Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு தெரிந்தது மட்டும்

Featured Replies

  • தொடங்கியவர்

எனக்கு தெரிந்தது என்று எழுத தொடங்கியதற்கு காரணமே எமது கண்ணுக்கு முன்னாலேயே நாம் எமது நாடு பற்றியும் எமது அரசியல் பற்றியும் உள்ள அக்கறையை விட “சுயநலம்” என்ற எமது பொருளாதார நலனில்கொண்ட அக்கறை காரணமாக சிங்களவனிடம் மீண்டும் மீண்டும் தோற்பது பற்றியே ஆகும்

காலம் காலமாக தனது சுயதேவைகளுக்காக தமிழன் சிங்களவனிடம் சோரம் போனதும், அல்லது பிழையான தமிழானது அரசியலை சரியென்று தலையாட்டி தனது காரியங்களை சாதித்ததுமாகும்.

சிங்களவன் சுதந்திரதிற்கு முதலே தனது அரசியலில் மிக தெளிவாக, ஒற்றுமையாக இருந்திருக்கின்றான். இந்தியாவும் அங்கு இருக்கும் தமிழர்களும் தமது இருப்பிற்கு பங்கம் விளைவித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இலங்கையில் தனது அரசியலை மிக அவதானமாகவே சிங்களவன் கையாண்டிருக்கின்றான். தென்னிந்திய தமிழ்இராச்சியங்க்களின் (சேர,சோழ,பாண்டிய) ஆட்சி மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கங்களை கொண்டுவந்தே இருந்தது.

போத்துகேசர்,ஒல்லாந்தரால் இலங்கை ஆளப்பட்டு இருந்தாலும் 1800 களில் கண்டி இராச்சியமும் வன்னி இராச்சியமும் பிரிட்டிஷ்காரர்களிடம் வீழ்ந்த பின்னரே இலங்கை என்ற முழுத்தீவையும் ஒருங்கிணைத்தார்கள்.அப்போது கூட,

“அதை ஒரு புவியியல் அலகாகத்தான் உணர்ந்தார்களே ஒழிய அரசியல் அல்லது தேசிய அலகாக அல்ல”.

இதுதான் முக்கியவிடயம், இலங்கை என்பது தமிழ்,சிங்கள தேசிய இனங்களை கொண்ட அவரவர் பாரம்பரிய பிரதேசங்களை கொண்ட ஒரு நாடு. அதை தனது தேவைக்கு இணைத்தவன் பிரிட்டிஷ்காரன்.

அதன் பின் சுதந்திர காலம் வரை பிரிட்டிஷ்காரன் காலத்திலேயே தமிழன் தனக்கான ஒரு நியாமான தீர்வு,அதிகார பரவலாக்கம்,பிரநிதித்துவம் வேண்டி போராடியே வந்தான். டொனமூர் திட்டத்தை எதிர்த்து முதலாவது தேர்தலையே தமிழன் JAFFNA YOUTH CONGRESS என்ற பெயரில் கர்த்தால் செய்து பெருவெற்றியும் கண்டான்.

டொனமூர் திட்டம் பிழைத்தது பற்றி அன்று எழுதியது இன்றுவரை எப்படி பொருந்துகின்றது.

“இலங்கை என்பது பல்வேறு சமூகங்களாக பிரிக்கப்பட்ட ஒரு தேசிய இனம் (இன்றுவரை சிங்களவன் சொல்வது) ஆனால் உண்மையில் இலங்கை சிங்களவர், தமிழர் ஆகிய இரு தேசிய இனங்களையும் சிங்களவர்,தமிழர்,முஸ்லிம்கள்,பறங்கியர் மலாயர் என்னும் ஐந்து சமூகங்களையும் கொண்ட ஒரு நாடு. முஸ்லிம்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியேயொழிய தனி வேறான தேசிய இனமல்ல”

பின்னர் G.G யின் ஐம்பதற்கு ஐம்பது - நிராகரிக்கபட்டது.(சிங்களவனுக்கு ஐம்பது –மற்றவர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஐம்பது ) .

பின் சுதந்திரம்.-ஒற்றை ஆட்சி அமைப்பில் சகல வல்லமையும் கொண்ட மத்திய அரசாங்கம் அமைந்தது.இருந்தாலும் சோல்பரி அரசியல் அமைப்பின்படி சிறுபான்மையினரை பாதுகாக்கும் வகையில் சரத்துக்களும் அமைக்கபட்டன.

தமிழன் இதை ஏற்றுத்தான் சுதந்திரத்தை இலங்கைக்கு வாங்கினான்.ஒருகாலமும் பெரும்பான்மை இனம் மூன்றில் இரண்டு பெற்று அரசமைக்க முடியாது என உருவாக்கபட்ட அரசியலமைப்பு அடுத்தவருடமே மலையக தமிழரை வாக்கற்றவர்களாக்கி அதற்கும் வழி வகுத்தான் சிங்களவன்.அதுவும் தமிழன் உதவியுடன்.

அரசியல் என்றவுடன் நித்திரை கொள்ளும் தமிழன் கதையும், இரண்டாவது வேலைக்கு மூன்று மணிக்கு அலாரம் வைக்கும் தமிழனின் கதையும் எனக்கு தெரிந்தவரை தொடரும். .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரும் ஜீனியஸ் என்று சொல்லப்படுபவருமான ஜி.ஜி.பொன்னம்பலம் மலையக தமிழர்களை நாடு கடத்த வேண்டும்/வாக்குரிமையை பறிக்க வேண்டும் :unsure: என சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கை உயர்த்தியவர்களில் ஒருவர்.இன்று அதே மலையக தமிழரான மனோ கணேசன் எமக்காக உயிரை பணயம் வைத்து எமக்காக பேசும் போது நாம் எவ்வளவு சுயநலமான தலைவரை கொண்டிருத்தோம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எனது ஊரில் பெரும்பாலும் விவசாயிகளும் வியாபாரிகளும்.இவர்கள் நான் பெயர் கேள்விப்படாத சிங்கள இடங்களில் எல்லாம் வியாபாரம் வைத்திருந்தார்கள்.கெக்கிராவை,அக்குரசை, அதைவிட கண்டி,கொழும்பு,குருநாகல்,பதுளை எல்லாம் இவர்கள் தான் முக்கால் வாசி கடைகளும்,ஊரில் இவர்களுக்கு பெரிய வீடுகளும் பல லொறிகளும் இருக்கு.அதைவிட பலர் சிங்கள சின்ன வீடு வேறு.வியாபாரம் கூட மோட்டு சிங்களவனை சுத்தி செய்வது பற்றி சொல்லி சிரிப்பார்கள்.இவர்கள் ஒருவருக்கும் எமது அரசியல் பற்றி அக்கறை இல்லை,சிங்களவன் என்ன செய்தாலும் அவனை நாங்கள் சுற்றி விடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் இவர்களை விடவில்லை,கலவரம் வந்து அடுத்த மாதமே எரிந்த கடையை திறப்பதுதான் எண்ணமே தவிர இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று நினைக்கவில்லை,தீர்வு வந்தால் வியாபாரம் எங்கு செய்வது.

நீங்களும் தீவுப் பகுதியோ ?? :):D

இல்லை ஈசன். அர்ஜுன் குறிப்பிடுவது புகையிலை, சுருட்டு வியாபாரம் என்று நினைக்கிறேன். அவரது ஊரில் (கொக்குவில்/கோண்டாவில்) அது தான் பிரபல்யம்.

தகவலுக்கு நன்றி பகலவன். :D

A.N.C. என்பது தற்பொழுது தென்ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு கட்சியை தானே குறிப்பிடுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.