Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34974
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/14/22 in all areas

  1. நன்றி, கு.சா. 🙏 இந்தக் காணொளியின் சில பின்னூட்டங்களை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. உள்நாட்டு போரின்போது, தானும், தன்னை சார்ந்தவர்களும் தப்பித்தால் போதுமென வசதிபடைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி செட்டிலாகிவிட, வசதியற்ற எளியவர்கள் தோணி மூலம் தமிழகம் வந்து ஏழ்மை நிலையில் இன்னமும் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் அரசியல் மிக மிக மோசமானதுதான்(இவர்கள் சுதந்திரமாக வாழ, குடியுரிமையை கொடுக்க மறுக்கும் நிலையும் சேர்த்து), அவற்றை புரிந்துகொண்டு, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால், குழப்பங்களை, ஏமாற்றங்களை தவிர்க்கலாம். (அரசியல் சூழலை பொறுத்து, காலப்போக்கில் இவர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கலாம், யார் கண்டா..? 😕) மேற்கத்திய நாடுகளை போல தமிழ்நாடு பொருளாதர, சமூக வாழ்வளவில் உயர்ந்தது இல்லை, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு நிலையும் மிக சுமாரானதுதான். அந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் "ஈழத்தில் நாங்கள் அப்படியிருந்தோம், இப்படியிருந்தோம் தமிழகத்தில் வந்து சிரமப்படுகிறோம், அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்.." என வெளிநாட்டிற்கு தாங்கள் வசதியாக தப்பியோடி செட்டிலாகிவிட்டு, அங்கிருந்து கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்? அப்படிபட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து, இவர்கள் நாடு திரும்ப விரும்பினால் அழைத்துக்கொள்ளலாமே..? இவர்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்கலாமே..? 'கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு பயந்து,நெருப்பில் விழுந்த கதையாக போச்சுதே, இவர்களின் வாழ்க்கை.,!' என எமக்கும் மிகுந்த வருத்தமே.😢
  2. நீங்கள் குறிப்பிட்ட ருலிப் முதலீட்டினை இன்றுள்ள கிறிப்டோ முதலீட்டுக்கு ஒப்பிட்டதைச் சில கட்டுரைகளில் பார்த்துள்ளேன். 🙂
  3. குறைந்த செலவில் குளிர்ச்சியான வீடு......கட்டை குத்து முறை......! 👍
  4. இன்றைய உலக அரசியலை தீர்மானிக்கும் முற்றுப்புள்ளி மையமாம். நாமும் தப்பவில்லை 😎
  5. விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை அதிகரித்தால் அதன் விறபனை குறையும். ஆனால் அசையா சொத்துக்களான முதலீடுகள் (Asset) நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக வீடு, பங்கு போன்றவை விலை அதிகரிக்க அதற்கான கேள்வி அதிகரிக்கும் அதற்கு காரணம் முதலீட்டு செலவுகளின் எதிர்பார்ப்பே எதிர்காலத்தில் வாங்கிய விலையினை விட அதிக விலைக்கு விற்கலாம் என்பதாகும். இதனால் தான் இப்படியான முதலீடுகள் உண்மையான விலைகளை விட அதிகளவான விலையினை ஏற்படுத்துகிறது (Bubbles) வரலாற்றில் பல வகையான நீர் குமிழிகள் (Bubbles) உருவாகியிருக்கின்றன என கூறுகிறார்கள். ருலிப், தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட் போன்றவையை உதாரணமாக சொல்கிறார்கள். https://www.investopedia.com/terms/d/dutch_tulip_bulb_market_bubble.asp இந்த நீர் குமிழிகள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக்கூறுகிறார்கள். ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட விலையினை உடைய கடனில் உள்ள வீட்டின் பெறுமதியினை துணையாக வைத்து அதன் போலியான பெறுமதியை முதலீடாக்கி அதே சந்தையில் இன்னொரு வீட்டை மிகைப்படுத்தப்பட்ட விலையில் மீண்டும் கடனில் வாங்கினால் என்னவாகும். ருலிப்பினை வங்கிகள் கூட ஒரு சொத்தாக அங்கீகரித்திருந்தது என்பதை இப்போது பார்ப்பவர்களுக்கு நகைசுவையாக இருக்கலாம் ஆனால் அந்த காலத்தில் ஒருவரும் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. முதலீடுகளில் மற்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போது இவ்வாறான துயரம் நிகழுகிறது.
  6. பல இடங்களில் கதைக்க பயப்பிடுகின்றார்கள் என தெரிகின்றது.அது நியானமானதும் கூட....ஏனெனில் கமாராவுடன் வருகின்றவர் வேறு யாராகவும் இருக்கக்கூடும் அல்லவா. தமிழினத்திற்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் மொழியால் இணைவோம். 🙏
  7. பெண்கள் வாகனத்தில் ஏறினாலும் இந்தப் பகுதிகள் குலுங்கவே செய்யும். எனவே பெண்கள் வாகனத்தில் ஏறுவதையும் தடை செய்ய வேண்டும். நல்லகாலம் முந்தி இத கேக்கலை. இல்லாட்டி நானும் நித்திரை இல்லாமல் திரிந்திருக்க வேண்டும்.
  8. இந்தக் காணொளியில் பேசுபவர்களின்படி, ஈழ தமிழர்களின் உண்மை மனநிலை இதுதானா..? என தெளியவில்லை. மலையக தமிழர்களின் நிலை போலவே தோன்றுகிறது. வசதியுள்ள பலரும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என புலம்பெயர்ந்துவிட, பாவம் எளிய மக்கள் இங்கே வந்து எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வது வேதனை.
  9. ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார். கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான். அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. முற்றும் இணையம் : கொழும்பு டெயிலி மிரர் ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்
  10. இந்த நிலவை நான் பார்த்தால் ......! 💞
  11. சந்தை சில சமயம் செய்திகளுக்கு தொடர்பில்லாமல் செயற்படும், அதனை நியாப்படுத்தும் வகையில் சொல்வார்கள் " Good analysis bad trader " https://www.goodreads.com/book/show/100779.Reminiscences_of_a_Stock_Operator இந்த புத்தகத்தில் ஜெசி லிவர்மொரின் பங்கு சந்தை அனுபவங்கள் கூறப்படுகிறது. அதில் ஜெசி லிவர்மோர் அடிசன் கமாக் என்பவர் எவ்வாறு, சந்தை நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஜோசப் எனும் பங்கு சந்தை, பொருளாதார பற்றி எழுதும் பத்திரிகையாளர், அடிசன் கமாக்கிடம் ஒரு சந்தையின் முக்கியமான தகவலை கூறுவார், வில்லியம் ரொக்கர்பெலோ தனது எரிசக்க்தி பங்கினை ஒவ்வொரு 3/8 அதிகரிப்பிற்கும் 1500 பங்குகள் வீதம் விற்கிறார் என்பதாகும். பத்திரிகையாளரான ஜோசப்பிற்கு அடிசன் பங்கு சந்தை சரிவில் முதலிட்டிருப்பது தெரியும் அதனால் அந்த செய்தியினை கூறியவுடன் அடிசன் தனது பங்கு சந்தை சரிவு முதலீட்டினை அதிகரிப்பார் என எதிர்பாத்திருந்தார் (சாதாரணமாக அனைவரும் அதனையே செய்வார்கள்), ஆனால் அடிசன் அந்த பங்குகளை அதே விலை மாற்றத்தில் அதேயளவில் வாங்கினார். பின்னர் அந்த பங்குகளை கொண்டே பங்கு சந்தை சரிவை ஆரம்பித்து வைத்தார் என குறிப்பிடுகிறார். இங்கு பெரிய வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறுதான் வேறுபடுகிறார்கள். இந்த பெரிய வர்த்தகர்கள்தான் சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனாலும் சில சமயம் இந்த பெரிய வர்த்தகர்கள் கூட சில பங்குகளில் மாட்டி விடுவார்கள், அந்த பங்கிற்குரிய நிறுவனம் திவாலாகி கொண்டிருக்கும் அதிலிருந்து வெளியேறுவதற்காக தேர்ந்தெடுப்பது சில்லறை வர்த்தகர்களை. செயற்கையாக தற்காலிகமாக பங்கின் விலையை வலிந்து உயர்த்தி கழிவு விலையில் பங்கு வாங்கும் சில்லறை வர்த்தகர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் இந்த பெரிய வர்த்தகர்கள். இதனை பங்கு சந்தையில் "Dead cat bounce" என்பார்கள்.
  12. நீடாமங்கலம் பால் திரட்டு 👍
  13. பூமர் ஸ்றிக்கரை கை , காலில் ஒட்டி விளையாண்டவை உங்களில் எத்தனை பேர்.? ரெல்..மீ 😊
  14. அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர் ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர். எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம், அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.