Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. போரின் இறுதிக் காலத்தில், இனப்படுகொலை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வர முன்னர் ஒபாமா இவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் காலம் தாழ்த்திய கோரிக்கை. Obama: Sri Lanka must end warfare President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tigers lay down their arms. A Tamil man carries an elderly woman as he runs for safety following a shell attack at a makeshift hospital in Mullivaaykaal, Sri Lanka, on Tuesday.AP May 13, 2009, 9:22 AM EDT / Source: The Associated Press President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tiger rebels cease using civilian shields. Before leaving the White House for a trip to the state of Arizona, Obama told reporters that the situation on the south Asian island could turn from a humanitarian crisis to a full-blown catastrophe. He strongly urged both sides to take steps to alleviate suffering. "Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine," Obama said on the White House's South Lawn. "This has led to widespread suffering and the loss of hundreds, if not thousands of lives." Officials in Sri Lanka said artillery shells on Wednesday tore through a hospital for a second day, killing at least 50 and crippling the medical facility. The government set off a wave of bombardments in the war zone this weekend and has killed as many as 1,000 people. 'Cannon fodder' The Sri Lanka government says its troops are not responsible for the shelling and that the military has not fired heavy weapons in the area in weeks. But Human Rights Watch says satellite images and witness testimony contradict that claim and has accused both sides of using the estimated 50,000 civilians packed into the tiny coastal strip controlled by the rebels as "cannon fodder." Obama said the United States is ready to work to end the conflict. "Now's the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first," Obama said. Amnesty International urged Obama to push for a truce and appealed to the U.N. Security Council to establish a commission of inquiry into violations of international law. Outside the White House, protesters have been chanting in recent days of Obama to take action. 'Indiscriminate shelling' Obama urged the Tamil Tigers to stop fighting and release civilians as a first step toward peace. "Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out." He also said the government should stop the "indiscriminate shelling" and the use of heavy weapons in the conflict zone. He asked the government to give the United Nations and Red Cross staff access to the 190,000 displaced civilians. "Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting and grounded in respect for all of its citizens," Obama said. "More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve." On Wednesday afternoon, the area around the hospital came under heavy shell attack, Dr. V. Shanmugarajah told The Associated Press by telephone — the third time it has come under fire this month and just . One shell landed in an administrative office of the hospital, while another hit a ward filled with patients already wounded by previous shelling, he said. Obama calls for end to violence Dr. Thurairaja Varatharajah, the top health official in the war zone, said the attack killed at least 50 people, including patients, relatives and a health aide, and wounded about 60 others. He said heavy shelling continued throughout the day. "We are unable to treat the people properly because a lot of aides have fled the hospital. We go into bunkers when there is shelling and try to treat them as much as we can when there is a lull," he said by telephone. Doctors in Sri Lanka say last weekend's warfare alone may have killed 1,000 people. Bodies left insideMore than 1,000 civilians — many with amputations or chest wounds — were waiting for treatment at the hospital when it was struck, and every 10 minutes or so another one or two died, according to a third hospital official, who spoke only on condition of anonymity because he was not authorized by the government to speak to the media. Overwhelmed doctors have been reduced to handing out gauze and bandages to the seriously wounded, the official said. More than 100 dead bodies have been left inside the compound because no one will risk burying them amid the constant shelling, he said. https://www.nbcnews.com/id/wbna30720620
  2. போட்டியை சிறப்பாக நடத்திய கந்தப்புக்கு நன்றி. போட்டியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து முதலிடத்தினை பெற்ற கிருபனுக்கு வாழ்த்துகள். நான் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன், விகடன் செய்திகள் மற்றும் சேர்வே, இந்து தமிழ் செய்திகள், தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்ட விடயங்கள் என்பனவற்றின் அடிப்படையில் பதில்களை வழங்கியிருந்தேன். கிருபன் சொல்லியுள்ளது போல் Data முக்கியம். ஆனாலும், இந்த தேர்தலில் பா,ஜ.க தமிழகத்தில் இரண்டாவதாக பல இடங்களில் வரும் என நம்பியிருக்கவில்லை. அண்ணாமலை உட்பட எல்லாரும் 3 ஆம் இடத்தில் தான் வருவர் என நினைத்து இருந்தேன். அ.தி,மு.க ஒரு இடத்திலும் வெல்லாது என தெரியும், ஆனால் 3 ஆம் இடத்தைக் கூட பறி கொடுக்கும் என நினைக்கவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளைப் பெற்ற நா.த.கட்சியின் வாக்கு வங்கியில் பா.ஜ.க கை வைக்கும் என எதிர்பார்த்ததால் 7 சதவீதத்தை விட குறைவாக பெறும் என கணித்து இருந்தேன். ஆனால் ஒரு சதவீதம் அதிகமாக நா.த.க. பெற்று இருக்கின்றது. அனேகமாக பா.ஜ.க, வின் மேலிடம் இனி நா.த.க. இற்கு கடும் குடைச்சலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றேன். அனேகமாக அவர்களின் நிதி திரட்டலில் (திரள் நிதி) கைவைக்கும். நிதி மூலத்தை ஆராய முற்பட்டு, சிலரை கைது செய்வது வரைக்கும் செல்லும். அ.தி.மு.க. வை பலவீனப்படுத்தியாச்சு, இனி நா.த.க. வினரை பலவீனப்படுத்தினால், திமுக விற்கான எதிர் வாக்குகளை அப்படியே அள்ளலாம் என பா,ஜ.க. கணக்கு போடும் என நம்புகின்றேன்.
  3. கனடாவில் வாழும் சுதேச குடிகளின் எதிர்காலத்தை, அவர்களின் பொருளாதாரத்தை நான் புரிந்து கொள்ளவில்லை என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள். அத்துடன் இங்கு குடியேற்றவாசிகளிற்கு எதிரான மனநிலையோ, குடியேற்றவாசிகளை வெளியேற்று என்ற கோரிக்கையோ அந்த பூர்வீக குடிகளின் மத்தியில் எழுவில்லை. அவ்வாறான எண்ணம் வெளிப்படுவது எல்லாம் பூர்வீக மக்களின் வாழ்வாதாராத்தை சிதைத்து அதன் மேல் தம் பொருளாதாரத்தை கட்டமைத்த, ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளையினத்தவர்களிடம் இருந்தே. அப்படியான வெள்ளையினத்தவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு இங்கு. ஒட்டு மொத்த கனடாவில் ஒரு சிறு தேர்தல் தொகுதியில் கூட அவர்களால் (தீவிர வெள்ளையின வலதுசாரிகளால்) வெற்றி பெற முடியாது. உங்களுக்கு தமிழ் தேசிய எழுச்சி என்பதிலும் தெளிவு இல்லை, கனடா அரசியலிலும் தெளிவில்லை.
  4. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் வலதுசாரிகளின் வெற்றியை நீங்கள், "மண்ணின் மைந்தர்களின்" வெற்றியாக கருதி, நா.த. கட்சியையும் அவர்களைப் போன்றவர்களே என்று சொல்கின்றீர்கள். அதாவது 16 வீதம் எடுத்து இரண்டாவதாக வந்த இனவாதக் கட்சியையும் நா.த.க வினரையும் ஒன்றாக ஒப்பிடுகின்றீர்கள். தமிழகத்தில் தமிழ் தேசியத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் வலதுசாரிகளின், இனவாத அரசியல் சக்திகளின் எழுச்சிக்கு ஒப்பானது என்றும் சொல்கின்றீர்கள். இந்த இனவாத எழுச்சியைத் தான் நா.த.க வினரும் செய்கின்றனர் என நம்புகின்றீர்கள். இங்கு நான் உட்பட நா.த,க வின் அரசியலை வெறுப்பதன் காரணமும் இதுதான். நாம் எழுதவேண்டிய பல விடயங்களை நீங்களே, இரண்டு தரப்பினரையும் ஒன்றாக தராசில் வைத்து எழுதியமைக்கு நன்றி
  5. நான் பொன் ராதாகிருஷ்ணன் 3 ஆம் இடத்தில் வருவார் என நான் கணித்து இருந்தேன், ஆனால் 2 ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். கிருபன் சரியாக 2 ஆம் இடத்தில் வருவார் என கணித்திருப்பதால், 2 புள்ளி அல்லது 3 புள்ளிகள் என்னை விட அதிகமாக எடுத்து இப் போட்டியில் கிருபன் முதலாவதாக வந்து பெற்றி அடைவார்.
  6. ஹமாஸ் எனும் அதி புனிதர்கள் விடுதலை வேட்கையில் இஸ்ரேல் பெண்கள் மீது நிகழ்த்திய அதி தீவிர கொடூரஙகள் பற்றி கீழே உள்ள திரியில்: இஸ்ரேல் செய்வது மோசமான இனப்படுகொலை ஹமாஸ் செய்வது பயங்கரவாதம் (பாலஸ்தீன போராட்டம் அல்ல) நடுநிலை எனும் பெயரில் இதில் ஒன்றை நியாயப்படுத்தி இன்னொன்றை புனிதர்களாக்குவது அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்த அறமற்ற செயல்!
  7. நான்கு பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் செய்த மனிதப்படுகொலைகளை கண்டிக்கும் அதேவேளை, ஹமாஸ் பயங்கரவாதிகள் பாலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக, அதுவும் அகதி முகாம்களைக் கூட பயணக் கைதிகளை சிறை வைக்கும் சிறைக் கூடங்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் கண்டிக்க படல் வேண்டும். போரில் வெல்ல மக்களை மனிதக் கேடயங்களாக எவர் பயன்படுத்தினாலும் அது கண்டிக்கபடல் அவசியம்.
  8. கர்நாடகா மக்கள் இவரை தேர்தலில் தோற்கடித்து நிராகரித்து விட்டார்கள். சரி, தமிகத்தில் உள்ள ஒருவரை பச்சைத் தமிழன் என்று எப்படி அடையாளம் காண்பீர்கள்?
  9. துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து A 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது exit எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு் , வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் காரை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். முதலாவது roundabout இலயே exit எடுக்கத் தெரியாமல் சுத்துசுத்தெண்டு சுத்தீட்டு வழி கேக்க வழி ஒண்டுமில்லாமல் தட்டுத் தடுமாறித் திரும்ப , சந்தேகத்தில மறிச்ச பொலிஸ்காரனுக்கு விளக்கம் குடுத்திட்டு அவன்டையும் வழி கேட்டாப் பாவம் அவனுக்கும் சொல்லத் தெரியேல்லை, Map ஐப் பாத்துக்கொண்டு போகச் சொன்னான். திருப்பி வீட்டை வந்து காரை விட்டிட்டு tube எடுத்து harrowக்குப் போனன். அப்ப தான் ஊரின்டை அருமை விளங்கிச்சுது ஒரு நாளும் போகாத ஊருக்கு கூட “அண்ணை அராலிக்கு எப்பிடிப் போறதெண்டு” town ல கேட்டால் சந்திக்குச் சந்தி ஒருத்தன் எங்களுக்கெண்டே நிப்பான் வழி சொல்ல. “சத்திரத்துச் சந்தியால நேர போய் அப்பிடியே மனோகராச் சந்தியால திரும்பிப் போனா வாற ஐஞ்சு சந்தியால வலது பக்கம் திரும்பி ஓட்டுமடச்சந்தியால இடது பக்கம் திரும்பி நேர போங்கோ” எண்டு easyயாய் சொல்லுவாங்கள். இல்லாட்டியும் இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தி வழியவும் சாரத்தோட பேப்பர் வாசிச்சுக்கொண்டு ஆராவது இருப்பினம், வழி கேட்டுக் கேட்டுப் போக. அதோட ஊருக்க போய் ஆரின்டையும் பேரைச் சொல்லிக் கேட்டால் வீட்டடீல கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்காரரை கூப்பிட்டும் விடுவினம். ஊருக்க போய் வீட்டைக் கண்டு பிடிச்சு வாசலில நிண்டு பேரைக் கூப்பிடவும் முறை இருக்கு. பொதுவா ஆச்சி, அப்பு, ஐயா எண்டு கூப்பிடிறது, இல்லாட்டிச் சொந்தம் எண்டா முறையைச் சொல்லிக் கூப்பிடலாம். மனிசிமார் புருசன்டை பேரைச் சொல்லாத மாதிரித தான் வீடு வழிய போய் பேரை நேர சொல்லிக் கூப்பிடீறதோ இல்லாட்டி சபை சந்தீல கதைக்கேக்கயோ பேரைச் சொல்லுறதோ குறைவு. வீட்டுக்கும் , ரோட்டுக்கு ஒரு அடையாளம் மாதிரி ஊருக்க இருக்கிற ஆக்களுக்கும் பேரோட ஒரு அடைமொழி அடையாளமாய் இருக்கும். அப்ப பேருக்குப் பஞ்சம் எண்டதாலயோ இல்லாட்டி Numerology தெரியாததாலயோ ஊர் வழிய ஓரே பேரில கன பேர் இருப்பினம். அதோட வயசுக்கு மூத்த ஆக்களுக்குப் பேரைச்சொல்லிக் கூப்பிடிறது சரியில்லை எண்டு ஒரு மரியாதைக்கும் தான் இப்படி அடைமொழியோட கூப்பிடுறது எண்டு நெக்கிறன். அடைமொழிக்கு வைக்கிற பேர் அநேமா அவரின்டை வேலை சார்ந்ததா இருக்கும் . புரோக்கர் பொன்னம்பலம் , பரியாரி பரமசிவம் , கிளாக்கர் கனகசபை, CTB சிவலிங்கண்ணை எண்டு தொழிலோட பேர் இருக்கும். பிசினஸ் செய்யிற எல்லாருக்கும் ஒரே வேலை எண்டதால வேலைக்குப் பதிலா அவை வேலை செய்யிற இடங்களைச் சேத்துச் சொல்லிறதும் இருந்தது . இது அநேமா சிங்கள ஊரா இருக்கும் . காரைநகர் பக்கம் தான் சிங்கள ஊர் அடைமொழி கனக்கப்பேருக்கு இருந்தது. வெலிகம பொன்னம்பலம், தங்கொட்டுவ தணிகாசலம் , களுத்துறை கனகலிங்கம் எண்டு ஒரு கேள்விப்படாத ஊரில போய் வியாபரம் தொடங்கி ,establish பண்ணி அந்த ஊர் பேரை ஒட்டிக் கொண்டு வந்து பேரையும் பிறந்த ஊரையும் பெருமைப்படுத்தின கன பேர் இருந்தவை. என்டை மச்சான் ஒருத்தனை்பள்ளிக்கூடத்தில அப்பப்பான்டை பேர் என்ன எண்டு கேக்க PM எண்டு சொல்லி இருக்கிறான் , குழம்பிப்போன ரீச்சர் திருப்பி விசாரிக்க , “ ஓம் வீட்டை வாறவை எல்லாம் PM நிக்கிறாரோ எண்டு தான் கேக்கிறவை” எண்டு சொல்லத்தான் ரீச்சருக்கு விளங்கிச்சுது postmaster தான் PM ஆனவர் எண்டு. ஓவசியர், Chairman, SM ( station master ) எண்டு தொழிலே பேராகி பேர் மறக்கப்பட்ட ஆக்களும் இருந்தவை. பெருமைக்கு ஊரைச்சேக்கிற ஆக்களும், ஊருக்கு பெருமை சேக்கிற ஆக்களும் எண்டு ரெண்டு பேரும் பேரோட ஊரைச் சேப்பினம். ஊரில தன்னைத் தானே பெருமையா நினைக்கிறது St John’s கொலிஜ் காரருக்கு மட்டும் இல்லை முழு யாழ்ப்பணத்தானுக்கும் இருந்தது. “ பருத்தித்துறை ஊராம் பவளக்ககொடி பேராம்” எண்டு பாடின கல்லடி வேலுப்பிள்ளையார், ஆடிப்பிறப்பிக்கு பாடின நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எண்டு , கவிஞனும் சரி கவிதையும் சரி ஊர்ப் பேரோட தான் இருந்தது. ரோடுகளுக்கு ஆக்களின்டே பேர் இருந்தாலும் ஊர் வழிய சந்திக்கு ஆக்களின்டை பேர் வைக்கிறேல்லை. பெரிய சந்திகள் ஊரின்டை பேரிலேம் மற்றச் சின்னன்களுக்கு மரத்தின்டை பேரோட புளியடி, இலுப்பையடி இல்லாட்டி ஒரு கட்டிடம் இருந்தா அந்தப் பேரோட மடத்தடி, கச்சேரியடி, மனோகராத் தியட்டரடி எண்டோ இல்லாட்டி குளத்தையோ , கோயிலையோஅதில இருக்கிற வைரவரையோ , பிள்ளையாரையோ, மாதா கோவிலையோ சேத்துத் தான் பேர் வைக்கிறது. எங்கடை ஒரு ஊரில ஒரு சந்தி இல்லை ஒராயிரம் சந்தி. ஐஞ்சு சந்தி, நாச்சந்தி , முச்சந்தி, கெற்றப்போல் சந்தி எண்டு ஒவ்வொரு சந்திக்கெண்டு ஒரு காரணப் பேரும், இடுகுறிப் பேரும் அதுக்கெண்டு ஒரு சிறப்பும் இருக்கும். அதோட எங்கேயும் சண்டை நடக்கேக்கயும் சொல்லுவாங்கள் இது ஆரியகுளம் சந்தி குறூப் , கொட்டடிச் சந்தி குறூப் , கொய்யாத்தோட்ட குறூப், ஐயனார் கோவிலடி குறூப், இது பிரவுண் ரோட் குறூப் எண்டு. பஸ்ஸில போகேக்க பெரும்பாலும் சந்தீன்டை பேரைச் சொல்லித் தான் இறங்கிறது. ஊருக்குள்ள நிறையச் சந்தி இருந்தாலும் main bus route இல ஊரின்டை பேரோட ஒரு சந்தி இருக்கும். கொக்குவில் , கோண்டாவில் , இணுவில், உடுவில் எண்டு வாறது townஇல இருந்து போகேக்க ஊர் தொடங்கிற சந்தியா இருக்கும். Town க்கு போற பஸ் எல்லாம் KKS ரோட்டாலேம் , பருத்தித்துறை ரோட்டாலேம் A 9 ஆல வந்து ஆஸ்பத்திரீ ரோட்டாலேம் வர ஒரு பஸ் மட்டும் இந்த சந்தியால போறது , அது காரை நகரில இருந்து வாற 782 பஸ் . ஸ்ரான்லி றோட்டால வந்து வெலிங்டன் சந்தீல திரும்பி town க்கு போகும். அதே போல மணிக்கூட்டுக் கோபுரத்தில இருந்து வாற றோட் தான் மணிக்கூட்டு கோபுர வீதி. அது முந்தி ஆசுபத்திரிக்கு குறுக்கால வந்து , ஸ்ரான்லி ரோட் , நாவலர் ரோட் எல்லாம் தாண்டி பிறவுண் ரோட் வரைக்கும் வந்ததாம் . முந்தி இருந்த GA Lionel Fernando தான் குறுக்கால ஆசுபத்திரி கட்ட விட்டவர் அதின்டை எச்சம் தான் இப்ப இருக்கிற மணிக்கூட்டு ஒழுங்கை. அதே போல சந்திக்கும் பழைய பேர் ஏதும் இருந்திச்சுதோ தெரியாது இப்ப அதுக்குப் பேர் வெலிங்டன் சந்தி. Town மாதிரி பழைய வெலிங்டன் சந்தீன்டை நாலு மூலையிலும் கட்டடங்கள். வெலிங்டன் தியட்டர் ஒரு மூலை , முனீஸ்வரா கபேயும் கடைச்சல் பட்டறையும் மற்ற மூலை , லிங்கம் கிறீம் கவுஸ் தெற்கை பாத்த வாசலோட , பிளவுஸில மட்டும் விட்ட அம்பை பெடியளின்டை காச்சட்டை பொக்கற்றிலும் விட்ட விக்ரம் டெயிலேர்ஸ் அதுக்குப் பக்கத்தில, எதிர கண்ணாடி விக்கிற S.M. Fernando , அதையும் தாண்டிப் போக Tower கூல் பார் எண்டு இருந்தது. 85 /86 கோட்டையில இருந்து செல்லுகளும் பொம்பரும் நியூ மாக்கட்டையே இல்லாமல் பண்ண , செல்லுக்கெட்டிய தூரம் தாண்டி சனங்கள் பிழங்கத்தொடங்கேக்க தான் இந்த மாற்றம் வந்தது. வருசம் பதினாறு குஸ்புவைப் பாக்க கள்ளமா ஒதுங்கின அதே வெலிங்டன் தியட்டர்ச் சந்தி . தொண்ணூறில CCA , science hall , science academy , new- master எண்டு கல்விச் சந்தியாகி மாறினதும் இதே சந்தி தான். மனிசிக்குப் பின்னால திரியேக்க வெலிங்டன் சந்தீல “ அவள் வருவாளா” எண்டு பாத்து கொண்டிருந்தது லிங்கம் கடை மூலையில . தொண்ணூறுகளில யாழ்ப்பாணத்தின் tuition கொட்டில் எல்லாம் இருந்தது இந்த சந்தி தான். இதைப் போல ஒவ்வொரு சந்திக்கும் ஓராயிரம் கதை இருக்கும். அது ரோட் சந்திக்கிறதால மட்டுமில்லை ஆக்களும் சந்திக்கிறதால தான் சந்தி எண்டு எழுவாயும் பயனிலையும் சேந்ததா இருக்கு. இப்ப இருக்கிற ஊருக்கும் இருக்காத ரோடுக்கும் board எல்லாம் போட்டிருந்தாலும் எங்கயாவது போறதெண்டால் ஒரு சந்தீல நிப்பாட்டிக் “வட்டுக்கோட்டைக்கு வழி என்ன” எண்டு கேக்கிறாக்களுக்கு விடை “ துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” எண்டு வழி சொல்லிறாக்களும் இருக்கினம் ஊரில. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  10. நுணலும் தன் வாயால் தானும் கெட்டு, தான் ஆதரிக்கின்றவர்களையும் கெடுக்கும்.
  11. நான் பதியவில்லையே? பதிந்தது பிழம்பு 😄 நம்பத்தகுந்த மற்றும் உறுதியான தகவல் (அதாவது பிரச்சாரத் தளங்கள் மற்றும் யூரியூப் Channels களில் இருந்து பெறப்படாதவை) என்பதால் தான் இங்கு தான் பதிந்ததாக பிழம்பு சொல்கின்றார். செய்திகள் தகவல்கள் பதியும் போது, விருப்பு வெறுப்புகள் எல்லாம் அவர் பார்ப்பதில்லையாம்.🙂
  12. அண்ணாமலை ஏதேனும் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றாரா? இந்த தேர்தலில், அண்ணாமலையும் தமிழிசையும் தோற்றது மிக சந்தோசம் தரும் விடயங்கள். ஆனால், துரை வைகோ வென்றது சந்தோசமான விடயம் அல்ல எனக்கு. எங்கள் (பா.ஜ .க.) உத்தரவுகளை கேட்டு அப்படியே நடந்து கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று சொல்லியிருக்க வேண்டும்.
  13. செய்தியை / தகவலை இணைத்தவர் நீங்கள், எனவே நீங்கள் மூலத்தை இணைக்க வேண்டியவர், அதை வாசிப்பவர்கள் அல்ல.
  14. இவை தொடர்பான நம்பிக்கை தரக்கூடிய தளத்தில் அல்லது செய்தி சேவையின் மூலத்தை இணைத்து விடுங்கள்.
  15. அந்த 296 இடங்கள், கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களையும் சேர்த்து தான். எனவே பிஜேபி யினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது, கூட்டணி அரசாங்கம் தான் அமைக்க முடியும். வகுப்புவாதி மோடியின் பிம்பம் உடைகின்ற தருணம் இது.
  16. நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
  17. முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:232 ஏனையவை:19 தமிழகம் + புதுச்சேரி தி.மு.க. கூட்டணி:40 அ.தி.மு.க; 0 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/ அவரும் 13000+ வாக்குகளால் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
  18. முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 301 இண்டியா கூட்டணி:210 ஏனையவை:32 தமிழகம் தி.மு.க. கூட்டணி:36 அ.தி.மு.க; 3 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/
  19. வாராணசியில் மோடிக்கு பின்னடைவு; வயநாட்டில் ராகுல் முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024 லக்னோ: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உ.பி.யின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர். நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர் இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் முறையே வாரணாசி, வயநாடு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார். ADVERTISEMENT HinduTamil4thJune1 உ.பி.யில் கடும் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக 25 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. https://www.hindutamil.in/news/india/1259578-pm-modi-trailing-in-varanasi-by-5-000-votes-rahul-leading-in-wayanad-by-over-13-000-votes.html
  20. முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 298 இண்டியா கூட்டணி:206 ஏனையவை:25 தமிழகம் தி.மு.க. கூட்டணி:35 அ.தி.மு.க; 3 பா.ஜ.க. கூட்டணி: 1 நா.த.க. 0 https://www.hindutamil.in/
  21. முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:210 ஏனையவை:25 தமிழகம் தி.மு.க. கூட்டணி:37 பா.ஜ.க. கூட்டணி: 1 ஏனையவை: 0 https://www.hindutamil.in/
  22. முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 279 இண்டியா கூட்டணி:205 தமிழகம் தி.மு.க. கூட்டணி:30 பா.ஜ.க. கூட்டணி: 1 ஏனையவை: 1 https://www.hindutamil.in/
  23. ன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 272 இண்டியா கூட்டணி:179 தமிழகம் தி.மு.க. கூட்டணி:14 பா.ஜ.க. கூட்டணி: 0 ஏனையவை: 0 https://www.hindutamil.in/
  24. முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 154 இண்டியா கூட்டணி:120 தமிழகம் தி.மு.க. கூட்டணி:04 பா.ஜ.க. கூட்டணி: 0 ஏனையவை: 0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.