Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    14676
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  3. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5417
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/29/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் 09வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனின் அரைச் சதத்துடனுன் சுப்மன் கில், ஜொஸ் பட்லரின் அதிரடியான ஆட்டங்களாலும் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவைத் தவிர பிறர் ஆட்டத்தில் சோபிக்காததால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய்தி சொல்லி இருந்தா. .நண்பன் விடுமுறைக்காக வரப்போவதாக , அவள் செய்த ஒரு பிழை இவ்வளவு பிரச்சனை வரும் என்று எண்ணவில்லை. அவள் பள்ளிக்கால காதல னை அந்தஸ்து வேறுபாட்டினால் வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து விட்டாள். விஷயம் ஊரில் தெரியவரவே வீட்டுப்பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். அவளும் அதே ஊரில் வெளிநாட்டில் வந்த காதலனை முறைப்படி கோவிலில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி பின்னும், அவளது பெற்றோர்களும் இப்படி செய்து விட்டால் எனும் கோபத்தில் , காலப் போக்கில் நாட்டு பிரச்சனையும் வரவே அண்ணா வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் எள்ளிநகையாடும் என எண்ணி இவளது உறவை பெற்றோர் தவிர்த்தாலும் இவள் அம்மா வீட்டுக்குபோய் வருவாள். தாயார் பேசுவார். பிறந்தநாளில் குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுவாள். ஊரில் மிகவும் பெரிய ராணுவ ஆக்கிரமிப்பால் ஊர் விட்டு ஊர் மாறிச் சென்ற போது கடைசியாக பெற்றோரைப் பார்த்து குழந்தைகளை காண்பித்து தாயருடன் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டாள். சில சமயம் அவசரப்பட்டு பதிவு திருமணம் செய்து விட்டோமோ என்று எண்ணியதுண்டு. மறுபக்கம் அவன் வெளிநாடு போக வேண்டிய நிர்பந்தம் அவளை அந்த முடிவு எடுக்க தூண்டியது . பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மின்தூக்கி வரவே நாலாம் மாடியை அடைந்து , அண்ணி வரவேற்றார். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் கைகளைப் பற்றினாள் . . பொலபொலவென கண்கள் தாரையாக கொட்டியது. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எழு வயது ஐந்து வயது.சின்னவன் சொக்கலேற் பையை வாங்கி கொண்டு அத்தை மடியில் உட்கார்ந்து கொண்டான். எங்கிருந்து அவனுக்கு அந்த பாச உணர்வு வந்தது ?....சிலமணி நேரம் பேசிய பின் , அவர்களையும் வீட்டுகார அண்ணா குடும்பத்தினரையும் சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு வர அழைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார் . மறுநாள் அவர்கள் வந்தது கணவனையும் தன் குழந்தைகளையும் பேச விட்டு விருந்துண்டு திங்கட்கிழமை அவர்கள் உறவுக்கார மூதாட்டியை பார்க்க நேசிங் ஹாம் க்கு செல்ல திட்டம் போட்டார்கள் . மைதிலியின் கணவனுக்கு உடனே லீவு எடுக்க முடியாது. குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளும் அவர்களுடன் இணைந்து. அது ஒரு முப்பது நிமிட பஸ் பயணம். பஸ் தரிப்பு அருகே உள்ள தமிழ்க்கடையில் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டும் நெஸ்டமோல்ட் டின் உம் அண்ணா வாங்கினார். நான் ஏதும் வாங்க என்று அவள் மணிபர்சை திறக்க " நாங்க வேறு நீ வேறா " என்றார் அண்ணா . பளீர் என முகத்தில் அறைந்தது வார்த்தைகள். பஸ் உம் வரவே முண்டியடித்து ஏறிக்கொண்டார்கள். சின்னவர் மீண்டும் அத்தை மடிக்கு வந்து உட்கார்ந்தான் சில நிமிடங்களில் இறங்கி அவ்விடத்தை அடைந்து மூதாட்டியைப் பார்த்தும் அவர் மிகவும் சந்தோஷப் பட டார். என்னிடம் திரும்ப திரும்ப உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது அங்குள்ள ஒருவர் கா தில் கையை வைத்துக் கொண்டு " கலோ" "கலோ " என அழைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் "என்னை வீட்டுக்கு போக விடு" என தமிழில் ஆங்கில உதவியாளரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.வயோதிபத்தில் வாழ்க்கை இப்படித்தான் போலும். தமிழ் தெரிந்த உதவி ஆல் சிறார்களை இங்கு கூடிக் கொண்டு வருவது நல்லதல்ல என்றார். அதற்கு அண்ணா சாகும் முன்னர் அவரை பார்த்துவிடவேண்டும். இவர்களை விட்டு விட்டு வர முடியாது ,எனவும் விடுமுறையில் வந்ததாகவும் சொல்லிக் கொண்டார். மீளவும் பஸ் பயணம். வரும் வழியெங்கும் " நான் வேறு நீ வேறா ? என ஒலித்து கொண்டே இருந்தது. மறுபடி வீட்டை அடைந்ததும் அன்று முழுவதும் என்ன இருந்தாலும் அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று. "நீரடித்து நீர் விலகுமா ? " இனி என் பெற்றோர் ஆன்மா மகிழ்வோடு நீள் துயில் கொள்ளும். Blood is thicker than Water
  3. “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விரும்பி பார்க்கும் நிலையில் இல்லை. அவள் மலரவனைப் பார்த்துப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மரத்தடியில் சோக கண்ணீருடன் விடைபெற்று இன்று பத்து ஆண்டுகள். அப்போது அவள் இளமையாகவும் கனவுகள் நிறைந்தவளாகவும் இருந்தாள். அவன், தனது புத்திசாலித்தனமான மனதுடன், அவர்களின் சிறிய கிராமப் பள்ளியில், எப்போதும் தனித்து நின்றான். நன்முல்லை, கல்வியில் அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும், அவனது இதய நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு இருந்தாள். அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக, அன்பாக ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்களின் பந்தம் குறுகிய தூசி நிறைந்த பாதைகள் மற்றும் அவர்களின் கிராமத்தின் அமைதியான வயல்களுக்கு மத்தியில் வளர்ந்தது. கடற்கரை ஓரத்தில் துள்ளி விளையாடியது. பழைய ஒற்றை மரத்தடியின் கீழ் முழுமைபெற்றது. மலரவன் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவான செய்தி கிடைத்ததும், அந்தக் கிராமத்தின் பெருமைக்கு எல்லையே இல்லை. அவர்களின் பள்ளியில் இருந்து, இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் மாணவன், அவனே ஆகும். ஆனால், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நன்முல்லையின் இதயம் கனத்தது. அது ஏன் என்று அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவன் அங்கிருந்து வெளியேற எல்லாம் மாறும் என்று. அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி மாலையில், மலரவன் அவளை, அதே கடலோர ஒற்றை மரத்தடியில் சந்திக்கச் சொன்னான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, தண்ணீரின் மேல் ஒரு தங்க நிறத்தை அது வீசியது. அவன், அவளின் இரு கைகளையும் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவன் கண்கள் உணர்ச்சியால் நிரம்பி வழிந்தது. “நன்முல்லை” என்று அவன் குரல் கொஞ்சம் நடுங்கியது, “எதுவாக இருந்தாலும் சரி, நான் மருத்தவனானவுடன் உனக்காக இங்கு கட்டாயம் திரும்ப வருவேன்" என்று உறுதியளிதான். "நீ என் உயிர், என் எல்லாம் நீயே. எனக்காக காத்திருங்கள், தயவு செய்து." என்று கெஞ்சினான். அவள் தலையசைத்தாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் மென்மையான முத்தங்களைப் பதித்து அவளை இறுக அணைத்தான். அந்தக் கணம், அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியான நினைவாகப் பதிந்தது. அவள் என்றென்றும் சுமந்து செல்லும், ஒரு இன்பமான நினைவாக அது இருந்தது. ஆனால் அது ஒரு முடிவாகும் என்று அவள் அன்று நினைக்கவே இல்லை. முதலில் கொடுத்த வாக்கை அவன், கொழும்புப் பல்கலைக்கழகம் போன புதிதில் காப்பாற்றினான். கொழும்பிலிருந்து மின் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தன, அவனது படிப்புகள், அவனது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது கனவுகள் நிறைந்த கதைகள். ஆனால் திங்கள்கள், ஆண்டுகளாக மாற, தொடர்புகள் அடிக்கடி வருவதில்லை. "நான் எனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவன் தனது கடைசித் தொடர்பு ஒன்றில் கூறினான். பிறகு, மௌனம் தான் பதிலாக இருந்தது. விரைவில் மீண்டும் தொடர்புகொள்வான் என்று, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, நன்முல்லை காத்திருந்தாள். ஆனால், நாளாக நாளாக, அவள் ஆழ்மனதில் ஒரு பயம் வளர ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவன், தனது இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றதாகவும், இலண்டனில் படிக்க மதிப்புமிக்க தகுதிசார் கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், செய்தி அவளை எட்டியது. அவள் இதயம் பெருமிதத்தால் வீங்கியது, ஆனால் அவன் மேலும் விலகிச் செல்கிறான் என்பதை உணர்ந்து, அதுவும் வலித்தது. என்றாலும் அவள் காத்திருந்தாள். அவன், தன் கனவுகளை அடைய தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகவும், அவன் உறுதியளித்தபடியே தனக்காகத் திரும்பி வருவான் என்றும், அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். மலரவன் இறுதியாகத் தன் மேற்படிப்பை இலண்டனில் முடித்துக் கொண்டு, கிராமத்திற்குத் திரும்பியதும், எண்ணற்ற முறை நன்முல்லை நினைத்திருந்த மகிழ்ச்சியான சந்திப்பு, அங்கு நடைபெறவில்லை. அவன் அங்கு, அந்த இலண்டன் பல்கலைக்கழகத்தில் கண்டு பழகிக், காதலித்த தனது காதலியுடனும் அவளின் பெற்றோருடனும், பெற்றோருக்கு நேரடியாக அறிமுகப்படுத்தவும், தனது திருமணத்தைப் பெற்றோரின் வாழ்த்துடன் உறுதிப்படுத்தவும் திரும்பி வந்ததாக மற்றவர்களிடமிருந்து அவள் கேள்விப்பட்டாள். நன்முல்லையின் இதயம் நொறுங்கியது, ஆனால் அதைத் தனது, தன் கண்களால் பார்க்கும் வரை நம்ப மறுத்தாள். ஒரு நாள் மாலை, அவள் அந்தப் பழைய ஒற்றை மரத்தடியில் நின்றபோது, அவன், தன் வருங்கால மனைவியுடன் கடற்கரையோரம் நடந்து செல்வதைப் பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அவன் முன்போல் இருக்கவில்லை. அந்த முன்னைய கிராம மண்வாசனை அங்கு இருக்கவில்லை. அதிக மெருகூட்டப் பட்டவனாகவும், அதிக நம்பிக்கையுடையவனாகவும், மற்றும் ஒரு நகர்ப்புற மண் வாசனைதான் அவனில் தெரிந்தது. ஆனால், அவளைப் பொறுத்தவரையில், அவன் இன்னும் அவள் நேசித்த மலரவன்தான். தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு, அவன் தன்னைக் கவனிக்கும் வரை காத்திருந்தாள். அவர்களின் கண்கள் சிறிது நேரம் சந்தித்தன, ஆனால் அவனது பார்வையில் எந்த உடன்பாடும் இல்லை. அவள் யார் என்று அவனது காதலி கேட்டபோது, அவன் தனக்குத் தெரியாது என்று நிராகரித்தான். "ஓ, சில பைத்தியக்கார கிராமத்து பெண் போலும், " என்று அவன் சாதாரணமாக, ஆனால் கொஞ்சம் உரத்த சத்தத்துடன் கூறினான். "அவள் தன் கணவனை இழந்திருக்கலாம் அல்லது எதையாவது இழந்திருக்கலாம்." என்றான். நன்முல்லையின் உலகம் சிதைந்தது. அவள் கத்த விரும்பினாள், அவனுடைய வாக்குறுதிகளை, அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பை அவனுக்கு நினைவூட்ட. ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். அவளுடைய கண்ணியம் அவளைக்அந்த இடத்திலேயே வேரூன்ற வைத்தது. அவன் விலகிச் செல்வதைக் கண்டு அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் காதலியுடன் பேசும் போது, அவனது சிரிப்பு காற்றில் அவளுக்கு எதிரொலித்தது. அன்று முதல், நன்முல்லை வாழ்வு, கடலோர மரத்தடியில் நிலைத்தது. கிராமவாசிகள் அவளை அங்கு அடிக்கடி பார்ப்பார்கள். ஒரு புரியாத வெளிப்பாட்டுடன் அவள் அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிலர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். மற்றவர்கள், அவளை கிராமத்தின் பைத்தியக்காரப் பெண் என்று கேலி செய்தனர். ஆனால் நன்முல்லை அவை எதையும் பொருட்படுத்தவில்லை. அவள் இதயத்தில், மலரவனின் நினைவுகளில், அவன் கொடுத்த வாக்குறுதியில், இன்னும் ஒட்டிக்கொண்டாள். அவள் தொடர்ந்து காத்திருந்தாள், அவன் திரும்புவதற்காக அல்ல, ஆனால் அவள் அறிந்த காதலுக்காக, தன் வாழ்க்கையை வரையறுத்த காதலுக்காக மட்டுமே! மலரவன் எண்ணம் இதயத்தில் எரிய அங்கு இருந்தாள்; கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். - அசோகா வனத்தில் சீதையின் நிலை / சுந்தர காண்டத்தில் இருந்து இறுதி மூன்று வரியும் எடுக்கப்பட்டது - (மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய) மலரவனின் எண்ணம் அவளை எரித்து துன்புறுத்த, நன்முல்லை, [சீதை அசோக வனத்தில் இருந்தது போல்] கற்பாறைக்குப் பக்கத்திலே [ பழைய ஒற்றை மரத்தின் கீழ் இருந்த] தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய அவள், மெல்லிய இடையைப் போல, மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள். ஆண்டுகள் கடந்தன, நன்முல்லையின் தலைமுடி நரைத்தது. ஆனால் அந்த கடலோரத்தில் இருந்த ஒற்றை மரம் வலுவாக நின்றது. அதன் கிளைகள் காற்றில் அசைந்தன. அவளுடைய தளராத காதலுக்கு மௌன சாட்சியாக. ஒரு நாள், கதிரவன் மறைந்து வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறியபோது, நன்முல்லை கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை இன்னும் தெரிந்தது. அவளுடைய காத்திருப்பு, இந்த மண்ணில் கடைசியாக முடிந்தது. இந்த பிறவியிலோ அல்லது மறுமையிலோ, மீண்டும் தன் மலரவனைக் கண்டுபிடிப்பேன் என்று அவள் நம்பினாள். அதுவரை கடல் அவளின் கிசுகிசுக்களை சுமந்துகொண்டே இருக்கும், மரம் அவள் நினைவுகளைக் காத்துக்கொண்டிருக்கும் - காலம் தாண்டிய காதலுக்குச் சான்றாக! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  4. வளர்க்கின்ற நாய்க்கும்... விடுப்பு பார்க்கின்ற ஆசை இருக்கும்தானே... 🤣
  5. என்னுடைய அட்ரஸே செம்பாடுதான்! 😁
  6. உஷ் ,உஷ் கிடுகு வேலிக்குள்ள இருக்கிற எங்கன்ட கலாச்சார,பண்பாடுகளை...வெளியில சொல்லாதையுங்கோ ...
  7. நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .
  8. யோசிச்சு பிடிக்க 2 மணித்தியாலம் எடுத்திட்டுது.....சிறுவர் முன் பள்ளி...சரிதானோ... ( சின்ன முதல்) ஐயா..அவரை தெரியாமல் ...ஆழமறியாமல் காலை விட்டுவிட்டேன்...காப்பாத்துங்கையா...🤣
  9. முதல்வர் செம்பாட்டானின் கதிரையைக் கைப்பற்ற சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் தலைமையில் ஒரு குழு புறப்பட்டிருக்கின்றது இரண்டு நாட்களாக அவர்களின் படையணி முதல்வர் செம்பாட்டானின் அரண்மனையை சூழ்ந்து நோட்டம் விடுகின்றது 😂 ஆ பத்து ஆ பத்து ஆ பத்து ஆ பத்து 😅
  10. 🙏சீ சீ இதுக்கு எல்லாம் மன்னிப்பு என்று ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன் ...நம்ம முன்னாள் சபாநாயகர் ஞாபகம் வந்தது அது தான் வேறு ஒன்றுமில்லை...சிரிப்பு குறி போட்டுள்ளேன் 🙏
  11. தொடர்ந்தும் தனது பதவியத் தக்க வைத்துக் கொண்ட முதல்வர் செம்பாட்டானுக்கும் அவருடைய புதிய துணை முதல்வர் alvayan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  12. தம்பி இன்னும் ஒருபடி ஏறணும்பா.
  13. இது வந்து ..மாவீரர் துயிலுமில்லங்களை இல்லாதொழிப்பதற்கு ..எடுக்கப்படும் ..முதல் நடவடீகஐ ..சுடலையை வாங்கி கோட்டல் கட்டுவதற்கும் நம்மினம் இருக்குது....கடைசியில் பூமி அதிர்வுடன் அழிந்து ..இறந்த ஆன்மாக்களின்நெஞ்சை குளிரவைக்கும்
  14. நீங்கள் என்னை நேர்சரி குழந்தை என சொல்லவில்லை தானே ..🤣 நான் யாழ்களத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பி.ஹெச்.டி எடுத்த ஆள் ...சர்டிவிகேட் தேவை என்றால் நிர்வாகத்திடம் கேளுங்கள் ..அவர்களிடம் இல்லை என்றால் நான் மீண்டும் தீசிஸ் எழுதி எடுத்து காட்டுவேன்.. ...🤣 ஒரு நாட்டின் முன்னாள் சபாநாகர் போன்று
  15. என்ன சார் ....எனக்கு வாழ்த்தில்லையா....
  16. இது நேர்சரி குழந்தைக்கும் தெரியும் ... கண்ணை மூடிகொண்டு நாடகம் ஆடுகினம்
  17. அது சரி ,,வீண் விரயம் செய்கின்றனர் என ஏனைய கட்சிகளை திட்டி கூவி கூவி பிரச்சாரம் செய்த இவர்கள் ..இப்பொழுது சும்மா அதிருதில்ல ரஜனி ஸ்டைலில் மாலைகள் சகிதம் வலம் வருகின்றனர்...நட்சத்திர தொப்பி எங்கே ? சிவப்பு சேர்ட் எங்கே? ஆனயிறவு உப்பு என பெயர் மாற்றத்துடன் விறபனைக்கு வந்தால மட்டுமே உப்பு சாப்பிடுவேன் அதுவரை உப்பு போட்டு சாப்பிட மாட்டேன் ...வைத்திய ஆலோசனைப்படி😅
  18. அபிருத்தியை நோக்கி போகின்றது ...🤣 சுடலையில் சுற்றுலா துறையை வளர்க்கும் இடதுகளே வலதுகளே வாழ்க ..
  19. மோடி உயர் மட்டத்துடன் அரசியல் செய்ய ,துணை தூதரக மட்ட அதிகாரிகள் தமிழர்களுடன் பணி புரிகின்றனர். ... சீனாவிடம் கேட்டால் சும்மா அந்த மாதிரி கட்டி தருவினம் அத்துடன் மத்திய அரசும் மகிழ்ச்சிய்டைந்து ஒரு விகாரையும் கட்டிதருவினம் ...இந்தியா கட்டி தந்தால் திருவள்ளுவர் வருவார்,சீனா கட்டி தந்தால் புத்தர் வருவார் ... தமிழ் தேசியவாதிகள் நேரடியாக உதவிகளை கேட்டு தங்கள் பிரதேசங்களை அபிவிருத்திசெய்து போடுவார்கள் என்ற காரணத்தால் தான் சகல மாவட்டங்களிலும் தங்களுடைய ஆட்களை வைச்சிருக்கினம் ஜெ.வி.பியினர்
  20. யாழில் நிறைய இடத்தில் அந்த மண் உள்ளது. சில ஊர் பற்றிய பொதுவான அபிப்பிராயங்கள் நிறைய உண்டு. அதில் இதுவும் ஒன்று.
  21. வடமராட்சியில் செம்பாட்டு மண் இருக்கு. புகையிலை, மிளகாய் எல்லாம் விளையிற இடம்.. இப்போது கல்யாண முருங்கையால் நிறைந்திருக்கு!
  22. ராஜா உப்பு . அடுத்தது ராணி உப்பு.🤣
  23. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு பெண் : சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச பெண்ணையே ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன் பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன் ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் ........! --- ஆலப்போல் வேலப் போல் ---
  24. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ........! 😘
  25. 1983 க‌ருப்பு யூலை ப‌ற்றி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன் , ம‌ற்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நீங்க‌ள் எழுதி தான் தெரிந்து கொண்டேன் க‌ந்த‌ப்பு அண்ண‌.................................
  26. நீங்கள் சொல்வது சரி வாழ்த்துகள் செம்பாட்டன். தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறீர்கள். நானும் ஒரு செம்பாட்டான்தான். யாழ் மாவட்டத்தில் வலிகாமத்தில் சில ஊர்களில் செம்பாட்டு மண்தான் இருக்கும். அப்படியான ஒரு ஊரை பிறப்பிடமாக கொண்டவன்
  27. இருக்கலாம்😂ஆனால் போய் இருக்கும்போது பாலுக்காகவும் இயற்கை உரத்துக்காகவும் இரண்டு ஆடுகள் வளர்ப்பதாகத்தான் எண்ணம். மாட்டு எருதான் இன்னும் சிறப்பு. ஆனால் மாட்டுக்கு பெரிய மேய்சல் நிலம் தேவை. வேலையும் கூட 🤣
  28. அப்பிடிச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. விளையாட்டில் எல்லாரும் வீரர்களே. அவர்களின் திறமையால்த்தான் அவர்கள் அணியில் இருக்கிறார்கள். ஏலத்தில் எடுக்கும்போது அவர்களின் திறமை மற்றும் பெறுமதியை வைத்து, அவர்கள் எப்படி அணியில் பொருந்திப் போவார்கள் என்றுதான் பார்ப்பார்கள். வடக்கன் என்ற சொற்பதம் என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறானது. இவ்வாறு சொல்வதிலும், இவ்வாறு சொல்லப்படும் இடத்தில் இருப்பதற்கும், எனக்கு உடன்பாடில்லை.
  29. யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம் வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்
  30. எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂 யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️ சில காலம் துணை முதல்வர் பதவியை தானே கேட்டு வாங்கியுள்ளார். இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  31. ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றுணர்ந்து ஜனநாயகத்துக்கு திரும்பியவர் பேசுற பேச்சா அல்லது பம்மாத்து வேலையா இது? தேர்தலுக்கு முன் ஒரு வீரப்பேச்சு, பின் வேறொரு அதிகாரப்பேச்சு. அது சரி, எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு கட்சிகளுடன் இணைகின்றன, இவர்களை இணைத்துக்கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை. வேறென்ன, அழுக்குகள் அழுக்குகளுடன் இணைய வேண்டும். இந்தப்பேச்சை யார் எழுதிக்கொடுத்தாரென தெரியவில்லை? ம்.... பெரும் பதவி முதலமைச்சர் பதவியிலிருந்து ஒரு பியோனைக்கூட பதவிக்கமர்த்த தன்னால் முடியவில்லை என்று புலம்பியவர், கிழக்கு மக்களின் தலைவிதியை மாற்றப்போகிறாராம். தாங்க முடியவில்லை இவரின் பகிடியை. அந்தபுலம்பலின் இணைப்பை யாராவது இணைத்துவிடுங்கள் முடிந்தால்.
  32. நான் தெரிவு செய்த‌ அணியின் இர‌ண்டு மூன்று தோல்விக்கு அணிக‌ளின் க‌ப்ட‌ன் மார் விட்ட‌ பிழை , ல‌க்னோ விளையாடின‌ முத‌லாவ‌து விளையாட்டில் ல‌க்னோ க‌ப்ட‌ன் 10வ‌து விக்கேட்ட‌ வ‌டிவாய் அவுட் ஆக்கி இருந்தால் 5ர‌ன்ஸ்சில் ல‌க்னோ வென்று இருக்கும் இன்று சென்னை விளையாட்டில் க‌ப்டன் தொட்டு தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் வ‌ரை ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை நியுசிலாந் வீர‌ர் ம‌ற்றும் அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌ங்க‌ட‌ க‌ட‌மையை சரியா செய்த‌வை..............ம‌ற்ற‌வை ப‌டு சுத‌ப்ப‌ல் அண்ணா.............. என‌க்கு இந்த‌ ஜ‌பிஎல் தொட‌க்க‌ம் ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை பாப்போம் போட்டி முடிவில் எத்த‌னையாவ‌து இட‌த்துக்கு வ‌ருகிறேன் என்று.........................
  33. இது உண்மை தான் இன்று இந்த இரண்டு அணிகளையும் விட அதிர்ஷம் உள்ளவர் எங்கள் முதல்வர் செம்பாட்டான் தான்😅 முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂
  34. அந்த ஆறு பேரின் பின்பக்கத்தையும் காட்டுங்க. மச்சம் எங்கே இருக்கிறதென்று பார்க்கணும். ஒருத்தர் விதிவிலக்கு! மாறி உள்ளே அகப்பட்டுவிட்டார்! அவர் தானாகவே பொல்லைத் தந்துவிட்டு இருக்கிறார்.
  35. செம்பாட்டு சாத்திரியார் நல்லாத்தானே சொல்லுகின்றார்.............🤣. எந்த அணி வெல்லும், எந்த அணி தோற்கும், எதுவுமே எவரின் கைகளிலும் இல்லை போல......... அதுவாக நடக்குது............ நடப்பதை நாங்கள் பார்க்கின்றோம்............🤣. ஒவ்வொரு போட்டியும் ஒரு சுரண்டும் அதிர்ஷ்டலாபச் சீட்டு போல...........😜.
  36. மாணவர்களின் மண்டைக்குள் எத்தனை கிலோ அறிவு இருக்க வேணும் என பாருங்கோ அதை விடுத்து புத்தக பையின் நிறையை பார்க்காமல்
  37. என்ன கிருபன் இரண்டு தடவைகள் பதிந்துள்ளீர்கள்.பிரச்சனையே இல்லை. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  38. செம்பாட்டான் முதல்வர் ...கருணாநிதிபோல் அசையாமல் இருக்கிறார்...அவருக்கும் சுவி சார்.பிரதிமுதல்வர்...ரணில்போல் அதிர்ஸ்டத்தில் வந்தவர் (கோபம் வேண்டாமே ) அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
  39. பெரிசு என்று போட்டிருக்கிறபடியால் நாம ஏன்? இந்தத் திரி நமக்கில்லை என்று விட்டுவிட்டேன். படத்தை இணைத்தால்த் தானே எழுத முடியும்.
  40. தமிழ் மக்கள் தன்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை விட்டவங்கள் இப்ப அரசியல் அறிக்கை தினமும் விட வேண்டிய நிலை .இப்படியொரு பிழைப்புக்கு பதிலா யாழ்ப்பான பஸ் ஸ்ராண்டில் பிச்சை எடுத்து பிழைக்கலாம் .
  41. அரசாங்க தரப்பு இதை நீதிமன்றம் ஒன்றில் கூறினால் ஏற்பார்களா? இந்த வாதம் எடுபடுமா?
  42. ஒரு வரியில் இருவரை மடக்கிவிட்டீர்களே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.