Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு யாழில் சான்றிதழ் வழங்கி வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை கல்வி அமைச்சின் பிரிவேனாக் கிளையினால் நடத்தப்பட்ட வெளிக்கள தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த தென்னிலங்கையைச் சேர்ந்த இருபத்தைந்து பிக்குகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்விற்கு கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார்.

தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றி வைக்க, கல்வியியற் கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் பாடினர்.

 

இந் நிகழ்வில் அகில இலங்கை பிரிவேனா கல்விப் பிரிவின் தமிழ்மொழி ஆலோசகர் உயங்காவே ஞானரத்னதேரர், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, 51ஆது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேணல் பர்ணாந்து, விசேட அதிரடிப்படை பொலிசாரின் யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி வாஸ்பெரெரா, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் திலகரட்ண, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், முன்னாள் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

 

தென்னிலங்கையில் தமிழ் கற்று கடந்த இரண்டு வாரங்களாக களப் பயிற்சியைப் பெறும் நோக்கில் யாழ் வந்த குறித்த பிக்குகளுக்கு தமிழ் மொழி மூலம் கலந்துரையாடுவது சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

buddhist-monk04.jpg

buddhist-monk03.jpg

buddhist-monk02.jpg

buddhist-monk01.jpg

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4591

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட குறிக்கோள்

நிலையான கொள்கை

எல்லோரும் ஒரு நிலை

தீர்க்கமான வழி நடாத்துதல்

 

எதிரியானால் சிங்களவனை பாராட்டணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொக்கனாக  இருந்து மோடனான வருகிறார்கள் போல..

-எங்கட இடத்தில சொல்லுவினம் மொக்கனிலும் மோடன் திறம் என்று-

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தின் இராமநாதன்களும்.. பொன்னம்பலங்களும் செய்ததை.. அப்ப கண்டித்த தலீவர்.. இப்ப தான் அதைவிட மோசமாகச் செய்கிறார். என்ன வித்தியாசம்.. இராமநாதன்களையும் பொன்னம்பலங்களையும் சிங்களவன் பல்லக்கில் வைத்து தூக்கி ஊர்வலம் வந்தான்.. இப்ப டக்கிளஸ் புத்த பிக்குகளை தலையில தூக்கி வைச்சுக்கிட்டு ஊர்வலம் வருகிறார்..! நல்ல படிநிலை முன்னேற்றம்.

 

கொழும்பில பட்டம் பெறும் போது கூட.. கூடப்படிச்ச புத்த பிக்குவும் லைனில நின்று தான் பட்டம் வாங்கினான். ஆனால் இங்கு அவன் குந்தி இருக்க தலீவர் கொண்டு போய் சேட்டுபிக்கட் வழங்கிறார். படிச்ச சிங்களவனே இவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் போது.. தலீவர்.. தூக்கி தலைல வைக்கிறார் என்றால் தலீவர் பெரும் தொலைநோக்கோடு செயற்படுகிறார் என்று அர்த்தமாகும்.. அப்படின்னு ஒட்டுக்குழு கூப்பாடிகள் அறிக்கை விட ஏன் இன்னும் தாமதமோ புரியவில்லை..! :lol::D

Edited by nedukkalapoovan

மொக்கனாக  இருந்து மோடனான வருகிறார்கள் போல..

-எங்கட இடத்தில சொல்லுவினம் மொக்கனிலும் மோடன் திறம் என்று-

 

அதிகார திமிர் கண் இல்லாமல் ஆடுகிறது. இதற்கு பெயரா துறவறம்?

 

இன்றைய மேற்கு நாடுகளின் கிறிஸ்தவ மக்கள்தான் மிக குறைந்த சமய நம்பிக்கை கொண்டவர்கள். கிட்லர் இதை அடையத்தான் யூத மதத்தை அழித்தவர். 

 

1500 ஆண்டுகளுக்கு முன்னர் துறவு என்ற பெயரால் நடந்த அராஜரீகங்கள் தலைக்கு மேல் போனதால் தமிழ் நாட்டில் அன்பு, காதல், பக்தி என்ற பெயரால் சமயப் புரட்சி வந்தது.  புதம் என்று அந்த நேரம் வெறி கொண்டு மக்களை கழுவேற்றி வந்தவர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து துடைக்கப்பட்டரகள். தமிழ் நாட்டுக்கு கழுவை கொண்டுவந்து காட்டி வைத்த அதே ஆட்கள் தண்டிக்கப்படாவிட்டாலும் அதேகூட்டம் கொண்டுவந்த கழுவிலேற்றி அழிக்கப்பட்டது.  

 

குழந்தைகள், பெண்களலின் தொடர்புகளால் இதயம் பண்படுத்தப்படாத வெறிதனப்  பயங்கரவாதிகள் ஒரு புறம், அறியாத வயதில் தம் மன விருபத்திற்கெதிராக இயல்பு வாழ்க்கை பறிக்கபட்டு தம் சொந்த உறவுகளிடமிருந்து பிரிக்கப்பட்டத்தால் இழந்ததை ஏங்கி சொந்த மனத்தால் துஸ்ட்டர்களாக மாற்றப்பட்ட கெமுனுக்கள் மறுபுறமாக சமய அராஜரீகம் இலங்கையில் தலை விரித்தாடுகிறது.   இலங்கையில் புத்த மதவெறி விரவில் சீர்திருத்த வாதிகளால் திருத்தப்படும். 

 

சிங்கள மக்களுக்கு இந்த மத வெறியர்கள் ஆடும் திமிர்கள் விரைவில் கண்ணில் தெரியத்தொடங்கும். இந்த வெறியர்கள் ஊட்டிய போதையால் நாடு இராசாயனக் குண்டுகள் பொட்டு அழிக்கப்படும் கண்கெட்ட தனதை புத்த மக்கள் வேண்டி நின்று கேட்டுப்பெற்றார்கள் என்ற உண்மையை அவர்களில் இருந்துதான் ஒருவர் உடைத்து வைப்பார். 

 

 

இலங்கையில்தான் மக்கள் இன்றை புத்த மதத்தில் திணிக்கப்பட்டிருக்கும் வெறிகளை முறிக்க புரட்சி கொண்டு வருவார்கள்.  இந்த புரட்சி நடந்து மகிந்தா பதவி தூக்கி எறியப்படும் சந்தப்பம் கூட வரலாம்.  

"மொக்கனாக  இருந்து மோடனான வருகிறார்கள் போல.." அந்த நேரம் இந்த மாற்றம் வந்தையிட்டு வருந்துவார்கள்.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் வாழ்த்தி அனுப்புகிறார். தமிழில் சொல்லி தமிழரை அடிக்க வசதியாக இருக்கும். தமிழில் தேசிய கீதம் பாட முடியாது.  ஆனால் இவர்கள் தமிழ் கற்க முடியும் எனில் லாப நோக்கம் ஏதோ உள்ளது.

 

396460_272334876153234_1886582914_n.jpg

 

 

 

 

அண்ணே நீங்க சிங்களத்தில 10 ஆம் கிளாஸ் பெயில். ஆனா நான் தமிழில் 5 ஆம் கிளாஸ் பாஸ். பாஸ் பெரிதா பெயில் பெரிதா?

 

 

 

புத்த மதத்திற்கு மாறும் தமிழர்களுக்கு  இலவச வீடு  மற்றும் காணிகள் மற்றும் இலவச தொலைக்காட்சி (சன்,விஜய்,கலைஞர்) சேவைகளும் வழங்கப் படும். புத்தருக்கு பெண்களே கருவறை வரை சென்று பூசை செய்ய உரிமை வழங்கப்படும். மற்றும் ஜாதிபேதம் இல்லாமல் யாரும் வுத்தரை தரிசிக்கலாம். இன்றிலிருந்து மாறுங்கள் புத்த மதத்திற்கு  என்று ஒரு விளம்பரம் வெகு விரைவில் தினமுரசு பத்திரிகையில் வரும் குத்தியின் ஆட்கள் மதம் மாற்றும் வேலைக்காக பலரை கடத்திசென்று மதம் மாற்றுவார்கள். அரச பாதுகாப்பு பொதுமக்கள் நலன் கருதி பலப்படுத்தப்படும்- தூர நோக்கு சிந்தனையில் குத்தியே யாழ்ப்பாணத்தில் முதலாவது நபராக புத்த மதத்திற்கு ஜனாதிபதி முன்னிலையில் மதம் மாறுவார் என்பதனை மிக மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கின்றோம் 

 

buddhist-monk03.jpg

 

மற்றவர்கள் தலை குனிந்து பிராத்தனையில் இருப்பது போல் நடிக்கும் போது இந்த ஆள் வெறிதனமாக யாரையோ மிரட்டுவது படத்தில் விழுந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளின் முகத்தில்.... சிங்கள இராணுவத்தின் சாயல் அடிக்குது.

தமிழனை கொண்டும் அடையாத திருப்தி தமிழை கொல்ல வருமோ எண்டு பாக்கினமோ..?? 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளின் முகத்தில்.... சிங்கள இராணுவத்தின் சாயல் அடிக்குது.

சீருடைகள் மட்டுமே வேறு!

 
கொள்கைகள் உணர்வுகள் எல்லாம் ஒன்றுதான்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளின் முகத்தில்.... சிங்கள இராணுவத்தின் சாயல் அடிக்குது.

ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் போன்று இருக்கிறது  தமிழ்சிறி 

 

சீருடைகள் மட்டுமே வேறு!

 
கொள்கைகள் உணர்வுகள் எல்லாம் ஒன்றுதான்!

 

100 வீதம் உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.