Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் ............. ! ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ ஆண் : மூக்கழக கண்டாலும் முன்ன நின்னு பாத்தாலும் மூச்சு வரவில்லையடி அய்யே அய்யய்யே பாக்கு வச்சு பாக்காமே பத்தினி பெண் இல்லாமே தூக்கம் வரவில்லையடி தய்யே தய்யைய்யே அடி பன்னீரு பூப்போல தண்ணீரில் மீன் போல உன்னோடு என்னை அள்ளிக் கொண்டால் என்ன ஆண் : மாரியம்மன் திருநாளில் மங்கை உனைப் பார்த்த பின்னே வேறுப் பெண்ணை பாக்கவில்லை அய்யே அய்யய்யே காரியத்தைப் பார்த்தாலே காரணத்த கேளாம காதல் கொள்ள சொல்லுமடி தய்யே தய்யைய்யே அடி பஞ்சாங்கம் பாக்காமே பங்காளி இல்லாமே இப்போது என்னைக் கட்டிக் கொண்டால் என்ன ......... ! --- தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது ---
  2. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · prdsneoSot7f96246iamm81lt9uh3iic62lhu3l3132cgci0g g0h3h660t1 · ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, "ஐயா, நான் உங்களுக்கு கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்" என்றார். ஆசிரியர் புன்னகையுடன், "ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்" என்றார். இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, "ஓ, நான் விளையாடினேன்!" என்றார். ஆசிரியர் சிரித்துக்கொண்டே, "மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!" என்றார்........ !
  3. ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா ......... ! அழகான வில்லனும் (நம்பியார் ) அழகிய ராட்சசியும் (எம் . என் . ராஜம் ) கனிவுடன் பாடும் ஜோடிப்பாடல் ....... கண் மூடி ரசிக்கையில் விண்மேவிச் சிறகடிக்கும் நினைவலைகள் .........! 😍
  4. வணக்கம் வாத்தியார் ......... ! பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே……பாரிலே……. ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே ......... ! --- ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ---
  5. அதிகமாக குளியல் அறையில் விழுந்து காயம் அடைவதும் பனிக்காலங்களில் வீதிகளிலும் வீடுகளிலும் சறுக்கி விழுந்து அல்லல் படுவதும் அதிகமாய் நடக்கத்தான் செய்கிறது ........ஆனால் கடைசிவரை மேலாளர் கண்டு பிடிக்கச் சொன்னதில் ஒன்றும் நடக்கவில்லை .......... ! 😄
  6. இரத்தம் குடிக்கும் அட்டைகளாய் பெரும் நிறுவனங்கள் மாறிவிட்ட பிறகு ஏழை மக்கள் இனம் போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் .......... !
  7. RS Basu · Suivre rdsoSpetno03781ue4746iii457j1l,i1htfu utl65u4m0f2a:u0 4cl173 · Queen of india music Shreya Ghoshal ❤️" King of india music Arijit Singh ❤"
  8. Khabar Hydhiri Hydhiri onopsderStm0fhc998m9518h96899gc22413t5c92h6c006420922h4u2hi · இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் " இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில." "நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர். "வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். "டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க" என்றார். "நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர். "அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர். "வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். "எனக்கு கண் பார்வை சரி இல்லை, மருந்து தாங்க டாக்டர்". "சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய்" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர். "இது 500 ரூபாய் நோட்டாச்சே" என்று பதறினார் இவர். "வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்" பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது... கிடிப்பாவது... படித்ததில் பகிர்வது.
  9. Last Bench Memes eordSnpotsf9fg1u132e79hij c:gc11lu9c1im05lftac,3 h0hhtc71t85 · யாழ்ப்பாணத்தை பொருத்தவரை பிட்டை விட அதிகம் கவர்ந்த ஒரு விஷயம் ஊர்களின்ட பெயர்கள் தான்..! ஊர்களின் பெயர்களில் தவறுகள் ஏதும் இருப்பின் திருத்திக் கொள்ளத் தெரிவிக்கவும் அ அச்சுவேலி அச்செழு அத்தாய் அத்தியடி அம்பன் அராலி அரியாலை அல்லாரை அல்லைப்பிட்டி அல்வாய் அளவெட்டி அறுகுவெளி அனலைதீவு ஆ ஆவரங்கால் ஆழியவளை ஆனைக்கோட்டை ஆனைப்பந்தி இ இடைக்காடு (யாழ்ப்பாணம்) இணுவில் இமையாணன் இயற்றாலை இராமாவில் இருபாலை இலக்கணாவத்தை இளவாலை ஈ ஈச்சங்காடு (யாழ்ப்பாணம்) ஈச்சமோட்டை ஈவினை உ உசன் உடுத்துறை உடுப்பிட்டி உடுவில் உயரப்புலம் உரும்பிராய் ஊ ஊரெழு ஊர்காவற்துறை எ எழுதுமட்டுவாள் எழுவைதீவு ஏ ஏழாலை ஒ ஒட்டகப்புலம் க கச்சாய் கட்டுடை கட்டுவன் கட்டைக்காடு கட்டைவேலி கணேஸ்வரம் கதிரிப்பாய் கந்தர்மடம் கந்தரோடை கப்பூது கரணவாய் கரந்தன் கரம்பகம் கரம்பைக்குறிச்சி கரம்பொன் கரவெட்டி கருகம்பனை கற்பகற்சோலை கல்வயல் கல்வியங்காடு களபூமி கற்கோவளம் காங்கேசன்துறை காரைநகர் கீரிமலை குடத்தனை குடாரப்பு குறிகாட்டுவான் குப்பிளான் குருநகர் குரும்பசிட்டி கெருடாவில் கெற்பெலி கேரதீவு கைதடி கைதடி நுணாவில் கொக்குவில் கொம்பர்மூலை கொடிகாமம் கொம்பன்தறை கொல்லன்கலட்டி கொழும்புத்துறை கோண்டாவில் கோப்பாய் கோயிலாக்கண்டி கோயிற்குடியிருப்பு ச சங்கத்தானை சங்கரத்தை சங்கானை சங்குவேலி சண்டிலிப்பாய் சந்திரபுரம் சரசாலை சாவகச்சேரி சாவல்கட்டு சிங்கைநகர் சித்தங்கேணி சித்தன்கேணி சிந்துபுரம் சில்லாலை சிறுப்பிட்டி சிறுவிளான் சுன்னாகம் சுண்டிக்குளி சுதுமலை சுழிபுரம் சுன்னாகம் செம்பியன்பற்று த தச்சன்தோப்பு தந்தை செல்வாபுரம் தம்பாலை தம்பாட்டி தனங்கிளப்பு தாவடி தாவளை திருநெல்வேலி (இலங்கை) தும்பளை துர்க்காபுரம் துன்னாலை தெல்லிப்பழை தேவபுரம் தையிட்டி தொண்டைமானாறு தொல்புரம் ந நயினாதீவு நல்லூர் (யாழ்ப்பாணம்) நவக்கிரி நவாலி நாகர்கோவில் (இலங்கை) நாயன்மார்கட்டு நாரந்தனை நாவற்காடு நாவற்குழி நாவாந்துறை நிலாவரை நீர்வேலி நீராவியடி நுணாவில் நெல்லியடி நெடுந்தீவு ப பண்டத்தரிப்பு பண்ணாகம் பத்தமேனி பருத்தித்துறை பலாலி பன்னாலை பனிப்புலம் பாசையூர் பாலாவி (தென்மராட்சி) பிரான்பற்று புத்தூர், யாழ்ப்பாணம் புலோலி புங்குடுதீவு ( பொன்கொடு தீவு ) புளியங்கூடல் புன்னாலைக்கட்டுவன் பெரியவிளான் பொலிகண்டி பொன்னாலை ம மட்டுவில் மண்டைதீவு மணல்காடு மந்துவில் (யாழ்ப்பாணம்) மயிலிட்டி மருதங்கேணி மருதனார்மடம் சந்தி மல்லாகம் மாகியடிப்பு மறவன்புலவு மாகியப்பிட்டி மாதகல் மாரீசன்கூடல் மாவலித்துறை மாவிட்டபுரம் மானிப்பாய் மிருசுவில் மீசாலை முள்ளானை முள்ளியான் மூளாய் வ வதிரி வட்டுக்கோட்டை வடமராட்சி வடலியடைப்பு வண்ணார்பண்ணை வயாவிளான் வரணி வல்லிபுரம் வல்வெட்டி வல்லிபட்டிணந்துறை வளலாய் வறுத்தலைவிளான் வாதரவத்தை விடத்தல்பளை வித்தகபுரம் வியாபாரிமூலை வீமன்காமம் வெள்ளாம்போக்கட்டி வெற்றிலைக்கேணி வேலணைத் தீவு எங்களுக்கு கிடைத்த தரவுகளின் படி எங்களால் திரட்ட முடிந்த ஊர்களின் பெயர் மட்டுமே உள்ளன.
  10. வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் ......... ! --- என்னுள்ளே என்னுள்ளே ---
  11. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் .......... ! 😍
  12. ஆஹா ...... வாசிக்கவே ஆடிக்கூழ் குடித்ததுபோல் ஒரு உணர்வு ........ ! 😀
  13. நானும் ஊரில் கிரிஸ்மஸ் காலத்தில் "கரோல் " ஆக கூட்டமாய் பாடிக்கொண்டு வருவார்கள் ........ பெரியவர்கள் அவர்களுக்கு பணம் , இனிப்புவகைகள் என்று கொடுப்பார்கள் .......நாங்கள் கூட்டத்துடன் கூடடமாய் நின்று பார்ப்பதோடு சரி . ......... இங்கு வந்ததும் பிள்ளைகளுக்காக வீட்டில் கிரிஸ்மஸ் மரம் வைக்க வேண்டியதாகி விட்டது .........அது இப்ப சுமார் 35 வருடங்களாக தொடர்கின்றது ........ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து அவரவர் வேலைகளைப் பார்க்க வெவ்வேறு இடங்களுக்கு பறந்து விட்டார்கள் ........ நானும் மனிசியும் இன்னும் அந்தக் காலங்களில் கிரிஸ்மஸ் மரம் வைத்து சோடித்துக் கொண்டிருக்கின்றோம் ......... ! 😁 நன்றி ரசோ ........ !
  14. கார் ஓடும் வீதியில் காட்டாறு பாய்கிறது . ....... இவ்வளவு வளம் மிகுந்த அமெரிக்காவையே ஒரு வெள்ளம் ஸ்தம்பிக்க வைக்குது என்றால் , மற்ற நாடுகள் பற்றி என்னத்தை சொல்ல .........! நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் பிரியன் . .......... !
  15. பருவம் போன பாதையிலே ........... ! 😍
  16. வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ஆண் : என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு ஆண் : பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி ஆண் : இது போன்ற ஜோடி இல்லை இது போன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ஆண் : என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு ஆண் : என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு ஆண் : இது போன்ற ஜோடி இல்லை இது போன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ஆண் : தைமாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் தைமாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் ஆண் : இந்த காதல் ராணி மனது அது காலம்தோறும் எனது ஆண் : இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ........ ! --- சம்சாரம் என்பது வீணை ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.