Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    23926
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    2960
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/12/21 in all areas

  1. ஒருநாள் மழையில் நனைந்து போராட்டம் நடத்தியவர்கள் அல்ல இவர்கள்-தினமும் குண்டு மழைகளில் குளித்து முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த இனத்தைக்காத்த வீரப் புதல்வர்கள்.
  2. இதுக்கு கை நடுங்காம இருக்கோணும்.
  3. தேர்தலுக்கு முன் கிடுகு பின்னுவினம் வென்றபின் வெல்ல வைத்தவர்கள் முதுகில்சவாரி போவினம் இதுதான் திமுக
  4. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 19, சித்திரை 2011 மட்டக்களப்பில் கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு கிழக்குமாகாண முதலமைச்சரும், ராணுவ புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் சகாக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ள்னர். இம்மாதம் 13 ஆம் திகதி ஆரையம்பதி மேற்கு கட்டுமாவடி எனும் காத்தான்குடி பொலீஸ்பிரிவிற்குற்பட்ட பகுதி வீடொன்றில் புகுந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் குறைந்தது பதினைந்து லட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் ஆயுதமுனையில் திருடிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொள்ளை பற்றிப் புகார் அளித்தால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டப்பட்டதையடுத்து, மோகன் எனப்படும் இவ்வீட்டின் உரிமையாளர் இதுபற்றிப் பொலீஸில் முறையிடுவதைத் தவிர்த்துவிட்டார். 4 மாதங்களுக்கு முன்னர் மோகனின் சகோதரியின் புலியடியில் அமைந்திருக்கும் வீட்டினுள் ஆயுதங்களுடன் புகுந்த இதே குழுவினர் அவர்களை அச்சுருத்தி சுமார் 50 லட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றது நினைவிலிருக்கலாம். வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்லது ஆதரவாளர்களின் வீடுகளைக் குறிவைத்தே பிள்ளையான் தனது சகாக்களை ஏவிவிட்டுக் கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக பிரசாந்தன் எனப்படும் ஆயுததாரியை கொள்ளைகளுக்குப் பொறுப்பாக அமர்த்தியுள்ள பிள்ளையான், இவரைக்கொண்டே இக்கொள்ளைகள் கச்சிதமாக அரங்கேற்றிவருவதாகத் தெரிகிறது. அண்மையில் ஆரையம்பதி, மண்முனைப் பகுகளில் பிரதேசச் செயலாளர், கிராம சபை உத்தியோகத்தர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்காக பிள்ளையானின் கொலைக்குழு ஆயுததாரி பிரசாந்தனும் அவரது அடிவருடிகளும் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதும் பிள்ளையானின் அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்டது தெரிந்ததே. பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டுள்ள பிராசாந்தன் தற்போது கடத்தல்கள், கொள்ளைகள் போன்றவற்றில் தடைகளின்றி மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
  5. இதுக்காவதால் எதையாவது எழுதி போட்டு விடணும் .
  6. அதே... தான். தேர்தலுக்கு முன் வேல் தூக்குவினம், பிறகு நாத்திகவாதிகள் என்று... பீத்திக் கொண்டு திருவினம். 🤣
  7. யாழ்ப்பாண முறையில்... "கிடுகு" பின்னும் கனிமொழி. 🤣
  8. அண்ணோய், ஒரு விசயம் உங்கட காதுக்குள்ளை சொல்லுறன்..! நானும் முந்தி உங்களை மாதிரித் தான் நினைச்சனான்..! பிறகு தான் தெரிய வந்தது...பூசாரியாருக்கு எங்களைப் போல.....விற்றமின் D அவசியமில்லையாம்!
  9. அவர் புத்தன் என்ற ஐடியை தான் பாவிப்பதில்லை ...மற்ற ஜடிகள் வேலை செய்யுது 😁
  10. கொரோனா முடிஞ்சு ஒழுங்காய் வேலை தொடங்க இப்பிடியொரு வித்தைய நானும் வேலையிடத்திலை காட்டத்தான் இருக்கு... 😎
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மாசி 2011 மட்டக்களப்பில் மூன்று கிறீஸ்த்தவப் பாதிரியார்களைக் கடத்திச்சென்ற பிள்ளையான் கொலைக்குழு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த மூன்று கிறீஸ்த்தவப் பாதிரியார்களை அரச ராணுவப் புல்நாய்வுத்துறையினருக்காக பிள்ளையான் கொலைக்குழு கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடத்திச்செல்லப்பட்ட பாதிரியார்களின் உறவினர்களின் முறைப்பாட்டின்படி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி ரமேஷ் இந்த மூவரையும் முதலமைச்சர் பிள்ளையான் உங்களைப் பார்க்கவிரும்புகிறார் என்று அழைத்துச் சென்றதாகவும், அதன்பின்னர் இம்மூவரும் காணாமல்ப் போயுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பாதிதிரியார்களான கணேசமூர்த்தி, சிவகுமார் யோனாத் மற்றும் சிவாநந்தன் ஆகிய மூவருமே இவ்வாறு பிள்ளையான் கொலைக்குழுவினரால் கடத்தப்படுக் காணாமற்போயிருக்கிறார்கள். கடைசியாக இவர்களை மட்டக்களப்பு பழைய பொலீஸ் நிலையப் பகுதியில் ரமேஷ் எனும் ஆயுததாரியினால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, இந்த மூவரும் பிள்ளையான் கொலைக்குழுவினராக் கடத்தப்பட்டு , விசாரிக்கப்பட்ட பின்னர் ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கையளிக்கப்பட்டு கொழும்பின் அச்சமூட்டும் விசாரணைபிரிவான நான்காம் மாடிக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துகொண்டிருக்கும் இப்பாதிரியார்களைக் கடத்திச்சென்ற துணைராணுவக் கொலைக்குழுவும், அரச ராணுவ புலநாய்வுத்துறையும் கடுமையான விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரையும் சில நாட்களின் பின் விடுதலை செய்திருக்கின்றன்ர். தாம் கைதுசெய்யப்பட்டதன் காரணம் பற்றியோ, நடைபெற்ற விசாரணைகள் பற்றியோ வெளியில் பேசினால் கொல்லப்படுவீர்கள் என்கிற எச்சரிக்கையோடு இவர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 01, மாசி 2011 கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இனரீதியிலான ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் துணைராணுவக் கொலைக்குழுத் தலைவர்கள் கருணாவும் பிள்ளையானும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அண்மையில் சிங்கள அதிகாரியொருவரை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு உப பீடாதிபதிக்கும் மேலான அதிகாரம் கொண்ட ஒருவராக நியமித்திருக்கிறது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றுவருவதாக சிங்கள அரசாங்கம் கூறும் "முறைகேடுகளைச்" சீர்செய்யவே சிங்கள அதிகாரியொருவர் நியமிக்கப்படுதல் அவசியமாகியதாக இதனை அது நியாயப்ப்டுத்தியிருக்கிறது. ஆனால், சிங்கள இனவாதத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்டு வரும் இன ஒடுக்கல் கொள்கையான " மகிந்த சிந்தனைய " எனும் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையின் ஒரு வடிவமே முற்றுமுழுதான தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றிற்கு சர்வ வல்லமை பொறுந்திய சிங்களவர் ஒருவரை நியமித்திருப்பதன் நோக்கம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கருத்துத் தெரிவ்வித்திருக்கிறார். சிங்கள அதிகாரியின் நியமனத்திற்கு அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட துணைராணுவக் கொலைக்குழுக்களின் தலைவர்களான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் அரசின் இந்த இன ஒடுக்கல் கொள்கையினை நியாயப்ப்டுத்தியிருப்பதாகவும், இவர்களின் முழுதான சம்மதத்துடனேயே மகிந்த அரசாங்கம் கிழக்குப் பல்கலைக் கழகத்தினை சிங்கள் அதிகாரியொருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறர். தமிழர் தாயகத்தை இனவழிப்புப் போர் ஒன்றின் மூலம் முற்றாக ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் பேரினவாதம் மிகவும் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் கலாசார, கட்டுமாணச் சிதைவினை முன்னெடுத்துவருவது தெளிவாகிறது. இதேபோல், கிழக்கு மாகாணத்தில் கொலைக்குழுவின் அனுமதியோடு தமிழர்களின் நிலங்களைச் சிங்களவர்களுக்கு தாரைவார்த்துவரும் அரசாங்கம் தமிழர்களை, அவர்களின் சொந்த நிலத்திலேயே ஏதிலிகளாக மாற்றிவருகிறது என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த வருடத்திலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச நிர்வாகச் சேவையின் இடங்களுக்குப் பெரும்பாலான சிங்களவர்களையே, துணைராணுவக் குழுக்களின் முற்றான சம்மதத்தோடு, கீழ்மட்ட ஊழியர்கள் முதல் அதிகார மட்டம்வரை அரசாங்கம் பணியில் அமர்த்தி வருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, தை 2011 துணை ராணுவக் குழுத் தலைவன் கருணாவின் அரசியல் ஆடுகளமாக மாறிவரும் கிழக்குப் பல்கலைக் கழகம் ராணுவத் துணைப்படையின் தலைவரும், சுதந்திரக் கட்சியின் துணைத்தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்குப் பல்கலைக் கழகத்தை தனது அரசியல் சித்துவிளையாட்டுக்களின் ஆடுகளமாகப் பாவித்துவருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் விசனம் தெரிவித்து வருகின்றன்ர். பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்திற்கும் கலைப்பீட மாணவர்களுக்கும் இடையே உருவான சர்ச்சை ஒன்றில் தனது துணைப்படையுறுப்பினர்கள் மற்றும் பொலீஸாருடன் பல்கலைக்கழகத்தினுள் அழைப்பின்றி புகுந்த கருணா, தனது பிரித்தாளும் அரசியலை அங்கு முன்னெடுத்துவருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேலும் தெரிவித்தனர். தமது பரீட்சை முடிவுகள் 6 மாதங்கள் கடந்த நிலையிலும் நிர்வாகத்தினால் வெளியிடப்படாது இழுத்தடிக்கப்படுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து வரும் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின்பொழுது, தன்னை பலவந்தமாக உள்ளே நுழைத்த கருணா தனது கபட அரசியல் நாடகத்தைப் பல்கலைக் கழகத்தினுள்ளும் புகுத்தியிருப்பதாகத் தெரிகிறது. முதலாம் வருட, இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட பரீட்சைகளின் பெறுபேறுகளை 6 மாதங்கள் கடந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட மறுத்துவரும் நிலையில் மாணவர்கள் விரிவுரைகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வேளை, இப்பிரச்சினையில் உள்நுழைந்துள்ள துணை ராணுவக் கொலைக்குழுத் தலைவர் கருணா, மாணவர் சம்மேளன உறுப்பினர்களை மிரட்டி வழிக்குக் கொண்டுவரும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கருணாவின் அழுத்தத்தினை சட்டை செய்யாத மாணவர்கள் தமது போராட்டத்தில் தொடர்ந்ததையடுத்து, நிர்வாகம் பெறுபேறுகளை வெளியிட முன்வந்துள்ளதுடன், பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துவைத்து, விரிவுரைகளை வழமைபோல ஆரம்பித்திருக்கிறது.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, தை 2011 மட்டக்களப்பில் கருணா மற்றும் பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழுக்களுக்கெதிராக எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மற்றும் சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவரும் வடக்குக் கிழக்கில் ராணுவத்தின் வழிநடத்துதலில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் கருணாவுக்கெதிராகவும் மட்டக்களப்பில் மக்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்துள்ளனர். கடந்த செவ்வாயன்று இவ்வாறான எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்ட மக்கள் ஆரையம்பதி, மண்முனைப்பற்று பிரதேசச் செயலாளர் மற்றும் கிராம சபை அதிகாரி ஆகியோரின்மேல் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்துக் குரல்கொடுத்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர், மக்கள் பிள்ளையானினதும், கருணாவினதும் வன்முறைகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதையே இப்போராட்டம் காட்டுவதாகக் கூறினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பிள்ளையான் கொலைக்குழுவின் முக்கியஸ்த்தருமான ப. பிரசாந்தன் என்னும் ஆயுததாரி மண்முனைப்பற்று பிரதேசச் செயலாளர் கே. தனபாலசிங்கம் என்பவரையும், கிராம சபை அலுவலர் சுரேஷ் என்பவரையும் இன்னும் அவருடன் பணியில் ஈடுபட்டு வரும் பல உள்ளூர் அதிகாரிகளையும் கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தனது அடிவருடிகளுடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியிருந்தார். திரு தனபாலசிங்கம் தன்மீது பிரசாந்தனாலும் அவரது துணை ஆயுததாரிகளாலும் மேற்கொள்ள்ப்பட்ட மிலேச்ச்த்தனமான தாக்குதல்பற்றி வெளிப்படையாகவே புகாரளித்திருந்தார். மக்களின் போராட்டத்தினையடுத்து பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி பிரசாந்தனும், அவரது துணைக்குழு ஆயுததாரிகளும் காத்தான்குடிப் பொலிசாரிடம் சரணடைய ஒத்துக்கொண்டுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சரும், கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் அழுத்தத்தின் பேரில் பிரசாந்தனை பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம், அவரது கூலிகள் 5 பேரை கண்துடைப்பிற்காக தொடர்ந்தும் மறித்து வைத்திருக்கிறது. பிள்ளையான் கொலைக்குழுவிற்கெதிரான போராட்டம் ஒன்றினை சில மாதங்களுக்கு முன்னரும் வாழைச்சேனை மக்கள் முன்னெடுத்திருந்தார்கள் என்பது நினவிலிருக்கலாம். அப்பகுதியில் இயங்கிவந்த தனியார் கல்விச்சாலையான "சண் டியூசன்" நிலையத்தின் மீதான பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு எதிராக இது நடத்தப்பட்டிருந்தது. கொழும்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் இக்கொலைக் குழுக்களை தமிழர்களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருக்கவும், படுகொலைகளில் ஈடுபடவும் பயன்படுத்தி வருகின்றனர். இதேவேளை இக்குழுக்கள் தமது பயங்கரவாத அடக்குமுறைகளைப் பணம் சம்பாதிக்கும் வழியாகவும் பாவிக்கின்றனர் என்று மட்டக்களப்பு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
  15. புலிகள் ஏன் அழிக்கப்பட்டார்கள்?
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மார்கழி 2010......... "துணை ராணுவக்குழுக்களான கருணா குழு மற்றும் ஈ பி டி பி ஆகியவை புலிகளுக்கெதிரான யுத்தத்தில் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன. புலிகளுக்கு ஆதரவானவர்களைக் கடத்துதல், அரச ராணுவத்திற்குச் சார்பாக சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபடுதல், அரச ராணுவத்தினர் மீதான மனிதவுரிமை மீறல்களை அரசாங்கம் தம்மீது சுமத்துவதை ஏதுவாக்குதல் ஆகிய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் இவர்களைப் பாவித்து வருகிறது". "இந்த இரு துணை ராணுவக் குழுக்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்று மறுத்துவரும் அரசும் ராணுவமும் தமது மனிதவுரிமை மீறல்களை தாம் மெருகூட்டியிருப்பதாகவும், கைதுசெய்தல் மற்றும் தடுத்துவைத்தல் தொடர்பான செயன்முறைகளை மேம்படுத்தும் பயிற்சிகளையும் தாம் ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறது. மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கென்று தனிமனித விசாரணைக் கமிஷன் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறது". "ஆனால், சர்வதேசத்தில் இலங்கை அரசின் மேம்படுத்தல் நடவடிக்கைகள் திருப்தியளித்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தமிழ்ப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது, சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பது, சிறுவர்களைக் கடத்துவது ஆகிய மனிதவுரிமை மீறல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன". "மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கருணா மற்றும் டக்கிளஸின் துணை ராணுவக்குழுக்களுக்கான பண உதவியினை நிறுத்தியிருக்கிறது. அவர்கள் தமக்குத் தேவையான பணத்தினை கடத்தல்கள் மூலமும், கப்பம் கோருதல் மூலமும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அனுமதியளித்திருக்கிறது. துணை ராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு வெளிப்படையாக இருந்தபோதிலும் கூட, அரசாங்கம் இந்த நிலைமையினை சீர்செய்யும் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட விரும்பவில்லையென்பது தெரிகிறது". "எமது தூதரகத்தில் பணியாற்றுகின்ற பல ஊழியர்கள் அரசாங்கத்தின் இந்த புதிய நண்பர்களுடனான நெருங்கிய நட்புத் தொடர்பாக அதிர்ச்சியும், தமது பாதுகாப்பு பற்றிய அச்சமும் கொண்டிருக்கின்றனர்". அமெரிக்க பிரஜையான கோத்தாபய பற்றி இச்செய்தி கூறும்போது, " கோத்தாபய கருணாவுக்கும் டக்ளசுக்கு தமிழ் வர்த்தகர்களிடமிருந்து தேவையானளவு பணத்தினைக் கப்பமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கியிருக்கிறார். வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் தற்போது அதிகரித்துவரும் தமிழ் வர்த்தகர்களின் கடத்தல்கள், கப்பம் கோருதல்கள் மற்றும் படுகொலைகளின் பின்னால் கருணாவும் டக்கிளஸும், அவர்களின் பின்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ஆசீரும் இருப்பது தெளிவாகிறது. கருணாவும் டக்கிளஸும் தமிழர்களாக இருந்தும்கூட அவர்களால் பணத்திற்காகக் கடத்தப்படுகின்ற, கொல்லப்படுகின்ற வர்த்தகர்கள் அனைவருமே தமிழர்கள் தான்" என்றும் கூறப்பட்டிருக்கிறது.
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மார்கழி 2010 சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளைச் செய்யும்படி கருணாவையும், டக்கிளஸையும் ஊக்குவித்த கோத்தாபய ராஜபக்ஷ - விக்கிலீக்ஸ் 2007 , மே 18 ஆம் திகதி கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகம் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ராணுவத் தளபதிகளுக்குப் பாதுகாப்புச் செயலாளர் அனுப்பியுள்ள செய்தியில், "உங்களின் வேலைகளை அவர்களைக் கொண்டு செய்விக்கிறேன், இதனால் சர்வதேசத்தில் நமக்குப் பிரச்சினையில்லை, நீங்கள் அவர்களைத் தடுக்க வேண்டாம்" என்று கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. உங்களின் வேலை என்பதன் மூலம் கோத்தாபய குறிப்பிட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், பணத்திற்காக ஆட்களைக் கடத்துதல், ஆட்கடத்தல்கள் மற்றும் தமிழ்ப்பெண்களைக் கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் கருணாவையும் டக்கிளஸையும் பாவிப்பது என்று பொருள்படும் என்று விக்கிலீக்ஸ் மேலும் கூறுகிறது. விக்கிலீக்ஸ் : ரொபேர்ட் பிளேக் , 18 மே 2007 "கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பல்வேறுபட்ட வன்முறைகளைப் பாவித்து பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறார். முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பெண்களை கடத்திச்சென்று ராணுவத்தின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பாலியல் அடிமைகளாகப் பாவிக்கிறார் . உதவியும், பாதுகாப்பும் இன்றித் தவிக்கும் இப்பெண்கள் கருணாவை எதிர்க்க முடியாமல், அடிமைகளாகச் செயற்படுவதாகத் தெரிகிறது". "2006 ஆம் ஆண்டும் துணைராணுவக் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட அனைத்து வன்முறைகள், சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் அரச ராணுவத்தின் கரங்கள மறைந்திருப்பது தெரிகிறது". "இலங்கை அரசாங்கம் பின்வரும் காரணங்களுக்காக கருணாவையும், டக்கிளஸையும் பாவிக்கிறது. 1. இலங்கை ராணுவத்திற்கெதிரான மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இக்குழுக்களே பொறுப்பெற்றுக்கொள்கின்றன. 2. இலங்கை அரசாங்கங்கள் துணை ராணுவக் குழுக்களுக்கான நிதிவழங்களைத் தொடர்ச்சியாக வழங்கியே வந்திருக்கின்றன. 3. கருணா துணைராணுவக் குழுவே அனைத்து துணைப்படைகளிலும் மிகவும் கொடூரமானது. 4. கருணா குழு கடத்தல்களிலும் படுகொலைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. 5. கருணா தனது கொலைக் கலாசாரத்தை யாழ்ப்பாணத்திற்கும் விஸ்த்தரித்திருக்கிறார். 6. கப்பத்திற்காக ஆட்களைக் கடத்துவது, இலங்கை ராணுவத்திற்காக பாலியல் தொழிலில் தமிழ் அபலைப் பெண்களையும் சிறுமிகளையும் ஈடுபடுத்துவது போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் அரச ராணுவத்தின் துணையுடன் ஈடுபட்டு வருகிறார். 7. கருணா தனது துணைராணுவப் படையில் சிறுவர்களைப் பலவந்தமாகச் சேர்த்து வருகிறார். 8. முழுமையான வன்முறைகளை ஏவிவிடும் கருணாவுக்கு தனது கட்சியில் துணைத் தலைவர் பதவியினைக் கொடுத்ததன் மூலம் அரசாங்கம் அவருக்கு அரசியல் அந்தஸ்த்தினை வழங்கியிருக்கிறது". https://www.tamilnet.com/art.html?catid=13&artid=33235
  18. வாழையினால் ஆன சறுக்கு மரம் ஏறுதல் செம ஜோக்.........! 😂
  19. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் சரி தானோ.. முறை தானோ.. எந்தன் சமுதாயமே
  20. உறவு ஒன்று அழைக்கிறார் இயேசு
  21. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  22. ஆடுமயிலே கூத்தாடு மயிலே துதிக்கை தூக்கி
  23. இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா மன்னவனே என் மாபரனே மனமதில் நிறைந்திட வா (2) விண்ணக உணவே வா உறவாய் என்னில் வா (2) வருக வருக தேவா எந்தன் உள்ளம் வருக தேவா (4) இனிய குயிலின் இசையினிலே இயற்கை தந்த அழகினிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா கனிவு நிறைந்த வார்த்தையிலே அன்பு கொண்ட நெஞ்சத்திலே உன்னருள் பெறுகின்றேன் நான் உன்னருள் பெறுகின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2) வண்ண மலரின் சிரிப்பினிலே மயிலின் வண்ண சிறகினிலே உன் எழில் காண்கின்றேன் நான் உன் எழில் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா பொங்கும் கடலின் அழகினிலே புன்னகை நிறைந்த மழலையிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2)
  24. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஒரு நாளாகிலும்... ஒரு பொழுதாகிலும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.