Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மல்லிகை என் மன்னன் மயங்கும் ........! 💞
  2. வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் பெண் : மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும் பெண் : ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் நானும் செவக்க மாப்பிள்ளை வேணும் பெண் : தாலி கட்டியதும் தாளிக்க வேணும் ஆண் : தாமர பூவும் இருக்கு சந்தன பூவும் இருக்கு ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா பெண் : ஹா கற்பனை எல்லாம் உனக்கு கட்சிதமாக இருக்கு கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா ஆண் : ஹே பொத்தி மறைச்ச ஆசைகளாலே பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே பெண் : ஹான் கத்திரி வெயிலு கொதிப்பது போலே காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே ஆண் : காதல் பொறப்பது கழுத்துக்கு கீழே பெண் : ஹே வெத்தல போட்ட உதட்டில் நித்திரை போட துணிஞ்சி சித்திரவதை செய்ய போறியா ஆண் : ஹே வெத்தல கையில் எடுத்து முன்னும் பின்னும் தொடச்சி காம்பு கிள்ளி தாரேன் வாரியா பெண் : ஏ சுத்தி வருவது சோதிக்க தானே பெண் : சுந்தரி அழகு சாமிக்கு தானே ஆண் : கற்பூரம் எதுக்கு காமிக்கதானே கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே பெண் : சரணம் முடிஞ்சா பல்லவி தானே......! --- கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்---
  3. மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எளிமையாகச் செய்வதற்கு ........! 👍
  4. அம்மான்னா யாருக்குத்தான் பிடிக்காது .........! 👍
  5. பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை........! 😂
  6. வணக்கம் வாத்தியார்.......! ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி......! ---ஆனந்த யாழை மீட்டுகிறாய்---
  7. வெங்கடேஷ் ஆறுமுகம் · #பூரிக்கிழங்கு_புதினம் பூரிப்புடன் புஸ்ஸென்று பலூன் போல உப்பலாக இருக்கும் பூரியையும் அதற்குத் தரும் கிழங்கு மசாலாவையும் ஆசையாக ருசிக்காமல் விடுவது யார்! நல்ல பூரிக்கு அடையாளமும் அதை எவ்வாறு ருசிப்பது என்பதைப் பற்றியுமே இப்பதிவில் சொல்ல விழைகிறேன்.. நான் பெற்ற இன்பம் இனி நீங்களும் பெறவே. என் தந்தையார் ஸ்வீட் மற்றும் காரவகைகளில் மட்டுமல்ல.. பூரி செய்வதிலும் நளன்.! பூரி ஒரு பக்கா பர்ஃபெக்‌ஷன் தயாரிப்பு முறை கொண்ட உணவென்பார் அவர். மதில் மேல் பூனை போல நம்மை குழப்பும் அதன் தயாரிப்பு நேர்த்தியை முதலில் தெரிந்து கொள்ளுதல் மிக அவசியம் பூரி தேய்ப்பதற்கு முன் பிசையும் மாவின் பதம் முக்கியம். பிசையும் மாவு இறுக்கமாக இருந்தால் பூரி உப்பாது விறைப்பாகும், சற்று தளர்த்தியாக இருந்தால்.. எண்ணெய் குடிக்கும், அப்பா மாவு பிசைவது ஒரு நேர்த்தியான மசாஜ் கலைஞன் மசாஜ் செய்வது போல இருக்கும். நன்கு மாவை பிசைந்தபின் இரு கை முஷ்டிகளை இறுக்கி முதுகில் குத்துவது போல அதைக் குத்திப் பிசைவார்! தேவைக்கு மட்டுமே எண்ணெய் சேர்த்துக் கொள்வார். பூரி மாவை பிசைந்து அதை புடலங்காய் போல நீளமாக உருட்டி அதை சின்னச்சின்ன துண்டுகளாக.. கத்தியால் அறுத்தால் அவை வெண்ணெய் போல அறுபட வேண்டும் கத்தியில் மாவு ஒட்டக்கூடாது. அப்படி வந்துவிட்டால் நீங்கள் பிசைந்த மாவின் பதம் பக்கா! மற்றொரு முறையும் உள்ளது, பிசைந்த மாவை சிறிய பட்டாணி அளவு கிள்ளி ஆட்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் அமுக்கினால் மாவு விரல்களில் ஒட்டக் கூடாது! அதன் பிறகு பூரி தேய்க்கும் முறை.. உருண்டைகளை கையால் உருட்டி பூரிக்கட்டையால் இரண்டு தேய் தேய்த்து.. மாவை மீண்டும் கையில் எடுத்து அதனை நான்கு பக்கமும் உள்நோக்கி மடித்து மீண்டும் வட்டமாகத் தேய்ப்பார்! ஏனெனில் அப்படி தேய்க்கும் பூரி தான் பாம்பு படம் எடுத்தது போல புஸ்ஸென்று உப்பும்! பூரி பொரிக்கும் போது பொரிக்கும் எண்ணெயின் சூடும் மிக முக்கியம். எண்ணெய் மிக அதிகமாக.. கொதிக்கவும் கூடாது சுமாரான சூட்டில் இருக்கவும் கூடாது. பூரி சூடாக சாப்பிட வேண்டிய உணவு! ஓட்டல்களில் அதை முன்பே சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள்! ஆர்டர் செய்த பின்பே பூரி போடும் முறையை 1968 ஆண்டுகளில் தமிழக ஓட்டல்களில் முதன் முறையாக அறிமுகப் படுத்தியவர் ஆறுமுகம் என்ற பெருமை அப்பாவுக்கு உண்டு! அப்பாவே பூரி செய்வதில் வசிஷ்டர்.! அவர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விசுவாமித்திரர் முருகன் மாமா.! மதுரையில் ஆரியபவன் முருகன் என்றால் பலருக்குத் தெரியும். அப்படி என்ன ஸ்பெஷல் அவர் செய்யும் பூரியில்! முருகன் மாமா ஆயிரம் பூரிகள் தேய்த்தாலும், அத்தனையும் காம்பஸ் வைத்து போட்ட வட்டம் போல கனக்கச்சிதமாக இருக்கும் ஒன்றின் மீது ஒன்றாக அவற்றை அடுக்கினாலும் ஏதோ.. மிஷின் கட்டிங் செய்தது போல அத்தனை பூரியும் ஒரே அளவில் இருக்கும்.. முக்கியமாக அத்தனையும் பொரிக்கும் போது அழகாக புஸ்ஸென உப்பும் என்பார். பூரியை எண்ணெயில் தேய்த்து அது உப்பி வரும் போது அதன் உப்பலான தலையில் கரண்டியால் எண்ணெயை அள்ளியள்ளி அபிஷேகம் போல குளிப்பாட்டுவார். அப்போது பூரியின் மேற்புறம் தங்கத்தகடு போல ஜொலிக்கும். ஒரு மொறு மொறு பதத்தை பூரிக்கு கொடுக்கும் இதிலும் ஜாக்கிரதை அபிஷேகம் அதிகமானால் போச்சு பூரி கருகிடும். பூரியை இரண்டு விரல்களால் விண்டால் காகிதம் போல கிழிய வேண்டும் என்பது முதல் விதி.. கவனிக்கவும் விரல்களால் பிய்க்க கூடாது.. இரண்டாவது பொரித்த பூரியை நம் விரல்கள்களால் விள்ளும் போது ஒரு சொட்டு எண்ணெய் கூட ஒட்டக்கூடாது. இதெல்லாம் நல்ல பூரிக்கு அடையாளம்! இனி கிழங்கிற்கு.. நல்ல பூரிக்கு அடையாளம் போல நல்ல மசாலாவுக்கும் அடையாளம் உள்ளது. இன்று பெரிய கடைகளில் கூட சில பூரி மசால்களைப் பார்த்தால் பகீரென்கிறது வெனிலா ஐஸ்க்ரீம் போல குழைவாக கெட்டியான களி பதத்தில் தருகிறார்கள். சில கடைகளின் மசாலா கர்நாடக வெள்ளப் பெருக்கில் ஒகேனக்கல் வரும் காவிரி போல.. விரைகிறது! மசாலாவில் கிழங்கை கூழ் போல மசிக்கக்கூடாது. உதிரி உதிரியாக போட வேண்டும். சற்று பெரிய சீடை அளவில் இருப்பது நலம், கடலைபருப்பு,வெங்காயம், பட்டாணி இவற்றோடு பச்சை மிளகாயை நான்காக கீறிப்போட்ட மசாலா தான் பெஸ்ட். குழைவாகவும் இல்லாமல் தண்ணீராகவும் ஓடாமல் ஒரு குருமா பதத்தில் இருப்பதே நல்ல பூரிக் கிழங்கின் லட்சணமாகும்.! பூரிக்கு கிழங்கை விட சப்ஜி ஒரு பெஸ்ட் இணை! நாட்டுக்கோழி குழம்பு போலவே நிறத்திலும் சளசளவென நீராக ஓடும் பதத்திலும் இருப்பதே சப்ஜி! நெய்யில் தாளித்த சீரகத்தின் கமகம மணத்துடன் கோலி குண்டுகள் சைசில் நன்கு வெந்த உருளைக் கிழங்கோடு அமர்க்களமாய் இருக்கும் வடமாநிலங்களில் இந்த சப்ஜியில் கிழங்கும் உண்டு காலிஃப்ளவரும் உண்டு.! அதே போல தால்(பருப்பு) பூரிக்கு ஒரு நல்ல இணை! நான் காஷ்மீர் சென்றிருந்த போது ஒரு தாபாவில் தால் பிந்தி என ஒன்று தந்தார்கள். நல்ல காரமாக எண்ணெயில் வதங்கிய வெண்டைக் காயில் பருப்பு சேர்த்த தால் அது! அடடா! ரசிக்க வைத்த ருசி அது பூரிக்கு மட்டுமல்ல எல்லா வகை ரொட்டிகளுக்கும் செமையான காம்பினேஷன்! சென்னா மசாலாவும் பூரிக்கு நல்லதொரு.. காம்பினேஷன்! அதைவிட நவரத்ன குருமா இன்னும் டாப். பூரிக்கு ஒரு சில குருமாக்கள் சரிப்பட்டு வராது. அதே போல பூரிக்கு நம்மூரின் பாரம்பரியப்படி தேங்காய் சட்னி வைத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாகிப் போனது இன்னொரு ஆச்சரியமான விஷயம் பூரிக்கு சிக்கன் மட்டன் குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிடும் ரசிகர்களும் ஏராளம்! இதில் ஆச்சரியம் பூரிக்கு தொட்டுக்க.. சாம்பார்! இந்த பழக்கம் உள்ள நண்பர்கள் நிறைய. சேட்டு பெண்ணை காதலில் வீழ்த்திய தமிழன் போல சில சாம்பார்கள் பூரிக்கு பக்காவான இணையாக இருக்கிறது என்பதே உண்மை.. அது காய்கறி சாம்பாராக இருக்கக்கூடாது முக்கியமாக முள்ளங்கி சாம்பாராக இருக்கவே கூடாது என்பது ஆதாரவிதி! லேசாக காரம் தூக்கலான தக்காளி, பருப்பு போட்ட சாம்பாரே… பூரிக்குச் சிறந்தது! மதுரையில் டெல்லிவாலா ஒரு காலத்தில் பூரி சப்பாத்திக்கு கொடி கட்டி பறந்த ஓர் உணவகமாகும், இன்றும் நல்ல சப்பாத்தி கிடைப்பது போல எங்கும் நல்ல பூரி கிடைப்பதில்லை. சரவணபவன் போன்ற பெரிய ஓட்டல்களில் நான் சொன்ன முறையில் பூரி கிடைத்தாலும் பூரியின் மென்மைப் பதம் அது இல்லை.. பூரியை பார்சல் வாங்கிச் சாப்பிடுவது.. ஒரு தேச விரோதச் செயலாகும் சில ஜென்மங்கள் இரண்டு பூரிக்கு நடுவே மசால் வைத்து பார்சல் கட்டித் தருவார்கள்! அந்த பூரிகள் மசாலில் நன்கு ஊறிப்போய் செம்புலப் பெயல் நீர் போல கலந்து எது மசால் எது பூரி எனத் தெரியாது அப்படியே வழித்து தின்ன வேண்டியதாக இருக்கும். சிற்றூர்கள், கிராமங்களில் உள்ள ஓட்டல்களில் பூரியை பொரித்து மலை போல அடுக்கியிருப்பர். அவை எல்லாம் கோதுமை அப்பளங்கள் அவற்றை நொறுக்கினால் 10000வாலா பட்டாசு சத்தம் கேட்குமே ஒழிய நல்ல பூரி சாப்பிட்ட அனுபவத்தை தாராது. பூரி சூடாக இருக்க வேண்டும். கையால் பூரியை விண்டு கொஞ்சம் வெங்காயம், ஒரிரு கிழங்குகள், 2 பட்டாணி, கொஞ்சம் பச்சைமிளகாய் இவ்வளவும் இருக்கும்படி மசாலாவில் தோய்த்து உண்ண வேண்டும் பூரிக்கு மேற்புறம் அந்த.. தங்கத் தகடு போன்ற நிறத்தில் முறுகல்! ஒரு சிப்ஸ் அளவு மொறுமொறுப்பு இன்றி தங்கபஸ்பம் போன்ற பொசுங்கும் மொறு மொறுப்பில் வாயில் கரையுமே, ஆஹஹஹா! அது தாங்க ஒரு செழுமையான நல்ல பூரிக்கும் பூரிக் கிழங்கிற்கும் அடையாளம்..! (நிறைந்தது) பூரியும் மசாலாவும்........! 👍
  8. மலர் வணக்கம்.......! 😍
  9. Karthi Tamilan 7 h · #மொழி படத்துல பிரித்விராஜ் ஜோதிகாவை ஏன் துரத்தி துரத்தி லவ் பண்றாருன்னா.... #ஜோதிகாவுக்கு பேச்சு வராது... #பேசாத பொண்டாட்டின்னா சும்மாவா.........!
  10. நான் உயர உயர போகின்றேன் நீயும் வா ........! 😍
  11. வணக்கம் வாத்தியார்........! சொல்லிட்டாலே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வார்த்தையே யாரிடமும் நெஞ்சு கேக்கல இனி வேரொரு வார்த்தையே கேட்டிடவும் என்னி பார்க்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும் சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோனல இனி வேரொரு வார்த்தையே பேசிடவும் என்னம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும் அம்மையவ சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னுடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாத்தேன் மனசயே தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும் எத்தனையே சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பார்களே சொல்லுரதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் உதட்டுல இருந்து சொன்னா தன்னாலே மரந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சென்னா போகாம நிலச்சிடும் உதிரத்துல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்......! ---சொல்லிட்டாளே இவ காதல---
  12. Nadigarthilagam Fans · Rejoindre Baskaran Rajarethinam · · மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்! ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. “யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி கமலாம்மாவுக்கு சமையலில் ஓர் பி.எச்டி. பட்டமே கொடுக்கலாம்” என்று சிலாகித்தார். “அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டேன். ஒருநாள் சிவாஜியும், நாகேஷூம் ஷூட்டிங் முடிந்து புறப்பட்டபோது, அதிகாலை 3 மணி. அப்போது சிவாஜி, “நாகேஷ், நீ மிகவும் சோர்வாக இருப்பது போல் தெரிகிறது. எங்க வீட்டிற்கு வந்து சூடா இரண்டு தோசை சாப்பிட்டு போ” என்று அழைத்தார். “எப்படி பார்த்தாலும் சிவாஜி வீட்டிற்கு செல்ல 4.30 மணி ஆகும். ரெண்டும்கெட்டான் நேரத்தில் எப்படி சாப்பிடுவது?” என்று நினைத்தாலும், சிவாஜி அழைத்ததால் மறுக்காமல் சென்றார் நாகேஷ். படப்பிடிப்பு தளத்தில் இருந்து புறப்படும்போதே மனைவிக்கு போன் செய்து, நாகேஷூடன் வருவதாக சிவாஜி சொல்லிவிட்டார். காலை 4.30 மணிக்கு இருவரும் சாப்பிட அமர்ந்தனர். கமலாம்மா சூடான தோசையை பரிமாற, அதை ரசித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறார் நாகேஷ். இதை அவர் என்னிடம் சொல்லும் போது, “ராஜேஷ்.. அந்தம்மா அந்த நேரத்தில் எழுந்து சட்னி அரைத்து, திருநெல்வேலி தோசை என்று சொல்லுவோமே.. அதுபோல குட்டி தோசைகள் இரண்டு வைத்து தேங்காய் சட்டினியை ஊற்றினார்கள். சட்டினியைத் தொட்டு வாயில் வைத்தேன். என்னய்யா ருசி. இரண்டுங்கெட்டான் நேரம்.. பசியே இல்லாத சமயம்.. ஆனாலும் ஐந்தாறு தோசைகள் சாப்பிட்டேன். அப்படியொரு சட்னியின் சுவையை நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை” என்றார்! நன்றி: நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.