Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடலங்பழ பிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்பழ பிரட்டல்

 

வீட்டில் இந்த முறைதான்  புடலங்காய் கன்று நட்டனான்.

 

விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து.

 

விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன்,  சுவை பரவாயில்லை.

 

என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா?

 

இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும்.

 

இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று

 

 

3752060620_fbb33b3b96.jpg

நான் ஒருமுறை பாகப்பழத்தினையும், கத்தரிப்பழத்தினையும் தேங்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பார்த்து இருக்கின்றேன்... செய்முறை வேண்டுமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்காய் கூட்டு

ht413.jpg

 

தேவையான பொருட்கள் 

புடலங்காய் - 1/2  கிலோ

வெங்காயம் - 100 கிராம் 

பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்) 

பச்சை மிளகாய் -  3 (கீறிக் கொள்ளவும்) 

தாளிக்க 

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய் - 2

பொட்டுக்கடலை பொடி - 200 கிராம் 

எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி 

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை 

புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். 

ஒரு வானலியில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும். 

பின் வெங்காயத்தையும், பூண்டையும் வதக்கவும். புடலங்கயைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போடவும் சிறிது நீர் தெளித்து காயை வேக விடவும். 

கூட்டை இறக்கு முன் பொட்டுக்கடலைப் பொடியைத் தூவி இறக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொரித்த புடலங்காய் குழம்பு

sl911.jpg

 

 

*புடலங்காய் - 200 கிராம் பொடியாக நறுக்கியது

*குழம்புப் பொடி - 2 ஸ்பூன்

*சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது

*தேங்காய் - 5 சில்

*பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்

*சீரகம் - 1/4 டீஸ்பூன்

*புளி - சிறிய எலுமிச்சை அளவு

*உப்பு - தேவைக்கு

*சோம்பு - 1/4 டீஸ்பூன்

*மிளகு - 1/4 டீஸ்பூன்

*பச்சை மிளகாய் - 2

*தேங்காய்,பொட்டுக்கடலை,சீரகம் சோம்பு மிளகு,பச்சை மிளகாய்  ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்ட பொரித்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

*குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு, பின் வெங்காயம், புடலங்காய் போட்டு நன்கு வதக்கி, புளிக் கரைசல், உப்பு, குழம்புப் பொடி போட்டு வேக வைக்கவும். 

*நன்கு வெந்தவுடன் பொரித்து அரைத்து வைத்துள்ளதை ஊற்றி கொதிக்க விடவும். சுவையான புடலங்காய் பொரிச்ச குழம்பு ரெடி

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.

 

நிழலி பாகற்பழமும் சமைதுள்ளேன். அதில் விதை எடுக்கும் போது விதையின் மேல் உள்ள தோல் கண்ணை கவரும் நல்ல சிகப்பாக இருந்திச்சு வாயில் நக்கிப்பார்க்க இனிப்பாக இருந்தது. அப்ப விதை எடுத்தபின் மேல் தோலை மட்டும் கரைத்து குடித்தேன். குடித்து 1 நிமிடத்தில் வயிற்றுக்குள் ரெயில் ஓடத்தொடங்கிவிட்டது, பிறகுகென்ன toilet தான். பிறகு வாய்க்குள் கையைவிட்டு ஒங்காளித்து சத்தி எடுத்தபின்னும் 3மணித்தியாலம் தாங்கமுடியாத வயிற்று குத்து. ஏன்னெற்று தெரியவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.

 

நிழலி பாகற்பழமும் சமைதுள்ளேன். அதில் விதை எடுக்கும் போது விதையின் மேல் உள்ள தோல் கண்ணை கவரும் நல்ல சிகப்பாக இருந்திச்சு வாயில் நக்கிப்பார்க்க இனிப்பாக இருந்தது. அப்ப விதை எடுத்தபின் மேல் தோலை மட்டும் கரைத்து குடித்தேன். குடித்து 1 நிமிடத்தில் வயிற்றுக்குள் ரெயில் ஓடத்தொடங்கிவிட்டது, பிறகுகென்ன toilet தான். பிறகு வாய்க்குள் கையைவிட்டு ஒங்காளித்து சத்தி எடுத்தபின்னும் 3மணித்தியாலம் தாங்கமுடியாத வயிற்று குத்து. ஏன்னெற்று தெரியவில்லை

வயித்துக்கை புடலங்காய் வளருது போல  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.

 

நிழலி பாகற்பழமும் சமைதுள்ளேன். அதில் விதை எடுக்கும் போது விதையின் மேல் உள்ள தோல் கண்ணை கவரும் நல்ல சிகப்பாக இருந்திச்சு வாயில் நக்கிப்பார்க்க இனிப்பாக இருந்தது. அப்ப விதை எடுத்தபின் மேல் தோலை மட்டும் கரைத்து குடித்தேன். குடித்து 1 நிமிடத்தில் வயிற்றுக்குள் ரெயில் ஓடத்தொடங்கிவிட்டது, பிறகுகென்ன toilet தான். பிறகு வாய்க்குள் கையைவிட்டு ஒங்காளித்து சத்தி எடுத்தபின்னும் 3மணித்தியாலம் தாங்கமுடியாத வயிற்று குத்து. ஏன்னெற்று தெரியவில்லை

 

உடையார், பரிசோதனை எலி மாதிரி.... கண்ட பழங்களையும் சாப்பிட்டு,

அதனால்... வரும் நன்மை, தீமைகளை எமக்கு அறியத் தரவும். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், பரிசோதனை எலி மாதிரி.... கண்ட பழங்களையும் சாப்பிட்டு,

அதனால்... வரும் நன்மை, தீமைகளை எமக்கு அறியத் தரவும். :D  :lol:

 

 

சிறியின் பெருந்தன்மை மெய்சிலிர்க்கவைக்கின்றது

 

உடையாரைக்காணவில்லை எனத்தேட வைத்து விடாதீர்கள்  உடையார்... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புடலங்பழ பிரட்டல்

 

வீட்டில் இந்த முறைதான்  புடலங்காய் கன்று நட்டனான்.

 

விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து.

 

விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன்,  சுவை பரவாயில்லை.

 

என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா?

 

இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும்.

 

இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று

 

 

3752060620_fbb33b3b96.jpg

 

உடையார்..........புடலங்காய் பழுத்தாலோ இல்லாட்டி முத்தினாலோ அது அங்காலை கொட்டை மட்டும் எடுக்கத்தான் சரி........அதிலையும் குழம்பு,பிரட்டல் எண்டு மினைக்கடுற ஜவ்னாஸ் ஸ்ரையிலை மிகவும் பாராட்டுறன் :icon_idea: ......யாழ்ப்பாணியள் ஒண்டையும் மிச்சம் வைக்கமாட்டாங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், புடலங்காய் முத்திப்போனால், நல்ல வெயிலில காயவைச்சுப்போட்டுக், கயிறு செய்யலாம்! :D

 

எனக்கும் பாவக்காய் நிரம்பப் பழுத்துப்போறது தான்! அந்த இனிக்கிற சிவப்பைப் பற்றிச் சொன்னதற்கு நன்றிகள்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயித்துக்கை புடலங்காய் வளருது போல  :lol:

 

அது வெளியில்தான் :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார், பரிசோதனை எலி மாதிரி.... கண்ட பழங்களையும் சாப்பிட்டு,

அதனால்... வரும் நன்மை, தீமைகளை எமக்கு அறியத் தரவும். :D  :lol:

 

பாவை இலைகளை இங்கு சீனாகாரர் விற்கின்றவர்கள். பிறகுதான் தெரிரும் அதை அவதித்து குடிக்கின்றவர்களென்று. இங்கு குளிர் தொடங்கியபடியால் இனி பாவல் காய்க்க மாட்டாது, எனவே போன சனி இலைகள் பிஞ்சுகள் எல்லாம் பிடுங்கி சீரகமும் போட்டு அவித்து கொஞ்சம் வாயில் வைத்துப்பார்த்தால் படு கச்சல். என்ன செய்ய ஒரு கப் குடித்துவிட்டு மிகுதியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன் தினம் குடிக்க. பிள்ளைகள் $5 வங்கிவிட்டு ஒரு கரட்டி வாயில் வாங்கினார்கள், மனைவி  கிட்டவும் வரவில்லை, அடுத்த பரிசோதனையுடன் சந்திக்கின்றேன் சிறி  :D

சிறியின் பெருந்தன்மை மெய்சிலிர்க்கவைக்கின்றது

 

உடையாரைக்காணவில்லை எனத்தேட வைத்து விடாதீர்கள்  உடையார்... :D

 

நன்றி தேட வைக்கமாட்டேன்  :D

உடையார்..........புடலங்காய் பழுத்தாலோ இல்லாட்டி முத்தினாலோ அது அங்காலை கொட்டை மட்டும் எடுக்கத்தான் சரி........அதிலையும் குழம்பு,பிரட்டல் எண்டு மினைக்கடுற ஜவ்னாஸ் ஸ்ரையிலை மிகவும் பாராட்டுறன் :icon_idea: ......யாழ்ப்பாணியள் ஒண்டையும் மிச்சம் வைக்கமாட்டாங்கள். :D

 

:D  :lol: இல்லை குசா, பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிட்டவர்கள்

உடையார், புடலங்காய் முத்திப்போனால், நல்ல வெயிலில காயவைச்சுப்போட்டுக், கயிறு செய்யலாம்!

 

எனக்கும் பாவக்காய் நிரம்பப் பழுத்துப்போறது தான்! அந்த இனிக்கிற சிவப்பைப் பற்றிச் சொன்னதற்கு நன்றிகள்! தப்பித்தவறி குடித்துவிடாதீர்கள்

 

 

நார்தன்மை மேலே உள்ள இனத்தில் இல்லை, நன்றாக இருந்த து, செய்து பாருங்கள் புங்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.