Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. இந்தியாவில் அனைத்து வழக்குகளும் முடிந்த நிலையிலேயே நாடு திரும்புகிறார்கள், இலங்கையில் அவர்கள்மீது எந்த வழக்குகளும் இருப்பதாக தெரியவில்லை, உயிருடன் திரும்பினால் உடனடியாக சட்ட உதவியை நாடலாம் அதற்கு தமிழ்கட்சிகள் உதவுவார்களா அல்லது இந்திய/இலங்கை எஜமான விசுவாசம் காண்பிப்பார்களா என்பது எவருக்குமே தெரியல.
  2. பிளைட்டில் ஏத்தும்வரை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உதவியை கோருவது நல்லது. அதுவரை உண்ணும் உணவிலிருந்து மருத்துவ பரிசோதனை என்று எதில் வேண்டுமென்றாலும் ஏதும் செய்து றோ அனுப்பினாலும் அனுப்பும். ஏற்கனவே சாந்தனின் இறப்பிலுள்ள சந்தேகமும் அதுவே.
  3. கருணாவுக்கு மஹிந்த 'வினதும் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளினடமும் இருந்த அரசியல் செல்வாக்குக்கு கிழக்கு மாகாணத்தின் நிரந்தர முதல்வர் ஆகியிருக்கலாம், எந்த பிரதேச வாதத்தை கையில் எடுத்தானோ அதே பிரதேசத்தை மக்கள் ஆதரவுடன் மட்டுவின் ஏக போக ராஜாவாக கோலோச்சி இருக்கலாம், ஆனால் இன்றுவரை அது முடியவில்லை. காரணம் ஒன்றேதான் ஆயிரம் ஆயிரம் போராளிகளை விடுதலைக்காக ஈந்த அந்த மண் கருணாவை ஒரு முன்னாள் புலிகளின் போராளியாகவோ தளபதியாகவோ ஏற்கவில்லை, ஒட்டுமொத்த இலங்கையையுமே நடுங்க வைத்த ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அது எச்சகலகளுக்கு கெளரவம் கொடுக்காது, பிறந்த மண்ணே இவரை போராளியாய் ஏற்று கொள்ளாதபோது வடபகுதி வந்து முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் இணைக்க போகிறாரா? குடை வேணும் எண்டால் ஒரு ஓரமாய் உக்கார்ந்து விக்கலாம்
  4. ஏழுமலையான் ஏற்கனவே பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார், என்னமோ நிறுவன கிளைகள் போன்று பல்வேறு இடங்களீல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்று செய்தியிடுகிறார்கள், ஏற்கனவே கொழும்பில் பிரமாண்டமான பல கோவில்கள் அன்றுதொட்டு உண்டு ,அதையும்மீறி இன்னுமொன்று கட்டி தாருங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திருப்பதி நிர்வாகத்தினால் கட்டி கொடுக்கப்படும் இந்த கோவிலின் ஒரு பகுதி வருமானம் கண்டிப்பா இந்தியாவுக்கு போக வழி உண்டு. தமிழன் எது கேட்டாலும் செய்து தராத சிங்கள், கோவில் கேட்டால் மட்டும் உடனடி அனுமதி வழ்ங்கிறான், இதன் பின் உள்ள சூட்சுமம் இனிமே வாய் திறந்து வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பது பற்றி எவரும் எதிர் கருத்து எழுப்பினால் அதற்கு சர்வதேசத்துக்கும் இந்தியாவும் பதில் சொல்ல கைவசம் பதில் தயார் செய்துவிட்டார்கள் என்றே கூறலாம். ஏழுமலையான் கோவில் கொழும்பில் எழுப்பப்படும் ஏக காலத்தில் மட்டு,யாழ்நகரத்தின் நடுவில் இலங்கையின் மிக பிரமாண்டமான விகாரைகள் எழுப்படலாம் எழுப்பப்பட்டால் எவரும் கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அவனிடம் பதில் இருக்கிறது.
  5. மந்திகையும் யாழ்போதனாவும் வடபகுதியில் உள்ள மிக பெரிய மருத்துவமனைகள். ஆனாலும் கொஞ்சம் சீரியஸ் எண்டாலும் மந்திகையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவசரநிலை வாகனம் ஓடவேண்டும். இரண்டு வைத்தியசாலைகளும் ஒரே தரத்திலிருந்தால் தமிழர் பிரதேசத்துக்கு ஓரளவு நிம்மதி. மருத்துவ விசயத்தில் ரணிலோ அணிலோ எவர் குத்தினா என்ன அரிசி நமக்கு வந்தால் சரிதான்.
  6. பவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு: சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார். சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார். ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி. -------- மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை. முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும் அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள், சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால் நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள் இயங்கவே முடியாது. என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும். வேறெதுவும் சொல்வதற்கில்லை.
  7. முன்பைவிட வேகமாக இயங்குவதுபோல் ஒரு உணர்வு. நன்றி,
  8. கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம். அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா? அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.
  9. பையன் சொன்னதையே எழுதலாம் என்று வந்தேன் ஏற்கனவே எழுதியிருக்கிறார். இணையவனின் அண்மைய மென்பொருள் மெருகேற்றலின் பின்னர் உள் நுழைவதும், நுழைந்தபின்னர் பக்கங்களை பார்வையிடுவதும் மிக தாமதமாகிறது. அண்டைக்கு மாறி என்னத்தையும் கிண்டி போட்டாரோ தெரியவில்ல😜 ( என்ர ரேஞ்சிலயே மற்றவர்களையும் நினைக்கிறது பொழைப்பா போச்சு) தயவு செய்து சரி பாருங்கள்.
  10. நடந்தது ஆயுத போராட்டம் இங்கே உயிர்காவுகள்தான் மூலதனம். இங்கே மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. சுமந்திரன் சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகள் தெற்கிலிருக்கும்போது ஒரு பேச்சு வடக்கு வந்தால் வேறு பேச்சு என்று செய்த சாக்கடை அரசியலால்தான். உங்கள் அரசியலில் நம்பிக்கையில்லாத தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்க காரணம். ஆகவே அந்த புதைகுழிகளுக்கு விதைபோட்டது உங்காளுங்களே என்று அனந்தி அப்போது பதில் சொல்லிருக்கவேண்டும். தமிழர் மத்தியில் மனித புதைகுழிகள் உருவாக மறைமுகமாக காரணமா இருந்த நீங்களே பேசும்போது நாங்கள் ஏன் பேசகூடாது எண்டு கேட்டிருக்கவேண்டும் எல்லாமே காலம் கடந்தவைதான் இதுவும் கடந்தே போகட்டும்.
  11. இவர்கள் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்ல, வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். புலிகள் இருந்து அவர்கள் தேர்தலில் நின்றிருந்தால் இவர்கள் கட்டுப்பணம்கூட மீள பெற்றிருக்கமாட்டார்கள். இதைதான் நம்மிடையே உள்ள குழப்பம் என்றேன்.
  12. இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களில்லை என்று பல ஆண்டுகளாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தோம், இன்று என்னமோ நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டமாதிரி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். குழப்பம் எங்களிடம்தான் அவர்களிடமில்லை , அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.
  13. எம் பக்கம் முழுசா நாமே இல்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
  14. சுமந்திரனை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?
  15. மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர், அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார். ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள். இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.
  16. இலங்கையின் நீண்ட வரலாறு தெரிந்தும் கல்வியும்பொருளாதாரத்திலும் மேலோங்கிவிட்டால் இலங்கையை ஆள முடியும் தமிழர்கள் சொல்வதை இலங்கை கேட்கும் என்று எப்படித்தான் இவருக்கு பேச மனம் வந்ததோ தெரியவில்லை, அல்லது தனது சிங்கள அரச ராஜாங்க பதவியை நியாயப்படுத்த தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறாரோ தெரியவிலை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து இலங்கையை ஆள முடியாது. ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்! கல்வியில் மேல் நிலையில் உள்ளவனும் பொருளாதாரத்தில் நிலைபெற்றவனுக்கும் இலங்கை பணியும் என்றால் இன்றைய வங்குரோத்துக்கு இலங்கை வந்திருக்காது எப்போதோ ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு ஆகீருக்கும், 2 முக்கால் கோடி சனத்தை வைச்சுக்கொண்டு 140 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து அரிசியும் முட்டையும் கடன் வாங்கிகொண்டிருக்காது. 83 கலவரத்தின் பின்னர் தமிழர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்துடனும் புலம் பெயர்வுடனும் காலத்தை ஓட்டிக்கொள்ள சிங்களவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர், இன்று புலம்பெயர்நாடுகளுக்கு படையெடுக்கும் சிங்கள மாணவர்களின் தொகையில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இனதொகை ஒப்பீட்டளவில் தமிழர்கள் கல்வியறிவில் மேலோங்கியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அதை வைத்து நாங்கள் சிங்கள தேசம் நாம் சொல்வதை கேட்கும் நிலைக்கு கொண்டுவரமுடியாது , அதை செய்ய சிங்கள அரசியல் அனுமதிக்காது அதையும்மீறி அரசியல் அனுமதித்தாலும் தேரர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆட்சியைவிட்டே அகற்ற பார்ப்பார்கள். இலங்கையில் சர்வவல்லமை பொருந்திய பெளத்த சிங்கள இனத்தை சேர்ந்த கல்விமான்கள் , பெரும் பணக்காரர்களே கல்வி பணத்தில் உச்சம் தொட்டும் ஆளைவிடுடா சாமியென்று அப்படியே ஆயிரக்கணக்கில் நாட்டை காலி செய்துவிட்டு ஓட்டம்பிடிக்கும்போது இந்த இரண்டும் இருந்தால் நாங்கள் சொல்வதை நாடு கேட்கும் என்று இயம்புவது இந்த நூற்றாண்டின் அதி பயங்கர நகைச்சுவை. ஒருவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதி பயங்கரமாக முன்னேறிவிட்டால் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் அதை வைத்து எப்படி மேற்குலகத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பதே அடுத்தகட்டமாக சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்.
  17. சம அளவிலான பிரச்சனைகளாக இருந்தாலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதில் புலிகளின் போராட்டத்தையும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தயும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் புலி வெறுப்பாளர்களுக்கான பதிலாகவே உங்களின் கருத்தை எடுகோளாக்கினேன், மற்றும்படி அது உங்களின் மீதான விமர்சனம் அல்ல. பெரும்பாலும் எவருடனும் கருத்து மோதலில் ஈடுபடுவதில்லை, பொத்தாம் பொதுவாக மனசில் பட்டதை சொல்வதுதான் வழமை,
  18. பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.
  19. பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது. புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகபகுதி என்பதையாவது எவராவது ஏற்றுக்கொண்டார்களா? அமெரிக்கா உட்பட்ட மேற்குலகமும் சிங்கள அரசும் அழுத்தம் முதலில் கொடுத்தது புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்பது. ஆயுதங்களை கீழே போட்டிருந்தால் பேச்சுவார்த்தை என்ற ஒரு மேடைக்கே புலிகளை அழைத்திருப்பார்களா? கண்டிப்பாக தமிழர்கள் என்ற பெயரில் டக்ளசையும், கூட்டணிகாரர்களையும்தான் கொண்டுபோய் உலகின் முன் தமிழர் தரப்பு என்று நிறுத்தியிருக்கும் சிங்களம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் தீர்வு என்று அடிக்கடி சிங்கள தேசம் சர்வதேசத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தது, இன்று புலிகளே இல்லை என்ன தீர்வு இதுவரை தமிழருக்கு வந்து சேர்ந்திருக்கிறது? சமகால நிலமைகளை கண்கூடே பார்த்துவிட்டு புலிகளையும் பாலஸ்தீனத்தையும் எந்த வகையில் ஒப்பிடலாம்?
  20. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல். பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார். கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார். பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா, இயல்பாகவே கர்வமும் கோப குணமும் அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான். அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார். அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது. அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான். சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.
  21. நிச்சயமாக புத்தன், அதுவும் தாயகத்திலிருக்கும் மக்களின் தேசிய உணர்வை நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை, துளிகூட சினப்பட்டதில்லை. அவர்கள் யுத்தகாலத்தின் பின்னரான சிங்கள அரசியலால் சிறிதளவாயினும் கிடைத்த வசதிகள் வாய்ப்பை கண்டு மயங்கியிருந்தால் சிங்கள அரசியலுக்கு சோரம்போயிருந்தால் டக்ளஸ் தேவானந்தா என்றைக்கோ வடக்கின் முதல்வராகியிருப்பார். இங்கே புலத்தில் வீதி ஒழுங்கை மீறும்போது சாதாரண காவல்துறை துரத்தி வந்தால் நடுங்குகிறவர்கள் எம்மில் எத்தனைபேருண்டு, அங்கிருப்பவர்கள் நிலை கழுத்தை சுற்றிய கருநாகம்போல் அத்தனை சிங்கள ஆயுத படைகள் புலனாய்வாளர்கள், ஆ ஊ என்றால் கொழும்பு நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தாலும், தாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர சிங்கள படைகளுக்கு நடுவே நுழைந்து அணி அணியாக உந்துருளிகளில் முள்ளிவாய்க்கால் நோக்கி போயிருக்கிறார்கள், இத்தனைக்கும் அவர்களில் பெரும்பான்மையினர் யுத்தம் நடந்த காலத்தில் பத்து வயசுக்குபட்ட பாலகர்களாயிருந்தவர்கள். நல்லூரில் திலீபனையும் , யாழ் கிளிநொச்சி முல்லை என்று எங்கும் நினைவேந்தலையும் நடத்தியிருக்கிறார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அதற்கு முன்னரான காலத்தில் எந்தநேரமும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற போர்காலத்தில்கூட பொங்குதமிழை நெஞ்சுரத்துடன் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒருசிலர் தலைவரின் பிறந்தநாளுக்கு சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து கொழும்புவரை கொண்டு செல்லப்பட்டு அடி உதையென்று உள்ளே போயிருக்கிறார்கள். இங்கே சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் எம்மில் எத்தனைபேர் தாயகம் போனால் முகத்தை காட்டி சிங்களம்முன் தம்மை அடையாளப்படுத்த தயாராயிருக்கிறார்கள்? ஆனால் அவர்கள் முற்றுமுழுதாக சிங்களத்தின் நடுவில் நின்றே குரலெழுப்புகிறார்கள். நிகழ்காலத்தில் ஓரிரு சிங்களத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் எம் தேசிய உணர்வை அடகு வைத்துவிட்டார்கள் என்றோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்துவிட்டார்கள் என்ற தொனிபடவோ கருத்துக்கொண்டால் அது அவர்கள் தன்மான உணர்வை கொச்சைபடுத்தும் செயலாகவே கருதுகிறேன். அவர்கள் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் என்றிருந்தால் சிங்கள அமைச்சர்கள் பலர் வடக்கிலிருந்தே உருவாகியிருப்பார்கள். இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.
  22. ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின், யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம் குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை. சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும் அதே மக்களும் மாணவர்களும் மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும் போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது. அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள் என வந்தால் இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.