குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
Everything posted by குமாரசாமி
-
எனது மரணச்சடங்கு.🖤
இதுவொரு அருமையான வாழ்க்கை தத்துவ பாடல்.வாழ்க்கை எனும் தத்துவத்தை மனிதம் மறந்ததினால் தான் உலகில் இன்றைய கலவரங்கள் என நான் சில வேளைகளில் சிந்திப்பதுண்டு. நான் பல காணொளிகளை இணைத்தும் நேரடியாக வேலை செய்யவில்லை☹.நான் இணைத்த அதே இணைய காணொளி முகவரியை நீங்கள் இணைத்ததும் நேரடியாக வேலை செய்கின்றது. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.🤣 உங்கள் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி சிறித்தம்பி...🙏 ஐயனே! நீங்கள் நினைப்பது உண்மைதான். தலைப்பிற்கும் அதன் கீழ் ஊர்ந்து செல்லும் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லைத்தான். இருந்தாலும் மனித வாழ்க்கை எப்படிப்பட்டது அதில் உள்ள ஆசா பாசங்கள், திட்டமிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்கள் அதன் முன்னேற்பாடுகள் என்பனவற்றை அலசி ஆராய்ந்து விட்டு எனது மரணச்சடங்கு எப்படியிருக்க வேண்டும் என சொல்ல நினைக்கின்றேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் சரியானது.இருப்பினும் நாம் இறந்த பின் எமது மரணச்சடங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை உயிர் உள்ளவர்கள் தான் தீர்மானிக்கின்றார்கள்.எனவே அந்த தீர்மானத்தை எம் உயிர் உள்ள போதே நாம் நிர்வகித்து உயில் எழுதி விடவேண்டும். நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன். எனது உயில் பாகங்களில் இதுவும் ஒன்று.இதை நான் ஏற்கனவே செய்து விட்டேன்.
-
நடனங்கள்.
https://youtu.be/kuL8tvgMtA
-
கொஞ்சம் ரசிக்க
என் ஆசை பெரிய பேராசை தான் இருந்தும் கேட்கிறேன் என் உயிர் உன் உயிரினுள் ஊடுருவி இருக்க அனுமதி கொடுப்பாயா? 💘
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தனித்து நின்றாலும்- தனித்துவமாய் நில்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சுப்பன்:-டேய் திருடா....கள்ளா...நீ ஒரு கள்ளன்.என்ரை காணியிலை தேங்காய் களவெடுத்து போட்டாய் மப்பன்:-மன்னிக்கவும் இனிமேல் என்னை கள்ளன் திருடன் எண்டு சொல்ல வேண்டாம்.. சுப்பன்:-அட ..... வேற எப்பிடி சொல்லுறதாம். தலைவர் ஜாம்பவான் வீர தீரர் எண்டு சொல்லவோ? மப்பன்:-பிறர் பொருள் நேசிப்பாளர் எண்டு சொல்லவும்👻 சுப்பன்:-இது எப்ப தொடக்கம்? மப்பன்:-இனிமேல் அப்பிடித்தான்.. சுப்பன்:- என்ர சிவனே இது கலி காலம்.. மப்பன்:-உங்களுக்கு கலிகாலம் எனக்கு பொற்காலம் 😎 சுப்பன்:😧😟
-
இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்
யூதர்கள் பலஸ்தீனியர்களை அழித்தொழிக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை மனித நேயமில்லாமல் செய்கின்றார்கள். யூதர்கள் ஹிட்லரிடம் அடிவாங்கியும் திருந்தவில்லை.மனிதாபிமானமும் பிறக்கவில்லை.
-
எனது மரணச்சடங்கு.🖤
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அதே போல் விருப்பு வாக்கு அளித்தமைக்கும்,விருப்பு வாக்கு அளித்தவர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.இது யாவரும் அறிந்ததுதான்.ஆனால் மனித இனத்திற்கு மட்டும் நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் இறுதிச்சடங்குகள் வேறுபடும்.பல இடங்களில் அது ஒரு நாடக மேடை போல் தோன்றும்.இல்லை இல்லை அது நாடக மேடையேதான்.பல சிவாஜிகணேசன்கள், பல வாழ்வே மாயம் ஸ்ரீபிரியாக்கள் ஸ்ரீதேவிகள்,கௌரவம் பண்டரிபாய் கூட்டம் என இறுதிச்சடங்கு நிகழ்வுகள் களைகட்டும்.கஸ்ரத்திற்கு உதவாதவர்கள் கண்ணீர் மல்க நிற்பர்.மரண ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே கூடி நின்று மரணத்திற்கான ஆய்வுகளை நடத்திக்கொண்டிருப்பர்.இன்னொரு பகுதியினர் யார் யார் வரவில்லை என ஆந்தைக்கண்ணால் கணக்கெடுத்துக்கொண்டிருப்பர்.நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தவர்கள் விருந்து வைக்காத குறையாக சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பர்.இதெல்லாம் என் மரணச்சடங்கில் நடக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றேன்.🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காவோலை வேலிக்கால ஓட்டை போட்டு பக்கத்து வீட்டு விடுப்பு பார்த்த யாழ்ப்பாணத்தானுக்கு பேஸ் புக் ஒரு வரப்பிரசாதம்.😂
-
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
நாட்டில் வாழும் மனித மிருகங்களை விட காட்டில் வாழும் மிருகங்கள் ஓரளவிற்கு பரவாயில்லை.
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
தலைவன் டொனால்ட் ரம்ப் தாய்லாந்து-கம்போடியா பிரச்சனையை தீர்க்க போவதாக சிறு செய்தி ஒன்று வந்துள்ளது.
-
காஸாவில் போர்க்குற்றம்: இஸ்ரேலை அதன் நட்பு நாடுகளே கைவிடுகின்றனவா?
இஸ்ரேல் பலஸ்தீன அழிவை இனியும் செய்து கொண்டிருக்குமேயானால் அதை பார்த்துக்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய அவமானமும் அவமரியாதையும்.... இது உக்ரேன் விடயத்திற்கும் தகும். படிப்பில் முன்னேறியவர்கள்,பல கண்டுபிடிப்புகளை செய்தவர்கள்,விஞ்ஞானத்தில் உயர்ந்தவர்கள்,மருத்துவத்தில் உயர்ந்தவர்கள்,மனித உரிமைகள் பற்றி கரிசனை கொள்பவர்கள்,ஜனநாயகவாதிகள் ,மனித நேயம் உள்ளவர்கள் என கூறிக்கொண்டு மறைமுகமாக போர் செய்பவர்கள் இந்த மேற்குலகினர்.
-
எனது மரணச்சடங்கு.🖤
ஒவ்வொருத்தர் வாழ்விலும் பிறப்பு தொடக்கம் இறப்பு வரைக்கும் வயது பருவங்களுக்கேற்ப விழாக்கள்,கொண்டாட்டங்கள் வந்து சென்று கொண்டே இருக்கும்.அது பிறந்தநாள் தொடக்கம் மரண நாள் வரையில் முடிவடையும்.எல்லா கொண்டாட்டங்களையும் அப்படியிருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது வழக்கம். மரண நிகழ்வை மட்டும் யாரும் தீர்மானிக்க முடியாது.ஆனால் மரணச்சடங்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என பலர் திட்டமிட்டு வைத்திருப்பதில்லை.சிலர் அப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.அதில் ஒரு சில திட்டமிட்ட முறையிலும் நடைபெற வாய்ப்பில்லாமல் போகின்றது. நான் ஒரு மரணச்சடங்கு உயில் எனக்காக எழுதி வைத்துள்ளேன்😂.என் பெறோர்கள் எனக்காக காணி பூமி உறுதிகளை எழுதி வைத்து விட்டு சென்றார்கள். நானோ என் இறுதி பயணத்திற்காக உயில் எழுதுகின்றேன்.😜
-
எனது மரணச்சடங்கு.🖤
எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என பல கனவுகளை வளர்த்திருப்பார்கள்.பெற்றெடுத்தவர்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியிருக்கும். இப்படியான சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கலாம். பெற்றோரின் கட்டுப்பாடு எனும் கையை விட்டு விலகும் போது பல விடயங்களை நம்மை நாமே அரசர்களாக்கி தீர்மானிக்கின்றோம். அது பல இடங்களில் தனி பறவையாக்கும் போது தானாகவே வந்து சேர்ந்து விடும்.நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் நாம் செய்வதெல்லாம் வீரமாக தெரியும். புத்திசாலித்தனமாக தெரியும். சரியானதாகவும் தெரியும். அதன் பின் மனித வாழ்வில் திருமண நிகழ்வு என ஒன்று வரும். அது ஒரு கூட்டு வாழ்க்கை.சந்ததிகள் உருவாகும்.சந்தோசங்கள் பெருகும்.சொந்தங்கள் பாசங்கள் உறவுகள் பெருகும். அதில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் போகும்.நன்மை தீமை என பல சம்பவங்கள் நடந்தேறும்.அப்போது எமக்குள் இருந்த பாசங்கள் விரிவடையும். முன்னர் இருந்த அயல் உறவு பாசங்கள் இல்லாமல் போகும்.....
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
அதே.👍 வேறு எந்த சிதம்பர ரகசியமும் இல்லை. சம்பந்தனிடம் சாணக்கியமாவது சாணகமாவது.
-
நடனங்கள்.
https://youtu.be/kuL8tvgMt_A இதெல்லாம் பொன்னான காலங்கள். இனி என் வாழ்க்கையில் நினைத்து பார்க்கவே முடியாது. ☹️ https://youtu.be/ebuKzS2fAFg https://youtu.be/El105nYqmjo அருமை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் நானாக இருப்பதை தவிர்த்து அழகானது/அறிவானது எதுவும் இல்லை.
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
நாமம் போட்டும் திருந்துற பாடாய் தெரியேல்லையே......இப்பவும் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சுக்கொண்டுதானே திரியுறார். அதுதான் அந்த சாணக்கியத்தை பத்து வருசமாய் கண்டு களிச்சமே 😁
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
பல்லின கலாச்சாரம் வேணும் எண்டால் ஆபிரிக்க பிரதர்ஸ்ச காசு குடுத்து எண்டாலும் கூட்டிக்கொண்டு வரத்தான் வேணும் 😂
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
காக்கை வன்னியன்கள் இல்லையெண்டால் சிங்கள பேரினவாதத்துக்கும் அதுக்கு சாமரம் வீசுறவைக்கும் பெரிய பாரிய சொல்லணா இழப்பு தானே 🤣
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை
தமிழ்நாட்டு பொலிசாரிடம் ரெயினிங் எடுத்திருப்பார்கள்.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
நான் உந்த குகைக்குள் பல தடவைகள் படுத்து எழும்பி வந்திருக்கிறன்.அரணா கொடி தொடக்கம் காப்புக்கயிறு வரைக்கும் உருவி எடுத்துப்போட்டுத்தான் அந்த அறைப்பக்கமே விடுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்புக்குள் ஏதாவது உலோகங்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என கேட்டு உறுதி செய்த பின்னரே அறையினுள் செல்ல அனுமதிப்பார்கள். கட்டுப்பல்லுக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். உடம்புக்குள் அதாவது கால்பகுதி,மண்டைப்பகுதியில் உலோகங்கள் பொருத்தப்பட்டிருந்தால் விமான நிலையங்களிலும் ஒரு சில பிரச்சனை இருக்கும் என கேள்விப்பட்ட ஞாபகம்.
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
இந்தியா,பாக்கிஸ்தானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்....
-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
அய்க்......ஆசை தோசை அப்பளம் வடை பாயாசம். அதுதான் இல்லையே..😂 ஜேர்மனி பலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதில்லையாம்.ஏனெண்டால் அங்கீகரிப்பது பிழையான வேலையாம். உக்ரேனுக்கு முக்கி முனகுபவர்கள் பலஸ்தீன விடயத்தில் பாலுக்கு காவல் பூனைக்கும் தோழன் எண்ட கதைதான். இன்னொரு எத்தியோப்பியாவாக மாறி விட்ட பலஸ்தீனம்.☹️
-
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
நாடாளுமன்றத்திலும் "இந்தியன்" திரைப்படத்தை ஒளிபரப்பி அங்கிருக்கும் ஊழல்வாதிகளை வெருட்ட வேண்டும்.🤣