Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாத்தியார்

  1. 2015 ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தீரணி சென்றியிருந்தேன். வல்வையில் கடற்கரை ஓரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்ச்சாரக் கூட்டம். மணிவண்ணன் , காண்டீபன் செல்வராசா கஜேந்திரன் , கஜேந்திர குமார் என பலர் பீரங்கிகளாக முழங்கினார்கள். கடற்கரையின் கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த. அவர்களின் பிரச்ச்சாரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாஜி அண்ணனை எனது தம்பி அறிமுகம் செய்து வைத்தார். அந்த உரையாடலின் பொது அவர் கூறிய ஒரு சிறு செய்தி கஜேந்திர குமாருடன் சேரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவர் செல்லும் வழி பிழை என்று கூறும் அற்ப பதர் நான் இல்லை என்பதே.... நலம் பெற வேண்டுகின்றேன்🙏
  2. ரோஹன விஜய வீரவிற்கு பாராளுமன்றத்தில் வீர வணக்கம் செலுத்திய ஒருவர் என்றால் அது வைத்தியர் அர்ச்சுனா MP யாகத்தான் இருக்குமென்று நினைக்கின்றேன்
  3. கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம் தமிழ் மக்களின் போராட்டம் என்பது தொடர வேண்டும் காலத்தின் தேவைக்கேற்ப அதன் வடிவங்கள் மாறும் முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது பட்டியலில் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்வதை போலவே தான் இதுவும் இல்லாதவர்களும் உள்ளே செல்கின்றார்கள் அல்லவா....
  4. சட்டத்தின் முன்னர் யாராகினும் எவராகினும் தங்கள் விளக்கத்தை கொடுத்து தங்கள் பக்க நியாயத்தை நிறுவினால் இந்த அரசு அதற்கு ஆதரவு கொடுக்குமா ? அல்லது முந்திய அரசுகளை போலவே இவர்களும் இனவாத முகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு பசுத் தோல் போர்த்திய சிங்கங்களாக வலம் வருவார்களா ? என்பது மக்களுக்குத் தெரிய இன்னும் சில கால அவகாசம் தேவை தமிழ் தேசிய கட்சிகளே தங்கள் இருப்பைத் தக்க வைக்க தங்கள் வாக்காளர்களுக்கே அல்வா கொடுக்கும் பொது சிங்கள தேசிய கட்சியான NPP தமிழர்களுக்கு அல்வா கொடுக்காதா ?
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பையன் வாழ்க வளத்துடன்
  6. இப்பவெல்லாம் அடிக்கடி பிடியாணை கட்டளை வருகின்றது ஒரு மாதமாக டக்ளஸ் அய்யாவையும் தேடியவை அண்மையில் தான் நீதிமன்றில் ஆஜரானவர் வைத்தியர் ஆஜராவார் புயல் சூறாவளி முடிய..... அடுத்த சுனாமி கொழும்பு நீதி மன்றில் .....😂
  7. Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக அடிபடும் செய்தி இது தான் என பதிவர் ஆரம்பிக்கிறார்… யாருக்காவது, என்னாவது , யாராவது ஏதாவது சமூக வலைத்தளத்தில் இருக்கணும்… அப்பதான் அது ஓடிக்கொண்டிருக்கும்.. இல்லாட்டி பொறுக்கேலாது… 2)தற்போது டொக்டர் அர்ச்சுனா பற்றிய கதை போய்க்கொண்டிருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் அது பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 3)ஆனால் அர்ச்சுனா ஆராயப்பட, படிக்கப்பட வேண்டிய மனிதர் தான் என்கிறார் பதிவர். அங்கே ஓர் Case Study இருப்பதாக கூறுகிறார். 4)எல்லோரும் என்னிடம் கேட்டார்கள், யார் இவர்? என்ன இது என கேட்டார்கள். Dr. Archchuna Ramanathan. 5)கேட்டவர்களை நான் கேட்டேன் இவருடன் கதைக்க வேண்டுமா? இது பற்றி கதைக்க வேண்டுமா? இல்லையா எனக் கேட்டேன். அதற்கு கேட்டவர்கள் அவனுக்கு பைத்தியம் அவனோட என்ன கதை தேவையில்லை விடுங்கள் என்றார்கள். 6)ஆனால் அது பற்றி கதைக்காமல் விட்டால், அவருடன் கதைக்காமல் இருந்தால் அங்கே தான் பெரிய பிரச்சனை இருக்கிறது என கூறிச்செல்கிறார். 7) கதைப்பதில் பிரச்சனை இல்லை தானே என கூறிச்செல்கிறார். ஆனால் கதைக்காமல் விட்டால் தான் பிரச்சனை பெரிதாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். 8)அர்ச்சுனா இங்கே என்ன செய்கிறார்? அவர் பாரம்பரிய சம்பிரதாயத்தில், வேதத்தில் கைவைக்கிறார். அதை கேள்வி கேட்கிறார். அதை தாக்குகிறார். 9)உடனே நாங்கள் என்ன செய்கிறோம்? ஏய், ஏய் என்ன கேள்வி கேக்கிறாய்? பேசாம மூடிப்போட்டு போ பாப்பம் என்கிறோம். 10) ஆனால் அர்ச்சுனா கேட்பதாயில்லை. ஏன் மூடுவான்? உள்ள ஏதோ இருக்கெண்டுறீங்கள்? ஒண்டையும் காணலையே? ஒண்டும் இல்லாட்டி மூடிட்டு போ எண்டுறீங்கள்?என்கிறார் .. என்ன தான் இருக்கிறது என பாப்போமே என்கிறார்… 11) விடயத்தை மூடாட்டி,அதை பார்த்துக் கொண்டிருப்பவர்களாகிய சமுதாயத்தின் பெரிய கூட்டம் என்ன செய்கிறார்கள். இவன் விசரன், பைத்தியம், சிறையில் அடையுங்கள், விசாரியுங்கள், அடியுங்கள், இல்லாமல் செய்யுங்கள், புறக்கணியுங்கள், ஒரு பக்கத்தில தூக்கிப் போடுங்கள், கொல்லுங்கள் அல்லது அங்கொடைக்கு கொண்டு போங்கள் என குளற ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கிறார்கள். (இதைத்தான் தமிழர்களாகிய நாம் சாவகச்சேரியில் இருந்து இவருக்கு செய்து வருகிறோம். இதற்கு எதிராகத்தான் தொடர்ந்து நானும் எழுதிக் கொண்டு இருந்தேன், இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்) 12) இதை அப்படியே இழுத்து மூடுவது கூடாது. இதனால் தான் எமது சமுதாயம் முன்னேறுவதற்கு மிகவும் தாமதமாகிறது என அடித்து கூறுகிறார். இப்படி யாராவது பிரச்சனைப்படுத்தினால் உடன நாங்கள் அவரை அப்படியே அப்புறப்படுத்த ஆரம்பிக்கிறோம். சமுதாயத்தில் உள்ள பலங்கள் அனைத்தையும் கொண்டு கேட்பவரை மூடி மறைப்பதால் பிழைகளை மூடிவிடுகிறோம். (அதைத்தானே சாவகச்சேரியில் இருந்து நாம் தொடர்ந்து செய்து வந்தோம்.) 13)இந்தப் பிரச்சனையை இப்படியே கைவிடுவது கூடாது என கூறிச்செல்கிறார். சமாளிப்பது கடினம் தான், (ஏன் என்றால் அந்த பழைய சிஸ்டம் தானே எமக்கு பழகியிருக்கிறது, சுலபமாகவும் இருக்கிறது) ஆனாலும் கைவிடக்கூடாது எனகிறார். இதனால் இது மற்றவர்களுக்கு தலையிடியாக மாற ஆரம்பிக்கும்,ஆனாலும் கைவிடக்கூடாது என்கிறார். (இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து எழுதிவருகிறேன். இதற்காக மட்டுமே நான் தொடர்ந்து அர்ச்சுனாவின் பக்கம் எழுதி வந்தேன்) (பிரச்சனை ஒன்று வந்தால் பிரச்சனையை மூடுவதல்ல தீர்வு, பிரச்சனையை தீர்ப்பது. புண் வந்தால் புண்ணை மூடி மறைப்பது போல் இருக்கிறது. புண்ணை மாற்ற வேண்டாமா?) 14)சமுதாயத்தில் ஒருவரும் கூறாத, கேட்காத விடயத்தை சமூகத்தில் வேறு ஒருவர் கேட்க ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு தலையிடி தொடங்கிவிடுகிறது. பேசாம அங்கால போவியா என கோசம் எழுப்புகிறார்கள். கலைக்க ஆரம்பிக்கிறார்கள். 15) இதனால் அவர் கூறுவது எல்லாம் சரியானது என நான் கூறவரவில்லை. அவரும் சதாரண மனிதர் தானே என்கிறார். 16) மற்ற பக்கம் இருந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். சமுதாயத்துக்காக, பொதுவிடயத்துக்காக கேள்வி கேட்க ஆரம்பிக்கும் போது அவரது தனிப்பட்ட பலவீனங்களும் வெளியே வர ஆரம்பிக்கின்றன. கேட்பவரின் எல்லாப்பக்கமும் வெளித்தள்ளுகின்றன. 17) இது யாருக்கும் நடைபெறலாம், பொது விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கும் போது எமது தனிப்பட்ட பலவீனங்கள் கூட வெளிவரப்பார்க்கும். அப்போது அவர் கதைத்த பொது விடயங்கள் அங்கே அடிபட்டுப்போகின்றன. அதற்காக காத்திருந்தவர்கள், தங்களுக்கான இரையை தூக்கிக்கொண்டு சன்னதம் கொள்கிறார்கள். 18) அப்போது தனிப்பட்ட பலவீனங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. அவர் கூறும் நல்ல விடயங்கள் அடிப்பட்டுப் போகின்றன. (யாழ் தேர்தலில் அர்ச்சுனா அதற்கான விலையையும் கொடுத்திருந்தார்.) (இது தான் அர்ச்சுனாவுக்கு தேர்தல் காலங்களில் நடைபெற்றது. Sepal அர்ச்சுனா பற்றி நல்லதொரு case study தான் செய்திருக்கிறார்.) 19)ஒருவர் கட்டுப்பாடு,ஒழுக்கம், அடக்கம் (discipline)என்பவற்றை பாடசாலையிலேயோ, சமுதாயத்திலேயோ, குடும்பத்திலேயோ அல்லது வேறெங்காயினும் கற்றிருந்தால் ஒருவரும் கேளாத கேள்விகளை கேட்க மாட்டார்கள். அவர்கள் ஏதோ ஓர் அமைப்புக்குள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது அடிமையாகி இருக்கிறார்கள். அதனால் கேள்வி கேட்க மாட்டார்கள். 20)Discipline க்க வளர்ந்தவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் கூட்டத்துடன் நின்று கொண்டிருப்பார்கள். கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருப்பார்கள். Discipline க்க இருப்பவர்கள் கேள்வி கேட்கும் மற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளிவந்து கேள்வி கேட்கிறார். ஆனாலும், அவருக்கு எதிரான கூட்டம் அவரை புறக்கணிக்க, அடிக்க, துரத்த, ஒதுக்க, கொல்ல, சிறையில் தள்ள சமூகத்தின் அத்தனை பலங்களையும் பாவிக்க ஆரம்பிக்கிறது… ஆனால் Aruchchuna எல்லாவற்றையும் எதிர்த்து போராடுகிறார்.. புதுவடிவம் கொள்கிறார்… பல எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து போராடுகிறார்… பகுதி இரண்டு… தொடரும்…. DR. அர்ச்சுனா ராமநாதன் FB இல் இருந்து
  8. மன நோய் பல வகைப்படும் இவர் தன் நிலையை இழந்த ஒருவர் என்று நினைக்கின்றேன் அந்த கணத்தில் தான் யார்... என்ன செய்கின்றேன்.... என்பதைக் கூட அறியாதவராகவும் இருக்கலாம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
  9. ஏதாவது பிரச்னை என்றால் ரிப்போர்ட் பட்டனை அழுத்தட்டாம் நிர்வாகம் துரிதமாக நடவடிக்கையில் இறங்குமாம்🙏 இப்பவே அழுத்தட்டா அல்லது வெய்ட் பண்ணவா என்று யோசிக்கின்றேன் 🤣
  10. எது இருக்கின்றதோ இல்லையோ😅 அவரிடம் இருக்கும் ஒரு தனித்த தன்மை (கெத்து என்றும் சொல்லலாம் பயம் இன்மை என்றும் சொல்லலாம்) வேறு எந்தத் தமிழ் பா உ க்களிடமும் நான் காணவில்லை தேர்தலில் வென்று பத்து நாட்களில் இலங்கை முழுவதும் அவரது கருத்துக்கள் ஒலிக்கின்றன இது ஒரு வரலாற்றுச் சாதனை 👌
  11. பலர் எதிர்பார்க்கின்றார்கள். அர்ச்சுனாவின் பதவியை எப்படியாவது பறித்து விட மாட்டார்களா என்று ஏங்குபவர்களும் இருக்கின்றார்கள். பதவி பறிப்பு நடைபெற முன்னர் என்ன நடக்கும் ? சரி அவருடைய பதவி பறிக்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கும் ?🤣
  12. பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் போட்டியை திறம்பட நடத்திய கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள்
  13. அவ்வாறு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று வந்திருக்க வேண்டும். அவர் தழமிழ்த் தேசியவாதி தான் தமிழ்த் தேசத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் செய்பவரைத் தேசியவாதி என்று தானே அழைக்க வேண்டும் . அதை விட செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கோருவது என்பது எல்லோராலும் முடியாது இங்கேயும் DR, அர்ச்சுனா தன்னை வேறுபடுத்தியே நிற்கின்றார்
  14. சரி ஈழத் தமிழர்களுக்கு ஒரு திடமான தீர்வை தர அனுரவிற்கு ஒரு விருப்பம் இருந்தால்.... அதை அவருடைய கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.... பின்னர் அதை பௌத்த மத தலைவர்களிடம் தெரிவித்து ஆசி பெற வேண்டும்... அதன் பின்னர் சர்வ ஜன வாக்கெடுப்பிற்கு சிங்கள மக்களிடம் செல்ல வேண்டும்.... அதுவும் கிடைத்தால் உயர் நீதி மன்றில் அனுமதி பெற வேண்டும்.... பாராளு மன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும்... இப்படிப் பல சிக்கல்களை அவிழ்த்து தீர்வு கிடைப்பது கடினம் JR தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு தேசம்... இல்லை.... ஒரு பிடி மண் கூடச் சொந்தமாக இருக்கக் கூடாது...... என நினைத்து நிறைவேற்றிய சட்டமூலம் 78 இல்...
  15. கடற்கரையில் ஒதுங்கும் இந்த மட்டிகளை மணலுக்குள் இருந்து தேடி பொறுக்கி எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து கிட்டத்தட்ட இறைச்சிக்கறி போல சமைத்து சாப்பிடுபவர்களும் உள்ளனர்
  16. இன்னுமொரு விடயம் பல ஊடகங்கள் தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் உட்பட சில்லறை ஊடகங்களும் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் அமரும் வரியையில் 8 ஆம் இலக்க இருக்கை எதிர்க்கட்சித் தலைவருக்கானது தானா என்பதே முதலாவது கேள்வி அப்படியானால் வரலாற்றில் இடம்பெற்ற எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் அதே இலக்க இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்களா ? சென்ற அரசாங்கத்தில் ரணில் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்த எதிக் கட்சித் தலைவரான சஜித் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்ற காலத்தில் இருந்து அந்த இருக்கையில் தானாம் அமர்ந்திருப்பார்
  17. இதைத்தான் DR. அர்ச்சுனா அவர்கள் "மாற்றத்தானே வந்தகிருக்கின்றோம்" ! என்று கூறியுள்ளார்
  18. DR. அர்ச்சுனா அவர்கள் சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் . முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ? அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ? அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு முன்வரமாட்டார்கள் குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில் ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
  19. செய்த பாராளு மன்றத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியைக் கட்டுப்படுத்தவும் அல்லது அறிவுறுத்தும் தகுதி சபாநாயகருக்கு மட்டும் உள்ளது அது தெரியாமல் அந்த சாதாரண பாராளுமன்ற ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு அறிவுறுத்த வந்ததன் நோக்கம் என்ன மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் குரல் கொடுப்பதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் தான் இங்கே எங்கே நாகரீகம் அடிபட்டது சபா நாயக்கர் தெரிவு முடிந்த பின்னர் அவர்ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்களுக்குத் தெரிந்த விடையம் உங்களுக்குத் தெரியவில்லை அர்ச்சுனா பாராளுமன்றம் என்றது பலருக்கும் பிடிக்கவில்லை குற்றம் காண்கின்றார்கள்
  20. நான் நினைப்பது இந்த NPP யின் அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தராமல் ஏமாற்றி விட்டு அடுத்து வேறு ஒரு கட்சியிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது அதாவது அடுத்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்து வெளியேறும் பொழுது அடுத்த நூறு வருடங்களுக்கு அவர்களுடைய எதிர்காலம் இருட்டினில் கவிழ்ந்து விடும் .
  21. ஒருவருடைய இயல்பான குணங்களையோ நடை உடை பாவனைகளையோ யாராலும் மாற்ற முடியாது. என்னைப்பொறுத்தளவில் பாராளு மனத்திற்குத் தெரிவாக முன்னரே DR. அர்ச்சுனா அவர்களை மக்கள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள் அதுவே அவரின் அடையாளம் மக்களுக்குத் துரோகம் இழைக்காத எந்த ஒரு மனிதனையும் தமிழர்கள் தலைவனாக ஏற்காத தயாராக இருக்கின்றார்கள் என்பதற்கு DR.அர்ச்சுனா அவர்கள் ஒரு உதாரணம் அவரைப் பின்பற்றி ஆயிரம் அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும்
  22. 40 ஆயிரம் சவப்பெட்டிகளுடன் வருவேன் .......... என்பதைவிடவா இது பெரிது
  23. கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும் இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும் என் போன்ற பலரதும் மனதிலும் தோன்றவில்லை நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை. சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
  24. வெள்ளை வேட்டியுடன் முகத்தை எல்லாவற்றையும் நாம் இழந்து விட்டோம் என்ற தோரணயில் இறுக்கமாக வைத்துக் கொண்டு தேசியம் தமிழினம் என்று உரக்க அனல்பறக்க பாராளுமன்றத்தில் உரையாற்றி விட்டுப் பின்கதவால் சிங்கள அமைச்சர்களுடன் இது தான் எங்கள் அரசியல் எனக் கைலாகு கொடுக்கும் தேசிய வியாபாரிகளைவிட இந்தக் கோமாளி DR. அர்ச்சுனா எவ்வளவோ மேல் என நான் நினைக்கின்றேன் காமெடிக் பீசுகள் எங்குதான் இல்லை காமெடிக் பீசுகளுக்குத் தான் இப்போது வாக்குகள் அதிகமாக கிடைக்கின்றன

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.