Everything posted by suvy
-
சிரிக்கலாம் வாங்க
Variety of images Lakshmi Venkatesan · · 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்). 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க). 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்). 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்). 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்). 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான். (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்). 90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்). 100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது). அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்.. என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம். வாழ்வோம் மகிழ்ச்சியாக.. Voir la traduction
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இரு மனங்களை இணைப்பது உறவுப்பாலம் இரு கரைகளை இணைப்பது இந்தப்பாலம் .......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
Variety of images Reena Mayekar · · சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள், அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். சிறிது நேரம் முன்பு, நான் சோளக்கற்றை ஒன்றை கொதிக்கவைத்தேன், சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் நனைத்தேன் .... !! வியட்நாமிய கால்நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் நான் வேதனையுடன் அலறும்போது, என்னிடம் வீட்டில் (கோதுமை) மாவு இருக்கிறதா என்று கேட்டார். நான் கொஞ்சம் கொடுத்தேன், அவர் என் கையை மாவில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார். வியட்நாமில் ஒரு பையன் உடம்பில் நெருப்பு பற்றி கொண்டதாக அவர் என்னிடம் கூறினார். அப்போ யாரோ ஒருவர் அவனது உடலெங்கும் ஒரு சாக்கு கோதுமை மாவு தூவி தீயை அணைக்க முயன்றார். அதனால் தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார் !!!! அவர் சொன்னது போல, நான் 10 நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன், பின்னர் அதை அகற்றிவிட்டேன், அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் கூட நான் பார்க்க முடியவில்லை. எனவே எப்போதும் உங்கள் வீட்டில் குறைந்தபட்சம் ஒரு கோதுமை மாவு பாக்கெட் வைத்திருங்கள். கோதுமை மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால், எரிந்த நோயாளிக்கு 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்தினால் அது உதவுகிறது.......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Variety of images Reena Mayekar · Sntsoreopdf3a u1f1ha261hi968t39ul5112m10h4cfauh211f3u776h6gl · கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை என்னவென்றால்ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது. இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது பெரும் சிக்கலாக மாறிவிட்டது. சரியாக நிறுவப்படவில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும். இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது. இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, தங்கள் சலுகைகளை அனுப்பினர். கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர். அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்,. மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார். இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம்பதிலளித்தது. அதன்பின், டெண்டரையும் நிரப்பினார். அனைத்து சலுகைகளையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார். இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு அவர் நிறுவனத்திடம் கேட்டார். அந்த நாள் இறுதியாக வந்தது. ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை எப்படிச் செய்வான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை. சரி, முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன. குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது. இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது. 4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது. இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது. வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது. கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்...... Voir la traduction- குட்டிக் கதைகள்.
Palani Yappan · #வெற்றியின்_ரகசியம் ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் "குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ... முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர், போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், "குருவே , நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது... அஸ்ட்ரோ வெ.பழனியப்பன் Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
Tamil Micset Singapore · “மீனை உண்ணும் மீன்” – மிகவும் அரிதான புகைப்படத்தை எடுத்து சர்வதேச விருதை வென்ற சிங்கப்பூரர்! #SingapoeTamilNews | #TrendingPhoto | #SingaporeTrending | #SGNews Voir la traduction- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : முகத்தை எப்போதும்… மூடி வைக்காதே… எனது நெஞ்சத்தில்… முள்ளை தைக்காதே… ஆண் : என் கண்மணி காதோடு சொல்… உன் முகவரி… ஓ ஓ… எந்நாளுமே என் பாட்டுக்கு… நீ முதல் வரி… ஹே ஹே ஹே… ஆண் : ஏ உன்னுடைய நெற்றி… உன்னை பற்றி கூறுதே… உள்ளிருக்கும் பொட்டு… உந்தன் குட்டு சொல்லுதே… ஆண் : என்னுடைய பார்வை… கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ… ஓஓ… எனக்கிருக்கும் சக்தி… பரா சக்தி புரிஞ்சுக்கோ… ஆண் : கால் கொலுசுதான்… கல கலக்குது… கையின் வளையல்… காது குளிர கானம் பாட… ஹே ஹே… ஆண் : போட்டிருக்கும் கோஷா வேஷம்… பேஷா பொருந்துதே… பெண் அழகு மொத்தம்… காண சித்தம் விரும்புதே… ஆண் : வெண்ணிலாவின் தேகம்… மூடும் மேகம் விலகுமா… வண்ண உடல் யாவும்… காணும் யோகம் வாய்க்குமா… ஆண் : கொஞ்சம் கொழுப்பு… கொஞ்சம் திமிரு… எனக்கும் இருக்குஉனக்கு மேலே… அன்பு தோழி ஹே ஹே…....! --- அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் .........! 😂- கொஞ்சம் சிரிக்க ....
- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் எண்ணம் இனிப்பதேனோ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் :{ இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் .....! --- ரோஜாவை தாலாட்டும் தென்றல் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
World of Wonders · Rejoindre Peter John · · Keeping them eggs warm ... what a picture!!! Some photos speak a thousand words. Just WOW! David Guinn......! தனது முட்டைகளை பனியில் இருந்து காப்பாற்றி அடைகாக்கும் கழுகு ......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ் .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.