Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிங்கக் கொடி சம்பந்தன்" பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா நக்கல்

Featured Replies

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார்.

அதற்கு அரசு சார்பாக பதிலளித்து அமைச்சர் டக்ளஸ் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அரியநேத்திரன் உள்ளிட்டோர் அவருடன் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர்.

கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா கள்ளருக்கும் கொள்ளையருக்கும் வாதாடும் வழக்கறிஞர், மண்டையன் குழுவின் புள்ளி, பல் பிடுங்கிய பாம்பு போன்ற வசனங்களை அடிக்கொரு தடவை கூறி கூட்டமைப்பு எம்.பி.க்களின் வாயை அடைத்தார்.

அப்போது சபைக்கு தலைமைதாங்கிக் கொண்டிருந்த பிரதிக் குழுக்களின் தலைவரும், ஈ.பி.டி.பி உறுப்பினருமான மு. சந்திரகுமார் சபையை கட்டுப்படுத்துவதற்கு பல முறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.

சபை கட்டுக்கடங்காது போகவே தங்களுடைய உறுப்பினர்களை கட்டுப்படுத்துமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யிடம் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் எம்.பி. கையை அசைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களை கட்டுப்படுத்தியதுடன் குரலை செருமியபோது பொறுங்கள், பொறுங்கள் சிங்கக் கொடி சம்பந்தனும் ஏதோ கூறமுயற்சிக்கிறார். கொடியை பற்றி ஏதோ கூறப்பார்க்கின்றார் என அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா தெவிக்கவே அவையிலிருந்த ஆளும் தரப்பினர் பலத்தகுரலில் சிரித்துவிட்டனர்.

எனினும், சம்பந்தன் எம்.பி. எதுவுவே கூறாமல் சபையில் இடம்பெற்ற சம்பவங்களை அமைதியாக இருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்.

கூட்டமைப்பினரின் இடையீட்டு கேள்விகளுக்கு பதிலளித்தும் அவர்களை கண்டித்தும் தனது உரையை தொடர்ந்த டக்ளஸ் தேவானந்தா,

நீங்கள், அரசாங்கத்தை விமர்சித்து உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் நான் அமையதியாக இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். நான் அரசாங்கத்தின் பிரதிநிதி உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் நம்பிக்கையானது அதனால் தான் அரசாங்கத்தில் இருக்கின்றேன்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் பொன்னான ந்தர்ப்பமாகும். அதனையும் தவறவிட்டு விட்டீர்கள். இங்கிருக்கின்ற மண்டையன் குழு தலைவர் புலிகளின் பெயரால் தினம் தினம் கொலைசெய்துகொண்டிருந்தார் இன்று பல் பிடுங்கிய பாம்புபோல இருக்கின்றார்.

கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள், பிரச்சினை தீர்ந்தால் உங்களுக்கு அரசியல் இல்லை. பிரச்சினை இருந்தால் தான் உங்களுக்கு அரசியல், களவு எடுக்காவிடின் உங்களுக்கு வழக்கு இல்லை. களவை ஊக்குவித்தால் தான் உங்களுக்கு வழக்கு. அதனால் ஊக்குவிக்கும் வேலைகளையே நீங்கள் செய்கின்றீர்கள் என்று சுமந்திரன் எம்.பி.யை பார்த்து கூறினார்.

அப்போது சுமந்திரன் எம்.பி. ஏதோ கூறுவதற்கு முயற்சித்த போதும் அவன் வாயை அடைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெண்கள் பாடசாலையில் என்ன? செய்தீர்கள் என்று தெயும்தானே எனக் கேட்டதுடன் கள்வருக்கும் கொள்ளையருக்கும் வழக்குப் பேசிப் பேசி வயிறு வளர்க்கின்றீர்கள். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழையுங்கள்.

இந்தியாவில் எனக்கு கொலைக்குற்றச்சாட்டு வழக்கு இல்லை. ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே எனக்கெதிராக வழக்கு இருக்கின்றது. உமாவை பிரபா சுட்டுக்கொன்ற வேளையில் சுற்றிவரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருந்தனர்.

நீங்கள் (சுரேஷ் பிரேமச்சந்திரனை பார்த்து) நீங்கள் அன்றும் டி.என்.ஏ. இன்றும் டி.என்.ஏ. அப்படித்தானே. மாவை எம்.பி.யே நீங்கள் ஆயுதம் வைத்திருக்கவில்லையா? நான் எந்தவொரு வழக்கையும் முகம்கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

தேவையென்றால் இந்தியாவுக்கு போய்வரலாம். எனினும் கொள்ளையர்கள், கள்வர்களுக்காக வழக்குப் பேசுகின்ற உங்களை கொண்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியுமா?

நாங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொண்டிருக்கின்றோம். நீங்களோ! குழப்பிக்கொண்டிருக்கின்றீர்கள். பிரச்சினையை தீர்த்தால் உங்களுக்கு அரசியல் இல்லை.

அப்போது மாவை சேனாதிராஜா எம்.பி. ஏதோ கூறுவதற்கு முயற்சிக்கையில் இடைமறித்த டக்ளஸ் நான் உமக்கு என்ன சொல்கிறேன் என்றால் குடும்பமே வெளிநாட்டில் இருக்கின்றது. நீரோ இங்கு அகதியாய் இருக்கின்றேன், அகதியாய் இருக்கின்றேன் என்று தலைக்கண்ணீர் வடிக்கின்றீர். உங்களுடைய வீட்டை விற்றுவிட்டு இங்கே வந்து அகதி அகதியென்று கொக்கரிக்கின்றீர்கள்.

ஆனால் அரசாங்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்றார்.

http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=9868%3A-q-n&catid=3%3Asri-lanka&Itemid=459

சிங்க கொடி தான் மட்டுமே பிடிக்க வேண்டும் எண்டு டக்கு ஆசைபடுறார்.

தனக்கு போட்டியாக சிங்களவனை நக்கி பிழைக்க யாரும் வந்தா அவருக்கு பிடிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல அனுமதி

இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல முடியும் என சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று (10) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். (அத தெரண)

டக்கிளஸ் பேசியது அத்தனையும் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ டக்ளஸ் அதி உத்தமபுத்திரன் என்ற மாதிரி புளகாங்கிதம் அடைகிறீர்கள் போல?.

மக்கள் முன் இவரை ஆயுதக்குழு மற்றும் இராணுவம் இல்லாமல் செல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் பேசியது அத்தனையும் உண்மை .

மாவையின் பேச்சிலும் பல உண்மைகள் இருக்கின்றது.கேட்டு தெளியுங்கள்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=25220

இணைத்த செய்திக்குதான் பின்னோட்டம் ,

யாழில் இன்னும் பலருக்கு அது தெரியாது ஆட்டுக்க மாட்டை கொண்டுவந்து விடுவார்கள் .

இணைத்த செய்திக்குதான் பின்னோட்டம் ,

யாழில் இன்னும் பலருக்கு அது தெரியாது ஆட்டுக்க மாட்டை கொண்டுவந்து விடுவார்கள் .

அது டக்ளசும் அவரது அடியாட்களினதும் வேலையாகும்.............

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உங்க ஆடு மட்டை பற்றி கதைபோகுது, அண்ணர் வேழ்வி இல் இருக்கிறார் போல :)

Edited by Malaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இட்ட தீ

சீச்சீ

சம்பந்தர் ஏந்திய கொடி

பரவட்டும் பறக்கட்டும்

உலகமெங்கும்

கக்கீமே இலங்கை சரித்திரத்தில் இல்லாதவாறு தனது பாராளுமன்ற சக உறுப்பினர்கள் தாழ்வகவே பேசி நடந்துகொள்கிறார்கள் என்று குறிப்பிட்டருக்கிறார்.

Edited by மல்லையூரான்

கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம், பாலியல் வல்லுறவு புகழ் டக்ளஸ் உளறுவது அனைத்தும் மதிகெட்டவர்களுக்கு உண்மையாக தெரிவதில் வியப்பில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.