Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று வரை 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் எஞ்சிய 6 சம்பவங்கள் காணி தகராறு போன்றவற்றால் இடம்பெற்றவையாகும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/315446
  2. எந்த கருத்து கணிப்பை வைத்து சொல்கிறார்? உள்ளூராட்சி தேர்தல் வருகிறது. தனது பலத்தை நாமல் நிரூபித்து காட்டலாம்.
  3. தனியார் காணிக்குள் அடாத்தாக விகாரை கட்டியது இனவாதம் இல்லையா?
  4. முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?
  5. 1989 கிளர்ச்சி தொடர்பில் சபையில் சூடான வாதம் 1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று சபையில் சூடான வாதங்கள் வெடித்தன. 1989 பொதுத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னே முன்னாள் அமைச்சரான தனது தந்தை எட்டு பேரைக் கொலை செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர பொய்யான கூற்றைச் சொன்னதாக குற்றம் சாட்டியபோது வாக்குவாதம் வெடித்தது. “என் தந்தை யாரையும் கொலை செய்ததில்லை.ஏனெனில் அவருக்குப் பைத்தியம் இல்லை,” என்று திருமதி கவிரத்னே கூறினார். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989 ஆம் ஆண்டு மாத்தளையில் 140 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதில் யார் ஈடுபட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது விரைவில் வெளியாகும், ”என்று அவர் கூறினார். இந்த நேரத்தில் குறுக்கிட்ட அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி கவிரத்ன அல்லது வேறு எந்த எம்.பி.யும் தனிப்பட்ட விஷயங்களை எழுப்புவதற்காக பாராளுமன்றத்தின் நேரத்தை வீணாக்க முடியாது என்றார். “ஒரு கட்சித் தலைவர் ஒரு முக்கியமான விஷயத்தில் நிலையியல் கட்டளைகள் 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பலாம். கூடுதலாக, வேறு எந்த எம்.பி.யும் சபாநாயகரைச் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி அவருக்கு விளக்கி, பின்னர் அமர்வுகளின் போது அந்த விஷயத்தை எழுப்பலாம். இருப்பினும், எந்த எம்.பி.யும் சபையில் தனிப்பட்ட விஷயத்தை எழுப்ப முடியாது,” என்று அவர் கூறினார். Thinakkural.lk1989 கிளர்ச்சி தொடர்பில் சபையில் சூடான வாதம்1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று […]
  6. கனடா கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி! சிவதாசன் 45 ஆவது பாராளுமன்றத் தொடருக்கான மத்திய தேர்தல், திகதி நிர்ணயிக்கப்பட்ட கனடாவின் தேர்தல் சட்டத்தின்படி, எதிர் வரும் அக்டோபர் 20, 2025 இல் நடக்க வேண்டும். இருப்பினும் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இத்திகதிக்கு முன்னரே இன்னுமொரு திடீர் தேர்தலை நடத்த ஆளுனர் அறிவிப்பைச் செய்ய முடியும். மாறாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையீனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டோ அல்லது அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கான பணம் முடக்கப்பட்டாலோ (Supply Bill) – இது வரவு செலவுத் திட்டம் மீதான தோல்வியாக அமைவது வழக்கம் – பாராளுமன்றம் கலைக்கப்படலாம். ஆனால் பிரதமர், கெட்டித்தனமாக, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததனால் அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகள் மார்ச் 24 இல் பாராளுமன்றம் கூடும்வரை பொறுத்திருக்க வேண்டும். இதையே தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேர்வ் அடிக்கடி கோரிக்கை விடுத்து வருகிறார். என்.டி.பி. ஜக்மித் சிங்கைப் பொறுத்தவரை அவரும் வாயளவில் தேர்தலுக்கான அறைகூவலை விடுத்து வந்தாலும் மக்களின் ஆதரவு அவருக்கு இன்னும் கை காட்டவில்லை. ட்றூடோவின் லிபரல் கட்சிக்குள் எழுந்த சுனாமியால் அவர் கரையொதுக்குப்பட கன்சர்வேட்டிவ் கட்சி அலை வேகமாகக் கரை நோக்கி வந்துகொண்டிருந்தது. லிபரல் கட்சி சிதறிச் சின்னாபின்னமாகி ஒதுக்குப்படுவதை எதிர்பார்த்து கட்சியும், தொண்டர்களும், – பாவம் கொள்கை வகுப்பாளர்களும் – சந்திர பயணத்துக்கு ஆயத்தப்படுத்திவரும் வேளையில் தெற்கே ட்றம்ப் என்ற எதிர் சுனாமி கன்சர்வேட்டிவ் அலையை – ஓரளவு தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த விடயத்தில் ட்றம்ப் ட்றூடோவுக்கு வாராது வந்த மாமணி. லிப்ரல் கட்சி உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ட்றூடோவுக்கு படலையைக் காட்டியதில் அவசரப்பட்டு விட்டோமோ என அங்கலாய்க்கும் இவ்வேளையில் ட்றூடோ சாதுரியமாகத் தனது வாரிசு ஒன்றை உள்ளே கொண்டுவந்து மீசையில் மண்படாமல் தப்பிக்கொண்டுவிட்டார். இதில் ட்றூடோவின் சாதுரியத்தை உதவிப் பிரதமர் முதற்கொண்டு, இதர புரட்சியாளர்கள் தவறாக எடைபோட்டுக்கொண்டு விட்டனர் எனவே நினைக்கிறேன். ஜான் கிறைத்தியேனைப் போலவே ஜஸ்டின் ட்றூடோவும் திட்டமிட்டுப் பழிவாங்கக் கூடியவர்கள் என்பதைப் பாவம் இவர்கள் அறிந்திருக்கவில்லை. ட்றூடோவுக்கு அடுத்தபடியாகக் கட்சிக்குள் இருந்த, வாக்குகளையும் மனங்களையும் கொள்ளை கொள்ளக்கூடிய அடுத்த தேவதை வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அலையைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆளுமை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணியை விட வேறெவருக்கும் இல்லை என ட்றூடோ நினைத்ததால் தனது நண்பி ஜோலியையும் ஓரம் தள்ளிவிட்டு கார்ணியை முன்தள்ளினார். இதற்காக அவர், ‘அடுத்த பிரதமர் நானே’ எனக் கனவுகண்டுகொண்டிருந்த கிறிஸ்ரியா ஃபிறீலாண்ட்டை ஓரம்கட்ட முனைந்தபோது எழுந்த பனிப்போரே ட்றூடோவை அவசரமாக வெளித்தள்ளியது. பிரதமராக இருப்பதற்கான ஆளுமை அவரிடம் இல்லை என்பதில் பலர் உடன்படுவார்கள். ஆனாலும் அதை ஒரு ‘பெண்ணீய’ விடயமாக மாற்றி அவரும் அவரது தோழிகளும் பிரசாரம் செய்தனர். முதன் முதலாகக் கனடிய அரசாங்கத்தில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்த ட்றூடோவின் மீது சுமத்தப்படும் இப்பழி அபாண்டமானது. லிபரல் அரசுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்படவேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால் பியர் பொலியெவின் கன்சர்வேட்டிவ் கட்சி கனடியர்கள் விரும்பும் மாற்று ஆட்சியைத் தரவல்லதா என்பதிலும் எனக்குச் சந்தேகமுண்டு. பியர் பொய்லியேவின் தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பொறுப்பானவர் ஜெனி பேர்ண்ஸ் எனப்படும் பெண். இவரது நிறுவனமாந ‘ஜெனி பேர்ண் அண்ட் அஸோசியேட்ஸ்’ எனப்படும் நிறுவனம் லொப்ளோஸ் போன்ற கொள்ளைக்கார நிறுவனங்களால் பதியப்பட்ட லொபியிஸ்ட். 2015 இல் இவரது வழிநடத்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியடைந்தது. இப்போது பியர் பொய்லியேவ் ஜெனி பேர்ண்ஸை ஆலோசகராக நியமித்திருக்கிறார். தெற்கே ட்றம்பின் சுனாமி புறப்பட்டவுடனேயே ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் போன்றவர்கள் கனடிய சுதேச வாகனங்களில் ஏறிப் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ட்றூடோவின் அதிர்ஷ்டமோ என்னவோ அவர் கையிலும் ஒரு மக் ட்றக் கிடைத்துவிட்டது. ஆனால் பாவம் பொய்லியேவ் இன்னும் மிதி வண்டியில் அப்பிளைக் கடித்துக்கொண்டு ஹாயாக வருகிறார். ட்றம்ப் சுனாமிக்கு எதிராகக் கனடிய தேசிய அலையில் இணைந்துகொள்ளாமால் தனியே ஓரமாகச் சைக்கிளோட்டிவருவது அவரது பலவீனத்தைப் புட்டு வைத்துவிட்டது. இதற்கு அவரது ஆலோசகரைத் தான் குறை சொல்ல வேண்டும். இன்னும் இரண்டரை வாரங்களில், மார்ச் 09, லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்ணி பதவியேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது ட்றூடோவுக்கு வெற்றி. ட்றம்பைப் பொறுத்தவரை பியர் பொய்லியெவ் மீது மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சண்டியர்கள் மீது தான் அவருக்கு கவர்ச்சி அதிகம். எனவே பொய்லியேவின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியிலிருந்தாலென்ன கார்ணியின் லிபரல் ஆட்சியிலிருந்தாலென்ன கனடா அவருக்கு 51 ஆவது மாநிலம் தான். இதை ட்றூடோவும், டக் ஃபோர்ட்டும் புரிந்துவைத்திருக்குமளவுக்கு பொய்லியேவ் புரியவில்லை என்பது ஆச்சரியம். சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பின்படி, 22,000 பேரிடம் கேட்டுப் பெற்ற முடிவுகள்: மார்க் கார்ணி 47.3 %, பியர் பொய்லியேவ் 45.64 %. அக்டோபர் மாதத்திற்குள் எவ்வளவோ மாறலாம். ஆனால் லிபரல் பாரவண்டியைத் தடம்புரட்டக்கூடிய ஆயுதங்கள் எதுவும் பியர் பொஇலியேவிடம் – இப்போதைக்கு – இல்லை. வரப்போகும் தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை ட்றம்பே தீர்மானிப்பார். அவரது நிலைப்பாடுகளில் மாற்றமேதும் ஏற்பட்டாலே தவிர, என்னைப் பொறுத்தவரை, பொய்லியேவ் பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டார் போலத் தெரிகிறது. (Image Courtesy: Wikipedia) https://veedu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2025-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae/?fbclid=IwY2xjawIpw2NleHRuA2FlbQIxMQABHaRDz-1rzuoX6ceojeiMtFTfV9wEbMdOTnxsJN2_63b_V8YPBae8MfBLCQ_aem_ZF0C_etelEb6BkdaTZGsPg#google_vignette
  7. தமிழ் மக்களை கொல்லும் போது ரசித்தவர்கள் சிங்களவர்களை கொல்லும் போது கவலையான விடயம் என கவலையடைகிறார்கள்.
  8. பாடல்: இன்று வந்த சொந்தமா பாடியவர்கள்: TMS , சுசிலா இசை: வேதா பாடல்: வாலி / கு.மா.பாலசுப்ரமணியம் இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே வெண்ணையை அள்ளி உண்டு வேங்குழல் ஊதி நின்று கண்ணனாக நீ இருந்த காலத்திலே என்னையே கொள்ளை கொண்ட புன்னகை வீசி நின்ற கன்னிகை ராதையாக தேடி வந்தாய் குயில் இசையும் குழல் இசையும் குழைந்திடும் வேளையிலே அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியது இன்று வந்த சொந்தமா கணையாழி கையில் தந்து துஷ்யந்தனாக வந்து காதல் மணம் புரிந்த காலத்திலே மானோடு நீ வளர்ந்து சகுந்தலையாய் இருந்து மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய். குளிர் நிலவும் மலர் மணமும் குலாவிடும் சோலையிலே அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியது இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே இன்று வந்த சொந்தமா....
  9. எங்களுக்கு ட்ஸ்கவுன்ட் கேட்டே பழகிப்போச்சு. சாவகச்சேரி மீன் சந்தையில் டிஸ்கவுன்ட் கேட்டு அதற்கு வாங்கிய செந்தமிழ் வடு இப்போதும் மறக்க முடியவில்லை.😁
  10. மேற்படி காணொளியில் விடுவிக்கப்படாத பணய கைதிகளும் காணப்பட்டனர். இஸ்ரேலிய மக்களிடம் தங்களுக்காக போராடும் படி கேட்டுக்கொண்டார்கள். போர் ஒரு தீர்வல்ல. நெத்தனியாகு நீ எங்களை கொன்று விட்டாய் போன்ற வசனங்களையும் கூறி இருந்தனர். இதனால் கடுப்பான நத்தனியாகு விடப்பட இருந்த பலஸ்தீனிய மக்களை இன்னும் விடுவிக்கவில்லை என அறிய முடிகிறது.
  11. பேரூந்தில் குண்டுகளை வைத்ததற்கும் மேற்கு கரையில் உள்ள அகதி முகாம்களில் ஒரு வருடத்துக்கு இராணுவத்தை (இஸ்ரேல்) நிறுத்துவதற்கும் சம்பந்தம் உண்டா?
  12. BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்கள் என்ற துயரத் தகவல் கிடைத்துள்ளது. மரணம் நேற்றிரவு சம்பவித்தது. திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம் தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடியாக இருந்தார். #பிபிசிதமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார். விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகத்துறையில் குறிப்பாக வானொலித்துறையில் அவர் ஆற்றிய பணி மகத்தானது. அவரது மறைவுக்கு ஈழநாடு பத்திரிகை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
  13. தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. வி.புலிகளை முகர்ந்து பிடிக்கிறோம் அல்லது அரசுக்கு எதிரான ஊர்வலங்களில் யார் யார் முன்னுக்கு நின்று செய்கிறார்கள் என்பதை முகர்ந்து பிடிக்கும் புலநாய்வு துறை இக்காடையர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை.
  15. வீரப் பையன், போட்டி தொடங்க முதலே இந்த கலாய்ப்பா? சொந்த மண்ணில் தோற்றால் எப்படி? நியுசிலாந்து எப்போழுதுமே நல்ல ஒரு சமனான குழு. (Bowling, bating& fielding)அவர்களுக்கும் அதிஸ்டத்துக்கும் எட்டா பொருத்தம்.
  16. Columnsசிவதாசன் இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி? இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையாரும் அப்படியான ஒருவரே. தனது நியூ யோர்க் தொடர்மாடிக் குடியிருப்புகளில் கறுப்பர்களுக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவர் மூத்த ட்றம்ப். ஓரளவு மனிதாபிமானம் கொண்ட இரண்டாவது மகனுக்கு சொத்துக்களைக் கொடுக்காமல் டொணால்டை மட்டும் தனது வாரிசாகக் கொண்ட தந்தையின் குணம் தான் மகனின் வியாபார வெற்றிக்குக் காரணமானது. அது குறுக்கு வழியாயினும் அதையே அவர் பின்பற்றுவார். இலான் மஸ்க் ட்றம்பை விட மோசமான இனத் துவேஷி. தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கானர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழி வாங்கலே அவரது தற்போதைய நடவடிக்கைகள். ட்றம்பைப் போலவே இவரும் வெள்ளையரல்லாதோரை இழிவாகப் பார்ப்பவர். இருவரும் தமக்குத் தேவையான போது எவரையும் பாவித்து விட்டுத் தூக்கி எறிபவர்கள். எதிரிகளை வஞ்சம் வைத்துப் பழி தீர்ப்பவர்கள். விவேக் ராமசாமி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இலான் மஸ்க்கின் ரெஸ்லா பங்குச் சந்தையில் முதலிட்டு பணக்காரர்களாகியவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இப்பணத்தில் எவ்வளவு இரத்தம் குழைந்திருக்கிறது என்பது பற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்கவோ அல்லது அக்கறையிருக்குமோ தெரியாது. கலிபோர்ணியாவிலுள்ள ரெஸ்லா ஆலையில் கறுப்பின மற்றும் லத்தீனோ மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பெருமூடகங்கள் வெளியே சொல்வதில்லை. ருவிட்டரில் அவருக்கு எதிரான தகவல்கள் வெளியாகின என்பதற்காகவே அதை அதிக விலை கொடுத்து ($40 பில்லியன்?) வாங்கியவர். ரெஸ்லா நிறுவனத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் ஆதரவானதும், புகழ் பாடுவதுமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கென ‘இன்ஃபுளுவென்ஸர்ஸ்’ எனப்படும் ‘தனிப்பட்டவர்களுக்கு’ அவர்களது வாகனப் பராமரிப்பிற்கென விசேட சலுகைகளைக் கொடுத்து விலைக்கு வாங்கி வைத்திருப்பவர். இலான் மஸ்கின் கலிபோர்ணியா ரெஸ்லா ஆலையில் இனத்துவேஷம் எல்லை மீறிப் போனதன் காரணமாகப் பதியப்பட்ட ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையிலிருக்கின்றன. அங்கு பணி புரியும் 6,000 கறுப்பினப் பணியாளர்களினால் அங்கு நடைமுறையிலிருக்கும் இனப் பாரபட்சம் பற்றியும் பணி ஒதுக்கீடுகள் பற்றியும் வழக்கு ஒன்று நிலுவையிலிருக்கிறது. தென்னாபிரிக்காவில் இருந்ததைப் போல பணியிடத்தில் வெள்ளையருக்கும் ஏனையோருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடுகள் வைத்திருப்பதற்கு எதிராக கலிபோர்ணியா அரசு வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறது. அங்கு இனத்துவேஷம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராக மத்திய அரசின் திணைக்களமொன்றும் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. ரெஸ்லா வாகனத்தின் ஆட்டோ பைலொட் தொழில்நுட்பத்தால் 8 பேர் இறந்த / காயப்பட்ட காரணங்களுக்காக இன்னுமொரு வழக்கு பதியப்பட்டு நிலுவையில் இருக்கிறது. இவற்றில் சில வழக்குகள் பணம் மூலம் இரகசியமாக மீளப்பெறப்பட்டுள்ளன. மீதியானவை ட்றம்பின் ஆட்சியில் தூக்கியெறியப்பட வாய்ப்புகளுண்டு. இலான் மஸ்க் ஒரு பரந்த உள்நோக்கத்தோடு (mission) தான் வெள்ளை மாளிகை முகாமுக்குள் நுழைந்திருக்கிறார். அது ஹிட்லரின் தோற்றுப்போன கனவை நனவாக்குவது. இதுவரை அவரது நடவடிக்கைகளை உற்று நோக்கினால் இதற்கான தடயங்களை அவர் தொடர்ச்சியாக விட்டு வந்திருக்கிறார். தென்னாபிரிக்காவில் அவரது குடும்பம் மிக வசதியாக இருந்தது. ஆபிரிக்கானர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அவர் அமெரிக்காவிற்கு வந்து கடும் உழைப்பால் இந்த நிலையை எட்டியிருக்கிறார். இதே வேளை இவரது தந்தையார் எறோல் மஸ்க்கும் மகனது கனவுக்கு எண்ணை ஊற்றித் தூபம் போட்டு வளர்த்தவர். பீட்டர் தீல் எனப்படும் இன்னுமொரு தனவந்தர் (எரோலின் நண்பர்). ஆதிக்கம் செலுத்தும் (இக்குழுமத்தை ‘பே பால் மாஃபியா என்றழைப்பர்) குழுமத்தில் இலான் மஸ்க்கும் அவரது தந்தையும் உள்ளார்கள். ஃபுளோறிடாவிலுள்ள ட்றம்பின் பிரத்தியேக குடியிருப்பான மார்-எல்-லாகோ வில் இந்த மாஃபியா ‘குடி கொண்டிருக்கிறது’. இக்குழுமத்தின் ஆலோசனையையே ட்றம்பின் காதுகளை எட்டும். ஒரு காலத்தில் ட்றம்பைக் காரசாரமாகத் தாக்கிய, தற்போதைய உதவி ஜனாதிபதியாக இருக்கும், ஜே.டி. வான்ஸை உதவி ஜனாதிபதியாக்கும் அளவிற்கு இந்த மாஃபியாவிற்கு ட்றம்பின் மீது ஆதிக்கமுண்டு. இலான் மஸ்க் குழுமம் ஹிட்லரை மீளப் புதுப்பிக்க முயல்கிறார்கள் என்றால் யூதர்களது மாஃபியா அவரைச் சும்மா விட்டிருக்குமென நினைக்கிறீர்களா? என உங்களில் சிலர் கேட்கலாம். தேர்தலுக்கு முன் இஸ்ரேல் மாஃபியா கமலா ஹரிஸுக்கே முழு ஆதரவாகச் செயற்பட்டது. இருப்பினும் ட்றம்பின் மீதான பிடியையும் அவர்கள் தளர்த்தவில்லை. பிளான் ‘பி’ யுடன் அவர்கள் தயாராகவே இருந்தார்கள். யூதரான ட்றம்பின் மருமகன் அதற்குப் பொறுப்பு. ஆனாலும் உறவுகள் என்று வரும்போதும் ட்றம்ப் தன் சுயநலத்தை மட்டுமே கவனிப்பவர் என்பது அவரது சகோதரர் விடயத்தில் காட்டப்பட்டது. இதனால் ட்றம்ப் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தவே அவர் மீதான கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது ஒரு சூசகமான தகவல். உலக ஆதிக்கத்தை முன்வைத்தே அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டமைக்கப்பட்டது. வர்த்தகம் அதன் முதல் கருவி. இதுவரை காலமும் ஜனநாயக, குடியரசு கட்சிகள் இவ்விடயத்தில் இலக்கை விட்டு மாறவில்லை. ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ எனச் சூசகமாகக் குறிக்கப்படும் ஆளும் வர்க்கம் இதைத் திறம்பட நிர்வகித்து வந்தது. இந்த விடயத்தில் ட்றம்ப் ஒரு வெளிவட்டக்காரர் (outlier). இந்த எஸ்ராபிளிஷ்மெண்டிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவதே அவரது நோக்கம். இந்த எஸ்ராபிளிஷ்மெண்டில் இஸ்ரேல் லொபி போன்றவையும் அடக்கம். இதனால் அமெரிக்க கொள்கை வகுப்பு, பாதுகாப்பு, உலக ஆதிக்கம் போன்றவற்றை இக்கூட்டு வெற்றிகரமாக செயற்படுத்தி வரமுடிந்தது. இதனிடமிருந்து அமெரிக்காவை வெளியே எடுத்து ‘அமெரிக்கா முதலில் அமெரிக்கர்களுக்கே’ என்ற சுலோகத்தோடு ட்றம்ப் முதல் ஆட்சியைத் தொடங்கினார். அப்போது அவரது திறமைகள், தகமைகள் அதிகம் அறியப்படாதவை. அப்போது இவரை முன்தள்ளியது ஸ்டீவ் பனன், கொச் சகோதரர்கள் போன்ற அமெரிக்க-முதல்வாதக் கொள்கை வகுப்பாளர்கள் / தனவந்தர்கள். இவர்களும் வெள்ளை-முதல் வாதக் குழுவாக இருந்தாலும் இலான் மஸ்க் போன்று ஹிட்லர் மோகிகளல்ல. முதலாவது ஆட்சியில் ட்றம்பின் பலம் / பலவீனங்களை அவதானித்த ‘பே பால் மாஃபியா’ அவரது இரண்டாவது வருகையைத் திட்டமிட்டது. ருவிட்டர் கொள்முதல் தொடக்கம் ட்றம்பின் தேர்தல் செலவுகளைப் பொறுப்பேற்றது வரை ($300 மில்லியன்) இலான் மஸ்க்கின் திட்டம் எனக் கூறப்படுகிறது. இப்போது ட்றம்ப்பின் பிரத்தியேக வாஸஸ்தலத்தில் உணவுண்பது தொடக்கம் வெள்ளை மாளிகையில் மகனைக் கொண்டுவந்து (இன்னும் சில பத்து வருடங்களில் அவனே ஜனாதிபதி!) படம் காட்டுவது வரை மஸ்க்கும் ட்றம்பும் இணைபிரியா நண்பர்கள். இலான் மஸ்க்கின் / குழுமத்தின் முதல் நோக்கம் அமெரிக்காவை இஸ்ரேலின் பிடியிலிருந்து விடுவிப்பது எனவே நான் நம்புகிறேன். இதில் ட்றம்ப் ஓரளவு இணங்கிப் போவதாகவே தெரிகிறது. ட்றம்பின் கொலை முயற்சியின் பின்னால் இஸ்ரேல் இருப்பது குறித்த சந்தேகம் ட்றம்பிற்கு இருப்பதனால் தான் அவர் இலான் மஸ்க்குடன் நெருக்கமாகியிருக்கிறார் போலத் தெரிகிறது. ட்றம்பின் ஜனாதிபதி பதவியேற்பின்போது இலான் மஸ்க் தனது நாஜி சல்யூட் மூலம் தனது ஹிட்லர் விசுவாசத்தைப் பகிரங்கமாகவே காட்டியிருப்பது இஸ்ரேல் லொபிக்கு பயங்கர கடுப்பாகியிருக்கும். எனவே அவர்கள் இலான் மஸ்க் மீதான பரப்புரைகளை, மறைமுகமாக, ஏவ ஆரபித்திருப்பது தெரிகிறது. ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ இல் இஸ்ரேல் லொபி நீண்டகாலமாக ஊடுருவி இருப்பதால் பெண்டகன், எஃப்.டி.ஏ, டி.ஓ.ஜே. (நீதித் துறை) போன்ற திணைக்களங்கள் இலான் மஸ்க்கின் இறகுகளைக் கத்தரிக்க முயற்சிகளை மேற்கொள்கின்றன. இவை நடைபெறும் என்று எதிர்பார்த்துத் தான் பட்டேல், கிப்பார்ட், ஆர்.எஃப்.கே போன்ற விசுவாசிகளை மஸ்க் குழுமம் உள்ளே அனுப்பியிருக்கிறது. இவர்களும் காரியங்கள் நிறைவேறியதும் விவேக் ராமசாமியைப் போல விரைவில் விரக்தியுடன் வெளியேறத் தள்ளப்படலாம். ஏற்கெனவே நடைமுறையிருந்தும் அமுக்கி வாசிக்கப்பட்ட இன்னுமொரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலிருந்து ஆபிரிக்கான வெள்ளையர்களை அமெரிக்காவிற்கு குடியேற வைக்கும் முயற்சி. தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெறுவதாகப் பெரிதாகப் பரப்புரை செய்யப்படும் (X / ருவிட்டரில்) ஒரு விடயம் அங்கு வெள்ளை விவசாயிகள் கறுப்பின மக்களால் ‘கொலை செய்யப்படுவது’ பற்றியது. அமெரிக்காவிலிருந்து வெள்ளையரல்லாதோரை நாடு கடத்திவிட்டு வெள்ளையரை மட்டும் குடியேற்றும் இத்திட்டம் ‘பே பால் மாஃபியா’வினுடையது. அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பலவந்தமாக விலங்குகளிடப்பட்டு மந்தைகள் போல இழிவான முறையில் மூன்று விமானங்களில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக இந்திய அரசு கூட மெளனம் சாதிக்கிறது. இது காளிஸ்தான் போராட்டத்தை மையமாகக் கொண்ட எதிர்வினையாகவும் இருக்கலாம். இருப்பினும் இப்பரப்புரை ட்றம்பின் ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. லத்தீன் அமெரிக்க குடிவரவினர் விடயத்தில் இந்தளவு துவேஷமோ, இழிவான செயல்முறைகளோ காட்டப்படாமைக்குக் காரணம் அமெரிக்க வெள்ளையர்களுக்குத் தேவையான, அவர்களது தோட்டங்களில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்யக்கூடிய நவீன அடிமைகள் இங்கிருந்துதான் வருகிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு அவர்கள் இப்போதும் அவசியமானவர்கள். இந்தியர்கள் அப்படியானவர்களில்லை. சமீபத்தில் இலான் மஸ்க்கின் தந்தையார் எரோல் மஸ்க் கொடுத்த ஒரு நேர்காணல் மகனது X தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் அவர் ஒரு அதிர்ச்சி தரும் பொய்யொன்றைக் கூறுகிறார். அதாவது, பராக் ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவரது மனைவி ஒரு ஆண் என்றும் கூறுகிறார். இது வேண்டுமென்றே வெளியிடப்பட்ட ஒரு காணொளி. இதற்கு எதிராக எந்தவித எதிர்வினைகளும் காட்டப்படவில்லை. காணொளிக்கு பல இலட்சம் விருப்புக்குறிகள் இடப்பட்டிருந்தன. வெள்ளைத் தேசியம் உலகம் முழுவதும் மீழெழுச்சி பெற்று வருவது இப்போதல்ல. பராக் ஒபாமாவின் தெரிவிலிருந்து ஆரம்பமாகியது இது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் மேற்கு மேற்கொண்ட ஆட்சிக் கலைப்புகள் உருவாக்கிய அகதிகள் மேற்கு நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததன் நேரடி எதிர்வினையே வெள்ளைத் தேசியத்தின் மீழெழுச்சி. பிரான்ஸின் லூ பென், இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, தற்போதைய ஜேர்மனியின் எதிர்க்கட்சியான ஏ.எஃப்.டி. தலைமை ஆகியவர்களின் வரவு தற்செயலானதல்ல. அவர்களும் ஒருவகையில் தமது இனத் தனித்துவத்தைக் காப்பாற்ற முயல்வதாக இருந்தாலும் மஸ்க் போன்றோரின் திட்டம் வெள்ளை இனத்தின் பெருக்கமும் ஆதிக்கமுமே. அமெரிக்காவில் சுத்தமான வெள்ளை இனத்தின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது. மாறாக இதர இனங்களின் எண்ணிக்கை அதி வேகமாக அதிகரித்து வருகின்றது. இதை மனதில் கொண்டுதான் மஸ்க் போன்றவர்கள் வெள்ளையினத்தவர் கருத்தடை செய்யக்கூடாது, அதிக குழந்தைகளைப் பெறவேண்டுமென போதித்து வருகிறார்கள். மஸ்க் வெவ்வேறு பெண்கள் மூலம் 13 குழந்தைகளைப் பெற்றதும், ஓரினச் சேர்க்கையை வெறுப்பதும், கருத்தடையைத் தடைசெய்ததும் இப்பின்னணியில் பார்க்கப்படவேண்டியவை. இஸ்ரேல் மாஃபியாவோ வெள்ளையினம் உட்பட இதர இனங்களின் பலம் குறையவேண்டுமென்பதில் குறியாகவிருக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் ஓரினக் கல்யாணம், கருத்தடை போன்ற நடைமுறைகளையும் தீவிர ‘முற்போக்குக் கொள்கைகளையும்’ ஊக்குவிக்கிறார்கள் எனவும் இதற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் அமெரிக்கர்களின் வரிப்பணம் போன்றவற்றைச் செலவு செய்கின்றது எனவும் மஸ்க் தரப்பு குற்றம் சாட்டுகிறது. அரச வினைத்திறனுக்கான ஆணையம் (டோஜ்) என்ற திணைக்களத்தை மஸ்க் கைப்பற்றியது மேலே குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரச மானியங்களை நிறுத்துவதற்கே. இதில் ‘யூ.எஸ்.எயிட்’ நிறுவனம் மீது மஸ்க்கிற்கு ஒரு தீராத பகையுண்டு. ட்றம்ப் ஆட்சியேறியதும் அவரைக் கொண்டு மஸ்க் முதல் கைவைத்தது ‘யூ.எஸ்.எயிட்’. இதன் பின்னால் ஒரு வரலாறு உண்டு. ஜனாதிபதி கென்னெடியின் பதவிக் காலத்தில் ‘கிறீன் பெரே’ என்றொரு இராணுவ பிரிவை அவர் உருவாக்கினார். அதன் பொதுமக்கள் பிரிவாக (சிவிலியன்) உருவாக்கப்பட்டதே ‘யூ.எஸ்.எயிட்’. அப்போது நிலவிய சோவியத் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த உலக நாடுகளுக்குச் சென்று மக்களுடன் ஊடாடி மக்கள் அமைப்புகளுக்கு நிதிகளை வழங்கி அவர்கள் சோவியத் பிரச்சாரங்களுக்கு எடுபடாமல் செய்வதற்காகவே இந்த ‘யூ.எஸ்.எயிட்’ என்ற இராணுவ / மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க கண்டத்தில் இந்த சோவியத் விரிவாக்க முயற்சிகள் அப்போது வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதைய றொடீசியா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மொசாம்பிக் எனப் பல நாடுகளும் அமைப்புக்களும் இலகுவாக சோவியத் சார்பு நிலையை எடுத்தபோது தென்னாபிரிக்காவைத் தமது பக்கம் வைத்திருக்க கென்னெடி எடுத்த முயற்சிகளிலொன்றுதான் இந்த யூ.எஸ்.எயிட்டின் ஆரம்பம். தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி சுதேச மக்களிடம் கொடுத்ததன் மூலம் கென்னெடியின் கனவு ஓரளவு வெற்றி பெற்றது. 1988 இல் வெள்ளையர்களின் ஆட்சி பறி போனதும் தனது பெரும் சொத்துக்களை அள்ளிக்கொண்டு சடுதியாக அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாகக் குடியேறியது தான் மஸ்க் குடும்பம். இதைச் சாத்தியமாக்கியது ‘யூ.எஸ்.எயிட்’ என்ற காரணத்தல் அதில் வெஞ்சினம் கொண்டிருந்த மஸ்க் அதிகார பலம் கிடைத்ததும் ‘யூ.எஸ்.எயிட்’ மீது பாய்ந்ததற்கு இப்பழிவாங்கலே நோக்கம். என்கிறார் டேவி ஒட்டன்ஹைமெர் என்ற வரலாற்றாசிரியர். எனது அனுமானம் இப்போது சரியெனப் படுகிறது. இந்த வரலாற்றாசிரியர் ஒரு யூதர். வெள்ளை தேசியத்தின் எழுச்சியால் பாதிக்கப்படப் போவது இஸ்ரேல் / யூதரின் அமெரிக்க ஆதிக்கம். அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளைத் தேசிய சக்திகளினால் இஸ்ரேல் லொபியின் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்க ஆட்சி பிடுங்கப்பட்டிருக்கிறது. இதை இஸ்ரேல் மாஃபியா சும்மா பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்ரேல் லொபி மஸ்கின் ஆதிக்கத்தைக் குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முனைப்புக் காட்டும். மஸ்கிற்கு எதிரான பரப்புரைகளும் சிலவேளைகளில் வன்முறைகளும் இனி வரும் காலங்களில் எதிர்ப்பர்க்கப்படலாம். அவரது நிறுவனங்கள், பண்டங்கள் மீது பல பொய்கள், திரிபு படுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்படலாம். மஸ்கிற்கு இப்போதுள்ள பலம் அவரது பணம் மட்டுமே. அதே வேளை, விரைவில் அவரது ‘வெள்ளைச் சேனை’ தனது கட்டமைப்பைப் பலப்படுத்துவதுடன் தனது ஆயுதக் கிடங்குகளையும் விஸ்தரிக்க முற்படலாம். இக்காலத்தில் ஏன் ட்றம்ப் தனது கூட்டாளிகளும் அயலவர்களுமான கனடா, மெக்சிக்கோவுடன் பொருதுகிறார் என நீங்கள் கேட்கலாம். அமெரிக்காவைப் பலவீனப்படுத்துவதில் முன்னணியாகச் செயற்படும் இஸ்ரேலின் ஒரு நோக்கம் அங்குள்ள வெள்ளை இனத்தைப் பலவீனப்படுத்துவதே. கனடாவிலிருந்தும், மெக்சிக்கோவிலிருந்தும் வரும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை நகர்த்துவதில் மொஸாட் ஏஜெண்டுகளுக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் மொஸாட் தனது சிறு படைகளை வைத்திருக்கிறது. அங்குள்ள போதை வஸ்துக் கும்பல்கள் பாவிக்கும் நவீன ஆயுதங்கள் அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குரியது. இக்கும்பல்களுக்கும், பிரிவினைவாதக் குழுக்களுக்கும் ஆயுதங்களையும், பயிற்சிகளையும் கொடுப்பது மொஸாட் என்பது பரவலாத் தெரிந்த செய்தி. அமெரிக்காவின் எதிரிகளான லத்தீன் அமெரிக்க நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதும், சதிகளால் ஆட்ட்சிகளைப் புரட்டுவதும் இந்த மொசாட் கும்பல்களின் வேலைதான். சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு உதவிகளைச் செய்வதன் மூலம் அதிக இலாபமடைவது இந்த போதைவஸ்துக்க் கும்பல்கள் (கார்ட்டல்கள்). இதை ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ அரசுகள் அறியாமலில்லை. பைடன் அரசு, “இச்சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் எல்லைகளைக் கடந்ததும் அவர்களை பஸ்களில் ஏற்றி அவர்களுக்கு மானியங்களைக் கொடுக்கிறது” என இப்போதும் குற்றஞ்சாட்டுபவர் ட்றம்ப். பைடன் அரசு ஏறத்தாழ ஒரு இஸ்ரேலிய அரசு எனப் பலரும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுமளவுக்கு விடயங்கள் நடைபெற்று வந்தன. எனவே கனடிய, மெக்சிக்க எல்லைகளைக் கண்காணிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஆயுதமே ட்றம்பின் ‘எல்லை வரி’. கொலம்பியாவுடன் இதே விளையாட்டை விளையாடி அதில் வெற்றிகண்டுவிட்டார் ட்றம்ப். கனடாவுக்கு வந்த 20,000 இந்திய மாணவர்களைக் காணவில்லை என்பதைக் கனடிய அரசே ஒத்துக்கொள்ளும்போது ட்றம்பின் கொக்கரிப்பில் உண்மை இருக்கிறது என்பது புரிந்துவிடும். அடுத்தடுத்த வருடங்களில் ஐரோப்பாவில் ஏற்படவிருக்கும் பல ஆட்சி மாற்றஙக்ள் மஸ்கிற்குச் சாதகமாக அமையப் போகின்றன. ட்றம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ‘ஐரோப்பா சிவில் யுத்தம் ஒன்றிற்குத் தயாராக வேண்டும்’ என மஸ்க் அறைகூவல் விடுத்திருந்தது பிரித்தானிய பிரதமரால் (இவரும் பிறப்பால் ஒரு யூதர்) பலமாகக் கண்டிக்கப்பட்டது. யூக்கிரெய்னை மண்டியிடச் செய்வதன் மூலம் ரஸ்யாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதன் பின்னணியில் இந்த யூத எதிர்ப்பு இருக்கிறதோ தெரியாது. செலென்ஸ்கியும் ஒரு யூதர். இன்று / நாளை சவூதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் யூக்கிரெய்ன் பற்றிய அமெரிக்க – ரஸ்ய பேச்சுவார்த்தையில் வேண்டுமென்றே செலென்ஸ்கி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு வேறு காரணம் எதுவாக இருக்க முடியும்? இதே வேளை யூக்ரெயினைக் காரணம் காட்டி ரஸ்ய எல்லையில் நேட்டோவை நிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியை இலான் மஸ்க் தவிடுபொடியாக்கி விட்டார். போரின் ஆரம்ப காலத்திலிருந்தே அவர் யூக்கிரெய்னை விட ரஸ்யாவுக்கே அதிக விசுவாசமாக இருந்தவர். ஐரோப்பாவில் சிவில் யுத்தம் நடக்கவேண்டுமென அவர் கோரியது காரணதோடு தான். எனவே, நடைபெறப்போகும் இந்த மஸ்க் – இஸ்ரேல் பனிப்போரில் உலகிற்கு நல்லதும் கெட்டதும் நடக்கலாம். அமெரிக்கா மீதான இஸ்ரேலின் ஆதிக்கம் குறைக்கப்படுவது உலகிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லது தான். ஆனால் இதன் மூலம் மஸ்கின் பலம் அதிகரிக்குமானால் போத்தலுக்குள் இருக்கும் ஹிட்லரின் ஆவியை வெளியே விட்டதற்குச் சரி. நான் ஏற்கெனெவே பல கட்டுரைகளில் கூறியது போல அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறப் போகும் இந்த இரண்டு தரப்பினரதும் பலப்பரீட்சை எஞ்சிய உலகிற்கு ஒரு இடைவேளையை வாங்கித் தரப் போகிறது. இப்பனிப்போரில் இரண்டு தரப்பும் தோற்றுப்போனால் அது உலகிற்கு வெற்றி. அதே வேளை இலான் மஸ்க் அமெரிக்காவை ஒரு தென்னாபிரிக்கா ஆக்கி விடுவாரேயானால் அது எல்லோருக்கும் தோல்வி. (Image Courtesy: Royal Society / Wikipedia) |இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? |சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனத...
  17. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
  18. இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல். இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக்கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள். இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும். அண்ணாவுக்குப் பிறகு இவ்விதமானதோர் ஆளுமையைத் தமிழ் நாடு காணவில்லை. அதனால்தான் அன்று அண்ணாவின் மறைவின்போது தமிழகமே திரண்டு வந்தது. அது ஒரு உலக சாதனை என்று கின்னஸ் பதிவு செய்திருக்கின்றது.
  19. —BGM— ஆண் : உயிர் உருவாத… உருகுலைக்காத… என்னில் வந்து சேர… நீ யோசிக்காத… ஆண் : திசை அறியாத… பறவைய போல… பறக்கவும் ஆச… உன்னோடு தூர… பெண் : வாழ்க்க தீர தீர… வாயேன் நிழலா கூட… சாகும் தூரம் போக… துணையா நீயும் தேவ… ஆண் : நான் உன் கூட… —BGM— பெண் : உன் நெனப்பு… நெஞ்சுக்குழி வர இருக்கு… என் உலகம் முழுசும்… உன்னை சுத்தி சுத்தி கெடக்கு… பெண் : உன் நெனப்பு… நெஞ்சுக்குழி வர இருக்கு… என் உலகம் முழுசும்… உன்னை சுத்தி சுத்தி கெடக்கு… பெண் : மனசுல ஒரு வித வலிதான்… சுகமா சுகமா… எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்… நிஜமா நிஜமா… பெண் : கண்ணே கண்ணே… காலம் தோறும்… என்கூட நீ மட்டும்… போதும் போதும் நீ நாளும்… —BGM— ஆண் : நான் முழுசா… உன்னை எனக்குள்ள பொதைச்சேன்… என் உசுர அழகே… உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்… ஆண் : நான் முழுசா… உன்னை எனக்குள்ள பொதைச்சேன்… என் உசுர அழகே… உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்… ஆண் : இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும்தான்… உறவா வரணும்… மறுபடி உனக்கென பிறந்திடும்… வரம் நான் பெறணும்… ஆண் : பெண்ணே பெண்ணே… வாழ்க்க நீள… என் கூட நீ மட்டும்… போதும் போதும் நீ நாளும்… —BGM—
  20. பிளேன் தலை கீழா விழுந்தாலும் அக்காவின் பகிடிக்கு குறைவில்லை.😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.