Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87988
    Posts
  2. maathine

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/19/25 in all areas

  1. மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகாரம்தான்” என்றே சொல்லி போரிடும் நாடுகளைக் கேட்க ஆருமின்றியே அவலங்கள் தொடர்கின்றன மந்தாகினி
  2. யாராவது போட்டியை நடாத்த விரும்பினால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். ஒருவரும் போட்டியை நடாத்த விரும்பாவிடில் நான் நடத்துகிறேன்.
  3. ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரித்த அதே காலத்திலேயே இஸ்ரேலும் அணு ஆயுதங்கள் தயாரித்தது. இன்றுவரை இஸ்ரேல் தன்னுடைய அணு ஆயுத விபரங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே ஏன் இந்த ஐந்து நாடுகளில் எவையும் இஸ்ரேலை கேட்கவில்லை என்ற கேள்வி இல்லாமல் ஆகுகின்றது. ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்க இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா இந்த மூன்று நாடுகளையும் எப்படி ஐந்து அணு வல்லரசுகளும் விட்டார்கள் என்பது ஒரு விடயமே. இலேசாக அவர்களை விடவில்லை. முழுத்தடைகளை விதித்தார்கள். அதிலும் வட கொரியா, மேற்கு நாடுகளின் தடைகளால் இந்த நாடே பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டது. இனி இன்றிருக்கும் அணு ஆயுதங்களால் வரும் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவே. ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது. என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை. மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது. அணு ஆயுதங்கள் சில குழுக்களுக்கு கைமாறி விடக்கூடாதே என்ற ஒரு கவனம்.
  4. அது கள்ளு இல்லை அண்ணைமார் பதநீர்! நேற்று தம்பியும் நானும் போயிருந்தோம்!!
  5. காஸாவிலும் அயல்நாடுகளிலும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்கும் போது எங்கு போனது தர்ம புத்தி?
  6. உலகப் பெரும் சண்டியர்கள் எல்லோரும், நேருக்கு நேர் மோதும் காலம் வெகு தொலைவில் இல்லைப் போல் உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு... பெரும் உலக யுத்தம் வெடித்தால், முழுக் காரணமும் அமெரிக்காவையும், இஸ்ரேலையுமே சாரும்.
  7. இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம். அமெரிக்காவுக்கு, ரஷ்யா எச்சரிக்கை. AB Amam
  8. நான், தலைப்பை பார்த்துவிட்டு.... ஸ்ரீலங்காவில் வயிற்றுப் பிழைப்புக்காக... ஐஸ்கிறீம் விற்பவர்களை ஏன், கைது செய்கிறார்கள் என யோசித்தேன். அந்த ஐஸ் வேறை, இந்த ஐஸ் வேறை என்று.. பிறகுதான் புரிந்தது. 😂
  9. இறப்பது பொதுமக்கள்தான். நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.
  10. @வீரப் பையன்26 , @தமிழ் சிறி அண்ணை, @ஈழப்பிரியன் அண்ணை @suvy அண்ணை மற்றும் முன்னாள் ஐபிஎல் சாம்பியன் @நந்தன் அண்ணை இந்நாள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் @கிருபன் அண்ணை ஆகியோரையும் களமிறங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
  11. 🤣..................... பையன் சார், நலமா, இந்தப் பக்கம் வருவது குறைவு போல தெரிகின்றது. டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல.................... வட கொரியா அதிபரின் புதுக்கப்பல் கடலில் விட்ட அன்றே இரண்டாகப் பிளந்து போய்விட்டது. மனிதர் கடும் கோபத்தில் சிலரை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றார். அவர்களை அவர் கொன்று கூட இருக்கலாம். இப்பொழுது அந்தக் கப்பலை ஒட்டுவது தான் அவரது முதல் வேலை. அந்தக் கப்பல் ஒரு துண்டாக கடலில் மிதந்த பின் தான் தலைவன் வெளியே வேறு அலுவல்களுக்கு வருவார்...............🤣. அதிபர் ட்ரம்ப் தான் ஒரு அமைதி விரும்பி என்று சொல்லுவார். நீங்கள் உட்பட பலரும் அதையே திருப்பிச் சொன்னீர்கள். அதிபர் ட்ரம்ப் விரும்புவது அவரை மட்டுமே என்று நாங்கள் சிலர் எப்போதும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே............... நாலு வருடங்கள் பட்டுத்தான் பாருங்களேன்.............😜. நிகழ்வுகளை மூன்று வகைகளாக எழுதலாம் என்றிருக்கின்றது: எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவது எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது எங்களின் அரசியல் தேவைகள் கருதி திரித்து எழுதுவது நீங்கள் இரண்டாவது வகையில் மிக நல்லாகவே எழுதியிருக்கின்றீர்கள்.....................👍.
  12. ஈரான் தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை வைத்து இருக்கு என்றால் அமெரிக்கா எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கி ப‌ல‌ நாட்டை நாச‌ம் செய்த‌வை லிஸ் போட்டு சொல்ல‌வா குரு👍 ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ அணுகுண்டு செய்வ‌தில் பிழை இருப்ப‌தாக‌ அல்ல‌து த‌வ‌று இருப்பதாக‌ தெரிய‌ வில்லை👍................... இஸ்ரேல் சில‌ தீவிர‌வாத‌ குழுக்க‌லுக்கு காசுக‌ளை கொடுத்து செய்த‌ நாச‌கார‌ செய‌ல்க‌ளை இந்த‌ உல‌க‌ம் ந‌ங்கு அறியும்...................இன்று கூட‌( ஸ் ) த‌ள‌த்தில் பார்த்தேன் இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருத‌ர் ஓவ‌ரா குரைக்க‌ தொட‌ங்கினார் , ஜ‌ப்பான் மீது அணு குண்டு போட்ட‌தை ஈரானுக்கு நினைவூட்ட‌ விரும்புகிறேன் என்றார் ......................எதிரிட்ட‌ இருக்கிர‌ அதே குண்டு ஈரானிட‌மும் இருந்தால் தான் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடான‌ இஸ்ரேல் மூடிகிட்டு இருப்பான் , இல்லையேன் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவிச்ச‌து போல் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இஸ்லாம் நாட்ட‌வ‌ர்க‌ளை கொலை செய்வாங்க‌ள்.....................ஈரான் 2000கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இருந்து அதிவேக‌ மீசேல்க‌ள் மூல‌ம் இஸ்ரேல் த‌லை ந‌க‌ர‌த்த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளை த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்கி விட்டின‌ம் இஸ்ரேல் த‌னிக்கை செய்யுது அவ‌ர்க‌ளின் நாட்டின் அழிவுக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் காட்டாம‌ , இப்போது புது ச‌ட்ட‌ம் போட்டு இருக்கின‌ம் , வீடியோ பிடித்து அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சில‌ ஆண்டு சிறையாம்😛😁........................ இன்று இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் தீவிர‌வாத‌ தாக்குத‌லாம் இஸ்ரேல் அர‌சு..............ப‌ல‌ஸ்தீன‌த்தில் புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டை போட்ட‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு இப்ப‌ தான் புரியுது ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு போட்டால் அது ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம் என‌ , இதுவ‌ரை கால‌மும் ஈரானின் மெள‌வுன‌துக்கும் பொறுமைக்கும் கிடைச்ச‌ வெற்றி இது.....................இன்னும் 2000க்கு மேல் ப‌ட்ட‌ மிசேல்க‌ள் ஈரானிட‌ம் இருக்கு அதோட‌ சீனாவில் இருந்து விமான‌ம் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ஈரானை வ‌ந்த‌டையுது........................இது ஒன்றும் 2003கிடையாது ச‌தாமுசேன் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று சொல்லி ஈராக்கை நாச‌ம் செய்த‌து போல் ஈரானை அழிக்க‌ முடியாது ,ஈரானில் அமெரிக்க‌ ப‌டைக‌ள் கை வைத்தால் பின் விலைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்ப‌த‌ அமெரிக்காவும் இஸ்ரேலும் பிற‌க்கு உண‌ருவின‌ம் ஏன் ஈரான் மேல் கைவைத்தோம் என‌............................எல்லாத்துக்கும் கால‌ம் ப‌தில் சொல்லும்......................... வ‌ட‌ கொரியா இஸ்ரேலுக்கு எதிராக‌ அறிக்கை விட்டு இருக்கு த‌லைவ‌ன் இற‌ங்க‌னும் உல‌க‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌டும் உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ப் போகிறேன் என‌ சொல்லி ஆட்சிக்கு வ‌ந்த‌ ர‌ம்ப் இப்போது மூன்றாம் உல‌க‌ போருக்கு அவ‌ரே கார‌ண‌மாய் அமைய‌ போகிறார்....................... ஈரான் அமெரிக்கா கூட‌ பேச்சு வார்த்தைக்கு இட‌ம் இல்லை என‌ சொல்லி விட்டின‌ம் ர‌ம்ப் (ஸ் ) த‌ள‌த்தில் இருந்து வீர‌ வ‌ச‌ன‌ம் எழுதுகிறார் அதை ஈரான் அர‌சு காமெடியாக‌ பார்க்குது உந்த‌ மிர‌ட்ட‌லுக்கு எல்லாம் தாங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ போவ‌து கிடையாது 48ம‌ணி நேர‌ம் கெடு கொடுத்தார் ர‌ம் , இப்ப‌ 60ம‌ணித்தியாள‌த்தை தாண்டி விட்ட‌து............................. ம‌று ப‌டியும் சொல்லுகிறேன் இஸ்ரேல் மிக‌ப் பெரிய‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு........................ayatollah ali khamenei இஸ்ரேல் கொலை செய்தால் இஸ்ரேல் என்ர‌ நாடு வ‌ரும் கால‌ங்க‌ளில் நின்ம‌தியாக‌ இருக்க‌ போவ‌து கிடையாது...................அப்ப‌டி இஸ்ரேல் ayatollah ali khamenei கொலை செய்தால் அழிவுக‌ள் ப‌ல‌ கோண‌ங்க‌ளில் வேறு மாதிரி இருக்கும்.............................
  13. தலைவர் மீதான உங்கள் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. என்னே ஆர்வம்? என்னே தவிப்பு?
  14. இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.
  15. நேற்று இரவு நியூஸ் 18 இல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பொன்று போய்க் கொண்டிருந்தது. அதில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் Fordo Plant குறித்த தகவல்கள் பிழையானவை போன்று தெரிந்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 கிலோகிராம் வரையில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதன் மேற்கூரை மேற்பரப்பிலிருந்து 90 அடிகள் கீழே இருக்கின்றது என்று செய்தியில் சொன்னார்கள். இவை 90 அடிகள் அல்ல, 90 மீட்டர்கள் கீழே என்பதே சரியானது என்று வேறு தகவல்கள் சொல்லுகின்றன. பி - 2 விமானத்தின், ஜிபியூ - 57 இராட்சதக் குண்டின் ஆழத்தாக்கு திறன் பற்றியும் அவர்களின் தகவல்கள் சரியானது அல்ல. இந்த ராட்சத குண்டுகள் 200 அடிகள் வரை உள்ளே போய், பின்னர் அங்கே வெடிக்கும் திறன் வாய்ந்தவை. 60 அடிகள் என்றே செய்தியில் சொன்னார்கள். இதை முடிப்பது தான் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் முடிவு என்றால், இரண்டு பாரிய தாக்கங்கள் நிகழக்கூடும். முதலாவது, அங்கிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கமுற்று அதனால் அந்தப் பிரதேசம் முழுவதும் ஏற்படப் போகும் கதிர்வீச்சு. அந்தப் பிரதேசமே 50 வருடங்களுக்கு மேலே மனிதர்கள் வசிக்க முடியாத வெறும் நிலம் ஆகிவிடும். இரண்டாவது, இந்தப் பிரதேசத்தில் அந்த மலையின் கீழே போய்க் கொண்டிருக்கும் fault lines. மிகவும் ஆழத்தில் ஒரு நெருக்கப்பட்ட இடத்தில் சில இராட்சத குண்டுகள் வெடிக்கும் போது, அவற்றின் வீரியம் இன்னும் அதிகமாக, கூர்மையாக இருக்கும். இந்த வீரியத்தால் fault lines அசையக்கூடும். அது பெரிய பூகம்பங்களை அந்தப் பகுதியிலும், சுற்றுப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தவும் கூடும். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது என்று தான் உறுதிமொழி கொடுக்கின்றேன் என்று ரஷ்ய அதிபர் புடின் இன்று சொல்லியிருக்கின்றார். இங்கே சிரிப்பு வந்தால், சிரித்துக் கொள்ளலாம். இது நல்ல ஒரு நகைச்சுவையே. தற்போதைக்கு ஈரானுக்கு உண்மையில் என்ன தெரிவுகள் இருக்கின்றன............ ஒரே ஒரு தெரிவாக அணு ஆயுத திட்டத்தை தற்காலிகமாகவேனும் நிற்பாட்டிக் கொள்வது தான் உள்ளது. ஒரே ஒரு அணு மின்நிலையமே நாட்டில் இருக்கும் போது, 2000 க்கும் மேற்பட்ட கருவிகளில் யுரேனியத்தை செறிவூட்டும் ஈரானின் நோக்கம் வெளிப்படையே.
  16. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சந்திக்க நேரமில்லை போல, அடுத்தமுறை சந்திப்போம் என செய்தி அனுப்பி உள்ளார். சிறி அண்ணை இன்னொரு முறை வருகையில் சந்திப்போம்.
  17. இரண்டு கிழமை இலங்கை பிரயாணத்தில்... நான்கு நாட்கள் கொழும்பு, பத்து நாட்கள் யாழ்ப்பாணம் என்று திட்டமிட்டிருந்தோம். யாழ்ப்பாணத்தில் நின்ற 10 நாட்களும் பெரும்பாலானவை கோவிலுக்கு சென்றதில் கழிந்தது. மனைவி ஏற்கனவே எல்லாக் கோவில்களுக்கும் வருவதாக நேர்த்தி வைத்திருந்ததால் அதனை, தட்டிக் கழிக்க முடியாமல் இருந்தது. மானிப்பாய் மருதடி விநாயகர், சண்டிலிப்பாய் சீரணி அம்மன் கோவில், அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது உங்களை நினைத்தேன். @ஈழப்பிரியன் னும் அந்த நேரம் ஊரில் நின்றதாக அறிகின்றேன். ஆனாலும் நேரப் பற்றாக்குறை பல அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் செய்தமை கவலையான விடயம்.
  18. அமெரிக்காவை இழுத்து விடுவதில் நெத்தன்யாகு ரொம்பவும் முயற்சி செய்கிறார். அவரது வலைக்குள் ரம் விழுவார் போல தெரிகிறது.
  19. உண்மை, அறவே வீழ்த்தப் பட முடியாத விமானம் என்று ஒன்று இல்லை. ஆனால், வீழ்த்தப் படக்கூடிய நிகழ்தகவு மட்டும் தான் சில போர் விமானங்களுக்குக் குறைவு. உதாரணமாக, F-35 இன் வேகம் 1.6 Mach. இதனோடு ஏவுகணை எதிர்ப்பு தொழில் நுட்பத்தையும் சேர்த்து, அது சுடப் படக்கூடிய நிகழ்தகவை குறைக்க மட்டுமே முடியும். இந்தப் பாதுகாப்புக்களை மீறி அதை வீழ்த்தும் ஆயுதம் ஈரானிடம் இல்லையென நினைக்கிறேன். ஏனெனில், பழைய F-16, F-18 இனையே அவர்கள் வீழ்த்தியதாக செய்திகள் இல்லை. B-2 Spirit Bomber ஒலியை விட குறைவான வேகம் (0.9 Mach) கொண்ட, ஆனால் நெடுந்தூரம்/நேரம் (long-range) பறக்கக் கூடிய விமானம் . எனவே இலகுவாக சுடப் படலாம். இதற்காகவே ரேடாரில் தெரியாத வகையில் வடிவமைத்து, 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியதாகச் செய்திருக்கிறார்கள். இதன் ஒரே சிறப்பு, 300,000 இறாத்தல்கள் நிறையுடன் மேலெழக் கூடிய வேக விமானமாக இருப்பது தான். இரண்டு 30,000 lbs குண்டுகளை தாங்கிச் சென்று வீசக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு அமெரிக்க விமானம்.
  20. இஸ்ரேலின் உலகநாயகன் பிம்பத்தை ஈரான் உடைத்து காட்டியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும் வெறும் காயம் மட்டுமே என்பது உண்மையாக இருக்குமானால் இது திட்டமிட்டு ஈரானை அழிக்க அனுமதிக்கப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. அதிலும் வைத்தியசாலை அடிக்கடி காட்சிப் பொருளாக வெளிக்கொண்டு வரும் போதெல்லாம் நெஞ்சில் ஏதோ தைக்குமாப்போல் இருக்கிறது..
  21. படத்தில்... சிவப்பு வாகனத்தில் இருப்பது நீங்களா ஏராளன்.
  22. கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர். உந்த வெள்ளைக்காரர் கள்ளடித்து கள்ளுக்கு விளம்பரம் செய்யிறார்.வன்மையாக கண்டிக்க வேண்டும். கள் என்பது மது.மது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கெட்ட கெட்ட வருத்தங்கள் எல்லாம் வரும்.இதை சமூக சீர்கேடாக நான் பார்க்கின்றேன்.😂 வன்மையான கண்டனங்கள்.😎
  23. இஸ்ரேலுக்கு யார் ஆயுதம் குடுத்தாலும் குடுக்காட்டிலும்...... ஈரானுக்கு சீனா இருக்க பயமேன்? 😂
  24. @கந்தப்பு போட்டியை நடாத்துங்கள்😀 வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல நாட்கள் நான் விடுமுறையில் இருப்பதால் யாழுக்கு வருவதே குறைவாக இருக்கும்
  25. அண்ணை, அந்த கட்டெறும்பு இல்லாட்டி அடுத்த கட்டெறும்பை பிடியுங்கோ! கந்தப்பு அண்ணாவே நடத்தட்டும்.
  26. Les Animaux Passion Petite femelle girafe née le 6 juin dernier, entourée de sa maman et d'un zèbre très protecteur. 😍"
  27. ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்! இஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ஊகிக்க வைத்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இறுதி உத்தரவை வழங்குவதில் தாமதம் செய்துள்ளதாகவும் அவர் தனது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதலில் இணையலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஏதேனும் முடிவு எடுத்துள்ளாரா என்பதை உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார். அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான இலக்கு ஈரானின் ஃபோர்டோ அணு செறிவூட்டல் நிலையமாகும். இது நிலத்தடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது மற்றும் அழிக்க மிகவும் கடினம். மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் மட்டுமே அதை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இவ்வாறு இருக்க முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது நாடு சரணடையாது என்று கூறினார். எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார். சர்வதேச தலைவர்கள் தெஹ்ரான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதியாக உத்தரவாதம் அளிக்கும்படி தெஹ்ரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (19) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் வசிக்கும் சிலர் புதன்கிழமை நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலைகளை மறித்து, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயன்றனர். மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவப் படைகள் அண்மைய நாட்களில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அதிக இராணுவப் படைகளை நகர்த்தி வருகிறது. மூன்றாவது கடற்படை அழிப்புக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது. மேலும் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் குழு அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்காவுடன் இணையும் திறனையும் இது வழங்குகிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் தனியாக இல்லை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை” என்பதை வலியுறுத்தினார். இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை. வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடினமான காலங்களில் நாங்கள் எங்கள் நண்பர்களை கைவிட மாட்டோம். நாங்கள் ஈரானை முழுமையாக ஆதரிக்கிறோம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கை எங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம் என கிம் ஜாங்-உன் தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவித்தார். எவ்வாறெனினும் மத்திய கிழக்கின் நிலைமை மோசமடைந்து வருகிறது. அண்மைய தாக்குதல்களால் ஈரானில் 450 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436216
  28. உண்மையில் இஸ்ரேல் ஈரானில் தாக்கியிருந்தால் அதனால் மக்கள் கதிர் வீச்சால் இறந்திருப்பர், அப்படியெதுவும் நடக்காமையால் தாக்குதல் பொய் என்கிறீர்கள்?? இந்த வீடியோக்களைப் பார்த்து விடயங்களை அரை குறையாகப் புரிந்து கொள்வதை விட, இங்கே இணைக்கப் பட்டிருக்கும் பிபிசி செய்திகளைப் பார்த்தால் விடயம் தெளிவாகும் என நினைக்கிறேன். IAEA என்ற அமைப்பு கதிர் வீச்சு ஈரானில் தாக்குதல் நடந்த இடங்களில் அதிகரித்திருக்கிறதா என கண்காணித்து வருகிறது (இதே கண்காணிப்பு உக்ரைனிலும் நடந்தது). அழிக்கப் பட்ட இடங்களில் வெளியே கதிரியக்கம் அதிகரிக்கவில்லை. கட்டிடங்களின் உள்ளே அதிகரிப்பு இருப்பதாக செய்தியில் இருக்கிறது. அணு ஆயுதம் இங்கே அழிக்கப் படவில்லை. அணு ஆயுதத்தைத் தயாரிக்க அவசியமான யுரேனியத்தை செறிவு படுத்தும் நிலையங்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் கூட 60% செறிவான யுரேனியம் பெரும் தொகையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சுத்திகரித்த யுரேனியத்தை மலைக்குக் கீழே தான் பதுக்கியிருப்பர், ஏனெனில் அது போனால் அணுவாயுதக் கனவும் போய் விடும். எனவே, அணுவாயுதம் அழிக்கப் பட்டது, அணு வாயுதம் தயாரிக்கும் இடம் அழிக்கப் பட்டது என்ற உங்கள் புரிதல் தவறு. யுரேனியம் செறிவாக்கும் மைய நீக்க சுழலிகள் (centrifuges) என்ற உபகரணங்கள் தான் இலக்கு என்பதை வெளிப்படையாக செய்திகளில் காண்கிறோம். இதைக் காணாமல் எங்கேயோ மூலையில் இருக்கும் வீடியோவை நம்பி நீங்கள் கருத்துரைப்பது ஆச்சரியம் தான்!
  29. இந முறுகலை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது யார்? எங்கள் நிலத்தில், அவர்கள் விகாரைகளை கட்டி எழுப்பும்போது புத்தர் சிலைகளை வைக்கும்போது இனமுறுகலை ஏற்படுத்த வேண்டாம் என்று யாரும் போதிப்பதில்லை. ஆனால் எங்கள் நிலத்தில் எங்களுக்கு தடைகளாய் இருப்பவற்றை அகற்றும்போது கேள்வி கேட்க்கும்போது மட்டும் பொலிஸ்நிலையங்கள் விழித்துக்கொள்கின்றன. இனமுறுகல் பற்றி பாடம் நடத்துகின்றன. பிழைகளை சுட்டிக்காட்டி தவறு எங்கே என்று சொல்ல போலீசாருக்கு முதுகெலும்பு இல்லை, அதனாலேயே இவ்வளவு முரண்பாடுகள் ஏற்பட காரணம்.
  30. நிச்ச்சயமாக இராணுவம் இறங்க போவதில்லை. டோறா போறாவில் குண்டு வீசிய தருணங்கள் மட்டும் வந்து போகின்றது. இஸ்ரேல் பெரிய பிஸ்தா எனில் ஏன் அமெரிக்கா அழைக்கப்பட்டது என சிந்தித்தீர்களா?
  31. மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை குழிகளில் சில எலும்புக் கூடுகளில் இரும்புச் சங்கிலிகள் இருந்ததாக செய்தி வந்திருந்தது. அந்த எச்சங்களை புளோரிடாவுக்கு அனுப்பும் ஆயத்தங்கள் நடந்த போது சுமந்திரன் "பலருக்கு அதிர்ச்சி தரக் கூடிய முடிவுகள் கிடைக்கலாம்" என்று சொன்னதாக நினைவு. பின்னர், அந்த எச்சங்கள் "300 வருடங்களுக்கு முன் இறந்தவர்களுடையவை" என்று காபன் 14 கணிப்பு வந்ததாக நினைவு. மன்னாரில் சங்கிலியன் மன்னனால், போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய தமிழர்கள் கொல்லப் பட்டது 1544 இல் என்று கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ஈழத்தமிழர் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். திருக்கேதீஸ்வர எச்சங்களின் காபன் 14 வயது முடிவு பற்றி அந்த நேரம் ஓடிய யாழ் திரியில், இந்த வரலாற்றை மறுதலித்து "சிங்களவன் பொய் சொல்லி விட்டான்" என்று சில உறவுகள் வாதிட்டிருக்கின்றனர். அதெப்படி சுமந்திரனுக்கும், ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் இது பற்றித் தெரிந்திருக்க, ஏனையோருக்கு இது புதிராக இருக்கிறது? காரணம் வாய்வழிப் பாரம்பரியமாகக் (oral tradition) கடத்தப் படும் மன்னார் வரலாற்றில் "மன்னார் வேத சாட்சிகள்" பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. மன்னார் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் இந்த வழியாக இந்த வரலாற்றை அறிந்திருக்கிறார்கள். இப்போது உங்கள் கேள்விக்குப் பதில்: ஆம், மன்னாரில் கொல்லப் பட்டவர்களின் வயதைக் கணிக்க இயலும் (பல்லில் இருக்கும் எனாமலின் காபன் 14 இன் அளவை வைத்து இதனைச் செய்யலாம்). ஆனால், எப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று காபன் 14 இனால் கண்டறிய இயலாது. அதற்கு சட்ட (forensic) மருத்துவ/தொல்லியல் நுட்பங்களைப் பாவிக்க முடியும்.
  32. அண்ணா, ஈரான் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்று மேற்குநாடுகள் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தொடரும் தவறுகள், குறுகியகாலத்தில் நடந்த தவறுகள் என்று இரண்டாகப் பார்க்கலாம். நீண்டகாலம்: ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். ஈரானிடம் அணு ஆயுதப்பலம் கிடைக்கும் என்பது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிக ஆபத்தானது, இஸ்ரேல் என்னும் நாடே இல்லாமல் போகலாம் என்ற, உண்மையோ பொய்யோ, ஒரு கருத்து இவர்களிடையே உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியா, ஈராக், யேமன் என்று பல நாடுகளில் ஈரான் ஆயுதக் குழுக்களை வளர்த்து வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இஸ்ரேல் மீது இடைக்கிடையே தாக்குதலை மேற்கொள்ளுகின்றன. குறுகியகாலம்: ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது. அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். 60 நாட்கள் கெடு என்றார். ஈரான் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. 61ம் நாள் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றது. ட்ரம்ப் முற்றிலுமாக உறுதித்தன்மை அற்றவர். மற்றும் பழிவாங்கும் இயல்பும் கொண்டவர். ஈரான் மீதான் எந்த விதமான தாக்குதலுக்கும் மிகவும் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டும் இல்லை, உதவிகளும் செய்வார். ஈரானிடம் மொத்தமாகவே இரண்டாயிரம் ஏவுகணைகள், ballistic missiles, தான் உள்ளன என்கின்றனர். முதல் நாள் அன்று ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இப்பொழுது இன்னும் சிலவற்றை ஏவிக் கொண்டிருக்கின்றது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரங்களுக்குள் அவை முடிந்துவிடும். ஈரானுக்கு ரஷ்யாவோ அல்லது சீனாவோ உடனடியாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே அவர்களின் ஆதரவு. வெளியே பலமான ஒன்றாக தெரியும் ஈரான் உண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நீண்ட ஒரு சண்டைக்கு தயாராகவில்லை என்பதே இன்றைய நிலை. இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.
  33. இந்த காபன் 14 இனை அளவிடும் இயந்திரம் (Accelerator Mass Spectrometer) இலங்கையில் இருப்பதாக நான் அறியவில்லை. இருப்பதானால் கொழும்பு பல்கலையில் இருக்க வேண்டும். ஆனால், மிகவும் விலையுயர்ந்த, பராமரிப்பு தேவையான இயந்திரம். எனவே இன்னும் இல்லை என நம்புகிறேன். இந்தியாவில் சில உயர் நிலை ஆய்வு நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க மட்டும் பாவிக்க முடியும். அண்மைக் கால உடல்களை காபன் 14 காலம் கணிக்க, சட்ட மருத்துவ (forensic) அனுபவம் உள்ள அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆய்வகங்களுக்குத் தான் அனுப்ப வேண்டும். புளோரிடாவில் இருக்கும் Beta Analytics என்ற நிறுவனம் இதைச் செய்ய வேண்டிய உணர் திறன் மிக்க இயந்திரத்தை வைத்திருக்கிறது (இங்கே தான் திருக்கேதீஸ்வர அகழ்வு எச்சங்கள் அனுப்பப் பட்டன). இந்தக் காலக் கணிப்பை செய்வதற்கு முன்னர் (அல்லது சம காலத்தில்) இலங்கையில் செய்யக் கூடிய சில சட்ட மருத்துவ பரிசோதனை முறைகளை முன்னிறுத்த வேண்டுமென்பது என் அபிப்பிராயம். எச்சங்களின் பௌதீக பரிசோதனைகள் மூலம் தோட்டாக்கள், தாக்குதல், வெட்டுக்கள் என்பவற்றை ஒரு முறையான forensic pathologist மூலம் ஆராய வேண்டும். அத்தோடு ஒவ்வொரு உடலில் இருந்தும் டி.என்.ஏ யை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் பெற்றோர், சகோதரர், பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளோடு இவற்றை ஒப்பிடலாம். இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யும் வசதி கொழும்பில் இருக்கிறது.
  34. எந்த வண்டி ? தொப்பை அல்லது வயிறு (வயிற்றுப்பகுதி கொழுப்பு )😃😃😃
  35. இதுதான் நடக்கும் போல இருக்கு போகிற போக்கை பார்த்தால்
  36. கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர். நான்... யாழ்ப்பாணத்தில் நின்ற போது, அந்த மண்ணில் பிறந்த எனக்கே... கள்ளுக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வெள்ளைக்காரன் போய்... கள்ளு அடிப்பதை பார்க்க, பயங்கர எரிச்சலாக இருக்கிறது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.