Everything posted by Nathamuni
- 2833C7BD-0AFC-40F8-829E-41966B2A0816.jpeg
-
வெள்ளித் தேரோட்டி...
மோகன் அண்ணை, 100% ஒதுங்கி, ஓய்வெடுக்காது, வேண்டாப்பிள்ளையை தத்துக் கொடுத்து விட்டுப் போன அப்பா போல இராமல், அப்பப்ப, குறைந்தது மாதம் ஒரு முறையாவது வந்து, குரல் விட வேண்டும். என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா என்றாவது விசாரித்துப் போகவேணும். 🙏
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிரட்டை இட்லி..... ! 👍
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
நான் ஆரம்பத்தில், வாஸ்கொட காமா குறித்து கேட்டேன். அவர் இந்தியாவை வந்தடைந்த நாள் எல்லாம் சொல்லியது. ஆனால் இந்தியா என்ற நாடு அப்போது இருக்கவில்லையே என்று சொன்னால், நீ சொல்வது சரியானது, பிரிட்டிஷ்காரர் உருவாக்கும் வரை இந்தியா இல்லை. அநேகமாக இந்திய துணைக்கண்டம் என்பதே சரி என்கிறது. ஆகவே, உரையாடலுக்கு, சரியான பதிலை தருகிறது என்பது வியப்புக்குரியது. உங்கள் அடுத்த கதைக்கான கருவினையும், அது குறித்த உரையாடல்களையும் நீங்கள் செய்து கொள்ள முடியும் என்பதால் அதன் உபயோகம் நீங்கள் முயலும் போதே தெரியும்.
- F7279FC7-3435-46C9-807A-D50C4A7FFF3E.jpeg
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நம்மாளு ஹாலிடே போயிருக்கிறார். வந்தோன்ன, தலைவரை இப்படி நக்கல் அடிப்பது பிழை எண்டு....கடதாசி போடுவார்.... 🤣🤣😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மீதமுள்ள ஒரு நாள்... அவர் விசர் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான். 🤣 தீர்ப்பு பிழை பாருங்கோ ஏராளன்.... ஆள் சும்மா இரார், மீதமுள்ள ஞாயிறு அன்று அவர் பாட்டுக்கு மூன்றாவது தேட வெளிக்கிட்டு விடுவார். எண்ட படியால், ஒரு கிழமை, முதல் மனையிடமும், அடுத்த கிழமை இரண்டாவது மனைவி என்று இருக்க வேண்டும் என்று தீர்ப்பு போடவேணும். நாட்டாமை தீர்ப்பு பிழை.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், தமிழக, ஆந்திர, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள். ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍 இன்னோரு விதமாக, குழல் பிட்டு முக்கனிகளுடன் சாப்பிட அருமையோ, அருமை. அட, நீங்கள் மதுரைக்காரர் தானே. நம்ம சொக்கரே, பிட்டடித்து, கிரங்கிப் போய், பெண்டாண்டி, பிள்ளைகளை மறந்து, வைகை ஆத்தம் கரையில் மரத்தடியில் படுத்து தூங்கினாரே....- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ஆட்டக்காரி என்பது புதிய ரகமல்ல. அந்த நெற்பயிர் வீசும் காத்துக்கு நெளிந்து ஆடுவது, ஒரு தேர்ந்த ஆட்டக்காரி போல இருந்ததால், அப்படி பெயர் வந்து என்று ஒரு விவசாயி சொன்னார். IR8 போன்ற புரியாத பெயர்களுக்கு,இது பரவாயில்லை என்றார்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இல்லையே. வறுத்தும் செய்வார்களே. மேல கந்தையர் செய்முறை போட்டிருக்கிறார். 😁- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
பெரிசு, நீங்கள் உண்மைல எந்த ஊர்..... மர்மதேசி... நான் கேட்டது, ரதியக்காவ.... மட்டக்கிளப்பில், யாழ்பாணத்தான் வாழ்ந்தால், அவித்தமா பிட்டு சாப்பிடுவான் தானே பெரிசு. இன்னும் விபரம் வேணமா? யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆளுமையில் இருக்கும் போதே, கோதுமைமா, பாண் பாவணை வந்தது. கிழக்கில் போர்த்துக்கேய ஆளுமை இருந்தது என்று, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகம் சொன்னால் அறியத்தரவும். அண்மையில் வாசித்தேன். பங்களாதேஸ், போர்த்துக்கேயர் சிட்டாகொங் நகரத்தில் பாண் அறிமுகம் செய்துள்ளனர். மூக்கை எலலா இடத்துக்கிளையும் டபக்கெண்டு நுழைக்கிற கெட்டிதனத்தால, நிர்வாகத்தில் சேர சிபார்சு....- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இரண்டுமே கோதுமை மா தான். கூப்பன் மா, புழு, வண்டுகள் இருக்கும். அரித்து எடுத்து, அவித்து சாப்பிட்டால், குத்தமில்லை. அமெரிக்காவில், use by date முடிந்தால், அந்த காலத்தில், கப்பலில் போட்டு, இலவசமாக அனுப்பி வைப்பார்கள். (இப்போது, அமெரிக்காவில் அழுத்தம் பிரயோகிக்கும் லாபி குரூப்புகள் வந்து விட்டன). அப்படி வந்த மாவில், ஆளுக்கு 3 விசுக்கோத்து, பணிஸ் பாடசாலைகளுக்கு கொடுத்தார்கள். கூப்பன் மாவாக, ஏழை பாழைகளுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.🙄 இந்த பணிஸ் காரன் தனது துவி சக்கர வண்டியில் வருவதை வழிமேல் விழி வைத்து மாணவர்கள் காத்து இருப்பார்களாம். மாணவர்கள், கவிகளாக பாட்டு இயற்றி பாடியும் இருக்கிறார்கள். பணிஸ் வருகுது, பட்டாளம் ஓடுது போன்ற பாடல்கள் பிரபலமாம்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
யாரும் கவனிச்சீங்களா, உலகில் யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டுமே, அவித்த கோதுமை மா செய்கிறார்கள். (கிழக்கில் செய்வார்களா தெரியாது). ஆனால் கோதுமை மாவை அவித்து, அரித்து பிட்டு செய்வதும், அதுக்கு இடித்த சம்பல், டின் மீன் குழம்பு வைத்து அசத்துவதும், யாழ்ப்பாணத்தில். முக்கியமாக, தமிழகத்திலோ, அல்லது கேரளாவிலோ இல்லை. சிங்களவர்கள் நிச்சயமாக செய்வது இல்லை. பால் சோறுடன் உக்காந்து விடுவார்கள். பிட்டுக்கு, கட்டா பாரை கருவாடு சம்பல் அப்படி இருக்கும்.... 🤭- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ரசியன் அதிபர் புட்டினின் பிடித்த உணவு புட்டு என்று, எமது ரசிய உளவாளி உடான்சு சுவாமியார் ரகசிய தகவல் தந்துள்ளார்...- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அதெல்லாம் பிரச்சனை இல்லை. நாம போய் சேர்ந்து படிக்கலாம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதுக்குதான் கூகுள் translate இருக்குதே 💪 என்ன பிரச்சனை எண்டால்.சிலிக்கன் வளி பேங்க் பிரச்சனையால் இந்த நிறுவனத்துக்கு ஏதும் பிரச்சனை வராமல் இருக்கோணும்.- செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
இந்தாள் நல்லா எழுதுவார் என்று ஆரம்பத்தில் கவனித்து, அவரிடமே சொல்லி இருக்கிறேன். நல்ல எழுத்து. chatGPT : இன்று ஒரு கேள்வி கேட்டேன். Me: hi sweetie, can you tell me about the civil war in sri lanka. I want you to put that in two columns. in the first include the year and in the second give the details. Say yes, if you understand the task! Yes, I understand the task. I can provide you with a brief overview of the Sri Lankan Civil War in two columns as per your request. Year 1983 Details The civil war began in Sri Lanka in 1983, after tensions between the majority Sinhalese community and the minority Tamil community escalated into violence. Tamil separatists formed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and began a violent campaign for a separate state in the north and east of the island. The conflict resulted in a large number of deaths, displacement of people, and human rights abuses by both sides.2009The Sri Lankan Civil War came to an end in May Year 2009 Details when government forces defeated the LTTE and killed their leader, Velupillai Prabhakaran. The war lasted for 26 years, resulting in tens of thousands of deaths and displacing hundreds of thousands of people. The conflict left deep scars on the country, and the government has since undertaken a process of reconciliation and rebuilding in the affected areas. Me: But there were issues after 1948 too, especially in 1958 and 1977 You are correct, there were several incidents of ethnic violence and tensions between the Sinhalese and Tamil communities in Sri Lanka after the country gained independence from British rule in 1948. I can provide you with an updated version of the two-column table to include these events: Year 1958 Details Ethnic riots broke out in several parts of Sri Lanka in May 1958, resulting in the deaths of over 200 people and the displacement of thousands of Tamil families. The riots were sparked by political and economic grievances between the Sinhalese and Tamil communities, and the government's inability to address these issues. Year 1977 In the general election of 1977, the Tamil United Liberation Front (TULF) won a majority of seats in the Tamil-majority areas of the country, campaigning on a platform of a separate Tamil state. This led to anti-Tamil riots in which hundreds of Tamils were killed, and many more were displaced. The government's response to the riots further deepened ethnic tensions in the country. (And it repeated the above details again) இதை இன்னும் கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம்.... உதாரணமாக, நீ புலிகளின் உருவாக்கம் பத்தி சொல்லவில்லையே என்று கேட்கலாம். நான் எல்லோருக்கும் புரியக்கூடிய காரணத்துக்காக கேட்கவில்லை. குறிப்பாக, பயங்கரவாத, ஆபாச கேள்விகளை தவிர்க்க சொல்கிறார்கள். கணக்கை மூடி விடலாமாம். உதாரணமாக, நான் மேலே பெண்ணை கூப்பிடுவது போல, ஸ்வீட்டி என்றேன். அது எல்லை மீறக்கூடாது. எடுத்த நேரம் 3 நிமிசம். இதை நாள் கூகிளில் தேடி, type பண்ணி, தயாரிக்க, ஒரு நாள் தேவை. (பஞ்சி பிடித்தால் கூட நாள் தேவைப்படும்) அதாவது இந்த வரலாறு தெரியாத ஒருவர் என்று வைத்துக்கொண்டு..... நேற்று நான் கலந்து கொண்ட ஒரு digital marketing meeting. இதன் பயன்பாடு குறித்து அலசப்பட்டது. கூகிள், சுந்தர் பிச்சைக்கு தண்ணி காட்டப்போகுது. 2022ல் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த venture capital மட்டும் $238.3b- ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
அங்கை எங்கே பழைய கட்டிடங்கள்? நாடே 18ம் நூறாண்டுக்கு பிறகு உருவானது. முன்னம், மன்ஹட்டன் பகுதி, டச்சுக்காரர்களினால் 17ம் நூறாண்டு ஆரம்பத்திலும், பிரிட்டிஷ்காரர்களால் 17ம் நூறாண்டு பின்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது. 18 நூறாண்டு பின்பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட யுத்தத்தின் பின்னே, 19ம் நூறாண்டில் கட்டிடங்கள் உருவானது.- செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
நல்ல கட்டுரை. ஆனாலும் இதன் பலன்களும் பல உண்டு, அதனையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்,- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பெண்கள் ஒரு/இரண்டு கிளாஸ் social drink எடுப்பதில் என்ன தவறு? அதுக்காக குற்ற உணர்வு தேவையில்லை என்பது எனது கருத்து. பிற்போக்குத்தனமான சிந்தனைகளால் தான் பெண் அடிமைத்தனம் எமது நாடுகளில் அதிகம். பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். வீடு முதல், அலுவலகம் வரை அவர்கள் உழைப்பு அதிகம். பொருளாதார ரீதியில் முன்னேறுகிறார்கள். தமது வெற்றியினை கொண்டாட அவர்கள் சோசியல் ட்ரிங்க் எடுப்பதில் தவறில்லை. இலங்கையில் யாழ்ப்பாணத்து தமிழர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்று சொல்வார்கள், கொழும்பில். பிரிட்டனிலும், கனடாவிலும், தமிழ் பெண்கள் வியாபார துறையில் இன்னும் முன்னுக்கு வரவில்லையே. காரணம் என்ன? தம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் அல்லது ஊட்டப்படாமல் வாழ்வது தான். இலங்கையில் பட்டப்படிப்பு முடித்து வந்து, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முயலாமல், சாதாரண வேலைக்கு போகும் யாழ் தமிழ் பெண்களும் உள்ளார்கள். அதேவேளை, தம்மை முன்னேற்றி கணவருடன் சேர்ந்து £10பில்லியன் பெரும் நிறுவனங்களை நடத்தும் முற்போக்கு பெண்களுள் இருக்கிறார்கள். *** மேலை நாடுகளில் மதுவிலக்கு என்று அலம்பறை பண்ணுவதில்லை. காரணம் ஒவொருவருக்கும் தனி மனித பொறுப்பு இருக்க வேண்டும் என்று கருதுவதால். பார்ட்டியில் வெள்ளைகள் குடிப்பதில்லை என்றால், காரணம் அவர் வீட்டுக்கு கார் ஓட்டி செல்ல வேண்டும். மறுநாள் வேலைக்கு போக வேண்டும். எனக்கு தெரிந்து, சேர்ந்து மது அருந்திவிட்டு, காரில் ஏத்தி விட்டு, போலீசுக்கு போன் பண்ணி, அவர் குறித்து சொல்லி, வேலையில் இருந்து துரத்தி அடித்த ஒரே கொம்பனி வேலை செய்த வெள்ளைகளையும் பார்த்திருக்கிறேன். பிறகு, காரை ஓட்டிக்கொண்டு போகாதே என்று சொன்னேன்.கேட்கவில்லை. அவரது உயிரையும், ரோட்டில் பயணிக்கும் அடுத்தவர் உயிரையும் காக்கவே போலீசாரை அழைத்தேன் என்று பீலா விடுவர். - புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Important Information
By using this site, you agree to our Terms of Use.