Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்த்தாண்டம் அகதிகள் முகாம் செல்வி தினுசியா நல்ல மதிப்பெண்கள் எடுத்து இன்று பொறியியல் கல்லூரியில் சேர அனுமதி!

Featured Replies

1045180_669504799731040_1414520956_n.jpg


மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா தன்னுடைய ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் படித்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1080 மதிப்பெண்கள் எடுத்தார். மிகவும் ஏழ்மையான சூழலில் தான் பொறியியல் கல்லூரில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட செல்வி தினுசியவிற்கு தமிழ் உணர்வாளர்கள் உதவி செய்ய முன்வந்தனர் . 
இரு வாரங்களுக்கு முன் அகரம் அறக்கட்டளையில் மேல் படிப்பிற்காக முறையிட சென்னை வந்த போது நாமும் நம் நண்பர்களும் இவரையும் இன்னும் பிற முகாம் மாணவர்களையும் அகரம் அறக்கட்டளைக்கு அழைத்து சென்று வந்தோம் . அகரம் நிறுவனமும் அடுத்த ஒரு வாரத்தில் அகதிகள் முகாமை சென்று பார்வையிட்டு அவர்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினார்கள் . 

இந்நிலையில் இன்று அண்ணா பல்கலையில் பொறியியல் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடந்தது . அதற்கு பணம் கட்ட கூட வழியில்லாமல் இருந்த தினுசியாவிற்கு மீண்டும் நாம் உதவி செய்து அவரை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தோம் . சில தோழர்கள் அவர்கள் குடும்பம் இங்கு சென்னை வந்து தங்கி பின் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்வதற்கான உதவிகளை செய்தனர். 

இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் செல்வி தினுசியா விருப்பப் படியே நாகர்கோவில் அருகே உள்ள பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் இடமும் கிடைத்தது . இதனால் தினுசியா அகதிகள் முகாமில் இருந்து தாங்கியபடியே கல்லூரிக்கு சென்று வரலாம். எனினும் கல்லூரியில் ஒரு ஆண்டுக்கு 50,000 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் . இதற்கு அகரம் அறக்கட்டளை உதவுவார்களா என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும் . 

தமிழ் உணர்வாளர்கள் எப்படியும் செல்வி தினுசியாவை பொறியில் கல்லூரியில் சேர்த்தாக வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றனர் .அதனால் பல அமைப்புகளுடன் பேசி வருகின்றார் . நிச்சயம் பணத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிகிறது. அரசு எந்த உதவியும் செய்யாத நிலையில் தமிழக தமிழர்கள் தான் எப்படியாவது தினுசியாவை படிக்க வைக்க வேண்டும் . 

இன்று நமக்கு மனநிறைவான நாள் . செல்வி தினுசியாவிற்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது . சென்னையில் இருந்து கிளம்பும் போது அவர் என்னிடம் சொன்னது ' அய்யா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் எனக்காக செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன், நன்றி அய்யா என்றார் " . நன்றியெல்லாம் வேண்டாம் அம்மா நீ நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று வாழ்த்தினேன். 

தினுசியாவின் கனவு நனவாக நாம் அனைவரும் வாழ்த்துவோம் .

 

நண்பர் Rajkumar Palaniswamy முகநூல் 

https://www.facebook.com/photo.php?fbid=669504799731040&set=a.143979972283528.27906.100000145796525&type=1&theater

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மனித நேயர். நடிகர் சூர்யா-வுக்கு கோடானுகோடி நன்றி!!!!!

கோடி கோடியாக. . . கருப்பாக வெள்ளையாக பணத்தை பதுக்கி வைத்துள்ள திரைப்பட நடிகர்கள் மத்தியில், ஆர்ப்பாட்டமில்லாமல், மார்த்தான்டம் ஈழ ஏதிலிகள் முகாமில் வசிக்கும் தினிஷியா-க்கு. சென்னை SRM engg கல்லூரியில் இடம், 4 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் உள்ளிட்ட எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்ட "அகரம் பவுன்டேஷன்" அமைப்புக்கும். . . .

வரலாற்று சாதனையாக., ஈழத் தமிழ் மாணவர் தமிழக பல்கலைகழகத்தில் பொறியாளராகும் வாய்ப்பினை ஏற்ப்படுத்தி தந்த மனித நேயர் "சூர்யா" அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் பவுன்டேஷன் அமைப்புக்கும்

நடிகர் சூர்யா அவர்களுக்கும் நன்றிகள்

 

மாணவி தினுஸியாவிற்கு வாழ்த்துகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் பவுன்டேஷன் அமைப்புக்கும்

நடிகர் சூர்யா அவர்களுக்கும் நன்றிகள்

 

மாணவி தினுஸியாவிற்கு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமிலும் படித்துத் தனது திறமையை வெளிப்படுத்திய தினுஷியாவைப் பாராட்டுவதா, அல்லது தனது ஈரமான இதயத்தைத் திறந்து காட்டிய நடிகர் சூர்யாவின் நல்ல மனதை வாழ்த்துவதா என்று திணறுகின்றேன்!

 

இருவருக்குமே வாழ்த்துக்களும், நன்றிகளும்!

மாணவி தினுஸியாவிற்கு வாழ்த்துகள்... அகரம் பவுன்டேஷன் அமைப்புக்கு நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் அறக்கட்டளையும் அதன் நிறுவனர்களும் இந்த மாணவியின் வாழ்வில் ஒரு சிறந்த வழிகாட்டிகளாக இடம்பிடித்துள்ளார்கள்.. நன்றி அனைவருக்கும்..!

அகரம் நிருவனத்தினரான சிவக்குமார் ,சூரியா ,கார்த்திக் முவருக்கும் இதை முன்னின்று ஒழுங்கு செய்த தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றிகள் .
மாணவி தினுஸியாவிற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்..

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் பவுன்டேஷன் அமைப்புக்கும்

நடிகர் சூர்யா அவர்களுக்கும் நன்றிகள்....

 

மாணவி தினுஸியாவிற்கு வாழ்த்துகள்!

சூரியாவின் நடிப்பில் உருவான சிங்கம் 2 படம் திரைஅரங்க்குக்கு சென்று பார்ப்பதாக உள்ளேன் :D   

  • தொடங்கியவர்

35912_679713795376807_447689233_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி தினுஸியாவிற்கு வாழ்த்துகளும், தகுந்த நேரத்தில் கல்விக்கு உதவியவர்களுக்கும், நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.