Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. விற்பனைக்கு தயார் என்றால் எங்கேயும் போகலாம். மஹராஸ்டிரத்தில் பிஜேபி வேட்பாளருக்கு சீமான் வாக்கு சேகரிக்கவில்லையா? பின் ஜெ யை ஆதரிக்கவில்லையா? பிஜேபி, அதிமுகவிடம் ஒரு நல்ல விலைக்கு போனவர் திமுகவிடமும் போவார்தானே? பிகு ஆனால் ரோ சீமானை கையில் எடுத்ததும், முத்துகுமார் கொலையும் அரசியலுக்கு அப்பாலான விடயங்கள். இது இந்திய தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு சம்பந்தபட்டது. தமிழரசன், முத்துகுமார் போன்றோர் முன்னெடுத்த, இந்தியாவில் இருந்து பிரிந்து போகும்-தமிழ் தேசிய அரசியலில் இருந்து, நாதகவை பின்வாங்க செய்து, ஒன்றிய இந்தியாவுக்குள் தமிழ் தேசியம் பேசும் சீமானின் பம்மாத்து அரசியலுக்குள் கட்சியை முடக்கியது சம்பந்தமானது. இதில் முத்துகுமார் போல் கொலையாகாமல் தப்பிக்க சீமான் கொடுத்த விலை. ஒன்று முத்து குமாரின் உயிர். மற்றையது பிரிவினைவாத தமிழ் தேசிய கொள்கை.
  2. சுப முத்துகுமார் என்பதை மாறி எழுதிவிட்டேன். இந்த சருவசட்டியையா பெரிசா தூக்கி கொண்டு வாறியள் (கருத்து பஞ்சம்?)
  3. அதுவும் அந்த மாலை நேரத்தில் கைலியிலோ, டிரவுசருடனோ வரவில்லை, இருவரும் ரொம்ப நேர்தியாக வேட்டி சட்டையில் வந்தார்களாம். 40 பேர் இறக்க வேண்டும் என் அல்லாமல் ஒரு சின்ன தள்ளுமுள்ளு, சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதி என பிளான் பண்ணி அதுவே கை மீறி போய் இருக்க கூடும். உளவுத்துறை தோல்வி.. கரூர் துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு.. பொன்வில்சன் சரமாரி விமர்சனம் Vignesh SelvarajPublished: Sunday, September 28, 2025, 22:36 [IST] சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிர்பலிகளுக்கு காரணம் அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரூரில் நடந்த இந்த துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு என்றும், காவல்துறை பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பொன் வில்சன் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்தில் இப்படி ஒரு இழப்பு எந்தக் காலத்திலும் ஏற்பட்டதில்லை. பச்சிளம் குழந்தைகள் 10 பேர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் மீது குறை என்பது இப்போதைக்கு தெரியாது. அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு விஷயங்களும் இதில் இருக்கிறது. இதில் எல்லா வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும். ஆளுங்கட்சி தரப்பில் தான் அதிகபட்ச தவறுகள் இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. தவெகவை பொறுத்தவரை புதிய கட்சி, அங்கு கட்டுப்பாடற்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த கட்சி. காவல்துறை அனுபவம் மிக்கது. உளவுத்துறை கையில் இருக்கிறது. இதையெல்லாம் கையில் வைத்திருக்கிறீர்கள். ஏற்கனவே, திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூரில் தவெக நடத்திய கூட்டத்தை பார்த்துவிட்டோம். அந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடின்றி இருக்கிறது, எவ்வளவு கூட்டம் வருகிறது? எந்த வயது வரம்பில் அதிகமானோர் வருகிறார்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு பேர் வருகின்றனர், அடிப்படை தேவைகள் இருந்ததா என்பதகெல்லாம் உளவுத்துறை தகவல் இருக்கும் இல்லையா? அந்த அனுபவத்தை வைத்துத்தானே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எவ்வளவு கூட்டம் வரும் என்று கணிக்க வேண்டும்.. அனுமதி கொடுக்கும் இடத்தில் பாதுகாப்பை சரிவர தர வேண்டும். உங்கள் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/ponwilson-calls-for-probe-into-multiple-angles-behind-karur-stampede-during-vijay-campaign-739131.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  4. விஜை வாகனம் அந்த வீதியை விட கொஞ்சம் அப்பால் நிற்க முயல - இல்லை வீதிக்குள்தான் போக வேண்டும் என நிர்பந்திக்கபட்டதாம். உள்ளே வந்ததும் கரண் கட் ஆகி விட்டதாம். 8 நிமிடத்தில் செந்தில் பாலாஜியும்… 15 நிமிடத்தில் அன்பில் மகேசும் ஸ்பாட்டுக்கு வந்தார்களாம்…. #மங்காத்தா?
  5. புரிகிறது. விஜையை யானைவிளாம்பழம் கொண்டது போல, கோது இருக்க சுளை தின்ன விளைகிறார். தம்பிகள் இதுதாண்டா அண்ணன் என பயர் விடுவதன் காரணமும் இதுவே. இதை நான் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் சீமானின் மீது வக்ரத்தை கக்குகிறார் என்பார்கள் என்பதால் தவிர்த்தேன். சீமான் சின்ன கருணாநிதி என முன்பே எழுதியுள்ளேன் - அவர் நரி என்பதில் எனக்கு எள்ளளவும் எப்போதும் சந்தேகமில்லை. ஆனால் தலைவரை போல் தன் புத்தியை இனத்தின் பொது நலனுக்கு பாவிக்கும் நல்ல புலி இல்லை. அதை தன் கல்லாவை நிரப்ப, முடிந்தால் பதவியை அடைய என சுயநலனுக்கு மட்டுமே பாவிக்கும், கருணாநிதி போன்ற குள்ள நரி - சீமான்.
  6. 39 பேர் உயிரிழப்பு எதேச்சையான விபத்து இல்லை.. திட்டமிட்ட சதி - நீதிபதியிடம் தவெக மனு Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 12:56 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்கிற புகாரை திமுக முன் வைத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து முறையிட்டனர். திட்டமிட்ட சதி என்று நீதிபதியிடம் தவெக மனு அளித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் மீது புகார் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் ஒன்று, அவர்கள் அனுமதி கொடுத்த இடம் ஒன்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளனர். மறுபக்கம் தவெகவினர் காவல்துறையினர் விதிகளை மீறியது, விஜய் தாமதமாக வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது. தவெக ஆலோசனை இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த அறிவழகன், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தவெக என்றும் துணை நிற்கும். விஜய் மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார். காவல்துறை விதித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை. விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை முடிவு செய்யப்படும்." என்று கூறியிருந்தார். நீதிமன்றத்தில் விசாரணை இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரின் இல்லத்தில் சந்தித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்க முடிவு செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர். சற்று முன்பு தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் நீதிபதி தண்டபாணியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், எங்கள் தரப்பு தகவல்களை சொல்லியுள்ளோம். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் 2.15 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப்பற்றி வேறு எதுவும் கூற முடியாது. நீதிமன்றம் உத்தரவைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகிய 2 நபர்கள் கொண்ட அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. https://tamil.oneindia.com/news/madurai/karur-stampede-high-court-to-investigate-case-on-tomorrow-739033.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards டிஸ்கி இந்த லைனை நேற்றே எடுத்திருக்க வேண்டும். தாமதிக்கும் நீதி மட்டும் அல்ல, தாமதிக்கும் தற்காப்பும் பலன் குன்றியதே. ஆளுனர் எடுத்து கொடுத்த அடியில் த வெ க பயணிக்கிறதா? இதைவைத்து அதிமுக+பிஜேபி கூட்டணிக்கு விஜையை நெருக்கி தள்ளுவார்கள் போல உள்ளது. தமிழ் நாட்டில் திமுக, அதிமுக, பிஜேபி மூவரையும் எதிர்த்து அரசியல் என ஆரம்பித்தால்… ஒன்றில் சுப உதயகுமார் போல சாக வேண்டும். அல்லது சீமான் போல விலைபோக வேண்டும் என்பதுதான் விதி போலும்.
  7. ஒரு மருத்துவர் இவ்வளவு தத்தியாக இருப்பது கவலையான விடயம். தன்னெழுச்சியாக மக்கள் கூடுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு. மிக சுலபமாக இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் என அவமானப்படுத்தி கடந்து போகிறார். விஜை முன்பு தமிழ் நாட்டில் சூட்டிங் போகவில்லையா? போராடங்களில்… விழாக்களில் கலந்து கொள்ளவில்லையா? அப்போ வராத கூட்டம் இப்போ வர என்ன காரணம்? இது ஒரு அரசியல் திருப்புமுனை (இனியும் இப்படி இருக்கும் என சொல்ல முடியாது). அரசியல் கட்சி ஒன்றுக்காக மக்கள் கூடுவது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு. Freedom of assembly. அதை சரிவர, பாதுகாப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது அரசினதும், ஏற்பாட்டாளரதும் கடமை. இங்கே கடமை தவறியது அரசும், தவெகவுமே தவிர மக்கள் அல்ல.
  8. கிசு கிசு வோ…பிசு…பிசு வோ… ஜூனியர் விகடன் புதுரூட்டில் நாதக - சீமான் சபரீசன் சந்திப்பு என தலைபிட்டு மிஸ்டர் கழுகு கட்டுரை வரைந்துள்ளது. ஆகவே சீமான் பக்கம் உண்மை இருந்தால் அவர் உடனடியாக வழக்கு போட்டிருக்க வேண்டும். யாழ் உட்பட அனைத்து ஊடகமும் ஏதோ ஒரு அஜெண்டாவில் இயங்குவனதான். நான் எங்கும் ஜூவி நடுநிலை ஊடகம் என சொல்லவில்லை. ஆனால் சீமானுக்கு ஆதரவான பலதை, பல ஆண்டுகளாகவே விகடன் வெளியிடுவது உண்மை. ஆகவே அவர்கள் இப்படி பொய்யாக எழுத நியாயமில்லை. இந்த செய்தி பொய் எனில் அது சீமானை போலவே திமுக, சபரீசனுக்கும் அவதூறுதான். ஆகவே நீங்கள் வழமையாக பாடும் விகடன்- திமுக கொத்தடிமை என்ற கோரஸும் இங்கே எடுபடாது. சபரீசன் கூட கமுக்கமாக இருப்பது - இருவருக்கும் ஜூவி செய்தியை சவாலுக்கு உட்படுத்த திராணி இல்லை என்றே காட்டுகிறது. இன்னுமொரு விடயம் - பத்திரிகைகள் சில சமயம் தமது செய்தி மூலத்தை பாதுகாக்க ஆதாரத்தை வெளியிடாது. ஆனால் வழக்கு போட்டால் ஆதாரத்தை தகுந்த பாதுகாப்போடு கோர்ட்டில் சமர்பிப்பார்கள். இது சீமானுக்கும், சபரிக்கும் தெரியும். ஆகவேதான் கள்ள மெளனம். விஜையை விட ஆளுனர் அழகாக அரசியல் செய்கிறார்.
  9. பிகு சீமான் சபரிசனை சந்தித்தது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. ஜூனியர் விகடன் எழுதியுள்ளது. அதை எதிர்த்து சீமான் வழக்கு போடவில்லை. ஏன் என கேட்டால் நீங்கள் நேரம் இல்லை என சப்பை கட்டு கட்டுகிறீர்கள். பொதுவெளியில் வைக்கபட்ட குற்றசாட்டு, அது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. இவை எல்லாத்தையும் விட அரசியலுக்கு நெஞ்சுரம் வேண்டும். இது அனைவருக்கும் அமைவதில்லை. விஜை மிக மென்மையானவராக தெரிகிறார். அரசியலில் நல்ல மனது அல்லது கெட்ட மனது எது இருந்தாலும் வெல்லலாம், ஆனால் கெட்டவன் போன்ற மன உறுதி இல்லாமல் வெல்ல முடியாது. அதேபோல் கொஞ்சம் சமயோசிதமும் வேண்டும். இப்படி போய் பொறியில் சிக்கும் ஒருவர் நாளை முதல்வர் ஆனால், அமித் ஷாவும் நட்டாவும் கூடி கும்மி அடித்து விடுவார்கள்.
  10. இதில் நான் என்ன அரசியல் பரப்புரை அல்லது எனக்கு பிடித்த தலைவரை தூக்கி பிடித்து கருத்து எழுதினேன். எந்தளவுக்கு செந்தில் பாலாஜியை விமர்சித்தேனோ, அதே அளவுக்கு சீமான் என்ன செய்ய கூடும் என்ற என் விமர்சனபார்வையையும் முன்வைத்தேன். இந்த திரியில் நீங்களும், நானும் இன்னும் பலரும் அரசியல் பேசினோம். அது தவறில்லை. இது ஒரு சோக செய்தி எனிலும் அரசியல் சார்ந்த திரிதான். ஆனால் இந்த திரியில், சீமானியர்கள் மட்டும்தான் இதை வைத்து சீமானுக்கு பஜனை பாடினீர்கள். நீங்கள் மட்டும் இல்லை, இன்னும் இருவரும். வேறு எவரும் - செத்தவீட்டில் அழும் என் அண்ணணை பாருங்கடா, தங்கம்டா என்ற வகையில் எழுதவில்லை. இதைத்தான் கேவலம் என்கிறேன்.
  11. நேற்று வரை என்னை திமுக சொம்பு, 200 ரூபாய் உபி என சொன்னீர்களே? உங்களை போல் நான் எந்த கட்சிக்கும் நேர்ந்து விட்ட குதிரை அல்ல - த வெ க ஆதரவாளனும் இல்லை. திமுக. அதிமுக, பாஜக வுக்கு மாற்றாக விஜை முன்வைத்த கொள்கைகள் சிறப்பானவை என்பதால் அவரின் அரசியல் வருகையை ஆதரித்தேன், with reservations. அதே போல் நிலவரம் கலவரம் ஆகியதும் விஜையை போல் பனையூரில் போய் ஒழிந்துகொள்ளும் கோழையும் நானல்ல. சீமானின் கருத்து கூலிப்படையை பலவருடமாக யாழில் பல திரிகளில் தனி ஆளாக நின்று ஓட ஓட விரட்டிய எனக்கு இதை இட்டு ஒழிய வேண்டிய அவசியம் இல்லை. நான் த வெ க கட்சி ஆளில்லை - ஆகவே விஜை மீதும் தவறு இருக்கும் போது - அவர்களை கவர் எடுக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. This is not my beef.
  12. இப்படி மரணவீட்டில் சுய தம்பட்டம் அடிக்கும் பிண அரசியலை இதில் சீமான் கூட செய்யவில்லை ஆனால் அவரின் அடிப்பொடிகள் செய்கிறார்கள்…. இதுக்கு பெயர்தான் எச்ச….
  13. கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார் Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 2:36 [IST] கரூர்: விஜய் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்? மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.! கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
  14. சீமானை நான் எதிர்க்க வேறு எவர் மீதான என அபிமானமும் காரணம் இல்லை. சீமான் எப்படிபட்டவர் என்ற புரிதல் மட்டுமே காரணம். 😭😭😭 ஒரு ஈழத்தமிழனாக…. அந்த மீண்டும், மீண்டும் என்ற வார்த்தையின் அர்த்தம் கடினமாது, கொடுமையானது… ஆனாலும் சம்மட்டியால் அடித்தது போல் உண்மையானது. இப்படித்தான் நமது மக்களும் மாட்டிகொண்டார்கள் இல்லையா?
  15. ஏற்றுகொள்கிறேன் - இந்த விடயத்தில் சீமான் மிகவும் நியாயமாகவே நடந்து கொள்கிறார். எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என எனக்கு புரியவில்லை. இன்னும். இதை நீங்கள் பலதடவை எழுதியும் உள்ளீர்கள். நான் அப்போ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது கூட ஒரு டிவீட்டின் பின் ஒளிந்து கொள்ள நினைப்பது மிக மோசமானது. உண்மையில் இதை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லை என்றால் மன்னிப்பு கோரி விலகிவிட வேண்டும். பிகு இது ஜோக் அடிக்கும் விசயம் அல்ல ஆனால் அன்பில் மகேஷ் அழுத அழுகை ஆஸ்கார் ரகம்.
  16. வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு. நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST] தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்... மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார். விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது. சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது. அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே. ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது. ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம். சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள். அப்படியே நடந்துள்ளது. இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.
  17. சீமானின் முதலாவது அறிக்கை - அரசியல் தவிர்த்து வெளிவந்துள்ளது. உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார். கரூரில் மக்களின் மரண ஓலம் நெச்சை பிளக்கிறது! நாதகவினர் ரத்த தானம் செய்யுங்கள்!” - சீமான் அறிக்கை Halley KarthikPublished: Sunday, September 28, 2025, 1:40 [IST] இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன். உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" என்று தெரிவித்திருக்கிறார்.
  18. எது ஒழுக்கம்? தலைவரின் ஆளுரய படத்தின் முன் வைத்து, ஒரு சிறுமியை நாதக நிர்வாகி வன்கொடுமை செய்த வீடியோ உலவுகிறதே அதன் பி. அவருடன் சீமான் போட்டோவும் எடுத்தாரே அந்த ஒழுக்கமா? அல்லது அடிக்கடி செய்யிகளில் அடிபடும் நா தக வினரின் “ஒழுக்கமா”? இங்கே ஒழுக்க கேட்டால் யாரும் சாகவில்லை. கூட்ட நெரிசல். ஆகவே சீமானை இது உயர்தியது என்பது - இதிலாவது நாதகவுக்கு ஒரு ஆதாயம் கிடைக்காதா என்ற அங்கலாய்பே.
  19. அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், "விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது! ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 👆 அதிமுக ராஜசபா எம்பி இன்பதுரை. பாஜக கூட்டணியில் இருந்து ஆதரவு சமிக்ஞை? இதை வைத்து விஜைய வழிக்கு கொண்டுவர பாஜக/அமித் ஷா முயல கூடும். இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்துத்தான், முத்துகுமாரை கொலை செய்துவிட்டு, றோ சீமானை கட்டுப்பாட்டில் எடுத்தது.
  20. அது மக்கள் அல்ல, திருச்சி விமான நிலையதில் இருந்த பத்திரிகையாளர்கள். ஆரம்பம் முதலே பற்றிகையாளர் கேள்விக்கு விஜை பதில் சொல்வதில்லை. இன்று நிலமை வேறு என உணர்ந்து பதில் சொல்லி இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு நடிகன் - இவ்வளவுதான் என்ற பேச்சு எழும் என தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே மக்கள் கொலையை செய்து விட்டு அழுபவனை நம்புவார்கள். கொலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவனை இரக்கம் அற்றவன் என திட்டுவார்கள். ஆனால் இதை கூட விளங்கி கொள்ளவில்லை எனில் - விஜை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதே உண்மை. இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது. ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.
  21. மேலே சொல்லி உள்ளேன் மாசி மக நீராடலுக்கு ஜெ போனபோது நடந்தது. ஜெ அளவுக்கு விஜைக்கு துணிவு அல்லது மன தைரியம் இல்லை என்றே படுகிறது. மனதைரியம் இல்லை எண்டால் அரசியல் சரிவராது.
  22. விஜை பனையூரில் போய் முடங்கி கிடப்பது மிக பிழை. ஆனால் மேலே புலவர் எழுதி இருப்பது வரிக்கு, வரி திமுக ஐடி விங் தயாரித்து கொடுத்து பல கணக்குகளில் இருந்து பகிரப்படும் “கருத்து” க்களை ஒத்து இருக்கிறது.
  23. யாழிலும் மனித சோகத்தில் அரசியல் செய்யும் நிலைய வித்துவான்கள் இருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.