Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந் நிகழ்வு அக் குடும்பத்தின் தனிப்பட்டவிடயம். அதில் இனம் கலாச்சாரம் என்பதினூடாக தலையிட முடியாது. பல இனக் குழுமங்களில் இருந்து பொறுக்கப்பட்ட கலாச்சாரமே கலாச்சாரம் என்ற போர்வையில் பேசப்படுகின்றது. இரவல் கலாச்சாரம். அதற்கும் எந்த வரைமுறையும் கிடையாது. யாரும் ஒருத்தன் வித்தியாசமாகப் பண்ணிவிட்டால் உடனே புலிக்காசில் பண்ணிவிடடான் என்பது பொது வழக்கு. அதனால் அது செல்லாது. அந்தக்காலத்தில் பல்லாக்கு இருந்தது அதில் பவனிபோனார்கள் இந்தக்காலத்தில் உலங்கு வானூர்தி இருக்கின்றது அதில் போகின்றார்கள். அவர்கள் உழைப்பு அவர்கள் காசு அவர்கள் சந்தோசம் அவர்கள் திருப்தி. இதில் கருத்துக்கூற நாம் யார்? பரணி பாடிய தேசீயவாதிகள் இப்போது புறணிபாடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதை விடுத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

 

சண்டமாருதன்,

இக்கொண்டாட்டத்தை கொண்டாடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பலர் கடன் எடுத்து கொண்டாடிவிட்டு பின்னர் பொருளாதார இறுக்கத்தில் மாட்டிக்  கொள்கிற சம்பவங்களே அதிகம்.

இக்கடனை பிள்ளையின் எதிர்கால கல்விக்கு அல்லது சேமிப்பாக கொடுத்தாலே அது பெரும் பயனைக் கொடுக்கும்.

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

 

படிச்சு சமூகத்தை மாற்றியமைக்கிறோம் என புறப்பட்ட பலரும் இவ்விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தானே இப்ப நாகரீகம்.

  • Replies 113
  • Views 15.5k
  • Created
  • Last Reply

பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்..
இங்கு (யாழில்) உள்ள எல்லோருமே எங்களால் இயலக்கூடிய அளவில் பகட்டாக
தான் இருக்கிறோம்..நாங்கள் யாருமே கிழிந்த உடையை திருத்தி அணிந்து எவ்வளவு காலமாகிறது?
வேலைக்கு போகும் பொது உடுப்புகள்
Tommy Hilfiger
Nautica
Mark & Spencer
etc ....
எங்களது வீடுகள் ..நாங்கள் யாரவது எங்களது வசதிகளை ஒடுக்கி
எளிமையாக வாழ்கிறோமா?

 

நைக்கி போடுவதற்கும் கெலிகொப்டரில் சாமத்திய வீட்டிற்கு பெண்ணை ஏற்றுவதற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கு .

தானே கஷ்டப்பட்டு  உழைத்து  தனது பெண்ணை அப்படி ஒரு நிலையில் பார்க்க அவர் விரும்பினால் பார்த்துவிட்டு போகட்டும் .

நாட்டில சனம் பிச்சை எடுக்குது என்று உதராணம் கொண்டுவர புலம்பெயர்ந்த எந்த தமிழனுக்கும் அருகதை இல்லை .அங்கு சனம் எல்லோரும்  பட்டினி என்றால் இங்கு நாம் சாப்பிடாமல் இருக்கபோவதில்லை .

சாமத்தியவீடு தேவையோ என்பது வேறு அதில் ஆடம்பரம் வேண்டுமோ என்பது வேறு .

கனடாவில் இவ்வாறான Youtube வீடியோக்கள் குவிந்து போய் இருக்கின்றன.  அதைவிட திருமணம் செய்பவர்களும் திரைப்பட ரேஞ்சில் வீடியோ எடுத்து உலா விடுகிறார்கள்.  இவ்வாறு திரைப்படங்கள் எடுப்பதற்கு எக்ஸ்ரா பீஸ்.  :o    நான் பார்த்தவரையில், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணம் அதிகரித்து விட்டது.  அதனால் எதற்கெதற்கெல்லாம் செலவழிக்க வேண்டும் என்ற வரைமுறையின்றிச் செலவழிக்கிறார்கள்.  இவற்றைச் செய்பவர்கள் கு.சா. குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள்தான்.  படித்த பெற்றோரின் பிள்ளைகள் இவ்வாறு அநாவசியமாகச் செலவுகள் செய்வதில்லை.   கனடாவில் இப்போது சாமத்தியச் சடங்கு செய்வதற்குரிய செலவு 25,000 டொலர்களுக்கு மேல்.  திருமணத்திற்கு 40,000 டொலர்களுக்கு மேல்.  இவற்றை விட, 16, 18, 21 வயது பிறந்தநாட்களும் உண்டு. அவையும் மண்டபங்களிலேயே செய்யப்படுகின்றன.   போன தலைமுறையைவிட அதிகம் கெட்டுப் போயிருப்பது எமது இளைய தலைமுறையே. :(

  • கருத்துக்கள உறவுகள்

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

 

அதுகும் அவர், சுவிசில் புலிகளுக்கு... காசு சேர்த்தது உண்மையாக இருந்திருந்திருந்தால்....

உலங்குவானூர்தியில், சாமத்திய வீடு செய்ததை தவிர்த்திருக்கலாம்.

இப்போ... வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு, கை நிறைய அவலை அள்ளிக் கொடுத்துள்ளார்.

  • தொடங்கியவர்

இடம் கனடாபோல் இருக்கு.. :unsure:  கனடாவில் இருந்து ஊருக்குப் போறது கனநேரம் எடுக்கும்தானே.. :D அதுக்குத்தான் மாடு, கோழியை எல்லாம் கனடாவுக்கு கூட்டி வந்திட்டோம்.. :icon_idea:

அது சரி.. பெயர் றெபெக்கா என்று இருக்கு.. கிறித்துவர்களும் இதை செய்வார்களா?

அண்ணா இப்ப பெயரில் கிறிஸ்தவனையோ இண்டுவையோ இஸ்லாமியனையோ கண்டு பிடிக்க முடியாது தமிழர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே தமிழ்ப் பெயர் அதிகம் வைக்கிறார்கள் பிள்ளைகளுக்கு வேறு பெயர்களே . அதிலும் கிந்தி ,அரபுப் பெயர்கள் இப்ப அதிகம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பூப்படைகிறாள் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு!

 

அது ஒரு சாதனையோ, அல்லது மற்றப் பெண்களால், இலகுவில் சாதிக்க முடியாத ஒரு செயலோ அல்லவே!

 

எதற்காகப் பாரிய செலவில் விழா எடுக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை!

 

முந்தைய காலங்களில், தங்கள் வீட்டிலும் ஒரு பெண் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள் என்று ஊருக்குத் தெரிவிக்க வேண்டிய தேவை இருந்தது!

 

இப்போதெல்லாம், பெண்ணே தன்னை விளம்பரப் படுத்தச் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன!

 

ஒருவேளை, எங்கள் வீட்டில் ஒரு பணக்காரப்பெண் இருக்கிறாள் என்று சுண்டல், சுபேஸ் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கோ என்னவோ! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பூப்படைகிறாள் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு!

 

அது ஒரு சாதனையோ, அல்லது மற்றப் பெண்களால், இலகுவில் சாதிக்க முடியாத ஒரு செயலோ அல்லவே!

 

எதற்காகப் பாரிய செலவில் விழா எடுக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை!

 

முந்தைய காலங்களில், தங்கள் வீட்டிலும் ஒரு பெண் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள் என்று ஊருக்குத் தெரிவிக்க வேண்டிய தேவை இருந்தது!

 

இப்போதெல்லாம், பெண்ணே தன்னை விளம்பரப் படுத்தச் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன!

 

ஒருவேளை, எங்கள் வீட்டில் ஒரு பணக்காரப்பெண் இருக்கிறாள் என்று சுண்டல், சுபேஸ் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கோ என்னவோ! :D

 

எனக்கும்... அதுதான் விளங்கவில்லை புங்கையூரான்.

பெண் பதின்மூன்று வயது வந்தவுடன், இயற்கையாகவே... பூப்படைவது சர்வ சாதரணம்.

இதற்காக நித்திரை முழித்து படித்து பட்டம் பெறவோ...

ஜிம்முக்குப் போய், விசேட பயிற்சியோ எடுக்காமல் தன்ரை பாட்டில் நடக்கும் விசயத்துக்கு, ஏன்.. இவ்வளவு எடுப்பு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.helikopter_0008.gif

அந்தப் பெண், பதினெட்டு வயதிலும்.. பூப்படையாமல் இருந்திருந்திருந்தால்.....

எனது மகள், இன்னும் பூப்படையவில்லை என்று...

உலங்கு வானூர்தியில்... சுத்திக்காட்டி, ஊருக்கு அறிவித்திருந்தாலாவது...

ஆரும் மாப்பிள்ளை, இரக்கப் பட்டு கலியாணம் கட்ட, ஒரு உந்து கோலாய் இருந்திருக்கும். :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிலரின் கருத்துக்களை  வாசித்ததில்.............

 

எல்லோரும் அந்த பிள்ளையின் விருப்பமில்லாமல்

அல்லது அதை பகடைக்காயாக உபயோகித்து இது நடப்பதாக எழுதியுள்ளீர்கள்.

 

எனது அனுபவத்தை  எழுதுகின்றேன்.

 

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆட்களை அதிக அளவில் அழைப்பது

கொடுப்பது

வாங்குவது.............

இவற்றிலும் உடன்பாடில்லை.

 

ஆனால் எனது மகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு போகும்போது

அல்லது இது போன்ற நிகழ்வுகளின் படங்களைப்பார்க்கின்ற போது......

எனக்கும் இப்படி  வேண்டும்

சின்ன வயதிலேயே அது மூப்பெய்தினால்தான் செய்வது என்ற அறிவு வரமுதலேயே  கேட்பாள். கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

 

அவள் பெரிய மனுசியானபோது

அவளை பக்கத்தில் இருத்தி கேட்டேன்

அம்மா

இது ஒரு நாள் பவிழாவாக இருக்கும்

சாறி  கட்டணும்

மாலை தூக்கணும்

கன நேரம் நிற்கணும்

வலிக்கும்

.................  இப்படி எல்லாவற்றையுமே சொன்னேன்.

அவளது ஒரே பதில் எனக்கும்  அப்படி வேண்டுமப்பா.

 

அவளது ஆசைகளைக்கேட்டு

அதில் சிலவற்றை செய்தேன்.

 

அது ஒரு நாள் திருவிழா.

அதை வைத்துக்கொண்டு அப்படியே தான் பிள்ளை  வளரும் என்பது  சரியான பார்வையல்ல.

விடுமுறைகளில்  செல்லும்போது   ஐந்துநட்சத்திர கோட்டல்களில் தங்குகின்றோம்

அதையே பின்னர் தொடர்வதில்லை.

 

இதில் எழுதுபவர்களுக்கும் அதே பதில்தான்

உங்கள் பிள்ளையிடம்  ஒரு சொல் கேளுங்கள்.

முடிந்தால் நிறைவேற்றுங்கள்.

 

(அதே நேரம் அதிக ஆடம்பரங்களை எமது இனத்தினர் செய்வது தற்போதைய  சூழலில்   தவிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். மல்லுக்கட்டமுடியுமா?)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் சொல்வதை, இப்படியான விழாக்களைப் பார்க்கின்ற வெள்ளைக்காரப் பிள்ளைகளிடம், அந்தப் பிள்ளையின் பெற்றோர் கேட்டாலும், தனக்கும் அப்பிடியொன்று வேண்டுமென்று தான் அடம் பிடிக்கும்!

 

ஆனால், அதன் பெற்றோர் அதனிடம் கேட்க மாட்டார்கள்! 

 

ஏனெனில், அது குழந்தை! :D

விழா எடுப்பதற்குத்தான் பிறந்த நாள்கள் இருக்கின்றனவே.   சேலை கட்டும் வயது வந்தவுடன், அந்த வயதுப் பிறந்தநாளின் போது அழகழகாக சேலைகளைக் கட்டிப் பிள்ளைகளைப் படமெடுங்களேன்.   ஏன் இத்தனை சிறிய வயதில் இப்படி ஆடம்பரம் எடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா சொல்வதுபோல் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.. ஆனால் சிறு வயதில் இருந்துசிலவற்றை "உபதேசித்து வந்தால் " கேட்பார்கள்..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன், இங்கே ஆடம்பரம் என்று சொல்லபடுவது பிரதானமாக "ஹெலி" ..ஒரு விழாவிற்கு ஹெலி கொண்டுவர எவ்வளவு முடியும் என்று யாரவது சொல்லுங்கோ? அது சிலவேளை ஒரு 4000 ஓ 5000 டொலர் என்றால் காரியமில்லை. 30000-40, 000 சிலவளித்து விழா செய்யும் போது.

How Much Does It Cost to Rent a Helicopter?

Answer

The cost of renting a helicopter varies depending on company, type of helicopter to be used, length of flight, and time of flight. For a 2 place piston helicopter like Schweizer 300C, it costs around $400 per hour for day time flight while $500 per hour for night time flight. A higher cost is expected for a 7 place turbine helicoper like Eurocopter EC134 which costs $4350 and $4850 for day time and night time flight hour respectively.

 

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தில் இருந்து தேவதை வந்து இறங்கினாள் என்று பாட்டு போடும்போது காரில் வந்து இறங்க முடியாதுதானே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் நினைக்கிறன், இங்கே ஆடம்பரம் என்று சொல்லபடுவது பிரதானமாக "ஹெலி" ..ஒரு விழாவிற்கு ஹெலி கொண்டுவர எவ்வளவு முடியும் என்று யாரவது சொல்லுங்கோ? அது சிலவேளை ஒரு 4000 ஓ 5000 டொலர் என்றால் காரியமில்லை. 30000-40, 000 சிலவளித்து விழா செய்யும் போது.

How Much Does It Cost to Rent a Helicopter?

Answer

The cost of renting a helicopter varies depending on company, type of helicopter to be used, length of flight, and time of flight. For a 2 place piston helicopter like Schweizer 300C, it costs around $400 per hour for day time flight while $500 per hour for night time flight. A higher cost is expected for a 7 place turbine helicoper like Eurocopter EC134 which costs $4350 and $4850 for day time and night time flight hour respectively.

 

 

 

எனது மகளை  எனது காரில்தான் மண்டபத்துக்கு கொண்டு போவதாக இருந்தேன்.

சுவிசிலிருந்து வந்திருந்த அண்ணரின் மகன் தனது காரில்தான் தங்கையை  ஏற்றுவேன் என்று தனது காரில் ஏற்றினான்.

இவன் தன் தங்கையை BMW  இல் ஏற்றினான்

அங்கும் அவளது அண்ணன் helicopter  இல் ஏற்றியிருந்தால்............??? :rolleyes: 

வானத்தில் இருந்து தேவதை வந்து இறங்கினாள் என்று பாட்டு போடும்போது காரில் வந்து இறங்க முடியாதுதானே.. :D

அது தானே?

பாட்டுக்கு சரியான காட்சி வைக்கவில்லை என்று பின்னர் இங்கு விமர்சனம் வரும்...... :D

இந்த திரியிலும்  heliயை விட புலி தானே அடி வாங்குது............. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இதற்காகத்தான் செய்யபடுகிறது என்கிற நாங்கள் நினைக்கிற "சமூக stigma" தவிர இப்படி ஒரு நிகழ்வு நடப்பதில் குறையும்  இல்லை. இங்கே கனடாவில் இது எல்லாவற்றையும் ஒரு குறுப் இடம் கொடுத்து விட்டால் அவர்கள் எல்லாம் செய்வார்கள். போற சனத்தில் அரைவாசிக்கு என்னத்திர்ற்கு போனது என்ற "நோக்கமே" மறந்து போடும். அண்மையில் எனது மனைவி இப்படியான ஒரு நிகழ்விற்கு போய், கன காலம் சந்திக்காத உறவுகளை எல்லாம் சந்திந்த்துப்போட்டு, வந்தா. முந்தின மாதிரி பொம்பிளை அப்படி இருந்தது, அவர்கள் இது செய்தார்கள், அப்படி செய்தார்கள் என்கிற கதையே இல்லை. என்ன சாப்பாடு, ..ஒரு கதையும் இல்லை. தனியே தான் யார் யாரை சந்த்தது என்கிற கதைதான் சொன்னவ.  

செலவு என்று பார்த்தால், எதுதான் செலவில்லை..

என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்; "சாமத்திய" படாமலும், பட்டும் வைத்தியர் மாரிடம் வருட கணக்கா அலைகிற ஆட்களும் உள்ளார்கள். -எனக்கும் உனக்கும் சரியாக வந்திருக்கு என்பதற்காக இது ஒரு "சாதாரண நிகழ்வு அல்ல"

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது இதற்காகத்தான் செய்யபடுகிறது என்கிற நாங்கள் நினைக்கிற "சமூக stigma" தவிர இப்படி ஒரு நிகழ்வு நடப்பதில் குறையும்  இல்லை. இங்கே கனடாவில் இது எல்லாவற்றையும் ஒரு குறுப் இடம் கொடுத்து விட்டால் அவர்கள் எல்லாம் செய்வார்கள். போற சனத்தில் அரைவாசிக்கு என்னத்திர்ற்கு போனது என்ற "நோக்கமே" மறந்து போடும். அண்மையில் எனது மனைவி இப்படியான ஒரு நிகழ்விற்கு போய், கன காலம் சந்திக்காத உறவுகளை எல்லாம் சந்திந்த்துப்போட்டு, வந்தா. முந்தின மாதிரி பொம்பிளை அப்படி இருந்தது, அவர்கள் இது செய்தார்கள், அப்படி செய்தார்கள் என்கிற கதையே இல்லை. என்ன சாப்பாடு, ..ஒரு கதையும் இல்லை. தனியே தான் யார் யாரை சந்த்தது என்கிற கதைதான் சொன்னவ.  

செலவு என்று பார்த்தால், எதுதான் செலவில்லை..

என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்; "சாமத்திய" படாமலும், பட்டும் வைத்தியர் மாரிடம் வருட கணக்கா அலைகிற ஆட்களும் உள்ளார்கள். -எனக்கும் உனக்கும் சரியாக வந்திருக்கு என்பதற்காக இது ஒரு "சாதாரண நிகழ்வு அல்ல"

 

தற்பொழுது பெண்கள் 10 அல்லது 11 வயதிலேயே பெரிய மனுசி ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் இங்கு எழுதியது போல் பிரான்சில் இப்படி விழாக்களை நடாத்திக்கொடுக்கும் ஒருவருடைய பிள்ளை 17 வயதுவரை பெரிய மனுசி ஆகவில்லை.

அவரது  தவிப்பு........................

யாரறிவார். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலையும் செத்த வீடுகள், அவரவர் வசதிகேற்பச் செய்வார்கள்!

 

ஏழைகள், சும்மா சோடினைகளோட, பறை மேளத்தோட போவார்கள்!

 

பணக்காரர், கொஞ்சம் விசேசமான 'பாடைகளில்' பாண்ட் வாத்தியங்கள் முழங்கப் போவார்கள்!

 

நாளைக்கு, இவர்களும் 'ஹெலியில' போகும் சாத்தியங்களும் உண்டு என்பது தான் எனது 'ஆதங்கம்'!

 

அவர்களிடம் பணமிருக்கு, செய்கிறார்கள்!

 

நாளைக்குப் பணமில்லாதவன், விரும்பாவிட்டாலும், வீங்கித் தானாக வேண்டும் என்ற நிலைவரக் கூடாது, என்பது தான் எனது கருத்து!

 

கோபுரத்தைத் திரும்பத் திரும்ப உடைத்து, திரும்பத் திரும்பக் கட்டுபவனைச், சில ஆகம விதிகள், ஒரு அளவுக்கு மேல் போகவிடாமல், மட்டுப்படுத்துகின்றன! ஒன்பதுக்கு மேலே, அடுக்காதே என்று!

 

சாமத்திய வீட்டுக்கு ஆகம விதிகள் இல்லை!

 

எனவே நாளை விண் வெளியிலும் 'பூப்புனிதம்' கொண்டாடுவான்!

 

விண்ணுக்குப் போன முதல் பெண், 'வலண்டைனா ரெறஸ்கோவா'' மாதிரித் தமிழனுக்கும் பெருமை தானே!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலையும் செத்த வீடுகள், அவரவர் வசதிகேற்பச் செய்வார்கள்!

 

ஏழைகள், சும்மா சோடினைகளோட, பறை மேளத்தோட போவார்கள்!

 

பணக்காரர், கொஞ்சம் விசேசமான 'பாடைகளில்' பாண்ட் வாத்தியங்கள் முழங்கப் போவார்கள்!

 

நாளைக்கு, இவர்களும் 'ஹெலியில' போகும் சாத்தியங்களும் உண்டு என்பது தான் எனது 'ஆதங்கம்'!

 

அவர்களிடம் பணமிருக்கு, செய்கிறார்கள்!

 

நாளைக்குப் பணமில்லாதவன், விரும்பாவிட்டாலும், வீங்கித் தானாக வேண்டும் என்ற நிலைவரக் கூடாது, என்பது தான் எனது கருத்து!

 

கோபுரத்தைத் திரும்பத் திரும்ப உடைத்து, திரும்பத் திரும்பக் கட்டுபவனைச், சில ஆகம விதிகள், ஒரு அளவுக்கு மேல் போகவிடாமல், மட்டுப்படுத்துகின்றன! ஒன்பதுக்கு மேலே, அடுக்காதே என்று!

 

சாமத்திய வீட்டுக்கு ஆகம விதிகள் இல்லை!

 

எனவே நாளை விண் வெளியிலும் 'பூப்புனிதம்' கொண்டாடுவான்!

 

விண்ணுக்குப் போன முதல் பெண், 'வலண்டைனா ரெறஸ்கோவா'' மாதிரித் தமிழனுக்கும் பெருமை தானே!

வீங்கித் தானாக வேண்டும் என்ற நிலைவரக் கூடாது, என்பது தான் எனது கருத்து!

 

இந்த விடயத்தில் மட்டுமே எமக்கு சிக்கல்

அதை மட்டும் நாம் சொல்லிக்கொடுத்துவிட்டால்....

 

எனது வீட்டில் போன கிழமை நடந்ததை எழுதுகின்றேன்.

 

மகள் யூனியில் சாதாரணமாக 2 ஈரோக்களுக்குள் சாப்பிடலாம்.

போன திங்கள் வேறு ஒரு இடத்தில் பரீட்சை என்று வெளிக்கிட்டாள்.

சரி வேறு இடம் என்று 10  ஈரோக்களை கைக்குள் வைத்துவிட்டு வந்தேன்.

அவள் பின்னேரம் வீட்டுக்கு வரும்போது பாண் பைக்கற்றுடன் வந்தாளாம்.

வந்து அம்மா

இதில் சண்விற்ச்  நாளைக்கு செய்து வையுங்கோ.  நாளைக்கு கொண்டு   போய்ச்சாப்பிடணும் என்று.

தாய்  கேட்டிருக்கின்றா. ஏன் சாப்பாட்டுக்கு  காசு தரவா என்று.

 

இல்லையம்மா

ஒரு சண்விற்ச் 6 ஈரோ. ஒரு கொக்கா 3 ஈரோ  கொள்ளை அடிக்கிறார்கள் என்று.

 

இது என் வளர்ப்பு.

 

(சாதாரணமாக 1 கொக்கா 1 ஈரோக்கு எங்கும் வாங்கலாம்.பாடசாலைகளில் 50  அல்லது 60 சதம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்பொழுது பெண்கள் 10 அல்லது 11 வயதிலேயே பெரிய மனுசி ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் இங்கு எழுதியது போல் பிரான்சில் இப்படி விழாக்களை நடாத்திக்கொடுக்கும் ஒருவருடைய பிள்ளை 17 வயதுவரை பெரிய மனுசி ஆகவில்லை.

அவரது  தவிப்பு........................

யாரறிவார். :(

 

17 வயது என்பது கொஞ்சம் பிந்திய நிலைமை, குழந்தை வைத்தியரிடம், அல்லது Pediatric Endocrinologist  இடம்  அழைத்து செல்லுவார் என்று நினைக்கிறன். - அண்மையில் ஒரு படம் பார்த்தேர்ன் எதிர்நீச்சல் என்று, அதிலும் இப்படியான ஒரு நிலை வருகிறது,

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நட்பு வட்டத்தில் சாமத்தியச் சடங்குகளை "சாறிப் பார்ட்டி" என்றே அழைப்போம்! :) 
 

 

பெண் பிள்ளைகள் தாங்களும் சாறி அணிந்து மேக்கப் போட்டு ஃபோட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவதால், அவர்களின் பெற்றோர்களும் இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனினும் ஒரு குறித்தளவினர் இப்படியான விழாக்களை தமது பணத்தையும், பகட்டையும் காட்ட ஆடம்பரமாகச் செலவு செய்கின்றனர் என்பது உண்மைதான். இந்த சாமத்திய சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வில் ஒரு கட்டாயமான அங்கமாக மாறிவிடும் என்றுதான் தெரிகின்றது.

எனவே என்னதான் சொன்னாலும் (எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும்) இப்படியான விழாக்களைத் தவிர்க்கமுடியாது என்பதுதான் எனது அனுபவப் பாடம். :mellow:  ஆகவே விழாவுக்கான காரணத்தை ஆராய்வதை விட்டு நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சந்தோஷமாகக் குடித்துக் கும்மாளம் அடித்துவிட்டு இறுதியில் மேடையில் ஏறிப் பெண் குழந்தைக்கு "Congratulations! You're a big girl now" என்று சொல்லி கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு வரவேண்டியதுதான் :wub: .

சாமத்திய விழாவுக்குக் கொடுப்பதற்கு என்று நல்ல வாசகம் உள்ள வாழ்த்து அட்டை வாங்குவதுதான் கடினமான விடயம். ஒரு நண்பர் கொடுத்த வாழ்த்து அட்டையில் பின்வரும் வாசகம் இருந்தது. அது இன்றளவும் எமது நண்பர் வட்டத்தில் பேசப்படுகின்றது. :icon_mrgreen:


well-done.jpg
 

 

இதில் சிலரின் கருத்துக்களை  வாசித்ததில்.............

 

எல்லோரும் அந்த பிள்ளையின் விருப்பமில்லாமல்

அல்லது அதை பகடைக்காயாக உபயோகித்து இது நடப்பதாக எழுதியுள்ளீர்கள்.

 

எனது அனுபவத்தை  எழுதுகின்றேன்.

 

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆட்களை அதிக அளவில் அழைப்பது

கொடுப்பது

வாங்குவது.............

இவற்றிலும் உடன்பாடில்லை.

 

ஆனால் எனது மகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு போகும்போது

அல்லது இது போன்ற நிகழ்வுகளின் படங்களைப்பார்க்கின்ற போது......

எனக்கும் இப்படி  வேண்டும்

சின்ன வயதிலேயே அது மூப்பெய்தினால்தான் செய்வது என்ற அறிவு வரமுதலேயே  கேட்பாள். கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

 

அவள் பெரிய மனுசியானபோது

அவளை பக்கத்தில் இருத்தி கேட்டேன்

அம்மா

இது ஒரு நாள் பவிழாவாக இருக்கும்

சாறி  கட்டணும்

மாலை தூக்கணும்

கன நேரம் நிற்கணும்

வலிக்கும்

.................  இப்படி எல்லாவற்றையுமே சொன்னேன்.

அவளது ஒரே பதில் எனக்கும்  அப்படி வேண்டுமப்பா.

 

அவளது ஆசைகளைக்கேட்டு

அதில் சிலவற்றை செய்தேன்.

 

அது ஒரு நாள் திருவிழா.

அதை வைத்துக்கொண்டு அப்படியே தான் பிள்ளை  வளரும் என்பது  சரியான பார்வையல்ல.

விடுமுறைகளில்  செல்லும்போது   ஐந்துநட்சத்திர கோட்டல்களில் தங்குகின்றோம்

அதையே பின்னர் தொடர்வதில்லை.

 

இதில் எழுதுபவர்களுக்கும் அதே பதில்தான்

உங்கள் பிள்ளையிடம்  ஒரு சொல் கேளுங்கள்.

முடிந்தால் நிறைவேற்றுங்கள்.

 

(அதே நேரம் அதிக ஆடம்பரங்களை எமது இனத்தினர் செய்வது தற்போதைய  சூழலில்   தவிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். மல்லுக்கட்டமுடியுமா?)

 

இதுவும் உங்கள் வளர்ப்புத்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எப்ப கிருபனுடைய வீட்டில் :icon_idea: / மகளுக்கு :icon_mrgreen: , சாறி பட்டி?

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்ப கிருபனுடைய வீட்டில் :icon_idea: / மகளுக்கு :icon_mrgreen: , சாறி பட்டி?

என்னுடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதால் நான் நம்பாத கடவுள் எனக்குப் பெண் குழந்தையைத் தரமாட்டார் என்று நம்புகின்றேன் <_<

 

எனவே எனக்கு தர்மசங்கடமான நிலை வராது!

 

ஒருகாலகட்டத்தில் ஆறேழு வயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் பேசிவிடுவார்கள்.  பெண்பிள்ளை வயதுக்கு வந்ததும் திருமணத்தை நடத்தி வைத்துக் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.  அந்தச் சடங்குதான் பின்னர் சாமத்திய வீடாக மாறியது.  சாமத்திய வீட்டின்போது, தாய்மாமனே அனைத்து நிகழ்வையும் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.  இது கணவரின் குடும்பமாக இருந்து பின்னர் தாய்மாமன் ஆகியது.   அப்படியான ஒன்றை இன்றைய காலகட்டத்திலும் பின்பற்றுவது மட்டுமின்றி அதை அடுத்த தலைமுறைக்கும் ஓதிவிட்டார்கள். 

 

சாறி உடுப்பதற்கும் ஒரு வயது இருக்கிறது.     ஏன் இத்தனை சிறிய வயதிலேயே செய்ய வேண்டும்? 

 இங்கு, இவ்வாறான விழாவிற்கு முன்னரே முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில்  :icon_mrgreen:  அப்பெண்ணை வைத்துப் படப்பிடிப்பு நடத்தி அதனை அந்த விழாவில் திரையிடுவதோடு Youtube இலும் வெளியிடுவார்கள்.   நான் இங்கத்தையை உடைமுறையைப் பின்பற்றுபவள்.  அந்தப் படப்பிடிப்பில் அந்தப் பிள்ளை அணிந்த உடையும் படம்பிடித்தமுறையும் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  அவர்களின் மகளை அவர்களே நடிகையாக்கி விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றியது.  :mellow:

அது மட்டுமின்றி, அதற்குள் குடும்பப் பழிவாங்கல்களும் நடைபெற்றது வேறுகதை.  அந்த விழாவின்போது, தாய்மாமன் மண்டபத்தில் இருந்தபோதும் முறைகள் செய்தது வேறொருவர்.  :rolleyes:    இது தேவைதானா? 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.