Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    19
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87997
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38777
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/13/21 in all areas

  1. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 05, ஆவணி 2011 மட்டக்களப்பில் மக்களிடம் கருணா பறிக்கும் கப்பத்தில் ராணுவத்திற்கும் பங்கு துணைராணுவக் குழுத் தலைவரும், அரசாங்கத்தில் பிரதியமைச்சராகவும் வலம்வரும் கருணாவின் உத்தரவின்பேரில் அவரது சகாக்கள் மட்டக்களப்பிலிருந்து படுவான்கரைக்கு தொழில்நிமித்தம் செல்லும் மக்களிடம் கப்பமாக பெருமளவு பணத்தினை அறவிட்டுவருவதாகவும், இப்பணத்தில் ராணுவத்திற்கும் ஒரு பங்கு செல்வதால் அவர்களும் இப்பணப்பறிப்பிற்கு உதவிவருவதாகவும் மட்டக்களப்பு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர். கால்நடை உரிமையாளர்கள் , வர்த்தகர்கள், கமச்செய்கையில் ஈடுபடும் "போடியார்கள்" எனப்படும் விவசாயிகள், படுவான்கரையிலிருந்து பாலினை மட்டக்களப்பிற்குக் கொண்டுவரச் செல்லும் வர்த்தகர்கள் என்று அனைவருமே கருணாவின் சகாக்களால் இலக்குவைக்கப்பட்டு பணம் பறிக்கப்படுகிறார்கள். இவ்வாறான பணப் பறிப்பிற்காக கருணாவால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவனான சிவப்பிரகாசம் சுப்ரமணியம் என்பவன் தரவைப் பகுதி முகாம் ஒன்றில் இருந்து இயங்கிவருவதாகவும், இராணுவப் புலநாய்வுத்துறையினரிடம் இவனுக்கிருக்கும் நெருக்கத்தினைப் பாவித்து இவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் வசித்துவரும் முன்னாள்ப் புலிகளையும் அவர்களது குடும்பங்களையும் தொடர்ந்து அச்சுருத்திவரும் இவன், இப்பகுதி மக்களுக்குப் பெரும் தொல்லையாக மாறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மணியம் என்றழைக்கப்படும் இவன் கருணாவின் நெருங்கிய சகாவென்றும் சித்தாண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குடும்பிமலை, அழியாஓடை, மியான்குளம் ஆகிய பகுதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கவரும் மக்களை மணியமும் அவனது சகபாடிகளும் தமது முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான முறைப்பாடுகளை காவல்த்துறை எடுக்க மறுத்தே வருகிறது. மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணத்தில் ஒருபகுதியினை காவல்த்துறையும் பெற்றுவருவதால் இம்முறைப்பாடுகளை அவர்கள் கண்டுகொள்வதில்லையென்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2011 மட்டக்களப்பில் 40,000 ஏக்கர்களை சிங்களக் குடியேற்றமாகமாற்றும் அரசு - பிள்ளையான், கருணா துணைராணுவக் குழுக்கள் அமைதியாக ஆமோதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்திருக்கின்ற நல்ல விளைச்சல் நிலங்களான கோரளைப்பற்று வடக்கு, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, செங்கலடி, ஏறவூர்ப்பற்று தெற்கு மற்றும் பட்டிப்பளை ஆகிய இடங்களில் தமிழரின் நிலங்களில் குறைந்தது 40,000 ஏக்கர்களைச் சிங்கள விவசாயிகளுக்காக அரசு தன்வசப்படுத்தியிருக்கிறது. மாவட்ட அரசின் அனுமதியின்றியும், மாகாணசபையின் அனுசரணையின்றியும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழரின் நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் தெரிவித்திருக்கிறார். கிழக்கு மாகாணசபை முதல்வர் பிள்ளையான் இந்தக் குடியேற்றம் குறித்து எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததால் இதுதொடர்பாக தான் அவருக்கு சட்டரீதியான முறைப்பாட்டினை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் ஒரு பிரதியொன்று துணைராணுவக் குழுத்தலைவரும் அரச பிரதியமைச்சருமான கருணாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சிவநேசதுரை சந்திரகாந்தனும், விநாயகமூர்த்தி முரளிதரனும் அரச ராணுவத்தால் இயக்கப்படும் இரு கொலைக்குழுக்களின் தலைவர்கள் என்பதும், அரச அதிகாரத்தில் இரு மட்டங்களில் இருக்கும் இவர்கள் சிங்கள அரசின் பிரதிநிதிகளாகவே செயற்பட்டுவருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. தான் பிள்ளையானிடம் இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர் இதுபற்றி அக்கறைகொள்ளாது இருப்பதாகவும், எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் சிறிது சிறிதாக திட்டமிட்ட சிங்கள மயமாக்கலுக்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதை இவர்கள் இருவரும் மெளனமாக ஆமோதித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  3. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 17, ஆடி 2011 கிரானில் நடந்த கூட்டத்தில் பிள்ளையானின் சகாவைத் தாக்கிய கருணா ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிரானில் நடந்த கூட்டமொன்றில் இன்னொரு கொலைக்குழுவான பிள்ளையானின் சகா ஒருவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். கடந்த வெள்ளியன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கிரானில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சராக தன்னை ஆக்கிக்கொண்ட பிள்ளையானும், அவரது நெருங்கிய சகாவான "வர்த்தகர்" பிரபாவும் வருகை தந்திருந்தனர். இதே கூட்டத்திற்கு தனது சகபாடிகளுடனும், விசேட அதிரடிப்படையினருடனும் வருகைதந்த இன்னொரு துணைராணுவக் குழுத் தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணா அங்கிருந்த பிள்ளையானின் சகாவான பிரபா மீது சரமாரியாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறார். கூட்டத்திற்கு வந்திருந்த உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் இக்குழுத் தலைவர்கள் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். கைகலப்பின் பின்னர் கூட்டம் கலைக்கப்பட்டிருக்கிறது, இதன்பின்னர் பிள்ளையான் கொலைக்குழுவால் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் மதுபோதையில் கூட்டத்திற்கு வருகைதந்த கருணா அங்கிருந்த "வர்த்தகர்" பிரபாவைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அதேவேளை இக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் தெரிவிக்கும்போது பிரபாவின் கடைக்கு கருணாவும் அவரது பரிவாரங்களும் அடிக்கடி சென்று வருவதாகவும், உணவும் மதுபானமும் அவர்களுக்கு இலவசமாகவே பிரபாவால் வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இது இவ்வாறிருக்க, பிள்ளையானினால் வழங்கப்பட்ட பல மாகாணசபைப் பதவிகளுக்கான நியமனங்களை கொழும்பு அரசாங்கம் நிராகரித்திருப்பதாகத் தெரிகிறது. பிள்ளையானினால் அனுப்பப்பட்ட நியமனங்களை நிராகரித்திருக்கும் அரசு, கருணாவின் உறவினர்களையும், நண்பர்களையும் இப்பதவிகளுக்கு நியமிக்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.
  4. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 13, ஆடி 2011 மட்டக்களப்பில் வர்த்தகர்களிடமிருந்து பணம் பறிக்கும் துணைராணுவக் குழுவும் இலங்கை ராணுவமும் கிழக்கு மாகாண முதலமைச்சரும், அரச ராணுவத்தால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவனுமாகிய பிள்ளையானின் சகாக்களும், ராணுவமும் மட்டக்களப்பு நகரின் தெற்குப்பகுதியான படுவான்கரையிலிருந்து நகருக்கு வரும் வர்த்தகர்களிடம் கப்பமாகப் பணம் பறிப்பில் ஈடுபட்டுவருவதாக வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன் படுவான்கரையிலிருந்து மட்டக்களப்பு நகரிற்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்படும் பல உற்பத்திப்பொருட்களை துணைராணுவக்குழுவும் இலங்கை ராணுவமும் பறித்துச் செல்வதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படுவான்கரையினைச் சேர்ந்த வர்த்தகர்கள் தினமும் பழங்கள், கருவாடு மற்றும் மீன், மரக்கறிகள், விறகு போன்ற பொருட்களை மட்டக்களப்பு நகருக்குக் கொண்டுவருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் பொருட்கள் வழியெங்கும் இருக்கும் சோதனைச் சாவடிகளான, பட்டிருப்புப் பாலம், மண்முனைத்துறை, அம்பிலாந்துறை , செங்கலடிக் கறுத்தப் பாலம், கிரான் பாலம், சந்திவெளி களப்பு ஊடாக காவத்த முனை ஆகிய இடங்களில் விசேட அதிரடிப் படையினராலும் பிள்ளையான் துணை ராணுவக் குழுவினராலும் வழிமறிக்கப்பட்டு பெருமளவு உற்பத்திப் பொருட்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, மட்டக்களப்பின் கரையோரங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் சமூகங்களிடமிருந்து அப்பகுதியெங்கும் நிலகொண்டிருக்கும் ராணுவம் மீன்களைப் பறித்துச் செல்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் தாம் அகழ்ந்துவரும் மண்ணை பாரவூர்திகளில் நகரூடாக எடுத்துச் செல்லும் போது வீதியில் நிற்கும் பொலீஸார் வாகனத்தை மறித்தும் கப்பம் கேட்பதாகவும், மறுக்கும் பட்சத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டதற்காகத் தண்டப் பணம் செலுத்தும்படி நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகின்றனர். இதேபோல் சீமேந்துக் கற்களை உற்பத்தி செய்து டிராக்டர்களில் எடுத்துச் செல்பவர்கள் மற்றும் சாதாரண வாகனங்களில் பயணிப்பவர்கள் என்று பலரும் பொலீசாரினாலும், துணைராணுவக் குழுவினராலும் மறிக்கப்பட்டு கப்பம் அறவிடப்படுவதாகவும், மறுப்போர் மீது நீதிமன்ற வழக்குகள் பதியப்படும் என்று மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் அரச அனுமதியுடன், வருடந்தோறும் சரியான வரிகட்டி தாம் நடத்தும் வியாபாரத்திற்கு "பாதுகாப்புப் பணம்" என்கிற போர்வையில் பெருமளவு பண கிழக்குமாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமாகிய பிள்ளையானுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் , தமது வியாபாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கோரும் "பாதுகாப்புப் பணம்" கொடுக்கப்பட்டுவருவதாகவும் கூறும் இவர்கள், பிள்ளையான் தம்மை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனது அலுவலகத்தில் இதுபற்றிக் கலந்துரையாட அழைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தனியார் வியாபார நிலையங்களும் பிள்ளையானுக்கு பாதுகாப்புப் பணமாக பெருமளவு பணத்தினை செலுத்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கும் சொத்துக்களுக்கும் பிள்ளையானின் சகாக்களாலும், ராணுவத்தாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில் பெரும்பாலானோர் அவர்கள் கோரும் பணத்தினைச் செலுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.
  5. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 08, ஆனி 2011 துணைராணுவக்குழுக்களால் சிங்களப் பகுதிகளில் தொழில் அடிமைகளாக விற்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள் மட்டக்களப்பில் ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் துணைராணுவக் குழுவொன்றினால் கடத்தப்படு பின்னர் தொழில் அடிமையாக சிங்களப் புதையல் தேடும் குழுவொன்றிற்கு தம்புள்ளைப் பகுதியில் விற்கப்பட்ட தனது 11 வயதுப் பேரனை தேடிவந்து, புதையல் தேடுபவர்களிடமிருந்து மீட்டுவந்த வயோதிபரை அந்தத் துணைராணுவக் குழு கொல்லப்போவதாக மிரட்டியுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த வேல்முருகு சிவலிங்கம் என்பவரின் பேரனான அதிசயராஜா செளந்திரராஜா எனும் சிறுவனே இவ்வாறு துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு விற்கப்பட்டவர் ஆவார். தனது பேரன் புதையல் தேடும் குழுவொன்றினால் தம்புள்ளை பகுதியில் அடிமையாகப் பாவிக்கப்பட்டுவருவதை அறிந்துகொண்ட இந்த வயோதிபர், துணிச்சலாக புதையல் தோண்டும் குழுவினரைத் தேடிச்சென்று அவரை மீட்டுவந்திருக்கிறார். சித்தாண்டி மகாவித்தியாலயத்தில் கல்விபயின்றுவந்த அதிசயராஜ் தூனைராணுவக் குழு ஆயுததாரி ராமச்சந்திரன் மரியராஜ் என்பவரால் கடந்தமாதம் கடத்தப்பட்டிருந்தார். இவரைக் கடத்திச்சென்ற துணைராணுவக் குழு தம்புள்ளைப் பகுதியில் புதையல் தேடும் சிங்களக் குழுவொன்றிற்கு அடிமையாக விற்றிருக்கிறது. தம்மால் விற்கப்பட்ட சிறுவனை அவரது பேரன் மீட்டுவந்ததையறிந்துகொண்ட துணைராணுவக்குழு அவரையும், மீட்கப்பட்ட சிறுவனையும் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளதாக அவரது குடும்பம் ஏறாவூர்ப் பொலீசிலும், இலங்கை மனிதவுரிமைச் சபையிலும் முறைப்பாடு செய்திருக்கிறது. இதே துணைராணுவக் குழுவால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய பகுதிகளில் பெருமளவு சிறுவர்கள் கடத்தப்பட்டு சிங்களப் பகுதிகளில் அடிமைகளாக விற்கப்பட்டுவருவதாக பல புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
  6. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 18, வைகாசி 2011 கிழக்கில் துணைராணுவக் குழுக்களிடையேயான மோதல்களை இலங்கை அரசாங்கமே ஊக்குவிக்கிறது கிழக்கு மாகாண முதலமைச்சரும், கொலைக்குழுவொன்றினை நடத்திவருபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வீட்டினை கொழும்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவொன்று சோதனையிட்டது. இச்சோதனை நடக்கும்பொழுது அவர் அங்கிருக்கவில்லையென்று தெரியவருகிறது. இச்சோதனையின் நோக்கம்பற்றித் தம்மக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென்று பிள்ளையானின் கொலைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். மகிந்த ராஜபக்ஷவின் ராணுவ இயந்திரத்தால் வழிநடத்தப்படும் இரு துணைராணுவக் குழுக்களான பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் உட்கொலைகளின் மையப்புள்ளியாக விளங்கும் வாவி வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையானின் அலுவலகமே இந்த திடீர் சோதனைக்கு உட்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி இராணுவ புலநாய்வுத்துறையே இவ்விரு கொலைக்குழுக்களுக்குமிடையிலான பகைமையினை உருவாக்கி வளர்த்துவருவதாகத் தெரிகிறது. பிள்ளையானின் ஆதரவாளர்கள் இத்திடீர் சோதனைபற்றிக் கூறுகையில் சோதனைகள் சாதாரண சட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அரசின் அதிகாரத்திலுள்ள கருணாவின் விருப்பத்திற்கேற்ப ராணுவம் சோதனைகளில் ஈடுபடுவது தவறானது என்று கூறியிள்ளனர். தமிழர்கள் மீதான போரின்பொழுது ராஜபக்ஷ அரசு இவ்விரு குழுக்களுக்கும் ஆயுதங்களும், ஏனைய வசதிகளையும் வழங்கி தமிழரைக் கடத்திச் சென்று கொல்லுதல் முதல், கப்பம் கோருதல், பாலியல்த் தொழிலில் தமிழ்ப் பெண்களையும், சிறுமிகளையும் ஈடுபடுத்துதல் வரை பாரிய மனிதவுரிமை மீறல்களைப் புரிவதற்கு இவர்களைப் பாவித்தது. இவ்விரு குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்கிற போர்வையில் அரசாங்கம் செயற்படப்போவதாகக் காட்டிக்கொண்டது. ஆனால், இதே அரசாங்கம் 2008 மட்டக்களப்பு தேர்தல்களின் பொழுது இன்னொரு துணைப்படையான டக்கிளசின் கட்சிக்கெதிரான மோதல்களில் பிள்ளையான் கொலைக்குழுவிற்கு ஆயுதங்களும், அரச வாகனங்கள், வானூர்திகள் என்று பல்வேறான உதவிகளைச் செய்தது. வாழைச்சேனை ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவந்த ஈ பி டி பி ஆயுததாரியான காளியப்பன் ஞானசீலன் என்பவரை பிள்ளையான் கொலைக்குழு 2008 இல் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தது. அதற்குப் பழிவாங்க ஆண்டான்குளம் செங்கலடியைச் சேர்ந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி தேவதாஸ் சுரேஷ்குமாரை ஈ பி டி பி கொலைக்குழு கடத்திச்சென்று கொன்றுபோட்டது. ஈ பி டி பி அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட சுரேஷ்குமாரின் உடலை ராணுவமும், பிள்ளையான் கொலைப்படையும் தேடுதல் ஒன்றின்போது தோண்டியெடுத்திருந்தன. கிழக்கில் பிள்ளையானுக்கெதிராக டக்கிளசின் கட்சி மேலோங்குவதை விரும்பாத அரசாங்கம், டக்கிளசிற்கெதிரான பிள்ளையானின் நடவடிக்கைகளை ஊக்குவித்ததுடன், டக்கிளசின் கட்சிக்கான செயற்படும் வெளியையும் வெகுவாகக் குறைக்கத் தொடங்கியது. ஆனால், இப்போது அரசால் வளர்க்கப்பட்ட பிள்ளையான் கொலைக்குழுவே அரசால் இலக்குவைக்கப்பட்டிருப்பதைத்தான் அண்மைய நிக்ழவுகள் காட்டுகின்றன. அண்மையில் கொல்லப்பட்ட மகிந்த மற்றும் கருணாவின் நெருங்கிய சகாவான ராசமாணிக்கம் மதியழகன் எனப்படும் ஆயுததாரியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரான பிள்ளையானின் சகா பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் எட்வின் கிருஷ்ணராஜா ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருப்பது இதனையே காட்டுகிறது. பிள்ளையானின் கிழக்கு மாகாண அரசின் உறுப்பினரான ஆயுததாரி பிரதீப் மாஸ்ட்டர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலநாய்வுத்துறையினரால் கொழும்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், பிள்ளையானின் கொலைக்குழு முக்கியஸ்த்தரும், செங்கலடி செல்வம் திரையரங்கு உரிமையாளர் மோகன் என்பவரது வீடும் ராணுவத்தால் சோதனையிடப்பட்டுள்ளது. மகிந்த மற்றும் கருணா ஆகியோரின் நெருங்கிய சகாவான, ஆயுததாரி மதியழகன் கொல்லப்பட்ட 72 மணித்தியாலங்களுக்குள் பிள்ளையான் கொலைக்குழு பிரமுகர்கள் ராணுவத்தாலும், கருணா கொலைக்குழுவாலும் இலக்குவைக்கப்பட்டு வருகின்றனர். களுவாஞ்சிக்குடியில் மதுபான நிலையம் ஒன்றினை நடத்திவரும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர் இளங்குமரன் என்பவரைக் கருணா கொலைக்குழு கடத்திச் சென்று சுட்டுக் கொன்றிருக்கிறது.
  7. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 11, வைகச்சி 2011 தொடரும் துணைராணுவக் கூலிகளின் உள்வீட்டுப் படுகொலைகள், ராணுவ துணைப்படைத்தலைவர் கருணாவின் ஒருங்கிணைப்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக்கொலை - பிள்ளையான் கொலைக்குழு கைவரிசை உந்துருளியில் வந்த இரு பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் 38 வயதுடைய ராசமாணிக்கம் மதியழகன் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளரும், தூனைராணுவக்குழுத் தலைவர் கருணாவின் உதவியாளருமானவர் கடந்த புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டார். கல்லடித்தெருவில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்கருகிலேயே இக்கொலை சுமார் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது. மதியழகன் ஆரம்பத்தில் ஈ பி டி பி கொலைக்குழுவில் செயற்பட்டு வந்தார் என்றும் பின்னர் இக்குழுவிலிருந்து விலகி நேரடியாக ராணுவப் புலநாய்வுத்துறையின் கடத்தல்கள், கொலைகள் என்பவற்றில் செயற்பட்டுவந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட மதியழகன் மட்டக்கள்ப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில் ஆலய நிர்வாகச் சபைத் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை, இவரே மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷ அரசின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தார். இவரின் கொலையினையடுத்து சிங்கள ராணுவமும் காவல்த்துறையும் இப்பகுதியினைச் சுற்றியுள்ள இடங்களில் தேடுதலினை மேற்கொண்டனர். இப்பகுதியிலிருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஆனாலும், கொலையில் ஈடுபட்ட இருபிள்ளையான் கொலைப்படையினரையும் அவர்களால் கைதுசெய்ய முடியவில்லை. ராணுவத்தின் ஏவல்ப்படைகளாக இம்மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகியவை தமக்கிடையேயான பகைமையினைத் தொடர்ந்தும் பேணிவருவதுடன், துணைராணுவக் குழுத் தலைவர் அரசின் செல்லப்பிள்ளையாக, மகிந்த அரசின் உதவித்தலைவர் பதவியினை அலங்கரித்து வந்ததின்பின்னர் இவை படுகொலைகளாக வெளிப்படுகின்றன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
  8. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 24, சித்திரை 2011 கிழக்குப் பல்கலைக் கழகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கள காவல்த்துறையின் சோதனைச் சாவடி தொடர்ந்தும் இருக்கும் - அமைச்சர் திசாநாயக்கா கிழக்குப் பல்கலைக் கழகத்தினுள் அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களப் பொலீஸ் சாவடி குறித்து மகிந்த அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசாநாயக்கா கருத்துத் தெரிவிக்கையில் எக்காரணம் கொண்டும் இந்தச் சாவடி அகற்றப்படாதென்றும், தேவையானால் ராணுவத்தையோ, கடற்படையினரையோ அல்லது விசேட அதிரடிப்படையினரையோ நாம் இங்கே பாதுகாப்புக் கடமைகளில் அமர்த்துவோம் என்று கூறியிருக்கிறார். அண்மையில் பல்கலைக் கழகத்தினுள் அமைக்கப்பட்ட காவல்த்துறைச் சாவடியின் பின்னரே பல்கலைக் கழகத்தினுள் கொலைகள் உட்பட வன்முறைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள், இந்தச் சாவடி உடனடியாக அகற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையினையடுத்தே சிங்கள அரசாங்கத்தின் அமைச்சரான திசாநாயக்கா இங்கு வருகை தந்திருந்தார். காவல்த்துறைச் சாவடியினை எக்காரணம் கொண்டும் அகற்றமுடியாது என்று சூளுரைத்த அமைச்சர், இங்கே கல்விகற்கும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே காவல்த்துறை அங்கு நிலைவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இவ்விஜயத்தின்போது ராணுவத்தால் இயக்கப்படுகின்ற துணை ராணுவக் குழுத் தலைவர் கருணா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் பல்கலைக்கழக உப வேந்தர் பிரேம்குமார் ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதேவேளை பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இச்சாவடியினை முற்றாக அகற்றுவதா அல்லது பல்கலைக் கழகத்திற்கு வெளியே இடம் மாற்றுவதா என்பது பற்றி மாணவர்களுடன் பேசித் தீர்மானிப்போம் என்று மாணவர் சம்மேளன தலைவர் டி. கிரிஷாந்த் கூறினார். 2009 ஆண்டு, வன்னி இனவழிப்பு யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்தவேளையில், புதிதாக அமைக்கப்பட்ட பொலீஸ் சாவடியூடாகவே கருணா தூனை ராணுவக் குழுவினர் பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து கருணாவின் கட்டளைப்படி வன்னியைச் சேர்ந்த இரு மாணவிகளையும், சித்தாண்டியைச் சேர்ந்த விடுதி மேற்பார்வையாளரான பெண்ணையும் படுகொலை செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கருத்துப்படி, கருணாவின் கட்டளையின் பேரிலேயே தற்போதுள்ள பல்கலைக் கழக நிர்வாகம் கல்வி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கருணவை இலங்கை அரசும் ராணுவமுமே இதுதொடர்பாக இயக்குவதாகவும் விசனம் தெரிவித்தனர். கிழக்குப் பல்கலைக் கழகம் கருணாவின் பிரதேசவாத அரசியல் ஆடுகளாமாக மாற்றப்பட்டுவிட்டதென்று கல்விசார் நடவடிக்கைகளில் அக்கறைகொண்ட ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
  9. சபேஷ்... நீங்கள், கனடாவில் வசித்துக் கொண்டு...இப்பிடிச் சொன்னால், நிழலி... "தூக்கு காவடி" எடுத்துக் கொண்டு, கைலாச நாட்டுக்கே... போய் விடுவார். சபேஷ்... சின்ன ஒரு கேள்வி? கைலாச நாட்டின், தலைவரின் பெயரை.. ஒருக்கால்... சொல்லுங்கள் பார்ப்போம், காது குளிர.. நாங்கள் கேட்க ஆசையாக உள்ளது. 🤣
  10. கிழமைக்கு ஒருக்காலாவது வந்து விசிலடிச்சிட்டு போங்கோப்பா 😁
  11. சபேஷ்... களத்தில், கருத்து எழுதா விட்டாலும், கிழமைக்கு ஒருக்கால், திண்ணையில்... ஹீ ... ஹாய்... கூய்.... என்று போட்டும், சிமைலி போட்டும்... வாழ கற்றுக் கொள்ளுங்கள். அப்படித்தான்... சிலர், இங்கு... வந்து போகின்றார்கள்.
  12. இதுக்கு கை நடுங்காம இருக்கோணும்.
  13. தேர்தலுக்கு முன் கிடுகு பின்னுவினம் வென்றபின் வெல்ல வைத்தவர்கள் முதுகில்சவாரி போவினம் இதுதான் திமுக
  14. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே.......! --- இளங்காத்து வீசுதே---
  15. வணக்கம், ரஞ்சித்...! தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கின்றேன்! எல்லாச் செய்திகளுமே...எமது காலத்தில் தான் நடந்திருப்பினும், தனித் தனியாக வாசித்த போது அவற்றுக்கு உள்ளே இருந்த உட் கருத்து தெளிவாகப் புரியவில்லை! இப்போது வாசிக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒரு கோவையாப் பொருந்தி வருகின்றன! இந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்...! தொடருங்கள்!
  16. "தொலை தூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும் விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்" "இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாக கலைந்தாய் "........ பாடல் : மறுவார்த்தை பேசாதே படம் : என்னை நோக்கி பாயும் தோடடா காதலர்கள் பிரிந்தாலும் உண்மைக்காதல் அழிவதில்லை உண்மையான உணர்வு ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.