Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பகுதிகளில் ஆய்வு: இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்

Featured Replies

தமிழர் பகுதிகளில் ஆய்வு: இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்

தமிழர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக இந்திய எம்.பி.க்கள் குழு மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா வருகிற 16 ம் தேதியன்று பத்து நாள் பயணமாகஇலங்கை செல்கிறது.

இலங்கையில் கடந்த 2009 ல் நிகழ்ந்த இறுதிக்கட்ட போருக்குப் பின்னர் தமிழர்களின் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. போர் ஓய்ந்ததும் ஈழத்தில் சீரமைப்புப் பணிகளை வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை செய்து வருகிறது.

இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை, அதை ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தாமல் ஈழத்தை சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய் அரசின் கவனத்திற்கு தமிழக கட்சிகள் பலமுறை கொண்து சென்ற பின்னரே, தமிழர் பகுதிகளில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட எம்.பி.க்கள் குழு அனுப்பப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இடம் பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் தமிழக எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பா.ஜ.க. சார்பில் வெங்கையாநாயுடு சேர்க்கப்பட்டுள்ளார். குழுவில், வடமாநில எம்.பி.க்கள் சிலரும் உள்ளனர். ஆனால் இலங்கை அரசை கண்டிக்கும் கட்சிகள், இந்த குழுவில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. சார்பில் இந்த குழுவில் எம்.பி.க்கள் யாராவது இடம் பெறுவார்களா? என்பது உறுதியாக தெரிய வில்லை. தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் இடம் பெறாத நிலையில் இந்த குழு முழுமை பெறாத ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த எம்.பி.க்கள் குழு வருகிற 16 ம் தேதி இலங்கை செல்ல உள்ளது. 25 ம் தேதி வரை 10 நாட்கள் இந்திய எம்.பி.க்கள் தமிழர் பகுதிகளில் நடைபெற்று வருவதாக இலங்கை அரசு கூறும் சீரமைப்புப் பணிகளை பார்வையிடுவார்கள்.அத்துடன் தமிழர் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் மீள் குடியேற்றப்பணிகளை ஆய்வு செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும், ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து, இலங்கைக்கு தோல்வியை கொடுத்துள்ள நிலையில், இந்திய எம்.பி.க்கள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

http://news.vikatan.com/?nid=7394

மகிந்தவிடம் பொன்னாடை வாங்க கொஞ்ச பன்னாடைகள் போகுதுகள் போல.. <_<

சில மாதங்களுக்கு முன்பு கொஞ்ச அரசியல் வாதிகள் சென்று மகிந்தரை பார்த்த போது சிலோன் டி தூள் கிடைத்தது இவர்களுக்கு என்ன கிடைக்குமோ ? :lol::icon_idea:

சில மாதங்களுக்கு முன்பு கொஞ்ச அரசியல் வாதிகள் சென்று மகிந்தரை பார்த்த போது சிலோன் டி தூள் கிடைத்தது இவர்களுக்கு என்ன கிடைக்குமோ ? :lol::icon_idea:

இம்முறை கசாயம்தான்...................

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை கசாயம்தான்...................

ஏன் .................. போறவர்களில் யாருக்காவது தடிமன் காச்சலோ ?

தடிமன் காச்சல் என்றால் சிறிலங்கா அரசியல்வாதிகள் கேபள் வேதும் பிடித்து விடுவார்கள் :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வறிய நாட்டு பிச்சைகள் பக்கத்து குப்பத்தை டெவலப் பண்ணுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

வறிய நாட்டு பிச்சைகள் பக்கத்து குப்பத்தை டெவலப் பண்ணுகின்றன.

நான் நினைச்சதை, நீங்கள் சொல்லிப் போட்டீங்கள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைச்சதை, நீங்கள் சொல்லிப் போட்டீங்கள்! :D

புங்கை, இந்த நடிக திலகங்களை பற்றி கண்டபடி யோசிக்க தேவை இல்லை.

அவை எங்கட நிலத்தை சொந்த பாவனைக்கு வளைச்சு போட வந்திருக்கினம். 

இவன எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானேன்னு நெனச்சிட்டாளா.??

  • தொடங்கியவர்

இலங்கை செல்லும் குழுவில் 7 தமிழக எம்.பி.க்கள்

இந்த குழுவில் 14 பேர் இடம்பெறுகின்றனர். குழுவிற்கு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார்.

இந்த குழுவில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.

அதன்படி, அதிமுக சார்பில் ரபி பெர்னாண்ட், திமுக சார்பில் டிகேஎஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரங்கராஜன், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், சித்தன், மாணிக்கதாகூர் ஆகியோர் செல்கின்றனர்.

இந்த குழுவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோர் தங்களையும் குழுவில் சேர்க்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதுக்குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இலங்கை செல்லும் இந்த நாடாளுமன்ற குழு வரும் 25-ந்தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழர்களிடம் நேரில் சந்தித்து, நிலைமையை ஆராய்கின்றனர். இந்தியா சார்பில் அளிக்கப்பட்டுள்ள உதவிகளை ஆய்வு செய்யும் அவர்கள், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் கேட்டறிய உள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=102015

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் நன்றாக கவனித்து அனுப்புவான் என்பதில் சந்தேகமில்லை. :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் நன்றாக கவனித்து அனுப்புவான் என்பதில் சந்தேகமில்லை. :) :)

கலெக்சனுக்கு கிளம்பிட்டினம்.  இவைண்ட முன்னூறு அதிகாரிகள் வவனியாவில இருந்து என்ன செய்தவையள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.