Everything posted by satan
-
ஹிஜாப் அணியவில்லையாம்.. யூடியூப்பில் பாடிய பாடகிக்கு ஈரான் கொடுக்கும் தண்டனை.. நீதித்துறை அறிவிப்பு
வேடிக்கையான, தனிமனித மாண்பை மதிக்கத்தெரியாத துறை, நீதித்துறையாம். சிரிப்பாய்க்கிடக்கு.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஆனந்தசங்கரியும் சம்பந்தனும் தமிழர் விடுதலை கட்சியை மீட்க கோட்டுக்கு போய் பிரிந்ததுபோல், சுமந்திரனிடமிருந்து தமிழரசுக்கட்சியை மீட்டெடுக்க நீதிமன்றத்தினால் மட்டுமே முடியும். பதவியாசைக்காக நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு திரிகிறார்கள், அது கிடைக்காத போது கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்றெல்லாம் வசை பாடினார்கள். இப்போ, பலவந்தமாக பதவிகளை கையகப்படுத்தி வைத்திருப்பது யார்? கட்சியை இரண்டு படுத்தி உறுப்பினர்களை வெளியேற்றுவது யார்? இவர்கள் பதவியாசை இல்லாத துறவிகளா?
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
சுட்டிக்காட்டியதற்கு நன்றி! ஒருதலைக்காதலென்றால் கடத்தல், கொலையில் முடியும். இருதலைக்காதல் என்றால் இருவரும் சேர்ந்து தப்பியோடிவிடுவார்கள் சமூகத்திலிருந்து.
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
ருதலைக்காதலாக இருக்குமோ?
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
எனக்கு அளிக்கப்பட்ட பதவியை பார்த்து பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது! பரவாயில்லை, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை இவ்வாறு பல முத்திரை குத்துவார்கள். அதற்காக நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லாமல் இருக்க முடியாது. நான் யாரென்று எனக்குத்தெரிந்தால் இதற்கெல்லாம் பயப்படவேண்டியதில்லை.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
என்னது...... சம்பளமில்லாத தொழலுக்கா இவ்வளவு அடிபாடு? இவர்கள்தான் பெருத்த ஊழல் பெருச்சாளிகளும் தெருச்சண்டியரும். பொறுங்கோ, அனுரவை குடைச்சல் இல்லாமல் இருக்க விட்டால், இவர்களெல்லோரும் தீயில நடக்கவேணும். வேண்டுதல் ஒன்றுமில்லை, மக்களுக்கு சேவை செய்து உறுதிப்படுத்தினாலே அவருக்குரிய வேதனத்தை பெற முடியும், அது போக சமூக சேவை செய்பவர் தனது காரை தானே ஓட்டிப்போக வேண்டும். மக்கள் அலுவல் சம்பந்தமான போக்கு வரத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படவேண்டும், இல்லையேல் ஒதுங்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் குறிப்பிட்ட வேலைகளை செய்து உறுதிப்படுத்தவேண்டும், இல்லையேல் தங்கள் சொந்த நேரத்தில் முடிக்க வேண்டும் சம்பளம் கிடையாது. திறமையற்றவர்கள் விலகி, படித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு இடம்விட வேண்டும்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இவருக்கு ஒரு கதிரையை கொடுத்துவிட்டால்; இழுத்துபோட்டுக்கொண்டு இருந்து சபையை ரசிப்பாரே. இதுகூட அனுராவுக்கு புரியவில்லையே. தடாலடியாக யாரும் பதவி கேட்டு வரவேண்டாமெண்டு ஒரு போடு போட்டார் பாருங்க, அதுதான் யாராலும் பொறுக்க முடியாத ஒன்று.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
எனது பல உறவினர்கள் போலீஸ் துறையில் பணிசெய்தார்களாம். அதன்பின் இந்த சிங்கள திணிப்பு வந்ததால் எல்லாரும் தம் வேலையை இராஜினாமா செய்துவிட்டு ஊரில் வந்து தோட்டம் செய்வதாக கூறியிருந்தார்கள். இன்று தமிழ்ப்பொலிசாருக்கு நிறையவே தட்டுப்பாடுள்ளது. இவையெல்லாம் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டன. இதை பண்டாரநாயக்க வாரிசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தவறு. தமிழர் ஒருபோதும் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை, எவ்வளவுக்கு விட்டுக்கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு விட்டுக்கொடுத்துபோனார்கள். இருந்தும் சிங்களம் அதற்குமேலும் அடித்து பறிக்க நினைத்தது. தலைநகரில் சிங்களமும் தமிழும் கதைத்த தமிழரையே முதலில் அடித்து விரட்டியது. கல்வி தரப்படுத்தல் சட்டம் யாருக்கெதிராக, யாரால், ஏன் கொண்டுவரப்பட்டது? வரலாறு ஏன் யாருக்கெதிராக திரிக்கப்பட்டது? தமிழர் ஒரு விடாமுயற்சியுள்ளவர்கள், சிக்கனமானவர்கள், கட்டுப்பாடும் கல்வியில் ஒழுக்கத்தில் ஆர்வம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் உழைத்து முன்னேறினார்கள். அதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. தங்களை சுரண்டித்தான் அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று இனவாதிகள் அரச கட்டிலேறுவதற்கு மக்களின் ஆதரவை பெறுவதற்காக கிளப்பப்பட்ட வதந்தியே (வாந்தியே) நாட்டை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. விழுந்துபோன நாம் எதையோ சொல்லி சரியாக்கப்பார்கிறோம். ஆனால் எதிரி அதை தனது பலமாக எடுக்கிறான். இது வரலாறாகிவிட்டது. நாங்கள் அதற்கு நிறைய விலையும் கொடுத்துவிட்டோம். நம்மை நாமே நோவதை, சமாதப்படுத்துவதை தவிர வேறு தெரிவில்லையோ எனத்தோன்றுகிறது.
-
ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
மாற்றுவது ரொம்ப ரொம்ப கஸ்ரம், இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. இவர்களே அரசுக்கெதிராக கலகம் செய்வார்கள். அனுராவுக்கு இதை கடப்பது லேசானதல்ல. கடந்துவிட்டால் கண்டத்தை தாண்டியதுபோல்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
பா. உறுப்பினர் வேலையை உருப்படியா செய்த்தால் அது தேவையில்லை. அதைத்தான் அவர்கள் செய்வதில்லையே? கல்வியமைச்சர் வேலை வேணுமாம்! எங்கன்ர சுமந்திரனுக்கு வெளிநாட்டலுவலர் பதவி கிடைக்கப்போகுதென்று உதயன் கம்மன்பில சொன்னார், அதற்கு சுமந்திரன் சொன்னார், அது உதயன் கம்மன்பிலவின் கற்பனை. எனக்கு பிரதம மந்திரி பதவிக்கு அனுரா அழைப்பு விடுவார் என்று சொல்லி காத்திருந்தார். அது ஏன் அப்படிச்சொன்னார்? மக்கள் அதனை நம்பி தனக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு உத்தி. ஆனால் அனுரா பக்கமிருந்து அவரை தலைகுனிய வைக்கும் அவர் எதிர்பார்க்காத பதில், மக்களிடம் இருந்து ஒரு ஆணை!
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
கவலையே வேண்டாம்! சூட்டோடு சூடு தட்டிக்கேட்க ரணில் இந்தியா புறப்படுகிறார். சுமந்திரனின் தோழராச்சே! என்ன சூழ்ச்சி செய்யப்போறாரோ தெரியலை?
-
நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் : முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினாரா? குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
உண்மையை மறைக்க அது உதவுமென சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். தங்கள் நிஜத்தை அவர்களே விரும்பவில்லை, அதை மறைக்க ஏதோ ஒன்று அவர்களுக்கு தேவைப்படுகிறது. உண்மையாக கற்றவர்கள் தம்பட்டம் செய்ய மாட்டார்கள். இவைகளை காட்டியா இவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டார்கள்? அல்லது இவைகளை பார்த்தா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்? இவர்களின் வாக்குறுதிகளை நம்பித்தானே. அதைத்தானே அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடுள்ளவர்கள்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அடடா... என்ன அழகு, என்ன கம்பீரம். அது சரி ....., கடைக்கு போன மனுஷனை கொண்டுபோய் இந்தியாவில இறக்கிவிட்டார்களோ? இல்லை.... எந்தவொரு ஆடம்பரமுமில்லாத உடை, நடை கெத்தில்ல! மற்றையவர் கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ பயணம் போனால் உடை, நடை, படை, என தனி விமானத்தில் போய் சொகுசு விடுதிகளில் தங்கி உல்லாசம் அனுபவித்து வருவார்கள். இவர் எத்தனை பேருடன் போனாராம்? வரவேற்பு என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் சந்தித்தவர்கள் ஏன் இப்படி மூஞ்சியை இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்? எல்லாருக்கும் முன்பாக அழைத்து விருந்து கொடுத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். அனுராவுக்கு நன்கு தெரியும் இந்தியாவின் சகுனித்தனம். பாப்போம் எப்படி வெட்டியாடுகிறாரென்று! கவிழ்க்கப்போகிறார்கள் என்று அர்த்தம் சாமியார்! அனுராவின் வீரியம் தெரியும் அவர்களுக்கு போனவுடன் கோயிலில் விழுந்து கும்பிடும் கூட்டமல்ல இவர். வீட்டுக்கு வீரன், காட்டுக்கு கள்ளன் ரணில் என்னத்தை சொல்லுறது? எத்தனை நாடகம் தந்திரம் துரோகம் பவ்வியம் பிரிச்சாளுகை? என்ன செய்தாலும் ஒருமுறையாவது தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக, நிம்மதியாக, வெற்றியாக நிறைவு செய்ய முடியவில்லையே இவரால். பிறர்க்கிடும் பள்ளம் தான் விழும் குழி.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அவரை மக்கள் தெரிந்தெடுக்கவில்லை, கட்சி தலைவராக கட்சி அங்கத்தினரால் தேர்தெடுக்கவுமில்லை. ஆனால் சகல அதிகாரத்தையும் கைப்பற்றி வைத்திருக்கிறார். அவரை கட்சியிலிருந்து கலைக்க முடியவில்லை, முடியாது யாராலும். இவர் கடந்த காலங்களில் சொன்னவையெல்லாம் மற்றவருக்கன்றி தனக்கல்ல. முளையிலே கிள்ளாது விட்ட பலனை கட்சியும் மக்களும் அனுபவிக்கின்றனர். தமிழ்த் தேசியகட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும் என்று மற்றவருக்கு சவால் விட்டவர், தான் அதை செய்து காடட்டட்டும் பாப்போம்! இதைவிட்டால் அவருக்கு நாதியேது? எல்லாரையும் அரவணைக்கும் மக்களை ஏமாற்றும் மக்களின் உணர்ச்சியை வைத்து பிழைக்கும் கட்சியிது! இதைவிட்டு பெரிய கொம்புக்கு தாவியோர் கொட்டாவி விடுகின்றனரே.
-
நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் : முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினாரா? குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
கல்வித்தகமை அரசியலுக்கு தேவையில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தெரிந்தாலே போதும். ஏன் கல்வி கற்றவர்கள் செய்யும் வேலையை, சேவையை அங்கு யாரும் செய்வதில்லை. அடாவடி பேசுவபவர், ஏமாற்றுபவர், கதையை, கொள்கையை திரிப்பவர் வக்கீலுக்கு படிக்கத்தேவையில்லை. ஆனால் நாமலின், அவரின் சகோதரர்களின் மற்ற திறமைகளை கேட்டுப்பாருங்கள்; அவர்களின் கல்வித்தகமையை தாண்டியதாக இருக்கும். இவர்கள் செய்யும் கொலை கொள்ளைகளுக்கு அரசியல் பெயர், துணை.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
ம்..... இதற்காகத்தான் இவைகளை ஆராய, ஆணைக்குழுக்கள் அமைத்து சம்பந்தப்பட்டவர்ளை விலக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முயல்கிறார் ஜனாதிபதி. அதற்கிடையில் அவரை வீட்டுக்கனுப்ப முயற்சிக்கிறார்கள் எல்லாத்துறையினரும். இது ஜனாதிபதிக்கு கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல. தேவையற்ற குடைச்சல்களை கொடுத்து திசை மாற்றுகிறார்கள் பிரச்சனையை. அவரோடு இருப்பவர்களே இதற்கு ஒத்துழைப்பார்களா தெரியவில்லை. ஏனெனில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்!
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
தேர்தல் கால கூட்டங்களில் ரணில், ஒரு நகைச்சுவை சொல்லி தானே சிரித்தார். சஜித் ஆங்கிலம் பேசினால் வெள்ளைக்காரன் சிரிப்பானாம். நாட்டை ஆளுவது, சிங்கள மக்களை ஏமாற்றி. இதில யார் ஆங்கிலம் பேசினாலென்ன, சிரித்தாலென்ன? அந்த மக்களோடு உண்மையயை பேச முடியவில்லை இவர்களால். அதை எண்ணி வெட்கப்படவேண்டும். இதே போல் ரணில் லண்டனுக்கு சென்றிருந்தபோது, தமிழ் மகன் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்விகேட்டபோது அவரது ஆங்கிலத்தை நையாண்டி செய்து நீங்கள் தமிழிலே பேசுங்கள் நான் விளங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி சிரித்தார். அவர் தமிழில் சொன்னபோது, ஏதும் விளங்காமல் தான் சொன்ன நையாண்டியை நினைத்து பேசியவரை பார்க்காமல், சுற்றியிருந்தவரை பார்த்து சிரித்தார். இவருக்கு தன் தந்திரத்தில், மற்றவரை கேலி செய்து மட்டம் தட்டுவதில் அபார நம்பிக்கை, மகிழ்ச்சி எங்கள் கோசானைப்போல. அதுவே கவிழ்த்தும் விட்டது இவரை.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
பதினாறு சமையல்காரர் போனதினால், சுவையான சாப்பாட்டை இழந்துவிட்டார், தள்ளாத வயதில் சமையல் செய்ய வேண்டுமே என்கிற கவலை, வாழ்க்கையில் உருப்படியா ஜனாதிபதியாக ஒருபோதும் காலத்தை நிறைவு செய்ய வில்லையே என்கிற கவலை, வீட்டில் சந்தோசமாக நாட்களை கழிக்க சந்ததியில்லையே என்கிற கவலை, வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகப்போகுதே என்கிற கவலை, தமிழ் மக்களின் நிலங்களை முற்றாக அபகரித்து விகாரை, இராணுவமுகாம் ஆக்க முடியவில்லையே என்கிற கவலை, தமிழ் சமூகத்தை துரோகிகளை உருவாக்கி சிதைக்க முடியவில்லையே என்கிற கவலை, இப்படி எத்தனையோ கவலை அவருக்கு. தனக்கு சவாலானவர்களின் கையிலிருந்து நாட்டை பெற்று நிம்மதியாக நாட்டை ஆளலாம் என்று கனவு கண்டவருக்கு எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக வந்த பேரிடி! இதுக்கெல்லாம் காரணமான N.N.P யை துரத்த என்னென்ன வழி இருக்கென்று தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களும் விடுவதாக இல்லை. ஆம், கஞ்சா வியாபாரிகளும், அடிதடிகளும், கொலை கொள்ளைக்காரரும் சிறைக்கைதிகளும் பாராளுமன்றத்தை தங்கள் தங்கள் தொழிற் கூடங்களாக மாற்றி கதிரைகளாலும் மிளகாய்ப்பொடிகளாலும் தாக்கி தெருச்சண்டை பிடித்ததை வேடிக்கை பார்த்த அனுரா, படித்தவர்களை கொண்டுவந்து கௌரவமாக பாராளுமன்றத்தை நடத்த வெளிக்கிட்டது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது. தங்களது பதவிகளையும் வசதிகளையும் ஊழல்களையும் மறைக்க, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த குடிமகன்களின் கைகளில் நாட்டை ஒப்படைத்ததை நிறைவேற்றவும் இதை தவிர ரணிலுக்கு ஏனையோருக்கும் வேறு வழியில்லை. குறுக்கு வழியில் பதவியை பெற்றுக்கொண்டவர் அது நிலைக்குமென்று எதிர்பார்த்திருக்க, இப்படி நிரந்தரமாக வீட்டில் தன்னை அமர்த்தி விடுவார்களென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டால் இனி யாரும் அரசியல் வாழ்வை கனவுகாண முடியாது. அவர்களின் வெற்றி இவர்களுக்கு எதிர்கால அரசியல், கடந்தகால ஊழல் பயத்தை கடுப்பை உருவாக்குது. அனுரா அரசு, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்தாலே நாடு தானாக முன்னேறும்.
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
நாட்டில் இப்போது தம்மை மறைத்துக்கொள்ள ஊழல்வாதிகளுக்கு இது அவசியம். இவர்கள் யார் என்று தெரிந்தே மக்கள் இவர்களை நிராகரித்தனர். ஆனால் இவர்களோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. துரும்பை தூணாக்கி அரசியல் லாபம் தேட முனைகிறார்கள். ஆனால் ஆட்சியாளரின் வெளிப்படைத்தன்மை அவர்களை மக்கள் மத்தியில் உயர்த்துகிறது தாங்கள் சரியானவர்களைத்தான் தெரிந்தெடுத்துள்ளோம் என்று. முன்னைய ஆட்சியில் இப்படி கேள்வி கேட்க முடிந்ததா? தவறை ஏற்றுக்கொண்டு பதவி யாரும் விலகினார்களா?
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
- பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
மூஞ்சூறு ஒன்று, வலியப்போய் பொறியில் தலையை கொடுத்திருக்கு. அதாவது நாமலின் கல்வித்தகமை குறித்து குற்றபுலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. 'வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.' இனி தங்கள் தங்கள் கல்வித்தகமையை நிரூபிக்க வேண்டிய நேரமிது. நிரூபிப்பார்களா? கள்ள சான்றிதழ் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம். அந்த நேரம் இதை தெரிவித்த மாணவன் பலதாக்குதல்களுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." நான் நினைக்கிறன் மஹிந்தவின் ஒரு மகன் யோசித்தவோ தெரியவில்லை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடற்படை கப்ரனாகவோ என்னவோ பெரிய பதவி வகித்தவர்.- பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா? மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்!- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை.- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
மயூரனுக்கு போடிருக்கலாமென மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லிவிட்டு, அர்ச்சுனாவுக்கு போட்டேன் என்று கூறியதற்கே நான் சிரித்தேன். இனி எல்லாத்திரிகளிலும் இது ஓடும். சந்தோசம், வாழ்த்துக்கள்!- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அதற்காகத்தான் சொல்கிறேன், பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு இருக்கட்டுமென்று. அப்போ அனுரா அதை சாட்டாக சொல்லி தப்பிக்க முடியாது. இதைத்தானே நானும் சொன்னேன். அவர் மூன்றில் இரண்டை விட அதிகமாக வென்றிருக்கிறார், நாம் அவரை விமர்ச்சிப்பதால் எதுவும் மாறாது. நல்லதை எதிர்பார்ப்போம் என்று. அதற்குத்தானே வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறீர்கள் என்னோடு. ஏற்கெனவே மாண்புமிகு ஜனாதிபதி கூறிவிட்டார், தற்போது நாட்டிலுள்ள பெரும்பிரச்சனை பொருளாதாரம். அதற்கு முதல் முக்கியத்துவம், இவற்றையும் செய்வேன் ஆனால் உடனடியாக செய்ய நான் ஒன்றும் மந்திரவாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதற்கு ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தி நிரூபிக்கப்பட்டாலே தண்டனை வழங்கப்படும். நீதிசெயற்பாடுகளில் தான் தலையிடப்போவதில்லை என்கிறார். இதெல்லாம் ஒரே இரவில் நடக்கக்கூடியதல்ல, அவர் செய்ய முடியாததை வெறும் வாக்குக்காக அன்கொன்றும் இங்கு வேறொன்றும் சொல்லவில்லை. மக்கள் தாமே முன்வந்து அவரை தெரித்தெடுத்துள்ளார்கள். நான் மக்களின் முடிவை மதிக்கிறேன். பல வாசகர்கள் சொல்லிக்காட்டி விட்டார்கள். அவர்களுக்கு சலிப்பேற்படுத்த வேண்டாம். ஐந்துவருடத்தின் பின் கதைக்கிறேன் இதுபற்றி. - பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.