Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிவந்ததே தமிழத் தேசியக் கூட்டமைப்பு!! இதனை மறுதலித்தால் அடுத்த கணமே வெளியேறிவிடுவேன்!! -சிறிதரன் பா.உறுப்பினர் உறுதி!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sritharan_mp1.jpg

video123.gifஅண்மைக்காலமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் தான்தோன்றித் தனமான கருத்துக்களை மறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன்

சாதக பாதகங்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெளிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்று இருந்த இளைஞர்கள் தான் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்என கொழும்புப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டித்த சிறிதரன் அவர்கள்...

எனது வாழ்நாளை வன்னியில் கழித்தவன் என்ற வகையிலும் முள்ளிவாய்க்கால் களத்தில் எனது குடும்பம் இறுதிவரை இருந்து வந்தார்கள் என்ற அடிப்படையிலும் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிவந்ததாகவே கருதவேண்டும். தனிப்பட்ட சம்பந்தனிற்கோ சுமந்திரனிற்க்கோ தாயக மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாக கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தனர் என்பதுதான் உண்மையாகும்.

சாவதற்கு நேரம் குறித்து தமிழர்களின் விடுதலைக்காக கரும்புலிகளாக செல்லும் புலிவீரர்களையும் திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறியாக்கி களத்திற்கு செல்லும் புலிவீரர்களையும் பெண் புலிவீராங்கனைகளையும் கொண்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும்.

http://youtu.be/0EYQd9j118Y

ஈழதேசம் இணையம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திடமாக யதார்த்தத்தை சொல்லும் கருத்துக்கள்..! பாராட்டுக்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க தக்க கருத்து பாராட்டுக்கள் ! :icon_idea:

அடுத்துவரும் தேர்தலை சந்திக்க தயாராகி விடார் சிறிதரன். :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களில் உடன்பட்டாலும்

தமிழர் நலன் சார்ந்தும் ஒற்றுறுமை சார்ந்தும் சில இடங்களில் இவரும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்கிறது.

உதாரணமாக : புலிகளது தொடர்ச்சிதான் கூட்டமைப்பு என்பது தற்போதைக்கு அவசியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரன் தங்கள் கூற்று காலம் இடம் மற்றும் ஜெனீவாவுக்குப் பிறகு தமிழர் கூட்டணி எதிர் நோக்கும் வரலாற்றுக் கடமைகள் தொடர்பாக இராசதந்திர ரீதியாக தவறான கோரிக்கையாகும்.

தமிழர் கூட்டமைப்பு போர்குற்றச் சாட்டுகளுக்கு வெளியில் நின்று சர்வதேச சமூகத்தை சிங்கள அரசுக்கு எதிராக அணிதிரட்ட வேண்டிய தெருணத்தில் என்ன பேச்சு பேசுறீங்க தோழரே.?

சுமந்திரனின் தவறான அணுகுமுறையை எதிர்பதற்க்குப் பதிலாக தமிழர் விடுதலைக்கான இராசதந்திரத்தை பலிக்கடா ஆக்கிவிட வேண்டாம். சுமந்திரனை அவரின் ஊடகங்களுக்கு பேசும் உரிமையை கட்டுப் படுத்தும்படி அல்லது அவரை அகற்றுமாறு நாம் எல்லோரும் சேர்ந்து போராடலாம் தோழரே.

அதிதீவிரவாதம் நம்மை போட்ர்குற்ற பங்காளியாக்கிவிடும். அது மகிந்த அரசுக்கு வேண்டியது. அத்தகைய ஒரு நிலையை உருவாக்கத்தான் கொழும்பு தமிழ் தீவிரவாதிகளையும் சுமந்திரன் போன்ற மிதவாதிகலையும் அரசு பயன்படுத்துகிறது என்று தோன்றுகிறது.

நீங்கள் பேசும் தீவிரவாதம் சிங்கள ஆழும் வர்கத்துக்கு சர்வதேச ரீதியாக மீண்டும் வெற்றியை பெற்றுக் கொடுத்துவிடும் தோழரே. .

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்துவிட்டது தோழரே...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிவந்ததே தமிழத் தேசியக் கூட்டமைப்பு!! இதனை மறுதலித்தால் அடுத்த கணமே வெளியேறிவிடுவேன்!! -சிறிதரன் பா.உறுப்பினர் உறுதி!!!

அப்ப இன்னும் வெளியேற வில்லையா..? :rolleyes: :rolleyes:

பச்சை முடிந்துவிட்டது தோழரே...

விசுகு அண்ணா என்னிடம் நிறைய இருக்கிறது. தரவா..................... :D :D

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இந்தப் பேட்டியில் பல உண்மைகள் புதைந்து கிடந்தாலும் இதை பகிரங்கமாகப் போட்டு உடைத்திருப்பது

வேதனைக்குரியது. இது கூட்டமைப்பின் உள்வீட்டுப் பிரச்சனை. உள்ளேயே பேசித் தீர்வு காணவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில்

இணைந்துள்ள ஐந்து கட்சிகளும் தங்கள் கட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு ஒரு கொடியின்கீழ் ஒரே கொள்கையில் ஒன்றிணையவேண்டும்

என்ற சிறீதரனின் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

இதே சிறீதரன் அண்மையில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை ஏற்று மாவட்ட அலுவலகத்தையும் அங்கு

திறந்து வைத்துள்ளார். இது அவரின் சொல்லுக்கும் , செயலுக்கும் உள்ள முரண்பாட்டைத் தொட்டு நிற்கிறது.

மழைநீரை குளத்தில் தடுத்து வாய்க்காலில் விட்டால்தான் அது வயலுக்குள் போய்ச்சேரும் .கட்டுப்பாடின்றி விட்டால் காட்டாற்றில் விழுந்து

கடலோடு போய்விடும்.

அவசரப்பட்டு சுமந்திரனுக்கு கூட்டமைப்பை சீதனம் கொடுத்துபோட்டு ஒடிவிடுவேன் என்பது அரசியல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு சுமந்திரனுக்கு கூட்டமைப்பை சீதனம் கொடுத்துபோட்டு ஒடிவிடுவேன் என்பது அரசியல் இல்லை.

அவர் அப்படிச் சொல்லவில்லை. கடந்த வந்த பாதை.. கடக்க வேண்டிய பாதை இரண்டையும் மறந்து பதவிக்கும் புகழுக்குமாக செயற்படும் நிலைக்கு கூட்டமைப்பு போய்க் கொண்டிருக்கிறது என்றே கூறியுள்ளார். இது எமக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமான நிலை அல்ல..!

புலிகளைக் காரணம் காட்டி 10.. 15 இயக்கங்களாக இயங்கியவர்கள்.. இன்று புலிகளே இல்லை என்ற நிலையில்.. கொள்கைக்காக.. மக்களின் பொதுவிருப்போடு இணங்கிச் செயற்பட ஏன் இன்னும்.. அதே 15 இயக்கங்கள் அவர்களுக்கு..???!

அடிப்படையில் இவர்கள் கூட்டமைப்பு என்ற மக்கள் விருப்புக்குரிய புலிகளின் அம்சத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து இயலும் வரை மக்கள் ஆதரவை திரட்டிக் கொண்டு பதவிகளை எட்டிப்பிடித்த பின் கூட்டமைப்பை உதறித் தள்ளுவதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். இதனையே தான் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். இது கூட்டமைப்புக்குள் என்ன நடக்கிறது என்ற மக்களுக்கான அறிவிப்பாக நோக்க வேண்டுமே தவிர.. கூட்டமைப்பில் பிறழ்வு நிலைக்கு போய்க் கொண்டிருப்பவர்கள் யார் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட இது உதவுகின்றதே தவிர.. சிறீதரன் கூட்டமைப்பை பிளவு படுத்தி.. தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைக்க முனையவில்லை.

ஒருவேளை சிறீதரன்.. இதனைச் சொல்லாமல் விட்டு.. எல்லாம் முத்தி கூட்டமைப்பு திடீர் என்று பிளவுபட்டு நொருங்கி விழுவதை மக்கள் காண்பதிலும்.. இப்படி.. எச்சரிக்கைகளை வழங்கி அவர்களை ஒற்றுமைப்படுத்த மக்களைத் தூண்டுதல் நல்லம் தானே.

இங்கும் சிலர் பயப்பிடுகிறார்கள்.. விடுதலைப்புலிகள் சார்ந்த அமைப்பு கூட்டமைப்பு என்று. உலகம் அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்றும் கூட்டமைப்பை நோக்குகிறது. அதற்காக கூட்டமைப்பை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த உலகம் ஒன்றும் முட்டாளும் அல்ல..! சுமந்திரன்.. சம்பந்தன் என்னதான் விடுதலைப்புலிகளை விமர்சித்தாலும்.. கூட்டமைப்பு என்பது Pro-LTTE அரசியல் கட்சி என்பதை உலகம் நிராகரிக்கப் போவதில்லை. அதனால் தான் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதையும் உலகம் நன்கு அறியும்..!

முன்னர் கூட்டமைப்பில் நின்று வெற்றிபெற்ற.. சுரேஸ் பிரேமசத்திரன்.. பின்னர் ஒரு தடவை தனித்துப் போட்டியிட்டு மண் கவ்வியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆக கூட்டமைப்பு என்பது மக்களின் பார்வையில்.. தமக்காக வாழ்ந்து வீழ்ந்த புலிகளின் ஆசிபெற்ற அரசியல் அமைப்பு.. அது தங்களை கைவிடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ள நிலையில்.. சுமந்திரனும்.. சம்பந்தனும் அதைக் கெடுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததே..!

பல விடயங்களில் உடன்பட்டாலும்

தமிழர் நலன் சார்ந்தும் ஒற்றுறுமை சார்ந்தும் சில இடங்களில் இவரும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்கிறது.

உதாரணமாக : புலிகளது தொடர்ச்சிதான் கூட்டமைப்பு என்பது தற்போதைக்கு அவசியமல்ல.

சொன்னாலும் குத்தம் சொல்லாவிட்டாலும் குத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.