Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3057
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts
  3. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts
  4. சுவைப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8805
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/29/24 in all areas

  1. இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இல் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை 34 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும் விராட் கோலியின் நிதானமான அரைச் சதத்தினதும், அக்சர் படேல், சிவம் டுபேயினதும் அதிரடி ஆட்டங்களாலும் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இரு விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும், ஓட்ட விகிதத்தில் பின்தங்கவில்லை. ஹென்றிக் க்ளாஸனின் நெருப்படியான அரைச் சதத்துடன் ஒரு கட்டத்தில் 30 பத்துகளில் 30 ஓட்டங்கள் வெற்றி இலக்காகி இருந்தது. எனினும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின், துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2024 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இங்கிலாந்தின் வெற்றியை சரியாகக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான் ஆகியோருக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையவர்களுக்கு புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 குமாரசாமி 114 4 ரசோதரன் 113 5 கந்தப்பு 113 6 சுவி 111 7 நீர்வேலியான் 110 8 கோஷான் சே 108 9 தமிழ் சிறி 107 10 கிருபன் 107 11 வீரப் பையன்26 105 12 நிலாமதி 101 13 எப்போதும் தமிழன் 100 14 நந்தன் 99 15 வாத்தியார் 98 16 வாதவூரான் 97 17 அஹஸ்தியன் 96 18 தியா 94 19 ஏராளன் 94 20 P.S.பிரபா 93 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 @குமாரசாமி ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பாரா?
  2. கொம்பியூட்டரில் புட்போல் ரிவியில் கிரிக்கட் பார்த்துக் கொண்டு மொபைலில் யாழில்எ ழுதிக் கொண்டுருக்கிறேன்
  3. கிழக்கிலும் மேற்கிலும் ----------------------------------- கடந்த சில நாட்களாக அந்த மனிதரை அங்கு கண்டு கொண்டிருக்கின்றேன். இருவரும் ஒரு புன்முறுவலுடன் விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அவர் எந்த நாட்டவர் என்று சொல்லத் தெரியவில்லை. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம் போன்றது அவரது தோற்றம். காலையில் ஓட வருபவர்கள் மிகவும் குறைந்த குளிர்காலம் அது. இருவருக்கும் அந்தக் குளிரில் வெறும் டீ சேட்டும் காற்சட்டையுமாக நிற்கும் மற்றவர் கொஞ்சம் விநோதமானவராகத் தெரிந்திருக்கும். 'இந்தியரா......' என்று அவர் தான் ஆரம்பித்தார் ஒரு நாள். அந்த ஆங்கில உச்சரிப்பு அமெரிக்க உச்சரிப்பு இல்லை. 'இல்லை, ஶ்ரீ லங்கா....' என்று சொல்லி விட்டு, 'நீங்கள் .........' என்று இழுத்தேன். 'ஓ....... சிலோன்....' என்று என் பதிலைத் திருத்தி விட்டு, அப்படியே தலையை மேலும் கீழும் அசைத்து விட்டு அருகில் இருந்த பெஞ்சில் இலகுவாக அமர்ந்தார். இந்த லாவகத்தை நான் எங்கோ பார்த்திருக்கின்றேன், ஆனால் எங்கேயென்று சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை. 'கரிபியன்........' என்றார் அவர். அதே தான், அவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன். சிறுவனாக ஊரில் இருந்த காலங்களில் மேற்கிந்திய அணி தான் என் அணி, விவ் ரிச்சர்ட்ஸ் தான் என் வீரர். அவர் வந்து நிற்கும் தோரணையே 'இந்த ஊரில் எங்களுடன் போட்டி போட யாராவது இருக்கிறீர்களா............' என்று கேட்பது போல இருக்கும். அந்த நாட்களில் அந்த அணியின் மீது ஒரு கிறக்கத்தில் கிடந்தோம் நாங்கள் பலர். அதே தொனி தான் இவரிலும் தெரிந்தது. பின்னர் தினமும் கதைக்கத் தொடங்கினோம். கிரிக்கெட்டில் ஆரம்பித்த கதைகள் பின்னர் அப்படியே தனிப்பட்ட விடயங்களுக்கு தாவியது. என்னிடம் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. மிகச் சாதாரணமான ஒரு பாதையில், சாதாரணமாக ஒரு நடை நடந்தது போன்றது என் அனுபவங்கள். அவரோ அதற்கு எதிர். அங்கு ஒரு காவலராக ஒரு காட்டில் வேலை செய்திருக்கின்றார். காட்டை கொள்ளை அடிக்க வருபவர்களுடன் ஓயாது போராடுவது தான் அவரது வாழ்க்கையாக இருந்திருக்கின்றது. காட்டின் ஊடாக ஓடும் ஆற்றில் முதலைகள் போன்று வேடமிட்டுக் கூட 'கரிபியன் வீரப்பன்கள்' வந்துள்ளார்களாம். நிஜ முதலைகள் மனித முதலைகளை தண்ணீரில் அமுக்கிய கதைகளையும் சொன்னார். 'நேற்று சிலோனைப் பற்றி ஒரு புத்தகம் வாசித்தேன்.....' என்றபடி ஆரம்பித்தார் ஒரு காலையில். உங்கள் இருவர் மீதும் தப்பில்லை என்றார். யார் அந்த இருவர் என்று நான் கண்களைச் சுருக்கினேன். சிங்களீஸ் அன்ட் டமில்ஸ் என்றார். முழுத் தப்புமே பிரிட்டிஷ் அரசின் மேல் தான் என்றார். அவர்கள் எல்லா இடத்திலும், எல்லா நாடுகளிலும் இதையே செய்தனர் என்றார். சிறுபான்மையை உயர்த்தி, பெரும்பான்மையை தாழ்த்தி, பின்னர் அப்படியே ஒரு நாள் இரவோடிரவாக விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் என்று. வெஸ்ட் இண்டீஸையும் அவர்கள் தானே ஆண்டனர், அங்கேயும் இப்படியா செய்தனர் என்றேன் நான். நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், நீங்கள் ஈஸ்ட் இண்டீஸ், இதன் அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியுமா என்று கேட்டார். இதுக்கு என்ன பெரிய அர்த்தம் தேட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் உலகின் மேற்கில் இருக்கிறீர்கள், நாங்கள் உலகின் கிழக்கில் இருக்கின்றோம், அது தானே என்று கேட்டேன். கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார், 'இதன் அர்த்தம் நீங்கள் கிழக்கில் இருக்கும் அடிமைகள், நாங்கள் மேற்கில் இருக்கும் அடிமைகள்.' அப்படியே இன்னும் ஒன்றும் சொன்னார்: இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் என்று சொல்லாதே, கரிபியன் என்றே சொல்லு என்று.
  4. அப்படி நடக்காட்டியும் ஊத்தலாம்🥃😜
  5. அப்படி நடந்தால் தேடி வந்து ஒரு பெக் நானே வாயில் ஊத்து வேன்(தெரியாமல் வாயை விட்டுவிட்டேனோ)
  6. கோலியின் பிளானும், என்னுடைய பிளானும் ஒன்றே........ அவுட் ஆகுமட்டும் இப்படியே நிற்பம் என்ற பிளான்.......
  7. மீத‌ம் உள்ள‌ 9கேள்விக்கான‌ ப‌தில்க‌ளில் கூடுத‌லா எல்லாருக்கும் முட்டை தான் நிர‌ந்த‌ர‌ முத‌ல‌மைச்ச‌ரா அமெரிக்கா பிர‌பா அண்ணா🙏🥰 இர‌ண்டாம் இட‌த்தை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🥰🙏 இவைக்கு கீழ‌ தான் ம‌ற்ற‌வை............................ @பிரபா வாத்துக்க‌ள் பிர‌பா அண்ணா🙏🥰...................நீங்க‌ள் தான் தொடர்ந்து முன் நிலையில் நிண்ட‌ நாள் நின்ட‌னி நீங்க‌ள் ............................... இந்தியா இன்னும் ஒரு விக்கேட்டும் கூடுத‌ல் ர‌ன்ஸ்சும் அடிச்சு இருந்தால் 9புள்ளி என‌க்கு ம‌ற்றும் சில‌ உற‌வுக‌ளுக்கு கிடைச்சு இருக்கும் கைக்கு வ‌ந்த‌ காசு கை விட்டு போன‌ மாதிரி 9புள்ளிக்கு அருகில் வ‌ந்து கிடைக்காம‌ போய் விட்ட‌து☹️.......................................
  8. தொலைபேசியையும் பயன்படுத்தவும். 😂
  9. நேற்று நடந்த விவாதத்தின் பின் ஜோ பைடனின் ரேட்டிங் போல இன்று இங்கு என்னுடைய நிலை போய்க் கொண்டிருக்கின்றது.............
  10. 16 அணிகளின் சுற்றில் சுவிஸ் 2 - 0 இத்தாலி யேர்மனி 2 - 0 டென்மார்க் சுவிஸ்கார ஈழம் தமிழ் எனக்கு வட்சப் தகவல் அனுப்புகிறார் "குறித்து வைத்து கொள் இறுதி ஆட்டத்தில் சுவிஸ்சுடன் விளையாட போவது யேர்மனி அல்லது யோர்ஜியா".
  11. இதை தான் சொல்லுற‌து முன்னுக்கு வ‌ர‌ விட்டுட்டு ப‌துங்கி தாக்குத‌ல் மூல‌ம் முன்னேருவ‌து என்று..................... அது ச‌ரி ந‌ம்ம‌ட‌ ர‌சோத‌ர‌ன் அண்ணா எங்கை இந்தியா வென்ற‌த‌னால் வெறுத்து போய் ஒதுங்கி விட்டாரா ஹா ஹா.......................................
  12. தென் ஆபிரிக்க‌ தொட‌க்க‌ வீர‌ர் ரீஷா கென்ரிங்ஸ் , ந‌ல்ல‌ தொட‌க்க‌ வீர‌ர் கிடையாது ந‌ண்பா நான் பார்த்த‌ ம‌ட்டில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அவ‌ர் ச‌ரியாக‌ விளையாடுவ‌தில்லை தென் ஆபிரிக்கா அணிக்கு கிடைச்ச‌ பெரிய‌ பொக்கிஷ்ச‌ம் குவின்ட‌ன்டி கொக்..................................
  13. மைதானத்திலிருந்து மழை நம்ம இடத்தை நோக்கி நகர்ந்து விட்டதால் மைதானத்தில் விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கின்றது
  14. அப்படி தெரியவில்லை. ரிஷாப் பாண்ட் வேண்டுமென்றே விளையாட்டை இடைநிறுத்த முழங்காலை பிடித்தமாதிரித்தான் தெரிகிறது! மற்றயது மஹராஜ் 18 ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு single எடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம். மில்லர் கடைசி 12 பந்துகளையும் விளையாடியிருக்க வேண்டும். chokers என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்.
  15. இன்னும் நிறைய‌ புள்ளிக‌ள் கிடைச்சு இருக்கும் ரோகித் ச‌ர்மா கூடுதால‌ இன்னும் 35ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்சு இருந்தால் சிங் ஒரு விக்கேட் கூட‌ எடுத்து இருந்தால் 3 புள்ளி கிடைச்சு இருக்கும் கிட்ட‌ த‌ட்ட‌ 6புள்ளி அருகில் வ‌ந்து கைவிட்டு போய் விட்ட‌து..............................
  16. 16 வ‌ருட‌ம் க‌ழித்து இந்தியா கையில் 20 ஓவர் உல‌க‌ கோப்பை......................எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை வைச்சு இருக்கும் அணி உல‌க‌ கோப்பை தூக்க‌ வில்லை என்றால் அது வீர‌ர்க‌ளை ம‌ன‌த‌ள‌வில் பாதிக்கும்....................அடுத்த‌ முறை இதுவ‌ரை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்காத‌ நாடு தூக்க‌னும் உதார‌ன‌த்துக்கு தென் ஆபிரிக்கா . நியுசிலாந் . இந்த‌ அணிக‌ள் ம‌ன‌ம் வைச்சால் இவையாலும் வெல்ல‌ முடியும்.................................
  17. ஆம். ஒரு average இலும் economy rate இலும் ஃபஸல்ஹக் ஃபரூக்கிதான் முன்னணியில் உள்ளார்! இதுக்கு மேல வென்றால் நேரடியா கப்தான்!
  18. கிளாசன் இன்னும் ஒரு ஓவர் நின்னரிந்தால் கதை வேறை.இந்த பைனல் மட்ச்சில் எனக்கு எந்த ரீம் வென்டாலும் சம்மதமே.ஆனால் கிட்ட வந்து வெற்றியை தவற விட்டவர்கள்ளின் மன நிலமையை புரிந்து கொள்ள முடியுது.ஆனால் அங்கால எங்கட சுவிஸ் வென்டது தனி மகிள்ச்சி.
  19. முதல்வராக வரவிருக்கும் குமாரசாமி அண்ணருக்கு வாழ்த்துகள்.
  20. கையில் கிடைத்த வாய்ப்பை தென்னாபிரிக்கா கோட்டைவிட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளுடன், 5 வர்களில் 30 ரன்கள் மாத்திரமே அடிக்கவேண்டி இருந்தது.
  21. கால் அதில் ப‌ட‌ வில்லை...................பிடிச்ச‌ கைச் ச‌ரியே........................
  22. பாக்கின்றேன்..... இது வரைக்கும் இத்தாலி எதோ புதுசா விளையாட வந்த ஆக்கள் மாதிரித் தான் விளையாடினோம்
  23. முக்காடு எதுவும் வேண்டாமண்ணை! கை விரல்களைத் தான் கட்டவேணும்!!
  24. இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள் தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
  25. இது யாழ் ஆடுகளத்தில் உலாவும் உறவுகளின் ஆலோசனை என்டு எனக்கு ஒரு டவுட்.😄
  26. ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம்.
  27. IND vs SA: சூர்யகுமார் மீது குறி, கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் - இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் 2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வரவுள்ளது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென் ஆப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை. 2014ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் இந்திய அணியுடன் ஒருமுறை மோதிய தென் ஆப்ரிக்கா அதில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் லீக் சுற்று முதல் அரையிறுதி வரை தோல்வியே அடையாமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளன. ஒருவேளை இந்தத் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், தோல்வி அடையாமல் சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையையும் இந்தியா அல்லது தென் ஆப்ரிக்கா பெறும். இந்திய அணியைப் பொருத்தவரை லீக் சுற்று, சூப்பர்-8 சுற்று என அனைத்திலுமே ஆதிக்கம் செய்து வென்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து அணிகளையும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆதிக்கம் செய்து வென்றது. ஒரு போட்டியைக்கூட நெருக்கமாகச் சென்று இந்திய அணி வெல்லவில்லை. இதிலிருந்தே இந்திய அணி எத்தகைய சரிவிலிருந்தும் எளிதாக மீளும், எந்த அணி மீதும் ஆதிக்கம் செலுத்தும் என அறியலாம். ஆனால், தென் ஆப்ரிக்கா அணி தோல்வி அடையாமல் இறுதிப்போட்டி வரை பயணித்தாலும், சில போட்டிகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் வென்றது. நேபாளம், வங்கதேசம், அணிகளிடம்கூட போராடித்தான் வென்றது. வலிமையான அணியாக இருந்தாலும், எந்த நேரத்தில் சறுக்கும் என்பது அந்த அணிக்கே இன்னும் பிடபடவில்லை. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இதுவரை நேருக்கு நேர் இரு அணிகளும் இதுவரை 26 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 14 ஆட்டங்களில் இந்திய அணியும், 11 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன. இந்திய அணிக்கு எதிராக டேவிட் மில்லர் 20 போட்டிகளில் 431 ரன்கள் சேர்த்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா 17 போட்டிகளில் 420 ரன்களும், சூர்யகுமார் 6 போட்டிகளில் 343 ரன்களும் சேர்த்துள்ளனர். பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், புவனேஷ் குமார் சிறப்பாகப் பந்து வீசியிருந்தாலும் இருவரும் தொடரில் இல்லை. குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஜோகன்ஸ்ப்ர்க்கில் 2.5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்திருந்தார். கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா 3 போட்டிகளிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. இந்திய அணிக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்? இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஏறக்குறைய 10 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி நடத்தும் போட்டியிலும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி 2014 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது. 2016, 2022 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி, 2016, 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி என இந்திய அணி கோப்பைக்காகப் போராடி வருகிறது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் தருணத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 12 மாதங்களுக்குக்கு உள்ளாக அடுத்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 10 ஆண்டுகளாக நடந்த உலகக்கோப்பைத் தொடர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டிவரை சென்றும் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத நிலைதான் இந்திய அணிக்கு இருக்கிறது. ஆதலால், இந்தமுறை 10 ஆண்டுக்கால பஞ்சத்தைத் தீர்த்து, கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற தாகத்துடன் இந்திய அணியினர் உள்ளனர். ஆதாலால் இந்திய அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். இந்திய அணியாவது இறுதிப் போட்டிவரை சென்று தோற்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்காவின் நிலைமை பரிதாபமானது. 1991ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்தது முதல் ஏறக்குறைய 33 ஆண்டுகளாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்கா அரையிறுதியைக் கடந்தது இல்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1998 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்குப் பின் இதுவரை வேறு எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை. முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் பல ஜாம்பவான்கள் இருந்த காலத்தில்கூட இறுதிப் போட்டிக்குக்குச் செல்லாத நிலையில் இந்த முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதால், கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறது. ஆதலால் இன்று நடக்கும் 40 ஓவர்களும் போட்டியைப் பார்க்கும் ரசிகர்களுக்கும், இரு அணி வீரர்களுக்கும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் இருக்கின்றன. அதனால் இந்த ஆட்டம் அரையிறுதி போன்று ஒருதரப்பாக அமையாமல், பெரிய ஸ்கோராக, விறுவிறுப்பாக இருத்தல் வேண்டும். ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்ஜ்டவுன் ஆடுகளத்தில் டி20 உலகக்கோப்பையில் இதுவரை 8 ஆட்டங்கள் நடந்துள்ளன, இது 9வது ஆட்டம். இந்த மைதானத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை குறித்துத் தெரியும். ஆனால், தென் ஆப்ரிக்கா விளையாடியதில்லை. இந்த விக்கெட்டில் நடந்த 7 போட்டிகளில் 3இல் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் அமெரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி எளிதாக சேஸ் செய்துள்ளன. ஒரு போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி, 20.22 சராசரியும், 7.88 எக்கானமியும் வைத்துள்ளனர். ஒரு போட்டியில் மட்டும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் 109 முதல் 181 ரன்களுக்குள்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி, 4ஆம் எண் கொண்ட விக்கெட்டில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது நமீபியா-ஓமன், ஸ்காட்லாந்து-இங்கிலாந்து இடையே ஆட்டம் நடந்த விக்கெட்டாகும். இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லை சற்று தொலைவாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் ரிசர்வ் நாள் இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வென்று மற்றொன்றில் தோற்றுள்ளது. இந்திய அணி இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்துள்ளது, இதில் 4 முறை எதிரணியே இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 3 முறை டாஸ் வென்று அதில் இருமுறை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரு அணிகளுமே பந்துவீச்சில் வலிமையாக இருப்பதால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து பந்துவீச்சில் சுருட்டவே விருப்பம் காட்டக்கூடும். இந்த ஆட்டம் பகலில் நடப்பதால் பனிப்பொழிவுக்கு வாய்ப்பில்லை. சூர்யகுமார் மீது குறி பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை நடுவரிசையில் வெளிப்படுத்தி வருகிறார். நடுப்பகுதியில் ஸ்கோரை திடீரென உயர்த்தி, ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பேக்வார்ட் பாயின்ட் முதல் பேக்வார்ட் ஸ்குயர்லெக் வரை சூர்யகுமார் அனாசயமாக ரன்களை சேர்க்கிறார். வேகப்பந்து, பவுன்ஸரை விரும்பி அடிக்கும் சூர்யகுமார், இதுபோன்ற பந்துவீச்சில் எளிதாக ஸ்கோர் செய்வார். அதிலும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இதற்கு முன் வெளுத்துள்ளார். ரபாடாவுக்கு எதிராக 24 பந்துகளில் 66 ரன்கள், நோர்க்கியாவின் 12 பந்துகளில் 32 ரன்கள், யான்செனின் 5 பந்துகளில் 25 ரன்கள் என சூர்யகுமார் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்துள்ளார். தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 298 ஸ்ட்ரைக் ரேட்டை அவர் வைத்துள்ளார். ஆதலால் இன்றைய இறுதி ஆட்டத்தில் சூர்யகுமாரை களத்தில் நிலைத்து பேட் செய்யவிடாமல் தடுக்கத் தேவையான உத்திகளை தென் ஆப்ரிக்கா வகுக்கும். ஸ்லோவர் பந்துகளையும் வெளுக்கும் ஸ்கை, 180 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சரியான லென்த்தில், அதிவேகப்பந்துகளுக்கு எதிராக சூர்யகுமார் திணறுகிறார் என்பதால் அதன் மீது தென் ஆப்ரிக்கா கவனம் செலுத்தும். கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் இந்திய அணி எந்த அளவு சுழற்பந்துவீச்சில் வலுவாக இருக்கிறதோ அதேபோன்று தென் ஆப்ரிக்காவும் கேசவ் மகராஜ், சம்ஷி என இரு வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சை எளிதாகs சமாளித்து ரோஹித், கோலி விளையாடி விடுவார்கள். ஆனால் பவர்ப்ளேவில் கேசவ் மகராஜ் பந்துவீச்சை ஆடுவதில் சிரமப்படுவார்கள் என்பதால், பவர்ப்ளேவில் மகராஜை பந்துவீச வைக்கலாம். பவர்ப்ளேவில் 114 பந்துகளை வீசிய மகராஜ் 143 ரன்கள்தான் விட்டுக்கொடுத்துள்ளார், 7.52 எக்கானமி வைத்துள்ளார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கோலி, ரோஹித் இருவருமே ஸ்லோவர் இடதுகை பந்துவீச்சுக்குத் திணறுவார்கள் என்பதால், இருவருக்கு எதிராக கேசவ் கொண்டுவரப்படலாம். கிளாசன், மில்லர் - குல்தீப், ஜடேஜா பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்க அணியில் சுழற்பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடுவதில் கிளாசன், மில்லர் சிறந்த பேட்டர்கள். இந்திய அணியின் சுழல் மும்மூர்த்திகளான அக்ஸர் படேல், குல்தீப், ஜடேஜா மூவரும் இன்றைய ஆட்டத்தில் முக்கியத் துருப்புச் சீட்டுகள். கிளாசன், மில்லர் இருவருமே சுழற்பந்துவீச்சை எளிதாக விளையாடுவார்கள் என்றாலும், 3 பேரின் பந்துவீச்சும் வேறுபட்டவை என்பதால் சில சிரமங்கள் இருக்கக்கூடும். குறிப்பாக ஜடேஜா பந்துவீச்சில் கிளாசன் பெரிதாக ரன்களை சேர்த்தது இல்லை. ஜடேஜாவின் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே கிளாசன் சேர்த்துள்ளார். குல்தீப் பந்துவீச்சில் மில்லர் 24 பந்துகளில் 24 ரன் சேர்த்து இஇருமுறை விக்கெட்டையும் இழந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டை வீழ்த்துவதில் குல்தீப், ஜடேஜா முக்கியப் பங்கு வகிப்பார்கள். துபேவுக்கு பதிலாக சாம்ஸன் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிரமாதமாக ஆடுவார் எனக் கூறி அணியில் சேர்க்கப்பட்டு 37 பந்துகளில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 2 முறை ஆட்டமிழந்துள்ளார். வேகப்பந்துவீச்சில் 62 பந்துகளில் 59 ரன்களை சேர்த்து பெரிய தாக்கத்தை துபே ஏற்படுத்தவில்லை. ஆதலால், இன்றை ஆட்டத்தில் நடுவரிசைக்கு ஸ்திரமான பேட்டர் தேவை என்பதற்காக துபேவுக்கு பதிலாக சாம்ஸனை களமிறக்கலாம் எனத் தெரிகிறது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலிருந்து பெஞ்சில் இருக்கும் சாம்ஸனுக்கு இன்று வாய்ப்புக் கிடைக்கலாம். அதேபோல தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர் பார்ட்மேனுக்கு பதிலாக சம்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்திய அணிக்கு எதிராக சம்ஷி சிறப்பாக பந்துவீசக் கூடியவர் கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார் என்பதால் சம்ஷி களமிறங்கலாம். வேகப்பந்துவீச்சுக்குச் சாதமாக ஆடுகளத்தில் சம்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பார்ட்மேன் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர் குறிப்பாக யார்க்கர் வீசுவதிலும், நல்ல லென்த்தில் பந்துவீசுவதிலும் சிறந்தவர் என்பதால், அவரை நிராகரிப்பது கடினம். கோலியின் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் கோலியின் ஃபார்ம் இந்தத் தொடரில் மிக மோசமாக அமைந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் கோலியின் பேட்டிங் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், கோலியின் ஆட்டத்தின் மீது கேப்டன் ரோஹித் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், இறுதிப்போட்டி வரை காத்திருப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதலால் கோலியின் ஆட்டம் இன்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பைதான் கோலிக்கும், ரோஹித்துக்கும் ஏறக்குறைய கடைசியாக இருக்கக்கூடும். இதில் ஏதாவது தாக்கத்தை இருவருமே ஏற்படுத்த முயல்வார்கள் என்பதால் இருவரின் பேட்டிங் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி(உத்தேச வீரர்கள்) ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா தென் ஆப்ரிக்கா(உத்தேச வீரர்கள்) எய்டன் மார்க்ரம்(கேப்டன்), குயின்டன் டீ காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா, தப்ரியாஸ் சம்ஸி அல்லது பார்ட்மேன் https://www.bbc.com/tamil/articles/cw4y9nyzzj3o
  28. றொனால்ட் றீகன் தான் சோவியத் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் கட்சிகளைக் கடந்து அவரை எல்லோரும் விரும்பினர். கந்தையா சொன்னது போல 1981ம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்கும் போது சுடப்பட்டார்.ஆனாலும் பலத்த காயங்களிலிருந்து தப்பிவிட்டார்.2004 ம் ஆண்டு தான் காலமானார். சோவியத் ஒன்றியம் கவிழும் போது கோர்பச்சேவ் என்பவர் ஜனாதிபதியாக இருந்து பதவி விலக வொட்கா மன்னனாக சொல்லப்பட்ட பொறிஸ் ஜெல்சன் பதவியேற்றார்.
  29. இதிலென்ன சிரமம்..... நேரம் கிடைக்கும் போது இங்கு களத்தில் எழுதுவதும், பொழுது போக்காக அலட்டுவதும் எங்களின் வழமை தானே........👍. இங்கு மாநிலங்கள் அதிக சுயாட்சி உடையவை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு போன்று. அதிலும் சில பெரிய மாநிலங்கள், உதாரணம்: கலிஃபோர்னியா, டெக்சாஸ், நியூயோர்க், ஒரு குட்டி வல்லரசு போன்றவை. மாநில அரசினதும், மக்களினதும் ஆதரவில்லாமல் பெரிதாக எவராலும் எதையும் அந்த அந்த மாநிலங்களில் மாற்றவோ அல்லது புகுத்தவோ முடியாது.
  30. இல்லை, இவர் சுடப்பட்டு கொல்லப்படவில்லை. இயற்கையாகவே இறந்தார், 2004ம் ஆண்டில். ஆனால் 1981இல் ஒரு தடவை சுடப்பட்டு உயிர் பிழைத்தார், எம்ஜிஆர் போன்றே. அதன் பின் அவர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டார் என்று சொல்கின்றனர் இங்கு.
  31. டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா.. டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...
  32. ஈழப்பிரியன் அண்ணைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🙏🌹 குறிப்பு ஜேர்மனியிலிருந்து தமிழ் சிறி. குமாரசாமி மற்றும் பாஞ்ச் அண்ணா கூட்டணி பலாத்காரம்கள். அனுப்பினார்களா ??? 🤣😂🤣
  33. கடலும் கரையும்தான் சேர்ந்தாச்சு கரையில் வீடுகள் வந்தாச்சு கண்களுக்கு விருந்தாச்சு ..........! 😂
  34. எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 04:15 PM தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும் இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில் பேராசிரியர் பத்மநாதன்; ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் வெளியிடும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் அவர்கள் தமிழ்மொழியில் பேசினார்கள் என்பதை பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் உரிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பேராசிரியரின் இந்த நூலை ஆங்கிலத்திலும் கட்டாயமாக சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். இந்த நூல் நிச்சயமாக சிங்களத்தில் சென்றடையவேண்டும். பேராசிரியர் மணல்திட்டில் இருந்திருந்தால் அவரையும் தொல்பொருளாக்கி பெயரை மாற்றியிருக்ககூடிய காலம் இது. இலங்கையில் சைவத்தின் தொன்மை தமிழின் தொன்மை நாகவழிபாட்டின் தொன்மை ஆகியவற்றை இந்த நூல் சான்றுபடுத்துகின்றது. இந்த நூல் நாகர்கள் பற்றியது வடபகுதி நாகதீவு நாகநாடு என அழைக்கப்படுவது எங்களிற்கு தெரியும். யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள். இது அவர்கள் பற்றிய நூல். நாகர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் சான்றுரைக்கின்றது. நாகர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள். இதன் மூலம் இந்த தேசத்தின் தமிழ்மொழியின் தொன்மை உறுதி செய்யப்படுகின்றது. பேராசிரியர் பத்மநாதனின் ஒருமறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் நூல் நாகர்கள் வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தது பற்றி பேசுகின்றது. யாழ்ப்பாணத்தில் நாகர்கள் பல இடங்களில் பரந்துவாழ்ந்திருக்கின்றார்கள். வடமராட்சியில் அவர்கள் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன அங்கு நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் இதற்கான ஆதாரங்களாக காணப்படுகின்றன. வடமராட்சியில் கரவெட்டி, அல்வாய், உடுப்பிட்டி போன்ற இடங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளதை பேராசிரியர் தனது நூலில் முன்வைத்துள்ளார். தென்மராட்சியில் சாவகச்சேரியில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர் தீவுப்பகுதியிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். எனது ஊரான காரைநகரில் பல இடங்களில் அவர்கள் வாழ்ந்துள்ளனர். வேலணையில் வாழ்ந்துள்ளனர். யாழ்ப்பாண பட்டினத்தின் பல பகுதியில் அவர்கள் வாழ்ந்துள்ளனர் ஆனைக்கோட்டையில் அவர்கள் பயன்படுத்திய கற்களால் செய்யப்பட்ட செம்புகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் தெரிவித்துள்ளார். நவாலியில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியரின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் நாகர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதை சொல்கின்றது. தென்னிலங்கை வரலாற்றாசிரியர்கள் எழுதும் நூல்கள் பலவற்றில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. தமிழ்மக்களின் வரலாற்றின் தொன்மை சைவசமயத்தின் தொன்மை போன்றவை மறைக்கப்படுவதற்கு பல பேராசிரியர்கள் உதவியுள்ளனர். அப்போது இருந்த அரசாங்கம் இதற்கு உதவியது. தற்போதும் இது தொடர்கின்றது. தமிழின் தொன்மை பற்றிய இந்த நூல் நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாப்பகுதிகளிலும் வாழ்ந்ததாக கூறுகின்றது. அவர்கள் தமிழ்மொழியில் பேசியுள்ளனர். பிராமி எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பற்றியும் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஈமத்தாழிகளும் காணப்பட்டமை குறித்து பேராசிரியர் தனது நூலில் தெரிவித்துள்ளார். நாகர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக காணப்பட்டனர் என்கின்றார் பேராசிரியர். பிராகிருதமொழிப் பயன்பாடும் அவர்கள் காலத்தில் காணப்பட்டுள்ளது. அன்பளிப்புகளை வழங்குவதற்கு அவர்கள் பிராகிருதமொழியை பயன்படுத்தியுள்ளனர். நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாபகுதிகளிலும் வாழ்ந்தவர்கள் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் நிறுவியுள்ளது, அது முக்கியமான விடயம். நாகவழிபாடு யாழ்ப்பாணத்திற்கு புதிய விடயமல்ல எனது ஊரில் நாகவழிபாடு முக்கியமான விடயமாக காணப்பட்டது. நாகவழிபாடு கொழும்பில் இல்லை. நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் கோயில் இதற்கான வலுவான ஆதாரம். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நாகவழிபாடு காணப்பட்டது என்பதை பேராசிரியர் நெறிப்படுத்துகின்றார். யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் நாகர் கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன. அன்று தமிழ்மொழி பேசப்பட்டுள்ள நாகர் வழிபாடு சைவ வழிபாடு என்பதை பேராசிரியர் ஆதாரத்துடன் நிறுவுகின்றார். தென்பகுதியை சேர்ந்த ஒரு பேராசிரியர் இந்த நாட்டில் போர்த்துக்கீசரின் வருகையின் பின்னரே யாழ்ப்பாண வரலாறு ஆரம்பமானது என என்னிடம் தெரிவித்தார். நான் அவருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டேன். எனது சொந்த ஊரில் காணப்பட்ட ஐயனார் கோயிலை இடித்தே போர்த்துக்கீசர் காரைநகர் கடற்கோட்டையை கட்டினார்கள் என தெரிவித்தேன். இன்றும் கொழும்பில் யாழ்ப்பாணத்தமிழர் ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் வந்தவர்கள் என தெரிவிக்கும் கல்விமான்கள் உள்ளனர். அவர்கள் வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். பேராசிரியர் இதனை முறியடிக்கும் விதத்தில் தமிழின் தொன்மையை சைநெறியின் தொன்மையை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றார். இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் என்பதையும் பேராசிரியர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நிலங்களை அது சார்ந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்தினார்கள். விவசாயத்தில் ஈடுபட்டார்கள், வயல்களை அமைத்தார்கள். எந்த இடத்தில் குளங்களை கிணறுகளை அமைக்கவேண்டும் என நாகர்கள் மிக நுட்பமாக திட்டமிட்டார்கள். இது தவிர அவர்கள் மட்கல உபயோகத்தில் ஈடுபட்டார்கள், உலோகங்களை தயாரித்தார்கள் மந்தை மேய்ச்சலில் ஈடுபட்டார்கள். வடக்கில் மேய்ச்சல் தரைகள் குறைவு, அவர்கள் விவசாயத்திற்கு தேவையான மந்தைகளை வளர்த்தார்கள். நாகர்கள் கடல் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். படகுகள் தோணிகள் போன்றவற்றை உருவாக்கினார்கள் நிலவளங்களை போல கடல்வளங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்களை பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் முன்வைத்துள்ளார். அவர்களின் இந்த கட்டமைபே தற்போதைய யாழ்ப்பாணம் . நாகர்களின் காலம் தன்னிறைவு பொருளாதாரம் காலம். அதற்கான வழிமுறைகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். 30 வருடங்களிற்கு முன்னர் நாங்கள் யுத்தத்தின் போது கடும் பஞ்சத்திலிருந்து தப்பினோம். வேறுநாடுகள் என்றால் பஞ்சத்தில் சிக்குண்டிருக்கும் ஆனால் எங்கள் மக்கள் பஞ்சத்திலிருந்து தப்பினார்கள் என்றால் இதற்கு நாகர்கள் அறிமுகப்படுத்திய கட்டியெழுப்பிய பொருளாதாரமே காரணம். நாகர்களின் உட்கட்டமைப்பு பற்றியும் பேராசிரியரின் நூல் பேசுகின்றது. நாகர்களின் கட்டிடங்களில் தூண்கற்கல் முக்கியமானவை வட்டக்கல் என்பது மற்றுமொரு முக்கிய அம்சம். பௌத்த மதத்தினர் சந்திரவட்டக்கல்லை வைத்து வரலாற்றை திரிபுபடுத்த முயலும்போது நாகர் காலத்து வட்டக்கல் குறித்த விடயங்களை பேராசிரியர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். நாகர்கள் ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டனர் என பேராசிரியர் தனது நூலில் தெரிவிக்கின்றார். பிதிர் வழிபாடு என்பது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட விடயம் திருமண சடங்கின் ஆரம்பத்திலும் பிதிர்வழிபாட்டில் ஈடுபட்டனர், இன்று பலருக்கு தங்கள் முன்னோர்களின் பெயர்கள் கூட தெரியாத நிலை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசியல் எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்துகின்றது, தமிழின் சைவசமயத்தின் தொன்மையை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பேராசிரியரின் இந்த நூல் அவர்கள் உண்மையை புரிந்துகொள்ள உதவும். இனப்பிரச்சினை தீர்வினை கோரும் நாங்கள் கேட்பது எல்லாம் நியாயமானது என ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். இந்த நூல் தென்பகுதிக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எங்களின் நியாயபாட்டினை முன்வைக்கின்றது. இந்த நூலை வாசித்து முடித்தபோது எங்கள் ஊரில் எனது வீட்டிற்கு அருகில் உள்ள நாகர்கோயில் நினைவிற்கு வந்தது. கோயிலை சுற்றி குளம் வயல்கள் காணப்படுகின்றன. இந்த நூலை வாசிக்கும் அனைவரும் தற்போதை சூழ்நிலையில் இந்த நூலை எழுதியமைக்காக பேராசிரியர் பத்மநாதனிற்கு நன்றி தெரிவிப்பார்கள். https://www.virakesari.lk/article/184618

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.