Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:

Featured Replies

... ஈழத்திலிருந்து இலண்டனுக்கு வந்து 16 வருடங்கள் கடத்து விட்டது. இலண்டனில் வந்து வேலை செய்யத் தொடங்கி, வந்த முதல் கிழமை சம்பளம் 100 பவுண்களை, தங்குமிடம்/சாப்பாடு போட்ட உறவினனுக்கும் கொடுக்காமல் தேசியத்திற்காக ஒப்படைத்தேன். அன்று வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதான சந்தோசம்!! அன்று தொடங்கிய தேசியத்திற்கான பங்களிப்பு இன்றுவரை, எவ்வுழைப்பில் இருந்த போதும் என் கடமையை செய்யத் தவறியதில்லை! நேற்றல்ல .. இன்றல்ல ... எப்பவும் என் பங்களிப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்!!! ஏன் செய்கிறேன்?? எதற்காகச் செய்கிறேன்??? ....

எனது குடும்பங்கள் தாயகத்தில் இல்லை!!! இன்றுவரை புலத்தில் எனது தேசியத்திற்கான பங்களிப்பு, எனக்கு என் தாயகத்தில் இருக்கும் சொத்துக்களின் பெறுமதியை விட பன்மடங்கு!!! என்னையும் தாயகத்தையும், எனக்கு அங்கிருக்கும் நிலமே உறவுப்பாலமாக இருக்கிறது. அம்மண் எனக்கில்லையேல், எனக்கும் தாயகத்திற்கும் என்ன உறவு இருக்கப் போகிறது???

எங்கிருந்தாலும், என்றோ ஒரு நாள் எம் தாயகத்திற்கு செல்வோம் என்பதற்கான நம்பிக்கையை தந்து கொண்டிருப்பது, எமக்கு அங்குள்ள மண்தான்!!

இங்கு கொண்டுவரப்பட்ட சட்டம் தூரநோக்கற்றது!! புலத்தில் உள்ள மக்களிடம் தேவையற்ற மன சஞ்சலங்களை உருவாக்கவே முற்படும். மேலும் கள/புல தொடர்புகளை அறுப்பதற்காக செய்யப்பட்ட முயற்சி!!

  • Replies 64
  • Views 8.3k
  • Created
  • Last Reply

மத்தியிலை கூட்டாட்சி மாநிலத்திலை சுயாட்சி எண்டா உந்தக் காணிப்பிரச்சனையில்லை.

நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்ச சனம் எண்டா உப்படி கிறடிற்காட்டிலை அடிச்சு தமிழீழதிறைசேரிக்கு காசுகுடுக்காது. கொன்சவேற்றிப்பாட்டிக்கு நிதியுதவி செய்வினம்.

தம்பி குறுக்காலபோவான் என்னத்தைச் சொல்ல வந்தீரோ தெரியவில்லை? உமக்கு யார் சொன்னது லண்டனில் கிறடிட்காட்டில் அடித்து காசு கொடுக்கப்பட்டதில்லையென்று? உமக்கு தெரியுமா லன்டனில் திறைசேரிக்கு அளிக்கப்பட்ட நிதியின் தொகை? சும்மா விதன்டாவாததிற்கு எழுதாதீர்!

அது இருக்க, இஸ்ரவேல் எனும் நாடு மலர்ந்து இன்றுபல வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்றும் இஸ்ரவேலின் பாரிய நிதிப்பிரட்சனைகளை புலத்தில் உள்ள யூத மக்களே கரம் கொடுக்கிறார்கள்! இதை என்னத்திற்குச் சொல்கிறேன் என்றால் நாளை மலரப்போகும் தமிழீழத்தில் முதலிடுவதற்கு வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ அடித்துப் பிடித்து முண்டியடித்து வரப் போவதில்லை! புலத்தில் உள்ள நாம்தான் நீண்ட காலத்திற்கு கை கொடுக்க வேண்டிவரும் மட்டுமல்ல கை கொடுக்க வேண்டும்! இது கடந்த காலங்களிலும் கண் கூடு! சுனாமியாகட்டும், வெள்ளப்பெருக்குகள் ஆகட்டும் நாம்தான் கை கொடுத்தோம்! ஒருவரும் வரவில்லை!!!! இன்றைய தேசியத்தின் வளர்ச்சிக்கு களத்தில் உள்ள மக்கள் செய்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டாதவை! மலரப்போகும் ஈழத்தில் அம்மக்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை! ஆனால் புலம்பெயர் மக்களின் பங்களிப்பானது, இன்று பரவி வியாபித்திருக்கும் தேசிய விருட்சத்தில் பாரிய பங்கையும் யாரும் மறுப்பதற்கில்லை!!

பிருந்தன்  நான் புலதில் என்று தான் குறிப்பிட்டேன்,டோற்முன்ரில் என்று அல்ல.பிரித்தானியாவிலும்,கனடா

நெல்லயன் உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்கவில்லை? நீங்கள் தாயகம் சென்றால் உங்கள் நிலம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.அதுவரை அது அங்கிருப்பவர்களுக்கு,தமிழ் ஈழ அரசு அமைக்கப் படுவதற்கு உதவுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?உங்கள் நிலம் எங்கும் ஓடி விடப் போவது இல்லயே?உங்களை வர வேண்டாம் என்று ஒருவரும் சொல்லவில்லயே?இதுவரை பங்குதாரர் ஆகாதவர்கள், ஆகுங்கள் என்பது தானே இதன் அர்த்தம்.

புலம்பெயர்ந்து இருந்துகொண்டு காணிகளை அதிக பெறுமதிக்கு விற்று அவற்றை காசாக்கிக் கொண்டு மீண்டும் இங்கு வந்து அங்குவாழும் மக்கள் காணியும் இல்லாமல் இருக்க இடமும் இல்லாமல் வாழ்வதை விட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் இச் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

புலம்பெயர்ந்து வாழும் யாரும் நீங்கள் வாழும் நாட்டில் உங்களிற்கு உங்கள் தாயகத்தில் இவ்வளவு பெறுமதியான சொத்து இருக்கின்றது என்று காட்டியிருக்கிறீர்களா? :roll:

நீங்கள் இருக்கும் நாட்டையும் ஏமாற்றி தமிழீழத்தினையும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். :idea:

மற்றவர்கள் என்னவோ தெரியாது.. ஆனால் நான் 84ல் வந்தபோது எனக்கு சொத்தே இருக்கவில்லை.. தற்போது உள்ளது.. காரணம் எனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை நான்.. ஆக, அவர்களது உடமைகள் இன்று எனக்கு உரித்தாகியுள்ளது. ஆக.. ஓரிருவரை வைத்து எல்லாரையும் ஒரே குட்டைக்குள் அமிழ்த்துவது சுத்த வடிகட்டின ......தனம். :P

விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..  

அப்பு ஆச்சி ஆண்ட மண் அந்த வரியமைந்த தாயகப் பாடல் இருக்கிறதா என்பதே உமக்குத் தெரியுமா காவடி.. நான் எழுதின கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளாமல் காவடி ஆடி பம்மாத்து காட்ட வேண்டாம் இங்கே..

அநேகமான புகலிட உறவுகளும் தமக்கென ஒரு குழியாவது தாயகத்தில் உரிமையுடன் இருப்பதையே விரும்புவார்கள்.. ஏனெனில் அது அவர்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்.. அந்த மண்ணை எடுத்து, யாரோ ஒருவருக்கு தற்காலிகமாக கொடுத்து, பின் நிரந்தரமாக்கி... நாம் அங்கு தற்காலிகமாக போனாலும்.. அங்கே உரிமையுடன் என் வீடு என நுழைய முடியாமல்.. என் முன்னவர் கட்டிய வீடு.. நான் ஓடித் திரிந்த வீடு என்று உவகைகொள்ள முடியாமல்.. இதை காவடித்தம்பி விற்பனைக்கு என்று தனக்குத்தானே மண்டைக் களிமண்ணுக்குள் பிசைந்து கொக்கலித்து இங்கே முக்குவது ஏனென்றுதான் புரியவில்லை.. முக்குக.. முக்குக.. கவனம்.. மூலம் வந்து குருதி கொட்டியாவது அதிலே கறையான் அரித்த நேயம் தெரியட்டும்..

காவடி காட்டியே.. ஒன்றை தெளிவீர்.. எனது கடமைகளை செய்தவாறே நான் இங்கே கருத்துப் பரிமாற்றம் செய்கிறேன்.. கிளறிவிட்டு குளிர்காயவல்ல இது.. அல்லது செடில் குத்தி குதித்தாடி முதுகில் ஊத்தைகளைச் சுமப்பதற்குமல்ல..

எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.

ஓம் நாரதரே! உப்பிடி கேள்வி கேட்க எனக்கும் வரும்.. ஆனா, உதுக்கு மேலயும் நிறைய கேட்கலாம்.. ஆனா. அது நானே என்னைக் கொச்சைப்படுத்துவதுபோல..

இன்றைக்கு மேடைகளிலே முன்னுக்கு நிற்பவர்கள் அந்தந்த நாட்டு பிரசைகளாக இருக்கலாம்.. ஆனால் நான் 22 வருடங்களாக ஏன் இலங்கை கடவுச்சீட்டில் இருக்கவேணும்.. காரணம் இங்கே அவசியமற்றது.

பிருந்தன் கூறியவாறு சுதந்திர தமிழீழத்தில் இப்படியானதொரு சட்ட அமுலாக்கம் ஏற்படின் வரவேற்கத்தக்கதே! நாரதரே.. இன்னும் ஒரு கேள்வி.. 84ம் ஆண்டளவில் எந்த அப்பன் ஆச்சி தமது பிள்ளைகளை மனமுவந்து போராட்டத்துக்கு அனுப்பினார்கள்? அப்பு ராசா.. இதுகளுக்கால நீயாவது ஓடித் தப்படா என்று சொல்லி வெளியேற்றியதுதான் உண்மை.. அப்படி வெளியேறியவர்களில் பலர்.. 10 வீதமல்ல.. பலர் இன்றும் தாயகப் பற்றுடன் வாழ்கிறார்கள். தாயகத்துக்கு தங்களாலான பங்களிப்புகளை வழங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. சொத்து இன்று வரும்.. நாளை போகும்.. அது பெரிய விடயமல்ல.. அன்று 100 டொலருடன் புலம் பெயர்ந்தவர்கள்தான் தங்களது திறமையால் பல்வேறு துறைகளிலே குறிப்பிடக்கூடிய வகையில் முன்னேறியுள்ளார்கள்.

எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.

மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.

சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாமாரே.. இப்ப என்ன நடந்து விட்டது..? நீங்கள் இல்லாத வீடுகளை தாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் வரும் போது திருப்பி தருவதாகத் தானே சொல்லுகிறார்கள். புலிகள் மேல் நம்பிக்கையில்லையா..?

நீங்கள் திரும்பும் வரை, இன்று வீட்டு வசதியில்லாமல், துன்பப்படும், நீங்கள் நேசிக்கின்ற தமிழீழ உறவுகளுக்கு தானே கொடுக்கப் போகின்றார்கள். மீளவும் நீங்கள் திரும்பி வந்ததும்? உங்களிடம் கையளிப்பார்கள். இதிலென்ன பயப்பிட இருக்கிறது.

இதை மறுப்பதற்கு சில காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்.

ஒன்று உங்கள் சொத்துக்களை விற்க முடியாது என்பது உங்களுக்கு பிடிக்கவில்லை.

இரண்டு புலிகளிடம் நம்பி உங்கள் சொத்துக்களை ஒப்படைக்க விரும்பவில்லை.

மூன்று 'அகதிகளை' உங்கள் வீடுகளில் குடியேற்ற உங்கள் மனம் விரும்பவில்லை.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளின் முடிவுகளை இதவரை விமர்சித்தவர்கள் எல்லோரும் தமக்கென ஒரு பாதிப்பு வரும் போது தான் விமர்சித்தார்கள். அவர்களில் பலரக்கு தான் நீங்கள் துரோகிப்பட்டம் கட்டினீர்கள். இப்போ உங்களுக்கு ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லீம்களின் வீடுகள் முன்னர் கையகப்படுத்தியது தொடர்பான விடயம் இதே யாழில் விவாதத்திற்கு வந்திருந்தால் நீங்கள் எல்லாம் எப்படி எழுதியிருப்பீர்கள் என நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது..

அந்த முஸ்லீம்களின் நிலைதான் மற்றவர்களையும் சிந்திக்க வைத்திருக்கலாம் தானே. அது போல் தான் தாயகத்திலிருந்து கருத்தெழுதுவதாக ரீல் விட்டவர்களின் சாயங்களும் புலம்பல்களால் வெளுத்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ நீதி நிருவாகத்தின் முடிவுகளுக்கு எதிராக எழுதுபுவர்கள் துரோகிகள். இந்த சட்டங்களை விடுதலைப்புலிகள் தான்தோன்றித்தனமாக அமைப்பதில்லை. சட்டவல்லுனர்கள், சமுககட்டமைபபில் அனுபவமும் ஆற்றலும் உள்ளவர்கள், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்க கூடும்.

நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.

ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..

கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.

தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது

அண்ணாச்சி!!

எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.

இருக்க, நான் அச்சட்டத்துக்கு தடை ஒன்றும் சொல்லவில்லையே!! காணி விற்கப்படக் கூடாது என்பதை வரவேற்கின்றேன்.

ஆனால் யாராவது ஒருவரை குடியேற்றி வைக்கும் போது எவ்வாறான உரிமத்தை குடியேறுபவர் கொண்டிருக்கின்றார் என்பது பற்றியே எனது கேள்வி! ஏனென்றால் இப்போது யாழ்பாணத்தில் பலர் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.

ஓகோ!! நீங்கள் தான் தலைவருக்கு அடுத்தவரோ??? இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே. அடுத்த கருணாவாக வராமல் இருந்தால் சரி.

என்ன புழுகு!!. இப்படி எத்தனை புழுகர்கள் இந்த களத்தில் இருக்கிறார்களோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ!! நீங்கள் தான் தலைவருக்கு அடுத்தவரோ??? இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே. அடுத்த கருணாவாக வராமல் இருந்தால் சரி.

என்ன புழுகு!!. இப்படி எத்தனை புழுகர்கள் இந்த களத்தில் இருக்கிறார்களோ :lol:

ஆகா என்ன அறிவு!! உடனே தங்களின் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்கின்றீர்களே!! மற்றது தலைவருக்கு அடுத்த நிலை என்று யாரும் இல்லை. அது கூட உங்களுக்கு தெரியாமல் பேச்.....சீசீ

நான் சொல்வது என்னவென்றால் காணிப் பிரச்சரன தொடர்பாக எனக்கு எவ்வித சுருக்கு கயிறும் விழாது என்பதே!!அதை மட்டும் யதார்த்தமாக. யோசியுங்கள்.

ஓம் நாரதரே! உப்பிடி கேள்வி கேட்க எனக்கும் வரும்.. ஆனா, உதுக்கு மேலயும் நிறைய கேட்கலாம்.. ஆனா. அது நானே என்னைக் கொச்சைப்படுத்துவதுபோல..

இன்றைக்கு மேடைகளிலே முன்னுக்கு நிற்பவர்கள் அந்தந்த நாட்டு பிரசைகளாக இருக்கலாம்.. ஆனால் நான் 22 வருடங்களாக ஏன் இலங்கை கடவுச்சீட்டில் இருக்கவேணும்.. காரணம் இங்கே அவசியமற்றது.

பிருந்தன் கூறியவாறு சுதந்திர தமிழீழத்தில் இப்படியானதொரு சட்ட அமுலாக்கம் ஏற்படின் வரவேற்கத்தக்கதே! நாரதரே.. இன்னும் ஒரு கேள்வி.. 84ம் ஆண்டளவில் எந்த அப்பன் ஆச்சி தமது பிள்ளைகளை மனமுவந்து போராட்டத்துக்கு அனுப்பினார்கள்? அப்பு ராசா.. இதுகளுக்கால நீயாவது ஓடித் தப்படா என்று சொல்லி வெளியேற்றியதுதான் உண்மை.. அப்படி வெளியேறியவர்களில் பலர்.. 10 வீதமல்ல.. பலர் இன்றும் தாயகப் பற்றுடன் வாழ்கிறார்கள். தாயகத்துக்கு தங்களாலான பங்களிப்புகளை வழங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. சொத்து இன்று வரும்.. நாளை போகும்.. அது பெரிய விடயமல்ல.. அன்று 100 டொலருடன் புலம் பெயர்ந்தவர்கள்தான் தங்களது திறமையால் பல்வேறு துறைகளிலே குறிப்பிடக்கூடிய வகையில் முன்னேறியுள்ளார்கள்.

எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.

மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.

சோழியன்,

சொத்து கைமாறுவதாக எங்கே அந்த செய்தியில் கூறப்படுள்ளது.உங்களுடய சொத்து உங்களுடனயே இருக்கும்.அதைப்பராமரிப்பது ,வளப்படுதுவது தமிழ் ஈழ அரசைச் சாரும்.அரசென்பது மக்களுக்கு ஆனது,அது தனி நபர்களின் சொத்து அல்ல.குடியிருக்க காணி இன்றி,அல்லலுறும் மக்களுக்கு அந்தக் காணிகள் பயன் பெற்றால், அல்லது தருசு நிலங்களாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலங்கள் பயிர் செய்யப்பட்டு பாவனைக்கு வந்தால் தமிழ் ஈழத்திற்கும்,உங்களுக்கும் பயன் பெறும் தானே.அதைதானே இந்த சட்டம் வழி விடுகிறது.மேலே காவடி கேட்டது போல் நீங்கள் கிலேசம் அடைவதற்கான காரணம் என்ன?

மேலும் இன்று எம்மில் பலர் எங்களுக்கு என்று ஒரு சேதாரம் வரப் போகுது என்றவுடன் மட்டுமே போரட்டத்தை விமர்சிகிறோம்.இது முற்றிலும் பிழையானது.இப்படி பார்த்தால் ஒருவருமே போராடி இருக்கக் கூடாது.அப்படியானல் தமது உயிரைக் கொடையாகக் கொடுக்கும் போராளிகளும்,தமது இன்னியிரைக் கொடுத்த மாவீரரும் என்ன இழிச்சா வாயரா?அவர்கள் ஏன் தமது உயிரைக் கொடுத்தனர்?அவர்களுக்குப் பெற்றவர்கள் இல்லயா?உறவுகள் இல்லயா? அவர்கள் அழுது குளறி இருக்க மாட்டார்களா?இப்படி மனசாட்சி இன்றிக் கதைக்க எனக்கு உள்ளம் வரவில்லை.எனக்கும் சொத்துக்கள் உண்டு ,அவை பற்றிக் கவலைப் பட்டு நான் தேசிய விடுதலைப் போரட்டதிற்கு எதிராக எனக்கு ஒரு சுய பாதிப்பு வருகிறது என்பதாற்காக எனது நிலயை மாற்றப் போவதில்லை.

மேலும் தமிழ் ஈழ தனி யரசு என்பது ஒரு இரவில் ஏற்பட்டு விடாது.அது இப்படியான தொடர் படிகளினாலயே நிதர்சனமாகும்.அந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியே இது.

சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.

ஆகா வசம்பரே,

சட்டங்கள் என்பது மக்களிற்க்கானது என்று கூறிக் கொண்டு என்ன எழுதுகிறீர்.தமிழ் ஈழத் தனியரசு காணிகளை எடுப்பது தனியாரிடம் இருந்து.அரசென்பது மக்களிற்கானது,அது பரந்து பட்ட மக்களின் நலனுக்காக இயங்குவது.அதனாலயே புலத்தில் உள்ள அரசுகளுக்கும் எவரது காணியையும் சுவீகரிக்கும் அதிகாரம் இருக்கு.ஒரு தேசிய பாதுகாப்பிற்குத் தேவயான காணியை சுவீகரிக்க எந்த அரசிற்கும் உரிமை உண்டு.மேலும் என்னைப் பற்றிக் கதைதீர் ஓம் நான் புலம் பெயர்ந்தவன் தான் அதற்காக எனது சுய நல நோக்கில் இருந்து சிந்திப்பதுவோ ,செயற்படுவதோ கிடயாது.இதை முன்னரும் பல முறை சொல்லி இருகிறேன்,அது தான் உமக்கும் ,எனக்கும் உள்ள வித்தியாசம்.எனக்கு ஒரு பாதிப்பு வருகிறது அதற்காக நான் தமிழ் ஈழ தனியரசின் நலங்களுக்கு எதிராக சொல்லவோ செயற்படவோ மட்டேன்.ஊரோடு ஏற்பட்ட இழப்பு எனக்கும் ஏற்படுகிறது என்றே எண்ணுவேன்.

தமது இன்யிரைத் தானமாகக் கொடுப்பவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிலும் எனது இழப்பு என்பது ஒரு துரும்பே.அவர்களே போராட்டதின் பலன்களை பெறுவதற்கு முதலில் உரித்தானவர்கள்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் எல்லோரும் புலம் பெயர்ந்தது எமது சுய நலங்களைப் பாதுகாக்க,போராட்டதுகு உழைதுக் கொடுக்க என்று பொய் சொல்லதீர்கள்.போராட்டதிற்குக

மேலும் இசுரேலிரைப்பற்றி நல்லயன் சொல்லி இருந்தார்,

இசுரேல் என்ற யூதர்களுக்கான பாதுகாகப் பட்ட பிரதேசம் அன்றய வல்லரசான பிரித்தனியாவாலும்,அமெரிக்கா

என்னப்பா நடக்குது இங்க.?

புலம் பெயர்ந்த எவரும் புலத்தில் சொந்தமாக காணிகள் வைத்திருக்க கூடாதா எண்று சட்டம் வந்திருக்கிறது.?? புலத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர் காணிகள் அவர்கள் புலம் வரும் வரை பொதுப்பயன் பாடுக்காக நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தபடும் என்பதே.! அந்தக்காணிகள் திரும்ப அவரகளிடம் வளங்கப்படும் என்பதே.

இங்கு சிலர் அலறுவது போல காணிகள் கையகப்படுத்தல் சட்டமூலம் கிடையாது.

எதையாவது விளங்கி கருத்து போடுங்கப்பா.

சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.

என்ன நாட்டு மக்களின் வளங்களை நாட்டுக்காக பயன் படுத்துதல் இடைவெளியை அதீகரிக்கும் ஆக்கும்.

தாயகத்தில் முதலீடு போடுபவர் நாட்டில்கால் பதிக்காமல் முடியாது அங்கு உங்களின் முதலீடு இருக்குமானால் நீங்கள் அங்கும் வாழ்வதாகவோ இல்லை குடியாக கொள்ளப்படும்.

10 வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகள்தான் தனீட்சையாக கையகப்படுத்தபடும் என்பதுதான் சட்டம்.

உங்கள் காணிகள் உங்களால் பாவனைப்படுத்தபடுவதாக இருந்தாலும் கையகப்படுத்தப்படும் எனும் புதிய சட்டம் இயற்றாமல் இருந்தால் சரி. அது வரை உங்கள் காணிகளுக்கு ஆபத்து கிடையாது.

எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.

மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.

உங்களுக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் இங்கு இருக்கும் பிரச்சினை என்ன எண்றால் புலிகள் யார் எமக்கு சட்டம் போட என்பதுதான்.

ஒருகாலத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்தபோது கைகட்டி வாய் பொத்தி இருந்த சனம் தான் நாங்கள்.

ஆனால் பாவனையில் இல்லாமல் தரிசாகி கொண்டிருக்கும் பயிர் நிலங்கள் வாழ்நிலங்கள். நாட்டு வளர்ச்சிக்காய் நீங்கள் வரும் வரை பயன் படுத்தப்படும் என்பது இப்போ கசக்கும். அதை எதிர்க்க எங்களுக்கு எல்லாம் திரணி வந்திட்டுது. காரணம் சண்டைபோடுறது பழக்கமாகீட்டுது இல்லையா. :roll:

தமிழீழ நீதி நிருவாகத்தின் முடிவுகளுக்கு எதிராக எழுதுபுவர்கள் துரோகிகள். இந்த சட்டங்களை விடுதலைப்புலிகள் தான்தோன்றித்தனமாக அமைப்பதில்லை. சட்டவல்லுனர்கள், சமுககட்டமைபபில் அனுபவமும் ஆற்றலும் உள்ளவர்கள், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்க கூடும்.

நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்.

மேற்குறிப்படவாறு யாராவது இங்கே எழுதி உள்ளனரா?

இதைப் போன்ற உண்மைகள் அற்ற வரிகளை ,தங்களை மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ,பணத்திற்கு விலை போன இணயத் தளங்களில் தான் பார்த்திருக்கிறேன்.தன்னை ஒரு தமிழீழ ஆதரவு நல்கும் செயற்பாட்டளராக காட்டிக்கொள்ளும் ஒருவரிடம் இருந்து வருவதை இப்போது தான் பார்க்கிறேன்.

நிதானம் இழந்து தங்களைத் தாங்களே யார் என்று காட்டிக் கொள்ளும் பொய்கள் இவை.

புலிகளின் நிர்வாகத்திறனை உலகம் போற்றுகிறது என்றும் இவர் முன்னர் எழுதி உள்ளார் என்பதுவும் இங்கே கவனிக்கப்படத் தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

.

புலிகளின் நிர்வாகத்திறனை உலகம் போற்றுகிறது என்றும் இவர் முன்னர் எழுதி உள்ளார் என்பதுவும் இங்கே கவனிக்கப்படத் தக்கது.

விடுதலைப்புலிகளின் நிர்வாகம் உலகம் போற்றும் நிருவாகம் என்று நான் திரும்பவும் திரும்பவும் எழுதும் இடம் எல்லாம் எழுதுவேன். உமக்கு அது பிடிக்காவிட்டால் படிக்காதேயும். ஆனால் நான் இதை எழுதுவதை உம்மால் தடுக்க முடியாது.

உமக்கு விடுதலைப்புலிகளின் நிருவாகத்தை நான் போற்றி எழுதுவது எரிகிறது என்றால் நீர் குறிப்பிட்டது போன்ற "மாற்றுக்கருத்து" களங்களில் போய் குளிர்காயும்.

விடுதலைப்புலிகளின் நிர்வாகம் உலகம் போற்றும் நிருவாகம் என்று நான் திரும்பவும் திரும்பவும் எழுதும் இடம் எல்லாம் எழுதுவேன். உமக்கு அது பிடிக்காவிட்டால் படிக்காதேயும். ஆனால் நான் இதை எழுதுவதை உம்மால் தடுக்க முடியாது.

உமக்கு விடுதலைப்புலிகளின் நிருவாகத்தை நான் போற்றி எழுதுவது எரிகிறது என்றால் நீர் குறிப்பிட்டது போன்ற "மாற்றுக்கருத்து" களங்களில் போய் குளிர்காயும்.

நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்.

இல்லை ஜூட் ,

உமது இரட்டை நாக்குத் தனமும், புலிகளைப்பற்றிய நக்கல் கலந்த விமரிசனமும், எனக்கு விளங்காது என்று நினத்தீரா?

நீர் எவ்வறானவர் என்பது சிலருக்கு விளங்காதபடியாலயே உமது நக்கல், நளினங்களை குறிப்பிட்டுச் சொல்ல விழைந்தேன்.அது சரி இங்கே துரோகிப் பட்டம் எந்த அடிப்படயில் வழங்குகிறீர்?ஒரு ஜன நாயக வாதியாகா, அதி உயர் ஜன நாயகப் பண்புகளை உள்ளடக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு நற்பிரசை ஆன நீர் ஏன் இங்கே கருத்து எழுதுவோரை

துரோகி என அழைக்கிறீர்? இவ்வாறு வேறு எவரும் கருதுத் தடையைக் கோரவில்லயே? உமது ஜன நாயக முகமூடிக்கு என்ன நடந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.