Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்

Featured Replies

பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்; விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவிப்பு

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.

பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன.

உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார்.

அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும். பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மஹிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம்; பார்க்கலாம் என்றார் அவர். அவரது முழுமையான செவ்வி நாளைய உதயனில் வெளியாகும்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=59705958007570339

புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார்.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்

சிங்கள இனத்தவராகிய இந்த உண்மையான மேதையின் வார்த்தைகள், தமிழர்களின் போராட்டத்தை கொச்ச்சைப்படுத்தும் அனைத்து தமிழ் நாசகாரிகளுக்கும் சமர்ப்பணம் ஆகட்டும்................................

அந்த சிங்கள மனுஷன் என்னத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும்.. ஆனாலும் பிரபாகரன் என்ற பெயரை " நாமம் " என்று வட இந்திய மொழியில் பெயர் மாதத்திய தமிழ் ஊடகம் வாழும் வரை தமிழ் வாழ்ந்தாலே போதும்.

அரசியல் வேறு தமிழ் வேறு, தயவுசெய்து தமிழை கொல்லவேண்டாம், தமிழைக் கொல்பவனுக்கு இங்கு யாரும் குடை பிடிக்கவேண்டாம்.

தமிழ் இருந்தால்தான்ட்டா போராட்டமே வாழும்..

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உள்ளவரை பிரபாகரன் புகழ் வாழும் என்பதே சரி

அந்த சிங்கள மனுஷன் என்னத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும்.. ஆனாலும் பிரபாகரன் என்ற பெயரை " நாமம் " என்று வட இந்திய மொழியில் பெயர் மாதத்திய தமிழ் ஊடகம் வாழும் வரை தமிழ் வாழ்ந்தாலே போதும்.

அரசியல் வேறு தமிழ் வேறு, தயவுசெய்து தமிழை கொல்லவேண்டாம், தமிழைக் கொல்பவனுக்கு இங்கு யாரும் குடை பிடிக்கவேண்டாம்.

தமிழ் இருந்தால்தான்ட்டா போராட்டமே வாழும்..

தமிழ் உள்ளவரை பிரபாகரன் புகழ் வாழும் என்பதே சரி

இதுதான் ஈழத்து ஸ்டைல் விண்ணாணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த சிங்கள மனுஷன் என்னத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும்.. ஆனாலும் பிரபாகரன் என்ற பெயரை " நாமம் " என்று வட இந்திய மொழியில் பெயர் மாதத்திய தமிழ் ஊடகம் வாழும் வரை தமிழ் வாழ்ந்தாலே போதும்.

அரசியல் வேறு தமிழ் வேறு, தயவுசெய்து தமிழை கொல்லவேண்டாம், தமிழைக் கொல்பவனுக்கு இங்கு யாரும் குடை பிடிக்கவேண்டாம்.

தமிழ் இருந்தால்தான்ட்டா போராட்டமே வாழும்..

தமிழ் நாட்டில யாரப்பு திராவிடன் பத்திரிக்கை நடத்துறான்?

விகடன், குமுதம், ஜெயா டிவி, சன், இந்து என்று எல்லாம் யாருடையது? 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார்.

சிங்களவருக்கு விளங்கிய அளவு சில தமிழருக்கு விளங்கவில்லை.யாழ் களத்திலும் கொஞ்ச பேர் இருக்கினம்.

தமிழர்கள் ஒருவேளை இல்லாது போனாலும் சிறிலங்கா என்ற ஒரு நாட்டின் வரலாற்றில் என்றும் அப் பெயர் நலைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் ஒருவேளை இல்லாது போனாலும் சிறிலங்கா என்ற ஒரு நாட்டின் வரலாற்றில் என்றும் அப் பெயர் நலைத்திருக்கும்.

நிலைக்காமல்? மறைந்து மூன்று வருடமாகியும் தலை பேரை கேட்டால் சிறி லங்கா காரருக்கு டயரியா தான். 

இப்பவும் வெளிநாட்டில் பாதுகாப்பா  இருந்தாலும் கட்டுரை டயரியா வருத்தத்தால் வருந்துகிறார்கள். 

அண்ணர் அப்பிடி வெருட்டி போட்டார். 

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.