ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சில் இறந்துள்ளதாகவும் செய்திகளில் சொல்லுகின்றார்கள். சுப்ரீம் லீடருக்கும், அமைச்சர்களுக்கும், தளபதிகளுக்கும், பாடசாலை பிள்ளைகளுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா.................. இந்தக் கொடுமைகளை கேட்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ உலகில் ஒரு நல்ல நாடும் இல்லை, ஒரு தலைவரும் இல்லை................... ஈராக், ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் எல்லாமே வெற்றுக் கோதுகள் போன்றன. வெறும் வாய் வீச்சு மட்டுமே என்றே தோன்றுகின்றது. ரஷ்யாவையும், சீனாவையும் தங்கள் பாதுகாப்புக்கு நம்பும் எந்த தலைவர்களினதும், நாடுகளினதும் நிலைமை கடைசியில் அந்தோ பரிதாபம் என்றே முடிந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் ரஷ்யாவிடமும், சீனாவிடமும் என்ன வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றார்கள்? அடிப்பதற்கு குண்டுகளும் இல்லை, குடிப்பதற்கு தண்ணியும் இல்லை என்று வந்து நிற்கின்றது ஈரான்.............................. ரஷ்யாவும், சீனாவும் நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என்று சொல்வதை தவிர, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடமாட்டார்கள். அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இந்த தாக்குதல்கள் நல்ல ஒரு மடை மாற்றும் வாய்ப்புகள். முன்னர் ஓபாமா ஈரான் மேல் தாக்குதல்கள் செய்யப் போகின்றார், அது அநீதி என்று சொன்ன அதிபர் ட்ரம்ப் இன்று ஈரான் மேல் ஒரு தலைப்பட்சமாக தாக்குதல்கள் மேற்கொள்ளுகின்றார். அதிகாரமும், ஆணவமும் உள்ள சில மனிதர்களால் அப்பாவி மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.