Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5818
    Posts
  2. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    13683
    Posts
  3. sOliyAn

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    2687
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/14 in all areas

  1. அதே போல், கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை. ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை. இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை. எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம். மதம் என்பது எம்முடைய அடையாளம். மதம் எமது வாழ்க்கை முறை. மதம் எமது வரலாறு. மதம் எமது கலாச்சாரம். மதமே எமது மொழியின் ஊற்று. இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது. இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை (யேசுவை) வணங்க முடியாது. என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது. ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது. இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால‌ பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு. கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு... புண்ணாக்கு அல்ல. நாம் நாமாக இருப்போம். நீங்கள் நீங்களாக இருங்கள். .
  2. உங்கள் எல்லாரிடமும் ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேர் உண்மையாகவே உங்கள் கடவுள்கள் இருப்பதாக நம்புகிறீர்கள்? நீங்கள் இங்கே விவாதிப்பது உண்மையாகவே உங்கள் கடவுள்களுக்கக்கவா அல்லது எதிரி மதக்காரனை பிழையென்று நிறுவிவிட வேண்டும் என்பதற்காகவா? என்னைப்பொறுத்தவரை இங்கே பெரும்பாலானோர் தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் இரு மதங்களில் தமது மதமே சரி, மற்றையது பிழை என்கிற அடிப்படையிலேயே கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். இது எமக்கு எந்தப்பலனையும் தரப்போவதில்லை. முகத்திரை கிழிகிறது, முகமூடி கிழிகிறதென்றெல்லாம் சந்தோஷப்படுமளவிற்கு மற்றையவர்கள் கேவலமானவர்களோ அல்லது நீங்கள் நினைப்பதுப்போல தரங்கெட்டவர்களோ கிடையாது. பிள்ளைபிடிக்காரர் என்று சிலர் கிறீஸ்த்தவரகளை அழைக்க விரும்புவது வீண் வீம்பே அன்றி வேரில்லை. அது அவர்களுடைய ஆழ் மனதிலிருந்து சிறுபராயம் தொட்டு ஊட்டி வளர்க்கப்பட்ட எதிர்ப்புணர்வின்பால் வருவது. இலகுவில் திருத்தப்பட முடியாததும் கூட. அதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. இப்படிப் பலரை ஏற்கனவே பார்த்தாயிற்று. பெரும்பாலான இந்துக்கள் கத்தோலிக்கரை தமது சகோதரர்களாகவே பார்க்கிறார்கள். அது இனிமேலும் தொடரும். சரி, எனது கேள்விக்கு வருகிறேன், 2009 இல் பச்சிளம் பாலகர்கள், கைக்குழந்தைகள், இன்னும் பிறக்காதிருந்த சிசுக்கள், கர்ப்பிணிகள், தாய்மார், வயோதிபர் என்று ஈவு இரக்கமில்லாமல் சிங்களவன் அடித்துக் கொல்லும்போது நாங்கள் இங்கே தூக்கிப் பிடிக்கும் சிவனும், யேசுவும், முருகனும், மரியாளும், பிள்ளையாரும், அந்தோனியாரும் எங்கே போயிருந்தார்கள்?? வற்றாப்பளை அம்மன் கோவில், மருதமடு தேவாலயம், சென் பீற்றர்ஸ் தேவாலயம், சென். ஜேம்ஸ் தேவாலயம், செல்வச் சந்நிதி என்று எமது தாயகத்திலுள்ள எல்லாக் கடவுள்களின் உறைவிடங்களிலும் சிங்களவன் எங்களுக்குப் பலிக்களம் அமைத்து ரசித்தபோது இந்தக் கடவுள்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்திருந்தார்கள்? மன்னாரிலிருந்து மக்கள் வெளியேறியபோது மடுமாதா சொரூபத்தையும் மக்கள் தங்களுடன் தூக்கிகொண்டு சென்றார்களாம், தெய்வத்திற்கே பாதுகாப்புக் கிடைக்கவில்லை அன்று !!! உலகில் கிறீஸ்த்தவம் தோன்றிய ஊற்றாகிய யூத மதத்தின் யூதர்களில் 7 மில்லியன் மக்களை அடொஃப் ஹிட்லர் 1939 இலிருந்து 1945 வரைக்குள் நாசி வதை முகாம்களில் விஷவாயுவுக்கும், பீரங்கிகளுக்கும் உணவாக்கியபோது அந்தக் கடவுள் எங்கே போயிருந்தார்? தான் பிறந்த இனமாகிய யூத இனத்தையே யேசுநாதராலோ அல்லது பரம பிதாவாலோ அன்று காப்பாற்ற முடியவில்லையே? இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள் என்று பல குருமார் உற்பட கிறீஸ்த்தவப் பாதிரியார்களைக் கேட்டுப் பார்த்தாயிற்று. எவருக்குமே விடை தெரியவில்லை. உண்மையில், இதற்கான விடை ஒன்றுதான். கடவுள் என்பவர் இன்று இல்லை. அப்படி ஒருவர் இருந்திருந்தால் இந்த அவலங்கள் எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து. அப்பாவிகள் கொல்லப்படவும், ஏதுமறியா பாலகர்கள் உயிருடன் எரிக்கப்படவும் வந்து கப்பாற்ற முடியாத கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களால் எமக்கு என்ன பலன்? இந்தக் கேள்வியை நான் இப்போது அடிக்கடி என்னையே கேட்டு வருகிறேன். உங்களுக்குப் புரிகிறதா?
  3. சாக்கடை என்று தெரிந்த பின்பு யாராவது அங்கு நிற்பானா? நங்கள் கரையேறி பலகாலம். இப்போதும் அது சாக்கடையாகவே இருக்கிறது என்றுதான் எழுதுகிறேன். முன்னுக்கும் பின்னுக்கும் நின்று பார்த்தல் எனும் முரண்பாட்டை முதலில் இல்லாது ஒழித்து. மனிதன் பார்க்கும்போது கடவுளின் எண்ணம் சிந்தனை தெரிய கூடிய வாறு மதத்தை மாற்றவேண்டும். அல்லது முன்னுக்கு நின்று பார்ப்பவர்கள் .... தமக்கு என்று ஒரு சொந்த மதத்தை உருவாக்கி இது முன்னுக்கு நின்று பார்பவர்களுக்கு மட்டும் உரித்தானது என்று அடையாள படுத்தி கொள்ளவேண்டும். பின்னுக்கு நிற்பவர்கள் நாங்கள் கிறிஸ்தவமோ இஸ்லாமோ ..... எமக்கு விளங்க கூடியவாறு கதைப்பவர்களுடன் பேசி ஒரு புரிதலை உருவாக்கி கொள்கிறோம். முன்னுக்கு நிற்பவர்களுக்கு மட்டுமே விளங்கும் என்றால் பின்னுக்கு நிற்கும் எங்களை எங்களை ஏன் இந்துக்கள் என்று வரையறுத்து கொள்கிறீர்கள் ?? இஸ்லாமும் கிறிஸ்தவமும் .....இந்து என்று அடிக்க வந்தால் எம்மை முன்னுக்கு தள்ளிவிட வசதியாய் இருக்குமாக்கும் ?? புறம்போக்கு சிந்தனைகளை கலந்து விடுவதால்தான் ............ அது சாக்கடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று உலகின் பெரிய இந்து நாட்டில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. ஊரோடு கூடி பஸ் ஏறினாலே உரச என்று ஒரு கூட்டம் ஏறுகிறது. அடிப்படை நாகரீகம் கூட செத்து கிடக்கிறது. கடவுளுக்கு முன்னுக்கு மட்டுமே மனிதர்கள் இருக்கலாம் .............. பின்னுக்கும் இருந்தால்? கடவுள் பற்றி விவாதிக்க நிறைய வந்துவிடும். பின்னுக்கும் வைத்திருப்பவர் கடவுள் என்ற தகுதியை இழந்து .......... வலது குறைந்தவர் என்று ஆகிவிடுவார். வலது குறைந்தவரை வணங்கும் வரிசையில் அறிவுள்ள எவனாவது போய் முன் வரிசையில் நிற்பானா ??
  4. திரி அழகாக நகர்கின்றது! பல விடயங்கள், வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன! பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது! எல்லா மதங்களிலும், பலங்களும், பலவீனங்களும் உண்டு! ஏனெனில் அனைத்து மதங்களுமே, மனித வாழ்வை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஏற்பட்டவையே! சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளைப் போதித்தது எனது மதம்! அது எனது மனதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது! பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு நிலைகளைப் போதித்தது எனது மதம். அது எனது வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது! எம்மில் எத்தனை பேர், சரியையும், கிரியையும் தாண்டியிருக்கிறோம்? எம்மில் எத்தனை பேர் பிரமச்சரிய நெறியில் வாழ்ந்திருக்கிறோம்? எனவே மதம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை! வெறும் சுயநலவாதிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றது! இதற்கு, சமீபகால சங்கராச்சாரியார்களும், நித்தியானந்தாக்களுமே சாட்சியாக உள்ளனர்! இந்த மதத்தின் பெயரால் தானே, எமது மக்கள் அழிக்கப்பட்டனர்! இதற்கு உதாரணங்கள், சோ. ராமசாமி, இந்து ராம், அமைச்சர் சிதம்பரம், சிவசங்கர் மேனன்,தீக்சித், நாராயணசாமி, நம்பியார், ஜெயலலிதா,..........நீண்டுகொண்டே போகின்றது! இவர்கள் அனைவருமே ஐயர், ஐயங்கார், நம்பூதிரிகள்,... என்ற வரிசையில் நகர்கின்றன! இதை ஏன் ஒருவரும் பெரிது படுத்துவதில்லை? நான் ஒரு சைவன் என்பதில் எனக்குப் பெருமை! முருகன் எனது கடவுள். அவன் முருகனாக வள்ளியுடன் இருக்கும் போது என்னால் அவனை ஏற்க முடிகின்றது! ஆனால் அவன், கந்தனாக, தேவயானை சமேதனாக வரும்போது, என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இதே போல, சிவன், சிவனாக இருக்கும் போது, லிங்கமாக இருக்கும்போது என்னால் வணங்க முடிகின்றது! அழகிய அர்த்தநாரீச்வர தத்துவத்தின் பெருமையையும் உணர முடிகின்றது! அதற்கு மேல், ஐயப்பனாக,அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஏனெனில் ஐயப்பன், பிறப்பில், விஷ்ணுவுடன் சைவம் கலந்து இந்து மதத்தினுள் போய் விடுகின்றது. இதே நிலையே. இராமர், லட்சுமணன்,என வரும்போதும் ஏற்படுகின்றது! சிவபக்தனான இராவணனை அழித்து வெற்றிவாகை சூடிய இராமனை வணங்கும் மனம் எனக்கு வருவதில்லை! இது தான் மதத்தைப்பற்றிய எனது நிலைப்பாடு! இன்னொருவருடைய கலாச்சாரத்தைத் தமிழன் வளர்த்துக்கொண்டு திரிகின்றான்! காஞ்சீபுரம் புடவைகளும், பரதநாட்டிய அரங்கேற்றங்களும் என்னைக் கவர்ந்திழுக்கவில்லை! ஏனெனில் அவை எமது கலாச்சாரத்துக்குள் திணிக்கப்பட்டவை! ராஜ ராஜ சோழன் ஈட்டிய வெற்றிகளினால், அவனிலும் பார்க்கப் பலமடைந்தது, அவனுடன் தொங்கிகொண்டிருந்த பிராமணர்களே! வேர்வை சிந்தாது, இரத்தம் சிந்தாது வெற்றி பெற்றவர்கள் அவர்களே! தாய்லாந்தின் அரச முடிசூட்டு விழாக்களில், 'சிவபுராணம்' இன்னும் ஒலிக்கின்றது! ஆனால், அதைத் தமிழர்கள் ஒலிப்பதில்லை! பிராமண வம்சாவளியினர்கள் தான் இன்னும் ஒலிக்கின்றார்கள்! தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவன், வென்றெடுத்த பூமியில், அரசர்களின் பெயர்களில், வீதிகளின் பெயர்களில் இருப்பது ' ராம்' என்பதே தவிர 'சிவா' இல்லை! அது மட்டுமில்லை, தமிழனைக் குறிக்கும் 'தாய்லாந்து மொழியில்' உள்ள சொல்லானது மிகவும் கீழ்த்தரமானது! இதற்குக் காரணம், யாராக இருக்கமுடியும்? தமிழ் மன்னன் வென்றெடுத்த பூமியின் விமான நிலையத்தில் இருக்கும் சிலைகள் முன்னிலைப்படுத்துவது, தேவர்கள் பாற்கடலைக் கடைவது தான்! சிவன் முட்டாளைப் போல, நஞ்சை விழுங்கியதைத் தவிரச் சைவம் இதில் காணப்படவில்லை. இந்து மதம் தான் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றது! அந்த விமான நிலையத்தின் பெயர் கூட, 'ஸ்வர்ண பூமி'! தமிழன் வென்ற நிலம்!
  5. சைவ சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை என்பது துளியளவும் இல்லை. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வை தக்க வைத்துக் கொள்ள இந்து மதக் கொள்கைகள் உதவவில்லை என்று எத்தனை பக்கங்கள் வேண்டும் என்றாலும் எழுதிக்கொண்டு போகலாம். ஆனால் அதையும் தாண்டி யதார்த்தத்தில் என்ன நடக்கின்றது என்பது பொதுப்புத்தி உள்ளவர்களுக்குப் புரியும். எனவே சுயமாகச் சிந்தித்து தனது ஆன்மீகத் தேடலுக்குத் தகுதியான மதத்தைத் தேர்ந்துகொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பூரண உரிமை உண்டு. அதேவேளை மதப்பிரச்சாரம் செய்பவர்கள் பிற மதங்களைத் தூற்றி தமது மதத்தைத் தூக்கிப் பிடிப்பது தவறானது. இதனால்தான் யெகோவாவின் சாட்சிகள் போன்ற அமைப்புக்களில் இருந்து வருபவர்களை துளியும் மதிப்பதில்லை.
  6. நன்றி மல்லையூரன்.....நீங்கள் எழுதியதை வாசிக்காமல் (விளங்காமல்)..திருப்பியும் முதலில் இருந்தே சாதி..என்று தொடங்குவாங்கள்.... (நீ மதம் மாறிவிட்டு கீழ்சாதியிலிருந்து கல்யாணம் கட்டினாயா என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது போல எங்களிடம் தான் சாதியில்லையே என்று சொல்லி கொண்டு ...முன்னால் நல்லசாதியாக இருந்தவன் வீட்டில் கல்யாணம் செய்ய பார்த்து அது நடக்காமல் தன்னோட சாதியிலேயே கல்யாணம் பண்ணிட்டு ....சவுண்ட் விடுவாங்க...) அவ்வ்வ்வவ்
  7. யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த இந்து மதம் தமிழீழத்துக்கு பிரதான தடைக்கல் எனில்...??? உந்த டக்ள்ஸ், கருணா, பிள்ளையான் கோஷ்டிகள் எல்லாம் மேட்டுக்குடிகளா? சமயத்தை சமயமாக பார்ப்பதற்கு கொஞ்சமாலும் சமய நூல்களைப்பற்றிய அறிவு தேவை... சுலபமாகக் கிடைக்கும் அரசியல் அறிவைக்கொண்டு சமயம் உட்பட எல்லாவற்றையும் அளக்க முற்படாதீர்கள்!
  8. இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை. இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்தவம். இந்துத்தவம் ஒரு விசம். மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்? இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்? தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது. பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா? ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று. ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர். இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல. (அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்)
  9. இதே வேளை இந்து மதத்தில் மீளாய்வு என்பது அவசியம். ஒரு விடுதலைப் போராட்டமாகட்டும், ஒரு சீர்திருத்தமாகட்டும் மீளாய்வு செய்யாது விடின் அழிந்துவிடும். பாதிரிமார்களின் குழந்தைகளோடு பாலியல் வன்முறைகளை வத்திக்கான் கண்டு கொள்ளாது விடுவது போன்றே, சில சாமிகளின் பாலியல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளாது விடுவதுமாகும். குறித்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். குப்பைகளுக்கு மத்தியில் இருந்தால் குப்பைகள் போலவே எல்லாமே தோன்றும், அடுத்தது சாதி... சாதி என்பது எப்படி நீக்கலாம் என்பதை ப் பெரிய தத்துவஞானிகள் தான் பதில் சொல்ல வேஷ்டும். சாதிப் பிரச்சனை சாதிப் பிரச்சனை என்று சத்தமிடுகின்றார்களே தவிர, அதை நீக்குவதற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும்... இது வரை என் வாழ்வில் நான் என் நண்பர்கள், பழகியவர்கள் எவரிடமும் சாதி பற்றி அறியவோ, அது பற்றிக் கதைக்கவோ நினைத்ததில்லை. அப்படி நினைத்து யார் கூடவும் பழகியதில்லை. எதிர்வரும் காலத்திலும் அப்படித் தான் இருப்பேன். திருமணம் என்பதிலும் அப்படியே இருக்க முயற்சி செய்வேன். இது தான் ஒரு தனிமனிதனாக என்னால் முடியக்கூடிய ஒரு விடயம்...
  10. இப்படத்தில் காண்பது அலாஸ்க சமுத்திரம்.. இங்கு இரு சமுத்திரங்கள் சந்திக்கும்.. அனால் ஒன்றுடன் ஒன்று இணையாது !!! இந்த ஒன்று சேராத சமுத்திரத்தை gulf of Alaska என்று அழைக்கின்றனர்.
  11. ஈசனின் இந்த கோபம் பிடித்திருக்கு. .. (கனகாலம் இதை ஈசனிடமிருந்து பார்த்து )
  12. திருவிழா...திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா திருவிழா...திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா வேரினிலே நீ பழுத்த பலா விழிகளிலே தேன் வழிந்த நிலா...இதோ திருவிழா...திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா http://no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Naam%20Iruvar/Thiruvizha%20Thiruvizha.mp3
  13. நம்ம பாஞ்சின்ர தொல்லை தாங்கேலாமல், மரம் இப்ப வேலி மட்டத்துக்குக் கீழால காய்க்குது போல கிடக்குது! முனியப்பர் இனித் தேங்காய் எண்ணெயைக் கையில தடவத் துவங்கலாம்! நன்றிகள், நவீனன்!
  14. Pashupata Shaivism[edit] Pashupata Shaivism: The Pashupatas (Sanskrit: Pāśupatas) are the oldest named Shaivite group.[16] The Pashupatas were ascetics.[17] Noted areas of influence (clockwise) includeGujarat, Kashmir and Nepal.[citation needed] But there is plentiful evidence of the existence of Pāśupata groups in every area of the Indian subcontinent. In the far South, for example, a dramatic farce called the Mattavilāsanaprahasana ascribed to a seventh-century Pallava king centres around a Pāśupata ascetic in the city of Kāñcīpuram who mistakes a Buddhist mendicant's begging bowl for his own skull-bowl. Inscriptions of comparable date in various parts of South East Asia attest to the spread of Pāśupata forms of Śaivism before the arrival there of tantric schools such as the Shaiva Siddhanta.[18] Shaiva Siddhanta[edit] Shaiva Siddhanta: Considered normative tantric Saivism, Shaiva Siddhanta provides the normative rites, cosmology and theological categories of tantric Saivism.[19] There is a dualistic dimension to Shaivism, as expounded by Meykandar. The pure, or Shuddha Saivism,however, proclaimed by Rishi Thirumular and his paramparai (guru lineage), is strictly non-dualistic, and proclaims the soul to be at all times one with Shiva. [20] This tradition was once practiced all over India. For example the theologians Sadyojoti, Bhatta Nārāyanakantha and his son Bhatta Rāmakantha (ca. 950-1000 AD) developed a sophisticated Siddhanta theology in Kashmir.[21] However the Muslim subjugation of north India restricted Shaiva Siddhanta to the south,[22] where it merged with the Tamil Saiva cult expressed in the bhakti poetry of the Nayanars.[23] It is in this historical context that Shaiva Siddhanta is commonly considered a "southern" tradition, one that is still very much alive.[24] Kashmir Shaivism[edit] Kashmir Shaivism: Kashmir Saivism, a householder religion, was based on a strong monistic interpretation of the Bhairava Tantras (and its subcategory the Kaula Tantras), which were tantras written by the Kapalikas.[25] There was additionally a revelation of the Siva Sutras to Vasugupta.[26] Kashmir Saivism claimed to supersede the dualistic Shaiva Siddhanta.[27] Somananda, the first theologian of monistic Saivism, was the teacher of Utpaladeva, who was the grand-teacher ofAbhinavagupta, who in turn was the teacher of Ksemaraja.[28][29] The label Kashmir Shaivism, though unfortunately now widely adopted, is really a misnomer, for it is clear that the dualistic Shaiva Siddhanta was also in North India at one point in time. Siddha Siddhanta[edit] Natha Siddha Siddhanta: Founded by Matsyendranatha (ca 800–1000) and expounded by Rishi Gorakshanatha (ca 950), this monism is known as Bhedabheda, embracing both thetranscendent Shiva as well as the immanent Shiva. Shiva is efficient and material cause. The creation and final return of soul and cosmos to Shiva are likened to bubbles arising and returning to water. Influential in Nepal, Uttar Pradesh, Bihar and West Bengal. Lingayatism[edit] Lingayatism: Made popular by Basavanna (1105–1167), this version of qualified nondualism, Shakti Vishishtadvaita, accepts both difference and nondifference between soul and God, like rays are to the sun. Shiva and the cosmic force are one, yet Shiva is beyond His creation, which is real, not illusory. God is efficientand material cause. Influential primarily in Karnataka. Shiva Advaita[edit] Shiva Advaita: This monistic theism, formulated by Srikantha (ca 1050), is called Shiva Vishishtadvaita. The soul does not ultimately become perfectly one withBrahman, but shares with the Supreme all excellent qualities. Appaya Dikshita (1554–1626) attempted to resolve this union in favor of an absolute identity—Shuddhadvaita. Its area of origin and influence covers most of Karnataka state. Shaivism left a major imprint on the intellectual life of classical Cambodia, Champa in what is today southern Vietnam, Java and the Tamil lands. The wave of Shaivite devotionalism that swept through late classical and early medieval India redefined Karnataka and Tamil Nadu. Shaivite worship legitimized several ruling dynasties in pre-modern India, incluidng the Chola and the Rajputs. A similar trend was witnessed in early medieval Indonesia with the Majapahit empire and pre-Islamic Malaya.[30][31] Nepal is the only country in the world where Shaivism is the most popular form of Hinduism.
  15. உறவுகளே மதம் என்றபெயரால் கொஞ்சப்பேரும், ஜாதியை வைத்து கொஞ்சப்பேரும் எமக்கிடையில் பிளவுகளை உருவாக்கப்பாக்கின்றார்கள். இதனூடாக சிங்களவன் என்னத்தை செய்ய விரும்புகின்றானோ அதற்க்கு நாம் துணையாக இருந்துவிடக்கூடாது இப்போதுதான் நாம் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் உறவுகளே, ஈழ மீட்புக்காக ஒன்றாக போராடி ஒரே கருத்து எழுதி இருந்த நாம் இன்று இந்த திரியில் எப்படி எல்லாம் பிரிந்துள்ளோம் விழிப்பாக இருக்கவேண்டிய தரும் இது எனக்கு பெரிதாக எழுதவராது முடிந்ததை எழுதி என்னை சாந்தப்படுத்தி இருக்கின்றேன். நீங்களும் சிந்தித்து பாருங்கள் ... அன்றும் இன்றும் எந்த மதமும் எங்களை காக்க வரவில்லை, மாறாக எங்களுக்குள் என்னும் மதங்களின் பேரால் மோதல்களை உருவாக்கி மேலும் அழிவுகளுக்கே வழிவகுக்கின்றது
  16. ஆமாம் பிள்ளை பிடி காரர் என்று அநாகரீகமாக பேசும் உங்களுடன் ஆன்மீகம் மதம் சம்பந்தமாய் எந்த கருத்தும் எனக்கு கூற விருப்பமில்லை .......................இறைவனை அவரது சாயலாக கொண்ட மனிதன் கொஞ்சம் என்றாலும் அவர் ஜாடை அடிக்கணும் .ஆனால்............உங்கள் கருத்தில் சாத்தானின் சாயல் அடிக்குது போல ....ஆமாம் என்ன அது பிள்ளை ப்டிகாரருக்கு ஏதாவது செய்யவேண்டும் .என்ன செய்யப்போகிறீர்கள் ...............மத வெறி உள்ளவனாக கருத்திடும் ஒருவனாகவே உங்களை பார்க்கிறேன் .......நன்றி
  17. வாளியிலே பூத்து வந்த வண்ண முத்தே! உன்னைப் பெற்றெடுத்த, பேய் ஏதென்று சொல்லு முத்தே!
  18. இளங்கோவும் வள்ளுவனும் ஆதியிலே இந்து மதத்தவர்கள் என்பதற்கும் மதம் மாறி பின்னர் இந்து மதத்துக்குப் திரும்பி வந்தனர் என்பதற்கும் தக்க சான்றுகள் தங்களால் காண்பிக்க முடியுமா? இளங்கோவும் வள்ளுவனும் சமண சமயத்தவரே. திருநாவுக்கரசர் இவ்விருவருக்கும் காலத்தால் பெரிதும் பிந்தியவர். கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் காலத்தில் தமிழகத்தில் ஆரியம் வேரூண்டி விட்டிருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.