ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஈழப்பிரியன்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இது தான் எனது எண்ணமும். கொடுத்த கடிதத்தில் இன்று எங்கு வேணுமானாலும் இருக்கலாம் என்று எழுதிக் கொடுத்துள்ளார்கள். டாக்ரர் இருந்த கதிரையில் எந்த ஒருவருக்கான இருப்பு என்று பொறிக்கப்படவுமில்லை. இதில் டாக்ரர் கேட்டது நிஞாயமே. காலம் காலமாக அடிமையாக இருந்ததால் வேற்று இனத்தவர்கள் எது சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. இதன் பிற்பாடு சயித்துடன் சேர்ந்து செல்பியும் எடுத்துள்ளாராம்.
-
குப்பையிலிருந்து குப்பை
No more work from home. எனக்கு இன்னமும் அவர்மேல் வெறுப்பு வரவில்லை.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
கொம்பனித்தெருவில் இருந்த காலங்களில் பாபத் சூப் விரும்பி குடிப்பேன். கப்பலிலும் கிழமைக்கொரு தடவை இந்த சூப் கிடைக்கும்.
-
குப்பையிலிருந்து குப்பை
குப்பையிலிருந்து குண்டுமணி போய் குப்பையிலிருந்து குப்பை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சிறி சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் பொறியியலாளர்,வைத்தியர்கள் உருவாகுகிறார்கள்.
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
அப்புறம் என்ன எல்லாம் ஒன்றுக்குள் ஓன்றாகிட்டீங்க.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
டாக்ரர் அர்ச்சுனாவின் சமயம் புத்தசமயமா?
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
அமெரிக்காவிலிருந்து 9000 டாலர்கள் சொல்லாமல் வெளியே கொண்டு போகலாம். இலங்கையில் இறங்கும்போது வெளிநாட்டு பாஸ்போட்டுக்கு இமிகிரேசன் படிவம் மட்டுமே கேட்கிறார்கள். இலங்கைப் புத்தகத்துடன் போகும்போதே கொண்டுபோகும் சாமான்கள் பணம் என்பன எழுத வேண்டி வரும்.
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
ரம் வந்து போரை நிற்பாட்டினால் அவரவர் பிடித்த இடங்களில் நிரந்தரமாக நிற்பார்கள். எனவே இடைப்பட்ட காலத்திற்கு இருபகுதியும் மும்முரமாக அடிபடலாம். இதுகளை வெளியே வரவைக்கவே அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளைக் கொடுத்து அடிக்க வைத்தது.
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பரட்டை பத்தவைக்க போகுது. அனுரா இந்தியா போவதாக சொன்னார்கள். அதுக்கு முதல் இயலுமானவரை போட்டு குடுக்கத்தான்.
-
நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா
மன்னார் மக்களே ஒருநாள் பொறுங்கோ என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு மன்னாரில் சம்பவம் இருக்கு. இனிமேல் வைத்தியசாலைக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியுமா?
-
நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா
அப்புறமா ஏன் எல்லோரும் அவரை வாங்குவாங்கென்று வாங்குகிறார்கள்? ஏதோ மானத்தை கெடுக்கப் போகிறார் அது இது எது என்று நடக்குது?
- புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!
-
நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா
எதில் தவறு எங்கே உள்ளது. யாருக்காவது தனிஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தால் அதிலே எழுதி ஒட்டியிருக்கலாமே? இல்லாதவிடத்து புதிதாக போகிறவருக்கு எப்படி தெரியும்? அர்ச்சுனா பிரச்சனை கிளறியபடியால் இனிமேல் அப்படி செய்வார்கள் என எண்ணுகிறேன்.
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள். தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம். ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும். ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு ஒரு திறந்த மடல் அவசியம். சுற்றி வளைத்து அவரிடம் போவதைவிட யாழில் உறுப்பினராக்கி விட்டால் நல்லது. யாழும் கலகலப்பாக இருக்கும். யாழ் இயங்காமலிருந்த நேரம் காணொளிகளைப்பார்த்த போது சில் காணொளிகளில் மன்னார் வைத்தியசாலைக்கும் இரணைமடு அணை உடைந்ததற்கும் விசாரணை நடத்த அர்ச்சுனாவாலேயே முடியும் என்கிறார்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இடையில் யாருடனோ சேர்ந்து சொதப்பி விட்டதாக சொல்கிறார்கள். இல்லாவிட்டால் மயூரனே முதலில் வந்திருப்பார் என்கிறார்கள். யார் எப்படி குழப்பினார்கள் என்று தெரியவில்லை.
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இது என்பிபி யைச் சார்ந்த மான்கள் போல இருக்கே.
-
கரண்ட் வந்தது
மோகனின் புண்ணியத்தில் யாழ் இணையக்காரர் எல்லோரும் யூரியூப்பை நோண்டி தோண்டி பார்த்ததால் நேற்றையதினம் எதிர்பாராத பணம் யூரியூப்காரருக்கு கிடைத்திருக்கும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இந்த மூஞ்சியைப் பார்த்தாலே பிபி எகிறிக் கொண்டே போகுது.- கரண்ட் வந்தது
நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது.- கரண்ட் வந்தது
தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒரு மெழுகுதிரியாகவே இருக்கிறார். அவரும் குடும்பமும் நீடூழி வாழணும்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அத்துடன் இந்த தேர்தலில் 60 வீதமான வாக்குகளே விழுந்துள்ளன. அதிலும் ஏறத்தாள 10 வீதம் செல்லுபடியற்றவை. எனவே 50 வீதமான வாக்குகளே விழுந்துள்ளன. அவை நிச்சயமாக தமிழ்தேசியத்துக்கான வாக்குகளே. அவர்களின் குளறுபடிகளால் போடாமல் விட்டிருக்கலாம். - ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.