Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. இது ஒரு நல்ல கேள்வி கு . சா ........ நான் மச்சம் சாப்பிடுவதை விட்டு ஒரு 18/20 வருடங்கள் இருக்கும் ........பிரான்ஸ் வந்தபின்னும் சாப்பிட்டானான் ........! __ வீட்டில குழல் புட்டு அவிக்க சொல்லிவிட்டு மாதகல் போய் முரல்கருவாடு சிற்பம் வாங்கி வந்து அடுப்புத் தணலுக்குள் சுட்டு புட்டுடன் சாப்பிடுறனான் .......! __கருமேகங்கள் குவிந்து மழை பொழியும் நேரம் பொன்னாலையில் ஓரா, பண்ணைப்பாலத்தில் ஒட்டி , மற்றும் காரையூர் , சின்னக்கடை சந்தை , பாசையூர், கொழும்புத்துறை படகுகளில் வரும் மீன்கள், நாவற்குழியடியில் விசேஷமான கயல் என்று வாங்கி விழுங்கிய நாட்கள் பல ......! __ அன்று முற்றவெளி முனியப்பர் கோயிலில் இறைச்சி படையலிட்ட நாளில் இருந்து (பின்பு அது நிறுத்தியாச்சுது ) கவனாவத்தையோடு மற்றும் பல கோவில்களின் வேள்வி இறைச்சிகள் , பரந்தனில் இருந்து வவுனியா மடு ஈறாக காட்டு வேலைகள் விதம் விதமான இறைச்சி வகைகளுக்கு குறைவில்லை . .......! __ கோழி முட்டை , மீன் முட்டை என்று பலப்பல முட்டைகள் எதையுமே விட்டதில்லை ......! __ ப்ளவுஸ் ,மொக்கங் கடை என்று கொழும்பு ஈறாக எத்தனை எத்தனையோ கடை சாப்பாடுகள் ......! அப்படியெல்லாம் சாப்பிட்டதால்தானோ என்னமோ இப்போ பல வருடங்களாக முட்டை கூட தொடுவதில்லை . ......ஆனால் அந்த சுவை இன்னும் நாக்கில் ........! மலரும் நினைவுகளை மீட்ட கேள்வி தொடுத்த உங்களுக்கு நன்றி . .......! 😇
  2. வானொலி குயில் · Suivre eosnSortdphebc0i:1u94,fmc3207548e2a66ts0 0cariae7914 g1i28pt · நூற்றாண்டு விழா காணும் இலங்கை வானொலியின் இரு பொக்கிஷங்கள்........! 😍
  3. Baskar Jayraman Mookkammal serSnootdp0 6r10he1sf4530pm0te8t1 efbtgma1c86ca:26c27g63,89c · #இதுதான்_பிரபஞ்ச_விதி விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை அனுமதிக்கச் சொன்னார். 2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, "இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் வாங்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார். நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார். அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது. டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார். நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?" நோயாளி கூறினார், "நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..." டாக்டர் சொன்னார், "நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க. இப்போது ஞாபகம் வருகிறதா?" "ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..." "அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, கார் பழுதாகி விட்டது. சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது. குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது. நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. நீங்கள் பைக்கில் வந்தீர்கள்... பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள். பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்... சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது. நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம். அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம். நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள். அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, அது விலைமதிப்பற்றது. ஆனாலும், நான் உங்களிடம்,: "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன். அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,* எனது விதியும் கொள்கையும் என்னவெனில்... பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை. இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்." என்றீர்கள். அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன. பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்..., அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' என்று அன்று நினைத்தேன். அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை. உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன். இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது. நீங்கள் இங்கே என் விருந்தாளி. உங்கள் சொந்த விதியின்படி... என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது. இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும். "நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்." மருத்துவர் கூறிவிட்டு கேபினை விட்டு வெளியே சென்றார். *அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன... அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது. நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன. அதுவும் ஆர்வத்துடன். அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதான் பிரபஞ்ச விதி.......! 👍 Voir la traduction
  4. ஏண்டா மனுசன் ஏய்க்கிறான் .......... ஜோதிலட்சுமி & வெ .ஆ .நிர்மலா .........! எஸ் . எஸ் . ஆர் . .....! 😍
  5. வணக்கம் வாத்தியார் .......! இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலைகோதி காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் கையோடு தான் கைகோர்த்து தான் உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன் பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண் : நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே பெண் : உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன் உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன் பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்......! --- அக்கம் பக்கம் யாருமில்லா ---
  6. பூனையாயினும் ஒரு நல்ல ஆத்மா தான் நிம்மதியாய் வாழ்வை முடிக்க ஒரு இடத்தை தெரிந்துவைத்திருக்கும் . .......அதன் கணிப்பு வீண் போகவில்லை . .....நிஜமாகவே ஒரு நல்ல இடத்தைத்தான் தெரிந்தெடுத்து வைத்திருக்கு ......கதையும் மிக மிக நன்றாய் இருந்தது . ......! 👍
  7. அட . ......இதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை ........(41) வது கேள்வியை சரியாய் பார்க்காமல் கெத்தாய் பதில் போட்டு விட்டேன் ........ஒருவர் 200 ஓட்டங்கள் அடிப்பாரா என்று . .......அது தவறு , ஒரு அணி சுலபமாய் 200 அடிக்கும் . ........! அதுக்காக அதை திருத்த முடியுமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் .......ஏனென்றால் படிக்கும் போதும் சரி இப்பவும் சரி நான் எப்போதும் திருந்தப் போவதில்லை . .......! 😪
  8. நிமிசத்தில் சுலபமாய் வாழைப்பூவை சுத்தம் செய்யலாம் . .........! 😀
  9. ancient method of well water pumping |நாட்டுப்புற பாட்டு |folk song for agriculture |ஏற்றப்பாட்டு..........! 😃
  10. otsenSpdro:61t9u02,8tt 2u04fr80m4atm3eeseu7hhghgb1 7a27pm9cc · அம்மா செஞ்சா நூடுல்ஸ் Yellow கலர்ல இருக்கும் .. நான் இப்ப செஞ்சது கருப்பு கலர்ல வந்துருக்கு ..🙄"
  11. இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் வீழ்ச்சி மற்றும் எழுச்சி பற்றி நல்ல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன ...........! நன்றி ஏராளன் .......!
  12. வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் பெண் : மோனிகா பெலூஜி எதிர்த்தா எனர்ஜி தலையே சுத்தவீக்கும் சூரவளி பொண்ணாச்சு பெண் : பட்டுனு பாத்தாலே பல்ஸ் ஏத்தும் பாடி கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே இரவ கலராக்கும் ஜிலேபி லேடி சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே ஆண் குழு : மோனிகா மை டியர் மோனிகா மை டியர் மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சுமா சிக்கிகிச்சு மா ஹம்மிங் : ஜும் ஜும் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் ஜும் ஜம் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் லக லக லக லக லக ஜும் ஜும் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் ஆண் : டேய் ஊதுடா அதை ஜூம் ஜூம் ஜூம் ஆண் : என்ன தொலைய வைக்குறியே கொஞ்சம் கொலைய வைக்குறியே உன்ன அடைய வைக்குறியே என் பகல் கனவுலயே ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு ஒரு உண்மை சொல்லவா (வேணா வேணா) சரி கொஞ்ச சொல்லட்டுமா எனக்கு சொத்து சுகம் வந்தா மாத்திகுறேன் உன்தா பத்தலனா மாச மாசம் கட்டுறேன் சந்தா பெண் : உரசாம பத்திக்கவா உதட்டோரம் தித்திக்கவா இருக்காத ஒத்தையில ஒத்தையில ஒருவாட்டி சந்திக்கவா மயங்காட்டி தண்டிக்கவா தயங்காத மெத்தையில மெத்தையில பெண் : சாகும் நேரத்தில் பொலம்பி அழுவாத பூஜை ஆட்டத்தில் இன்னோசென்ட் நானா தொல்லை வறுமை கோலத்தில் நேர்மை பாக்காத இளமை காலத்தில் டீசென்சி நல்லா இல்ல பெண் : நிலவ செவப்பாக்கும் தஞ்சாவூர் காரி மனச ரெண்டாக்கி வரவா கிள்ள இரும்ப கரும்பாக்கும் பப்பாளி லாரி பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல.........! --- மோனிகா பெலூஜி ---
  13. என் ஆசை என்னோடு ...........! 😍
  14. எந்த வகையான நெத்தலி மீன் பொரியலுக்கும் அதிக சுவை தரக்கூடிய லெமன் ரைஸ் .........சொல்லி வேல இல்ல .........!😋
  15. ரசிக்கக் கூடியவர்களுக்கு ஏற்ராற் போல்தான் பாடல்களும் கிடைக்கின்றன கவி . ..... பக்கத்தில் உள்ளேன் ஐயாவின் பக்கத்திலும் நல்ல நல்ல பாடல் வரிகள் உண்டு . ..... பாடல் கேட்கும் போது இல்லாத சுகம் வாசிக்கும் போது கிடைக்கும் ..........இந்த பகுதியை ஆரம்பித்து வைத்த நிழலிக்கு நன்றி . ......! 😂
  16. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் பெண் : தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் .......! --- முதற்கனவே முதற்கனவே ---
  17. நித்திரையில் சித்திரக்கனவு ஒத்திகை பார்க்குது . .......! 😍
  18. நல்லதொரு தோட்டம் மலர்களின் சுரங்கம் ..........! 😍
  19. Creativity கிரியேட்டிவிட்டி · Anbu Anbu ·redonSospt450ut120t6ài44934437973fui3:c12r29i,g0941H72 eft2 · இராணித் தேனீ 🐝" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf8/1/20/1f41d.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.. இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான். எந்த குட்டி எதிர்கால இராணியாக மாறும் என்பதை தீர்மானிப்பது விதியோ ஜீன்களோ அல்ல. அது அவருக்குக் கொடுக்கப்படும் உணவாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு உணவான ராயல் ஜெல்லி (Royal Jelly) காரணமாகும். இந்த அடர்த்தியான, ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தான் மாற்றத்தின் அமிர்தமாக விளங்குகிறது. அதுவே ஒரு சாதாரண குட்டியை அசாதாரணமான இராணியாக மாற்றும் மாயாஜாலம். இங்கே முக்கியமானது விதியல்ல, ஊட்டச்சத்துதான். ராயல் ஜெல்லி என்பது தேனீகள் தயாரிக்கும் ஒரு தனிப்பட்ட திரவமாகும். இது வெண்மையான, கிரீம் போன்ற தோற்றம் கொண்டதாகும். தேனீ உலகில், இந்த ராயல் ஜெல்லி தான் இராணி தேனீயின் வாழ்க்கையும் வளர்ச்சியிலும் முக்கிய ரகசியமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நீர், புரதங்கள், சர்க்கரை வகைகள் (பிருக்டோஸ் மற்றும் கிளூகோஸ் உட்பட), கொழுப்புகள், B வகை வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்ட கலப்பாகும். இதில் உள்ள மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த சேர்க்கை 10-HDA (10-hydroxy-2-decenoic acid) எனப்படும். இது ராயல் ஜெல்லியில் மட்டுமே காணப்படும், சுகாதார நன்மைகளுக்குத் தோற்றம் தரும் தன்மை கொண்டது. ராயல் ஜெல்லி தயாரிக்கப்படுவது இளம் வேலைக்கார தேனீக்களால் (worker bees). அவற்றின் உடலில் உள்ள pharyngeal மற்றும் mandibular glands என்பவற்றின் ஸ்ராவங்களை கலப்பதன் மூலம் இந்த ஜெல்லி உருவாகிறது. குறிப்பாக 5 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் வேலைக்கார தேனீகள் இந்த பணிக்குத் தனிப்பட்டவை. அவர்கள் தங்கள் உடலில் உள்ள கொழுப்பு சுரப்பிகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, பின் அதை pharyngeal gland மூலம் ஜெல்லியாக மாற்றுகிறார்கள். ஒரு புதிய இராணித் தேனீ உருவாக்க வேண்டியபோது, வேலைக்கார தேனீக்கள் விசேட இராணி அறைகள் (Queen cells) கட்டுகிறார்கள். அவற்றில் முட்டை இடப்பட்ட பிறகு, அந்த குட்டிக்குத் தொடர்ந்து அதிகளவில் ராயல் ஜெல்லி வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண குட்டிகள் ராயல் ஜெல்லி பெறுவது வாழ்நாளின் ஆரம்ப 2–3 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அவர்கள் Bee Bread எனப்படும் தேன் மற்றும் மகரந்தக் கலவையை உண்ணுகிறார்கள். ராயல் ஜெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் போன்ற சேர்மங்கள் அந்த குட்டியின் மரபணு செயல்பாடுகளை மாற்றி, சாதாரண தேனீவைக் காட்டிலும் பெரியதாகவும், நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகவும், முட்டை இடக் கூடியதாகவும் மாற்றுகின்றன. இது ஊட்டச்சத்துக்களால் உயிரினரின் விதியை மாற்ற முடியும் என்பதற்கான அபூர்வமான எடுத்துக்காட்டாகும். ராயல் ஜெல்லி தொடர்ந்து பெறும் ஒரே குட்டி தான் இராணியாக மாறுகிறாள். அவள் பெரிதாக மாறுகிறாள், நீண்ட காலம் வாழ்கிறாள், கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறாள், அதை மறுபடியும் கட்டியெழுப்புகிறாள். குழப்பமிருந்த இடத்தில் ஒழுங்கும் ஒற்றுமையும் ஏற்படுத்துகிறாள். அவள் அதிகாரத்துக்காக பிறக்கவில்லை, ஆனால் அதற்கேற்ப உருவாக்கப்படுகிறாள்........! படித்ததில் பிடித்தது.. பகிர்வு பதிவு !!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.