Everything posted by தமிழ் சிறி
-
நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்
- வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!
வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது! யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்களும், சம்பந்தப்பட்ட குழுவை அழைத்து வர இந்த நாட்டிலிருந்து படகில் சென்றவர்கள் ஆவர். மேலும் விசாரணையில், மற்ற நால்வரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்த ஒரு குழு என்பதும், அங்குள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து மீண்டும் அவர்கள் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1431979- ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று!
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் வெற்றிகரமாக நிறைவு! ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நேற்று (15) ஏலமிடப்பட்டன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கப்பட்டிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 17 வாகனங்கள் ஏலத்தில விற்பனை செய்யப்பட்டன. அதன்படி, BMW மோட்டார் வாகனம் 01, Ford Everest ரக வாகனம் 02, Hyundai Terracan ஜீப் 01, Land Rover Discovery வாகனங்கள் 02, Mitsubishi Montero ஜீப் 01, Nissan பெற்றல் ஜீப் 03, Nissan வகை கார்கள் 02, Porsche Cayenne ரக வாகனம் 01, SsangYong Rexton ஜீப் 05, LandCruiser Sahara வகை ஜீப் 01, V 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வாகனங்களை கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாவை மிஞ்சிய வருமானம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431995- போர் நிறுத்தத்தை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம்
போர் நிறுத்தத்தை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம். மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல்கள் (DGMOs) “நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை” தொடர வியாழக்கிழமை (15) பிற்பகுதியில் முடிவு செய்துள்ளனர். PTI செய்திச் சேவையின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார், பாகிஸ்தான் DGMOs மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா மற்றும் இந்திய DGMOs லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ஆகியோர் வியாழக்கிழமை ஒரு மெய்நிகர் சந்திப்பில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மேற்கண்ட தீர்மானத்துக்கு வந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. எல்லைக்கு அருகிலுள்ள இராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஒரு நாள் கழித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன, அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது. மூன்று நாட்கள் கடுமையான இராணுவ தாக்குதல்களுக்கு பின்னர், மே 10 அன்று பாகிஸ்தான் DGMOs தனது இந்தியப் பிரதிநிதியை அழைத்து எல்லை தாண்டிய அனைத்து வகையான துப்பாக்கிச் சூடுகளையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, இரு நாடுகளும் இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒப்புக்கொண்டன. இருப்பினும், எல்லைக் கிராமங்களில் இருந்து கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. https://athavannews.com/2025/1431982- ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்! ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ‘ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன எனவும், பிரச்சினையை மிருகத்தனமான முறையில் அல்லாமல், புத்திசாலித்தனமான முறையில் தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1432005- துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க புட்டின் மறுப்பு! துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பினார். அதே நேரத்தில் உக்ரேன் ஜனாதிபதி தனது பாதுகாப்பு அமைச்சர் கியேவின் குழுவிற்கு தலைமை தாங்குவார் என்று கூறினார். 2022 மார்ச் மாதத்திற்கு பின்னர், இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கும் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இல்லாமல் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று கூறியதால், ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையை மேலும் குலைத்தார். பின்னர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ அந்தக் கருத்தை எதிரொலிக்கும் வகையில் பேசினார். துருக்கிய ரிசார்ட்டான அன்டால்யாவில் செய்தியாளர்களிடம் அவர், இஸ்தான்புல்லில் நடைபெறும் உக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கு வொஷிங்டன் “அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார். ரஷ்ய தூதுக்குழுவின் தலைவரான ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி, வெள்ளிக்கிழமை (16) இஸ்தான்புல்லில் அந் நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (0700 GMT) விவாதங்களின் தொடக்கத்திற்கு உக்ரேனின் பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். இதனிடையே, புட்டின் கலந்து கொள்ளாமல் மொஸ்கோ “அலங்கார” அணியை அனுப்ப முடிவு செய்தது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்யத் தலைவர் தீவிரமாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார். அதேநேரத்தில், பேச்சுவார்த்தைகளைச் சுற்றி “ஒரு நாடகத்தை” நடத்த உக்ரேன் முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பேச்சுவார்த்தைக்காக இஸ்தான்புல்லுக்கும் செல்லப் போவதில்லை என்றும், போர் நிறுத்தம் குறித்து விவாதிப்பதே தனது குழுவின் பணி என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேனின் தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையில் இருக்கும் என்றும், அதில் அதன் உளவுத்துறை சேவைகளின் பிரதித் தலைவர்கள், இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் பிரதித் தலைவர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் உடனடி, நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறது, ஆனால் புட்டின் முதலில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ளார், அங்கு அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படலாம். அதன் முழு அளவிலான படையெடுப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷ்யா போர்க்களத்தில் வலுவான நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432002- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
👉 https://www.facebook.com/100004310980208/videos/1049120133767759 👈 ஹலால் முறையில் கக்கா போவது எப்படி? எப்படி கக்கா போறது என்றுகூட இஸ்லாம் மதத்தில் சொல்லி உள்ளார்கள்.- சிரிக்கலாம் வாங்க
- தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
சிங்களம் கதறுகின்றது.- தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். - கனடாவின் பிரம்டன் நகரபிதா பட்ரிக் பிரவுன்.-- குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று!
குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று! குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று நெடுந்தீவு இறங்குதுறைமுகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினி நினைவேந்தல் குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், நெடுந்தீவு இறங்குதுறையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் மத தலைவர்கள் மற்றும் நெடுந்தீவு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். கடந்த 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை 7.30மணியளவில் நயினாதீவிற்கு அண்மித்த பகுதியில் குமுதினிப் படகில் சென்ற பயணிகள் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவத்தில் 7 மாத குழந்தை உட்பட 36 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431964- இந்தியா, அமெரிக்காவிற்கு வரிகள் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!
இந்தியா, அமெரிக்காவிற்கு வரிகள் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு! மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா வொஷிங்டனுக்கு “சுங்க வரிகள் இல்லாத” வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியதாக வியாழக்கிழமை (15) கூறினார். கட்டாரில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், இந்திய அரசாங்கம் “எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லாத ஒரு ஒப்பந்தத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறியதாக அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை மேற்கொள்காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தியாவின் வெளிப்படையான சலுகை குறித்து ட்ரம்ப் எந்த மேலதிக விவரங்களையும் வழங்கவில்லை. அதேநேரம், அவரது அறிக்கைக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. மேலதிகமாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை அவர் ஊக்கப்படுத்தியதாகவும் ட்ரம்ப் கூறினார். அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் குறித்த கருத்துக்கள், பரஸ்பர வரிகளை 90 நாள் இடைநிறுத்தத்திற்குள் வொஷிங்டனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த புது டெல்லி தொடர்ந்து முயற்சித்து வரும் பின்னணியில் வந்துள்ளன. ட்ரம்ப் தனது ஏப்ரல் 9 ‘விடுதலை நாள்’ அறிவிப்புகளின் போது இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431949- தமிழனின் சிற்பக் கலை.
விரல் அளவே உள்ள நடராஜர் கருங்கல் சிலை.- அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வளைகுடா சுற்றுப்பயணத்தின் 2 வது நாளான நேற்று, புதன்கிழமை கத்தார் சென்றடைந்தார். ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப் தரையிறங்கினார், அங்கு கத்தார் எமிர் ஷேக் தமீம் அவரை வரவேற்றார். Jaffna Muslim- அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
கத்தார் ஏர்வேஸுக்காக.... அமெரிக்க நிறுவனமான போயிங்கிடம், 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள 160 விமானங்களை கத்தார் ஆர்டர் செய்துள்ளது. Jaffna Muslim- அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
கட்டார் நாடு.... ட்ரம்புக்கு, 3400 இந்திய கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தது. பரிசாக வரும் சொகுசு விமானத்தை வேண்டாம் என கூற... நான் என்ன முட்டாளா?: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி Polimer News Digital- உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு!
உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு! உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணையகம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அந்தந்த கட்சிகள் மற்றும் குழுக்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். மே 6 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வென்ற இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறையை கோடிட்டுக் காட்டும் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் கூற்றுப்படி, அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் அந்தந்த உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தங்கள் பிரதிநிதிகளை பரிந்துரைக்க வேண்டும். மேலதிகமாக உள்ளூராட்சி அமைப்புகளில் 50% க்கும் அதிகமான இடங்களைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மேயர் அல்லது தலைவர் பதவிகளுக்கு தங்கள் வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்புமனுக்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மையைக் கொண்ட மன்றங்களின் மேயர்கள் அல்லது தலைவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று ஆணையம் மேலும் கூறியது. https://athavannews.com/2025/1431909- துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை! போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இன்று (15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரேனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ”மே 15ம் திகதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக தான் காத்திருக்கப் போவதாகவும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று ( 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தைக்கு புடின் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி” இவ்வாறு பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431905- கருத்து படங்கள்
- வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு!
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
- வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு!
வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர். போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் கீழ் சாரதி விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1431900- ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று!
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று! ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல் நேற்று (14) முடிவுற்றது. இன்றைய தினம், பீ.எம்.டபிள்யூ.மோட்டார் வாகனம் 01, போர்ட் எவரெஸ்ட் ஜீப் 01, ஹுண்டாயி டெரகன் ஜீப் 01, லேண்ட் ரோவர் ஜீப் 01, மிட்சுபிஷி மொண்டெரோ ஜீப் 01, நிசான் பெற்றல் ஜீப் 03, நிசான் வகை மோட்டார் கார்கள் 02, போர்ஷ் (Porsche) கெயின் மோட்டார் வாகனம் 01, சென்யோன் ரெக்ஸ்டன் வகை ஜீப் 05, லேண்ட் குரூஷர் சஹரா வகை ஜீப் 01, வீ 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏலமிடப்படவுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏளத்தின் முதல் கட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக 14 சொகுசு வாகனங்கள், பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கு அமைவான ஏளம் நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதோடு, முன்னைய ஏளத்தில் 09 டிபெண்டர்கள் உள்ளடங்களாக பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழுவினருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431897- ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்!
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தொடர்ச்சியான தேடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் பகுதியில் நடந்த ஒரு அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (13) கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், இரண்டு பயங்கரவாதிகள் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள். 2023 ஆம் ஆண்டு லஷ்கரில் இணைந்த குட்டாய், கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு சாரதி காயமடைந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் ஷோபியானில் உள்ள ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் ஒருவரைக் கொன்றதிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு பயங்கரவாதக் குழுவில் சேர்ந்த ஷாஃபி, ஷோபியனில் உள்ள வாச்சியில் உள்ளூர்வாசி அல்லாத ஒரு தொழிலாளியைக் கொன்றதில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஷோபியனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431867 - வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.