Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15)

இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.

இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.

இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.

இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு ‘இனி’ என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.“சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா” என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது. எம் நிலைப்பாடும் அதுவே.

உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவோம் ..

பதிவு : பூராயம் வன்னியன்

http://meenakam.com/2010/12/15/16160.html

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சிருக்கும்வரை

உன் நினைவிருக்கும்........

அப்துல் ரவூப்க்கு எனது கண்ணீர் அஞ்சலிகள.;

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

abdul_ravub.jpg

இவரைப்பற்றிய தகவல்கள் இணையங்களில் எங்குமே இல்லை. இது தொடர்பாக தாயக நேரப்படி இரவு 23.20 போல் தோழர் தியாகுவிடம்( கவிஞர் தாமரையின் கணவர்) தொடர்புகொண்டு கேட்டோம்.

நாளை மறுநாள் சென்னை சென்றபின் உரிய தகவல்களை எடுத்து தருவதாக நம்மிடம் தெரிவித்தார்.

வரலாறே எம் வழிகாட்டி

வராலாற்றினை பதிவோம் ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் ரவூப்க்கு எனது கண்ணீர் அஞ்சலிகள.

அப்துல் ரவூப்க்கு எனது கண்ணீர் அஞ்சலிகள.

உன் நாமம் வாழ வாழ்த்துக்கள், உன் தியாகத்திற்கு இதய அஞ்சலிகள், உன்னைப்பெற்றெடுத்தோர்க்கு எம் ஆறுதல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் அப்துல் ரவூஃப் அவர்களுக்கு நினைவு வணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தலைசாய்த்து வணங்குகின்றேன்.......................................!

உங்கள் தியாகங்கள் வீண்போகாது சிங்களவனுக்கு “ஒரு முள்ளிவாய்க்கால்” கொடுத்தே தீருவோம்

தாயகத்தில் இருந்து...........

நீலவன்.

மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றென்றும் நினைவு கூறுவோம், அவரது வழி நடப்போம் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை , ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது. அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது.

அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. அன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், 'ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்' என்று கூறினார். இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள். இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவூப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

அதே சமயத்தில் இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவுகூருவதற்காக மட்டும் அல்ல. அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி, புதுவை பெரியார் திராடர் கழக தலைவர் லோகு அய்யப்பன் ஆகியோரை சிறைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தார் சீமான். இவர்களை புதுச்சேரி சி.ஐ.டி. போலீசார் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மூன்று பேரையும் பார்த்து விட்டு வெளியில் வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதுவையில் கவுன்சிலர் சக்திவேல், தேவமணி, லோகு அய்யப்பன் ஆகியோரை, திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் புதுவை அரசு கைது செய்து இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்தை புதுவை அரசு தவறாக பயன்படுத்துகிறது. சொந்த ஊரில் இலங்கை தமிழர்கள் வாழ முடியவில்லை.

என்னை 2 தடவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து இருக்கிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியே வந்து விட்டேன். தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அடக்கி, ஒடுக்கி வைக்க அவர்கள் நினைக்கிறார்கள். இன்னும் 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. அப்போது ஈழ தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து பணியாற்றுவோம் என்றார் சீமான்.

படங்கள் பார்க்க

http://www.thedipaar.com/news/news.php?id=22053

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 15, டிசம்பர் 2010 (23:58 IST)

ஈழத் தமிழர்களுக்காக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப்: சீமான்

நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப்பின் 15ம் ஆண்டு நினைவு நாள். தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது.

அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது.அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.

அன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள்.

இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவூப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.அதே சமயத்தில் இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவு கூருவதற்காக மட்டும் அல்ல. அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

nakkheeran

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

2003இல்  அப்துல் ரவூப் நினைவாய் எழுதிய கவியிணைப்பு.

http://www.yarl.com/forum/index.php?showtopic=813

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.