-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்டப் பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது உள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானே கல்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அந்நேரம் உன் பார்வை எந்தன் உயிர்தொட்ட தருவாயோ கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை என்னாகும் உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும் நீயென்னை மீண்டும் திருடத்தான் வேண்டும் முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும் வைரமுத்துவின் காமத்து பால் பாடல் வரிகள்....
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
எனது வேலையிடத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் வேலை செய்ய ஈரானிய பெண்கள் வருவார்கள். அவர்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பது என் கடமை. சில வேளைகளில் வேலை முடிய அவர்கள் தங்கும் மாணவ விடுதிகளுக்கு செல்வதற்கு வாகன ஓட்டியாகவும் இருந்துள்ளேன். 🤐 மேலதிக தகவல்களுக்கு தனிமடலை நாடவும்.😎
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
புதன் கிழமையை விடுத்து வெள்ளி அல்லது திங்கட்கிழமை அரச விடுமுறை என்றால் மக்களுக்கும் நலன். அரசிற்கும் நலனாக இருக்கும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக இருக்கும்.வெளியிடத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இணைந்த மாதிரியும் இருக்கும். அரசு செலவீனங்களும் குறைவாக இருக்கும்.
-
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி
இந்த ஒற்றுமை கலாச்சாரத்தை நீங்கள் ஈராக் - இரான் போரின் போது ஏன் காட்டவில்லை? அல்லது ஈராக் அமெரிக்காவால் தாக்குதலுக்குள்ளாகும் போது ஏன் காட்டம் காட்டவில்லை? அதை விட அரேபிய ஒன்றியம் என போராடிய கேர்ணல் கடாபி அழிக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? மற்றவன் அழிக்கப்படும் போது மௌனம் காக்க வேண்டியது. தங்களுக்கென அனர்த்தம் வரும் போது மற்றவனை சாட வேண்டியது.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
சும்மா எடுத்ததிற்கெல்லாம் டொனால்ட் ரம்ப் அவர்களை திட்டுவது வீண் வேலை என நினைக்கின்றேன். ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் ஒவ்வொரு ஜனாதிபதிகள் காலத்திலும் ஏதாவது ஒரு வெளிநாடு மீது ஏதாவது அச்சுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருப்பதுதான் அவர்கள் வரலாறு. கடந்த 40 வருடங்களுக்குள் அமெரிக்க ஜெனாதிபதிகளான ரொனால் றேகனை திட்டவில்லையா? சீனியர் , யூனியர் புஷ்களை திட்டவில்லையா? வெள்ளைமாளிகை காமுகன் பில் கிளின்டனை திட்டவில்லையா? சும்மா நோபல் பரிசு புகழ் ,கறுப்பின மக்களின் வாரிசு ஒபாமவை திட்டவில்லையா? டொனால்ட் ரம்ப் அவர்களை வாயார திட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டு நாலுவருசம் கழிச்சு திருப்பியும் வெள்ளைமாளிகைக்கு கூப்பிட்டு வைச்சு திட்டுவது வேடிக்கை மேல் வேடிக்கை கண்டியளோ. அதுக்கிடையிலை இன்னும் ஒருத்தர் வந்தாரே அதுதான் உக்ரேன் பைட் மன்னன் பைடன். அவரை ஞாபகமிருக்கா? இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவெனில்.....😎 அமெரிக்கா விதம் விதமாக வித்தியாசமாக போர் செய்யும். அது அவர்கள் ஆயுத கலாச்சாரம்.🌟 இடையில் இருப்பவர்கள் குத்தி முறியாமல் சிவனே என்று இருப்பதுதான் புதிசாலித்தனம்.ஐ மீன் நான் உட்பட....😂
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இப்படியான அறிக்கைகளுக்கு என் கண்டனங்கள். இருந்தாலும்.... ஏன் ....பிற சமய சமூகத்தினரிடம்... எதற்காக பைபிளை கொண்டு சேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.😎 தனகுபவர்களை விடுத்து தனகுபவர்களுக்கு பதில் சொல்வதை குற்றமாக கருதி தண்டனைகளும் தடைகளும் கொடுக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு ஈரான் போர்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள். உங்களது சமகால நடிகரான அஜித்.👈 அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை. பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂 நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛 அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎 நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது. உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....! சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னும் வரும்
-
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
பைடன் இன்றும் ஆட்சியில் இருந்திருந்தால் நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் கோயில் மாடுமாதிரி எடுத்ததெற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்கள்.😁 அல்லது டொனால்ட் ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக வரி விதிக்காமல் விட்டிருந்தாலும் ஒரு வேளை தலையை தலையை ஆட்டியிருப்பார்கள். அமெரிக்க அண்ணன் சொல்வதை தாரக மந்திரமாக நினைப்பவர்கள் அல்லவா...😂
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது. அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது. டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள குளங்கள்
அப்பாடா இவ்வளவு குளங்களா? இவ்வளவு குளங்களையும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி மழை நீரை சேகரித்தாலே நிலம் செழிப்பாக இருக்கும்.
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
ஓ......அப்ப ரஷ்ய காஸ் அடுப்ப இடப்பக்கம் வைச்சு சமைக்கிறம். சீன காஸ் அடுப்ப வலப்பக்கம் வைச்சு சமைக்கிறம்.😂 வேண்டாம்....அது கொஞ்சம் அகோர காரமாய் இருக்கும் 🤣
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
வாவ்....😂 இந்த மீன் சமைக்க ரஷ்ய காஸ் அடுப்பு பாவிச்சால் இன்னும் அந்தமாதிரி இருக்கும்....😎
-
சவாலே சமாளி
மீண்டும் முளைக்கும் எனும் தைரியத்தில் முடிகளை வழித்திருக்கின்றார்.இப்படியானவர்கள் தம் சொத்து சொகங்களை என்றுமே தியாகம் செய்ய துணிய மாட்டார்கள்.😎 உக்ரேன் போருக்காக எதையுமே செய்யாமல் அணுகுண்டு போல் பேச்சுக்கள் நடத்துவதில் மாகா வல்லவர்கள் இந்த FDP கட்சியினர். அதிலும் இந்த மாது செய்யும் அரசியல் அதிகாரம்,அகங்காரம் ஜேர்மனிக்கே வீழ்ச்சி.👇 இவர் ஒரு ஆயுத தொழிற்சாலையின் பங்குதார் என்பது யாவருக்கும் புதியது அல்ல.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
மேற்குலகினது ஊடகங்களின் அமைதியான செய்திகளை பார்க்கும் போது இவர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை போல் தெரிகின்றது. மேற்குலகு கட்டிக்காக்கும் இஸ்ரேலிலும் நல்ல செய்திகள் இல்லை போல் தெரிகின்றது. முல்லாக்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபத்தை விட அரேபிய நாடுகள் மீதுதான் அதிக கோபம் இருக்கின்றது என்பது வெளிப்படையாகவே அவர்களது தாக்குதல்கள் மூலம் சொல்லாமல் சொல்கின்றார்கள்.
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல. இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு.... யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள். தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது. அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!? என்ன செய்வது... உங்களுக்கு பொழுது போக்கு பசி..... எங்களுக்கோ இன விடுதலை பசி.... அவ்வளவுதான் வித்தியாசம்.😎