கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘நகரபிதாவிற்குக் குடியானவன்’ எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே இச்சிறு கட்டுரை. யாழ்ப்பாண நகரத்தை, வீதி அகலிப்பு முதலிய பலநடவடிக்கைளால் அழித்துக் கொண்டிருக்கும் செயற்பாடுகள் மீதான கோபமும், மனவருத்தமும் கூட இக்கட்டுரை எழுதக் காரணமாகும். ஏன் யாழ்ப்பாணத்தில் துறைசார் நிபுணர்களை எல்லா இடங்களிலும் அகற்றிவிடுதல் என்பதை அதிகாரிகள் ஒரு வியூகமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற காரணம் கட்டுரையாளர் ஜீவன் தியாகராஜாவைப் போல எனக்கும் புரியவில்லை. படம் 01- குறிப்பிட்ட பண்ப…
-
- 145 replies
- 9.8k views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற ரணில் திட்டம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்து…
-
- 0 replies
- 242 views
-
-
புதிய ஏற்பாடும் பழைய நற்செய்திகளும் “2020 க்குள் இனப்பிரச்சினைக்கு (தமிழர்களுக்கு) தீர்வு” என்று தெரிவித்திருக்கிறார் சந்திரிகா குமாரதுங்க இந்த முதியவரின் வார்த்தைகளுக்குள் உள்ள வேதனை, கோபம், ஆற்றாமை, விமர்சனம், யதார்த்தம், உண்மை, பட்டறிவு, எச்சரிக்கை உணர்வு எல்லாம் சாதாரணமானவை அல்ல. மிகத் துயரமானவை. இந்த நாட்டின் பொறுப்பானவர்களால் விளைந்தவை. சந்திரிகா குமாரதுங்க கூறுவதன்படி (அவருடைய நற்செய்தியின்படி) இந்தத் தீர்வு எப்படி அமையும்? அது எங்கிருந்து வரும்? அதற்கான…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கையிலும், மற்றையை இடங்களிலும் ? பெரிதும் பேசப்படும் ஒரு விடயம் யுத்த குற்றமும் , நல்லிணக்கமும். இங்கே பலரும் வாறபடியால், யாரவது விளக்குவீர்களா, இலங்கையரசு மீது யுத்த குற்றம் சாட்டினால் ஏன் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று? அரசாங்கம் இன்னமும் யுத்த குற்றம் செய்கிற நிலையில் அல்லது அதற்குரிய தண்டனைகளை கொடுக்கிற நிலையில்- அது கைது செய்யப்பட்ட புலிகளில் உயர் நிலை தலைவர்களாய் இருந்தால் என்ன, கடைசி மாதத்தில் அல்லது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர் சிறுமியாய் இருந்தால் என்ன, அவர்களுக்கு ? தண்டனை கொடுத்து , ? புனர்வாழ்வளித்து வெசாக்குக்கும், பொசன் பண்டிகைக்கும் எதோ "தமிழ் படங்களில் வாரமாதிரி அண்ணையை, பங்காளியை கொலை செய்திட்டு - படம் தொடங்கேக்கை அல்லது முடியேக்க…
-
- 0 replies
- 776 views
-
-
நெருப்பின் நியாயங்கள் அமைதியாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்வதில்லை. அது மானுடத்தின் இயல்பும் இல்லை. சராசரி எதிர்பார்ப்புகளும் எதிர்நீச்சலும் என வாழ்க்கை நகரும். வாழ்க்கையின் நகர்வு ஸ்தம்பிதம் அடைந்து, எதிர்பார்க்கவும் எதிர்நீச்சல் போடவுமான மானுட இயல்பு மறுக்கப்படும் போது வெறுமை மிஞ்சுகிறது. அந்த வெறுமையெங்கும் பிணங்களும் சதைகளும் ஓலங்களும் நிறைந்து இறுதியில் வெறுமை நிரம்பி வெடித்து சிதறுகிறது. இவ்வாறு வெடித்து சிதறும் தன்மையை இக் கொடும் செயலின் காரணிகளை அழிக்கும் நோக்குடன் நிதானமாக கையாள்பவர்களே கரும்புலிகள். தேச மக்களின் உயிரைக்காக்கவும் உயிரின் பெறுமதியை ஆழமாக நேசிப்பதன் வெளிப்பாடாக அவரது வாழ்வு மறு வடிவமடைகிறது. தன்னை கொடுத்து பிற உய…
-
- 11 replies
- 3.4k views
-
-
"சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்": திஸ்ஸ செவ்வி ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம் பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸவே வழங்குவார் என்று அவரின் தேர்தல் பிரதான செயற்பாட்டதிகாரியும், ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அழைப்பினை ஏற்றுக்…
-
- 0 replies
- 333 views
-
-
http://www.youtube.com/watch?v=TsurVPrLYFg...feature=related
-
- 0 replies
- 746 views
-
-
நிலம் பறிபோகலாம்... எல்லாமே முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல: அனிதா பிரதாப் நன்றி: தமிழோசை http://www.tamilnaatham.com/pdf_files/2009...ai_20090427.pdf
-
- 0 replies
- 852 views
-
-
இலங்கைத் தமிழர் அரசியலில் அடுத்தது என்ன....? இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் மக…
-
- 1 reply
- 540 views
-