Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராப்போசன விருந்தில் பிரபாகரன் குறித்து கலந்துரையாடிய ரங்கராஜன், சம்பந்தன், பசில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

V.P%200001.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார்.

“எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான்.

எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான்.

சிலகாலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை.

அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான்.

அவனது அந்த முடிவுக்கு அமர்தலிங்கத்தைப் புலிகள் சுட்டதே காரணம் என்று பின்னர் அறிந்து கொண்டேன்" என்று ரங்கராஜன் கூறினார்.

அந்தக் கதையை ரங்கராஜன் கூறி முடித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடங்கினார்.

"போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன்.

முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள்.

இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார் இரா. சம்பந்தன்.

இவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச, ரங்கராஜனைப் பார்த்து, “விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"அவர்களின் கொலைப்பட்டியலில் முதலில் இருந்த்து எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தான்.

அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன் தான்." என்றார்.

"அதை நீங்கள் அறிவீர்களா?" என்று இரா.சம்பந்தனைப் பார்த்துக் கேட்டார் பசில் ராஜபக்ச.

அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20120422106050

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

யூ ரூ சம்மந்தர் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான்.

எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான்.

சிலகாலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை.

அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான்.

அவனது அந்த முடிவுக்கு அமர்தலிங்கத்தைப் புலிகள் சுட்டதே காரணம் என்று பின்னர் அறிந்து கொண்டேன்" என்று ரங்கராஜன் கூறினார்.

அமிர்தலிங்கம் என்ற ஒரு தமிழனை கொல்லப்பட போது துடித்துபோய் இருந்த உங்கள் மகனும் நீங்களும் கோபப்பட்டு தலைவர் படத்தை அகற்றி இருந்தீர்கள் அது உங்களது நியாயம்.

முள்ளிவாக்காலில் ஆயிரக்கணக்காக கொன்றவங்களுடன் சேர்ந்து எப்படி உங்களால் பேசவோ விருந்து உண்ணவோ முடிந்தது ?

உண்மையை கூறுவதானால் உங்களின் கேவமான அரசியல் நோக்கத்துக்காக எதையாவது கூறிக்கொண்டே இருக்கவேண்டும் இதுதான் உண்மை உங்களுக்கு தமிழர்கள் மேல் அக்கறையில்லை என்பதே உண்மை.

"போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன்.

முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள்.

இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார் இரா. சம்பந்தன்.

இதை கூறுவதற்கு ஏன் இவ்வளவுகாலம் ஏன் குவாட்டர் கிடைக்கல்லையா ? உங்களை போன்ற சுயநல அரசியல் வாதிகளை வைத்துகொண்டு எப்படித்தான் தலைவர் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும் ?

562238_368144599905085_1429786330_n.jpg

இவர்தான் புலிகளின் போராட்டத்தை காட்டித்தந்தவர், பிற்பாடு பெண்போராளிகளை கூட்டி...த்தந்தவர், ஆழஊடுருவும் படையணியை எமக்கு உருவாக்கி தந்தவர், பின்பு வன்னிக்குள் புலிகளின் சீருடையில் மக்களை சுட்டது இவருடைய பெடியள்தான், மெனிக்பாமில தலையாட்டி 12000 போராளிகளை பிடித்து தந்ததும் இவர்தான், அதை விட முக்கியம் விழுந்த "பிணங்களை" அடையாளம் காட்டித்தந்ததும் இவர்தான்.. உங்களுக்கும் ஏதும் தேவையென்றால் சொல்லுங்கோ.. செய்வார்..ரேட் ஒன்றும் பெரிசா இல்லை ஒரு போத்தல் சாராயமும் ஒரு விலைமாதுவையும் கொடுத்தால் போதும் வேலை கச்சிதமா நடக்கும்..//

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா ரங்கராஜலு.. இங்க எவனும் வீட்டு பட்டா கேட்டு போராட்டம் நடத்துவதும். சம்பளம் அதிகமா வேணும் என போராட்டம் நடத்துவதும் நீங்க அப்படியே சைடில் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து கைய காலை ஆட்டுவதெல்லாம் எல்லாம் மலையேறி போச்சு.. இப்போ அவனவனுக்கு தெரியும் எங்க யாரை பிடித்தால் வேலை ஆகும் என ..! இந்த வேலை ஆகும் ஆகாது என அவன்வனுக்கு தெளிவாக தெரியும்.. ஆகாத வேலைக்கு ரிஸ்க் எடுப்பதில்லை அதில் தெளிவாக இருக்கிறார்கள்..

போக கூட்டணி என்ற பேரில் ஒட்டுண்ணி அரசியல் செய்பவர்கள் தானே தாங்கள் .. அவன் வெஸ்ட் பெங்காலில் உங்களுக்கு ஏதாவது போஸ்டிங்க் குடுத்தால் அங்கிட்டு திரிய வேண்டியதுதானே ..! இங்குட்டு வந்து தேவையில்லாம ஏன் எங்க தாலிய் அறுக்கவேணும்.. ஒரு வேளை எக்ஸ்ட்ரா பேட்டா எதனா தராங்களோ..! ஒன்றை கட்சி ஒண்னேமுக்கால் போஸ்டிங்கு அதுக்கு இவரு பெலீட்டு பீரோ (இது பெரிய பீரோ எங்க வீட்டில் உள்ளது போல).. எங்காவது எவன்னா ஓசியில் பினாயிலும் பிளீச்சிங்க் பவுடரும் தரான் என்றால் அப்பூடியே சோப்பு சாம்பு பவுடர் எல்லாம் பூசிகொண்டு கிள்ம்பிட வேண்டியது..

அரசாங்கம் சுஸ்மாவுடன் நடத்திய சம்பாசனைகளை இதுவரையில் வெளியிடவில்லை. ஒருதலைப்பட்சமாக இந்திய பிரதிநிதிகளின் பங்கை மட்டும் தான் கேட்டோம். ஆனால் சம்பந்தருடன் செய்த உரையாடல்கள் வெளிவருகிறது. சம்பந்தருடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் கதைத்தவற்றை சம்பந்தரையே மிரட்டி இருட்டடிப்பு செய்த்து வருகிறார்கள். இவரை மிரட்டியேதான் ஜெனீவாவுக்கு போகவிடாமல் தடுத்தவர்கள். போர் முடிந்தவுடன் சம்பந்தர் பகிரங்கமாக இந்தியாவிடம் தனக்கும் மற்றைய M.P களுக்கு இலங்கை அரசால் மிரட்டல் இருப்பதாக பாதுகாப்பு கேட்டவர்.

சுஸ்மா தனது குரலால் "இலங்கை கொடுத்திருக்கும் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போவதில்லை" என்பதை குறிப்பாக உணர்த்திவிட்டார். தான் பதவிக்கு வந்தால் அந்த நிலையிலிருந்துதான் முடிவுகளை எடுப்பார். காங்கிரஸ் M.P.க்கள், "ராபக்சாக்கள் செய்வார்கள்" என்று நம்புகிறம் என்று கதையை முடித்து விட்டு ஓடித்தப்புகிறார்கள். இந்தியாவில் இருக்கும் மேலைநாட்டு தூதுராலயங்கள் சுஸ்மாவிடம் பயணம் பற்றி கட்டாயம் விசாரிக்கத்தான் போகின்றன. அதை சோனியா தடுக்க முடியாது

பயணத்தை முன்னின்று பசில் தான் நடத்தியிருக்கிறார். சோனியாவின் அதிரடி அறிவிப்பு, இலங்கைக்கு பயணத்தில் தோல்வி என்றும் அதை சோனியா வரையும் எடுத்து செல்லப்பட்டு விட்டதாகவும் த கருத வேண்டும். இதனால் தான் பசில் நாமலிடமிருந்து முன்னர் வந்த மாதிரி தனக்கு மிரட்டல்கள் வரமாலிருக்க புலிகளினால் சம்பந்தருக்கு மிரட்டல் இருந்ததாக பழைய கதைகளை அவிட்டு விட்டு தன் உயிரை பாதுகாக்க முயல்கிறார்.

Edited by மல்லையூரான்

சம்பந்தர் சிங்களத்திற்கு தான் இதை கூறியுள்ளார்.

"போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன்.

முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள்.

இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார் இரா. சம்பந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவில் ஈழ ஆதரவு உடைய தமிழகத்து இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியினைச் சேர்ந்தவர்களை தெரிவு செய்யப்படவில்லை. ஆனால் புலி எதிர்ப்பு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சம்பந்தர் பேச்சுவார்த்தைகளால் இந்த பிரச்சனை தீர்க்கப்படலாம் என்று இந்தியபிரதிநிகள் கருதுவதாகவும், தான் அதை மறுக்க முடியாது என்றும் தான் கூறுகிறார். இந்திய பிரதிநிதிகள் சரியா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

சம்பந்தர் அவ்வாறு ஒப்புக்கொண்டார் என்பது தமிழர்களிடையே கூட்டமைப்பின் மீது காழ்ப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சி. ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட செய்தியை புதினப்பலகை தமிழாக்கம் செய்தால் எந்த ஆங்கிலப் பத்திரிகை என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

இது நம்பகத் தன்மையுடையதென நான் கருதவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.