Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா

Featured Replies

அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது.

இதுதொடர்பாக ஜெனிவாவில் நடந்த இரகசியபேரங்கள், சந்திப்புகள், ஆலோசனைகள் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் வெளியான - தமிழில் வெளிவராத - தகவல்களின் தொகுப்பு இது.

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய - அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர்.

இதன்போது “ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்“ என்ற தீர்மான வரைபு வாசகம் திருத்தப்பட வேண்டும் என்று இந்திய இராஜதந்திரிகள் ஒற்றைக்காலில் நின்றனர்.

இந்த பேரத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தவர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான இந்தியாவின் புதிய தூதுவராக பொறுப்பேற்றிருந்த திலிப் சிங்கா ஆவார்.

அவர் ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே (ஞாயிற்றுக்கிழமை) புதுடெல்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார்.

உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளில் இறங்கினார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக - செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவருக்கு இராப்போசன விருந்தளித்தார்.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த இராப்போசன விருந்தை ஒழுங்கு செய்ததற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் குறைந்தபட்சம் நடுநிலை வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்ஹா.

அவர் அந்த இராப்போசன விருந்தின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரியபடி இந்தியா நடந்து கொள்வதற்கான வாய்ப்பை உடனடியாகவே நிராகரித்து விட்டார்.

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை .சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியாவினால் வரமுடியாது என்று அவர் கூறிவிட்டார்.

இதற்குப் பின்னர் வெளியே வந்த சிறிலங்கா அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்று பகிரங்கமாகக் கூறினார்.

அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல் நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல் இடம்பெற்றது.

தீர்மான வரைபில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டோனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்ஹாவுக்கு புதுடெல்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சிறிலங்காவை வழிகாட்டும் வகையிலான வரைபில் திருத்தங்களை செய்வதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை.

ஆனால், திலிப் சின்ஹா மிகக் கடுமையாக விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், அமெரிக்காவின் இந்தப் பிடிவாதம், இந்தியாவை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க நிர்ப்பந்திக்கும் என்று எலீன் டோனயிடம் எச்சரித்தார்.

2009ம் ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடைசியாக அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹே, இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முன்வந்தார்.

இதையடுத்தே, தீர்மான வாசகத்தில், “சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கலாம்“ என்று திருத்தம் செய்ய இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன்ஸ்டைன் , நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஒஸ்ரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிப்பவையாகும்.

40 நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின் படி - சிறிலங்காவுக்கு அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது.

http://www.puthinappalakai.com/view.php?20120402105914

அமெரிக்கா விட்டுக்கொடுத்து இந்தியாவையும் உள்வாங்கியது நீண்டகால நோக்கில் தமிழருக்கு வெற்றியே.

உண்மைதான் அகூதா எமக்கு நீண்ட நாள் வெற்றி தான் முக்கியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்துத்தலைவர்களதும் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடயத்தில்... இந்தியா இதுவரை கடைப்பிடித்த, சகுனி வேலைகளை கைவிட்டு, திறந்த மனதுனதுடன் செயலாற்ற முன்வருவதே... இந்தியாவுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சரத்துகளின் பிரகாரம் ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரத்தில் அந்நாட்டின் ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இன்றியோ ஐ.நா தலையிடமுடியும் என்பது தான் விதியாக இருக்கும்போது பிரேரணையில் இந்தியா செய்த வாசக மாற்றம் சிறிலங்காவினதும் இந்தியாவினதும் மனச்சாந்திக்கு வேண்டுமானால் ஒத்தடம் கொடுப்பதாகவோ அன்றில் இந்தியா இலங்கையின் இதயத்தை வெற்றி கொள்வதாகவும் இருக்கலாம். பூதாகரமாக உருப்பெற்ற இபவ்விடயத்தின் இறுதியில் இப்போது இலங்கையின் தலைக்கு மேலே கூரிய கத்தி தொங்கவிடப்பட்டுவிட்டது. ஐ.நா பிரேரணைக்கு இலங்கை பணியுமா பணியாதா என்பதும் இல்லையெனில் ஐ.நா பதிலுக்கு என்ன செய்யப்போகிறது என்பதில் தான் மிகுதி விடயம் தங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சரத்துகளின் பிரகாரம் ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரத்தில் அந்நாட்டின் ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இன்றியோ ஐ.நா தலையிடமுடியும் என்பது தான் விதியாக இருக்கும்போது பிரேரணையில் இந்தியா செய்த வாசக மாற்றம் சிறிலங்காவினதும் இந்தியாவினதும் மனச்சாந்திக்கு வேண்டுமானால் ஒத்தடம் கொடுப்பதாகவோ அன்றில் இந்தியா இலங்கையின் இதயத்தை வெற்றி கொள்வதாகவும் இருக்கலாம். பூதாகரமாக உருப்பெற்ற இபவ்விடயத்தின் இறுதியில் இப்போது இலங்கையின் தலைக்கு மேலே கூரிய கத்தி தொங்கவிடப்பட்டுவிட்டது. ஐ.நா பிரேரணைக்கு இலங்கை பணியுமா பணியாதா என்பதும் இல்லையெனில் ஐ.நா பதிலுக்கு என்ன செய்யப்போகிறது என்பதில் தான் மிகுதி விடயம் தங்கியிருக்கிறது.

இது தான் நியம்.

பார்க்கலாம்

Boy: சார், எங்க எலிமெண்டரி ஸ்கூல் எலெக்சன்ல நிக்கலாம்னு இருக்கேன். என்னை எதிர்த்து நிக்கிறவனுக்கு ஆதரவா நீங்க பிரச்சாரம் பண்ண முடியுமா?

Rahul:வேணாம் தம்பி... அங்கையும் டெப்பாசிட் கிடைக்காது!

533400_10150653981878565_604568564_9283740_441496816_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Boy: சார், எங்க எலிமெண்டரி ஸ்கூல் எலெக்சன்ல நிக்கலாம்னு இருக்கேன். என்னை எதிர்த்து நிக்கிறவனுக்கு ஆதரவா நீங்க பிரச்சாரம் பண்ண முடியுமா?

Rahul:வேணாம் தம்பி... அங்கையும் டெப்பாசிட் கிடைக்காது!

533400_10150653981878565_604568564_9283740_441496816_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஊடகங்களில் இச்செய்தி இருந்தால் இங்கே இணையுங்கள். இந்தியாவின் உண்மை முகத்தினைக்காட்ட சில வட இந்தியர்களுக்கு அனுப்பவேண்டும்.

ஐ.நா சரத்துகளின் பிரகாரம் ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரத்தில் அந்நாட்டின் ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இன்றியோ ஐ.நா தலையிடமுடியும் என்பது தான் விதியாக இருக்கும்போது பிரேரணையில் இந்தியா செய்த வாசக மாற்றம் சிறிலங்காவினதும் இந்தியாவினதும் மனச்சாந்திக்கு வேண்டுமானால் ஒத்தடம் கொடுப்பதாகவோ அன்றில் இந்தியா இலங்கையின் இதயத்தை வெற்றி கொள்வதாகவும் இருக்கலாம். பூதாகரமாக உருப்பெற்ற இபவ்விடயத்தின் இறுதியில் இப்போது இலங்கையின் தலைக்கு மேலே கூரிய கத்தி தொங்கவிடப்பட்டுவிட்டது. ஐ.நா பிரேரணைக்கு இலங்கை பணியுமா பணியாதா என்பதும் இல்லையெனில் ஐ.நா பதிலுக்கு என்ன செய்யப்போகிறது என்பதில் தான் மிகுதி விடயம் தங்கியிருக்கிறது.

பாதுகாப்பு சபை இல்லாமல் வலோற்காரமாக ஒருநாட்டில் இறங்கமுடியாது என்று நினைக்கிறேன். இந்த பிரேரணையை பாதுகாப்புசபை வரையும் நடத்தி செல்லவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். அங்கிருந்து வரும் தீர்மானங்கள் வலிமையானவை. இஸ்ரேல் மனித உரிமைகள் பேரவையையே விட்டுவிட்டு போய்விடுவதாக மிரட்டுகிறது.

வாசகத்தின் திருத்தத்தை விளங்கிக் கொள்ளும் வகையில் சிறிலங்கா இல்லை. இன்னமும் பதற்றம் போல்தான் தெரிகிறது. வெளிவரும் பேச்சுக்கள் அப்படித்தான் தெரிகிறது.

இந்தச் செய்தி எவ்வளவுக்கு உண்மையெண்டு தெரியாது.. ஆனால் இந்தச் செய்திப்படி பார்த்தாலும் இந்தியா மாருகிரதேண்ட வாதம் இந்தச் செய்தியுடன் நீர்த்துப் போகாதா?

இந்தியா இன்னும் மாறவில்லை, இந்தியாவை மாற்றக் கூடிய சக்தி சொறிலங்காவுக்கு மட்டுமே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.