Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தையார் தினத்தின் நினைவாக...

Featured Replies

தந்தையார் தினத்தின் நினைவாக...

ஒரு பிள்ளைக்குத் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் பங்கும் அவன்/அவள் வாழ்வில் அவசியமாகிறது... வயது முதிர்ந்த தமது தந்தையை அருகிருந்தும் சிலர் பராமரித்தாலும், எம்மில் பலர் இன்று தந்தையைப் பிரிந்து/ இழந்தது தவிக்கின்றோம்... உணர்வுகளும், ஞாபகங்களுமே எம்மோடு தொடர்கின்றன...

பிரித்தானியாவில் (17th June 2012) தந்தையார் தினத்தை முன்னிட்டு யாழ்களத்தில் உள்ள தந்தைமாருக்கும்/ அவர்களின் தந்தைமாருக்கும் இத்திரி சமர்ப்பணம்...

தந்தையாரைக் குறிக்கும் பொன்மொழிகள், கவிதைகள், பாடல்கள், கதைகள், சொந்த அனுபவங்கள், ஏக்கங்கள், நகைச்சுவையான படங்கள் (பெரும்பாலும் தாயாரை விட தந்தையாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால் அவர்கள் புரிந்து கொள்ளுவார்கள்... ^_^) என்பவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்...

-நன்றி :)

--------------------------------------------------------------------------------------------------------------------------

தவமாய் தவமிருந்து

அபியும் நானும்

[media=]

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா!

குட்டி என்ற ஒரு மனுசனுக்காவது, தந்தை என்ற உறவு, தாயென்ற உறவுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்று புரிகின்றதே!

இணைப்புக்கு நன்றிகள், குட்டி!

அனைத்துத் தந்தைகளுக்கும், இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், குட்டி!

அனைத்துத் தந்தைகளுக்கும், இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணாவுக்கு இந்த திரியை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றிகள்..அனைத்து தந்தையர்களுக்கும் உளம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/MBTxi4QdXsM

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தலைப்பை ஆரம்பித்த குட்டியருக்கு நன்றி!

நான் பார்த்து ரசித்த தகப்பன் -மகள் அந்நியோன்யமான நடனத்தை இங்கு இணைக்கின்றேன்.சும்மா பொழுதுபோக்குக்கு பார்த்து ரசிக்கலாம். :D

[media=]

  • தொடங்கியவர்

புங்கையூரன், தமிழரசு, யாயினி, கு.சா. அண்ணை ஆகியோரின் வருகைக்கும், பகிர்விற்கும் நன்றிகள்.. :)

  • தொடங்கியவர்

அப்பா

நான் பிறந்த அடுத்த நொடியில்

மனம் நிம்மதியில் பூரிப்பு

அடைந்தால் என் அன்னை.

என் தந்தையோ !

அடுத்த நொடியில் இருந்து

அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு

எனக்கு என்று வாழ தொடங்கினர்

அவருக்கான

பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு

எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்

அவருக்கு ஆனாது

எத்தனையோ

சந்தர்ப்பங்களில் உங்களை

நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.

இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு

ஆம்

சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து

நடை பழகிய பொழுதில்

தடுக்கி விழுந்து இருக்கிறேன்

அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே

தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்

நான் உங்கள் கை பிடித்து

நடந்து இல்லை

என் இந்த இடைவெளி?

உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு

எங்கள் சந்தோஷங்கள்

உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்

எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன

உங்களுக்கும் ,எனக்கும்

உள்ள இடைவெளியின் இருந்த

அர்த்தம் இப்பொழுதில்

புரிந்துகொண்டேன் .......

அந்த இடைவெளி தான் எனது

முன்னேற்றம் என்றும் ...

உங்கள் கை பிடித்து நடக்க

ஆசைப்பட்ட ,நான்

உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்

என் வாழக்கை என்றும் !

இவ்வளவும் செய்த அந்த கடவுள்

என்னை பெண்ணாக பிறக்க செய்ததை

எண்ணி வருத்துகிறேன்

உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று

அடுத்த பிறவிளவது

என்னை ஆணாக பிறக்க செய்து

உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்

அடைந்த என் வாழக்கையில்

நீங்கள் உங்கள் முதுமையில்

வாழந்திட இறைவனை

வேண்டுகிறேன்

இந்த கவிதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்

-------------------------------------------------------------------------------

அப்பாக்கள் இப்படியிருந்தால்(?)!!

ன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்தே சென்று

உலகம் பார்த்த வியப்பு..

ப்பா.. நடக்கும் தெருவெல்லாம்

வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்..

வானத்தின் மேகப் பூக்களை கூட

யானையாகவும் குதிரையாகவும்

பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ

மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!!

மீன் வாங்கினால்

பூ வாங்கினால்

தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம்

பழம் வாங்கினால் கூட

அவர் பாவமென்று கொடுத்த அதிக பணத்திலிருந்து தானே

ஏழைக்கான கரிசனம் எனக்கே பிறந்திருக்கும்(?)!!

வர் மார்பில்படுத்து உறங்கிப் போன நாட்கள்,

அவர் காலழுத்திவிட்டு

கால்மாட்டில் தூங்கிப் போன நாட்கள்,

சிலவேளை -

அப்பா பாவமென்று உறங்காமலே அழுத்திக் கொண்டிருக்க

நடுஜாமத்தில் எழுந்த அப்பா

‘ஐயா…’ என்னய்யா இது படுக்கலையா’ என்று தன்னை

நெஞ்சுறுக அழைத்து அணைத்துக் கொண்ட நாட்களெல்லாம்

கோடான கோடி விருதுகளை

அப்பா யெனும் ஒரு வார்த்தையில்

புதைத்துத் தானே கொள்கிறது(?)!!

ழா‘ எழுது

அரிச்சுவடி படி

ஆத்திச்சூடி தெரிந்து கொள்

வாய்ப்பாடு சொல்

திருக்குறள் ஒப்பி என்றெல்லாம்

அவர் வளர்த்த தமிழில் அவைகளை கடந்து

என்றுமே பெருமைக்குரிய சொல்

அம்மாவோடு சேர்த்து அப்பா.. அப்பா மட்டும்.. தானே(?)!!

ங்கு தன் பிள்ளைகள் எதற்கேனும் ஏங்கி

பிறர் வீட்டில் போய் நிற்குமோ,

ஊரார் பார்த்துவிட்டால் -

தன் பிள்ளைகளுக்கு கண்பட்டுவிடுமோ’ என்றெல்லாம்

தின்பண்டங்களை கூட தன் வேட்டியிலோ

வேறு துணி போட்டு மூடியோ -

மறைத்து மறைத்து வாங்கிவந்த அப்பா எனும் வரம்

எப்படித்தான் ‘கடைசி வரை இல்லாமலே போகிறதோ(?)!!

மிழை திருத்தமாக படி

தமிழை திருத்தமாக பேசு

ஆங்கிலம் அவசியமெனில் கற்றுகொள்

பிறமொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்

அதற்காக மம்மி டாடி என்றழைக்காதே..

காலையில் எழுந்து விடு

உழைக்க பழகிக் கொள்

பொய் சொல்லாதே

பயம் தோல்வியை தரும்

நியாயத்தை தட்டி கேள்

அவசியத்திற்கு கோபம் கொள்

அசிங்கமாக பேசாதே

பிறர் இகழ நடக்காதே

ஒருபோதும் பிறரை ஏமாற்றாதே

நீ பெரிய ஆளாக வருவாய்……….. ‘என்றெல்லாம்

நம்பிக்கையையும் -

போதனைகளையும் கொடுத்த அப்பா…

வாழ்வெல்லாம் எனை

எனக்காய் தலைமேல் சுமந்த

குருவிற்கு ஒருபடி மேலன்றி வேறென்ன(?)!!

ப்பாவிடம் புத்தகம் கேட்பேன்,

‘என்ன புத்தகம்பா..?’

‘சோசியல் சைன்ஸ்பா’

‘அப்படின்னா என்னப்பா?’

‘சமுக அறிவியல்பா’

‘அப்படியா????!!!!!!!!!!’

ப்பா ஜாமின்ரி பாக்ஸ் வேணும்பா’

“அப்படின்னா என்னப்பா???”

‘பேனா பென்சிலெல்லாம் வைப்போமே அதுப்பா’

‘ஹாங்.. டப்பாவா ???”

‘டப்பா இல்லப்பா அதுல வேற காம்பஸ், ஸ்கேல், எல்லாம் இருக்கும்பா”

‘அதலாம் எனக்கு தெரியாதுப்பா

படிக்க உயிரு வேணுமா எடுத்துக்கோப்பா – ஆனா நல்லா படிப்பா

அது போதுமப்பா’ என்று சொன்ன அப்பாக்கள் -

அந்த ஜாமின்ரி பாக்ஸ் தொலைந்தாலும்

புத்தகம் கிழிந்தாலும்

அதன் நினைவாகவும் படிப்பாகவும்

நம் பெயருக்கு – முன்னும் – பின்னும்

இருந்துக் கொண்டே இருக்கிறார்கள்!!

————————————————————

வித்யாசாகர்

Edited by குட்டி

  • தொடங்கியவர்

[media=]

  • தொடங்கியவர்



[media=]

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி குட்டி இன்று தான் பார்த்தேன்...உலகத்தில் உள்ள அனைத்து தந்தையருக்கும் எனது தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ஒரு ஆசான்

அப்பா ஒரு தோழன்

அப்பா ஒரு வழிகாட்டி

அப்பா ஒரு கடவுள்....

இணைப்பிற்கு நன்றி குட்டி

அப்பா ஒரு ஆசான்

அப்பா ஒரு தோழன்

அப்பா ஒரு வழிகாட்டி

அப்பா ஒரு கடவுள்....

இணைப்பிற்கு நன்றி குட்டி

[size=1]

[size=4]மிகவும் உண்மை. [/size][/size]

[size=1]

[size=4]ஒபாமா ஒரு பேச்சில் கூறி இருந்தார், எந்த ஆணும் தகப்பனாக முடியும் என்று ஆனால் ஒரு நல்ல அப்பாவாக நீங்கள் மேலே கூறிய அனைத்தையும் செய்தல் வேண்டும் என்று. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் தந்தைமாருக்கும், எனது தந்தையாருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..! :D

திரியை ஆரம்பித்த குட்டிக்கு நன்றி.

என் தந்தை என்னுடன் இல்லை. ஆனால் அவர் போல் ஒரு பங்காகவேனும் என் குழந்தைகளுக்கு இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நேற்று பாடசாலையில் என் பிள்ளைகளுக்கு ஒரு பவுண் கொடுத்து அவர்களுக்கு விருப்பமான பரிசுப்பொருளை தேர்வு செய்யும்படி கூறியிருந்தார்கள். வீட்டுக்கு வந்த என் வாண்டுக்கு ஞ்சயிருவரை (எப்படி ஞ் எழுத்தை மாற்றுவது என தெரியவில்லை) காத்திருக்கப் பொறுமையில்லை. பரிசுப் பொதியை தந்துவிட்டான். அதற்குள் என்ன இருக்குது என்றும் சொல்லிவிட்டான். அவன் சகோதரி என்ன வாங்கியுள்ளாள் என்றும் கூற, அவள் கோபித்து விட்டாள். இப்படியாக என் வீடு நேற்று களை கட்டியது.

[media=]

நல்ல ஒரு திரி குட்டி, தொடர்ந்து பாடல்களை இணையுங்கள்.

(எனக்கு இந்த பாடல் காட்சியை பார்க்கும்போது வரும் ஆதங்கம்...! ஒரு நல்ல நடிகனை மிகைப்படுத்தலான நடிப்பை கொடுக்கவைச்சு அவருக்கு ஒரு தேசிய விருது கூட வாங்க முடியாமல் செய்த இயக்குனர்கள் மேல்...! :wub: )

[size=4]எனது தந்தையாரிடம் நான் கற்றது பல, அதில் குறிப்பாக இரண்டு விடயங்களை பகிரலாம்: [/size]

[size=4]எங்கேயாவது போவது என்றால் ( தூரப்பிரயாணம் என்றால் முதல் நாளே இல்லை சில நாட்கள் முன்னதாகவே) திட்டமிடுவார். வேலைகளை பிரித்துக்கொடுப்பார். காலை எழுவதற்கு மணிக்கூட்டை அரைமணி முன்னோக்கி நகர்த்தி விட்டுவிடுவார். இப்படி பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்.[/size]

[size=4]தனது பதினெட்டு வயது முதல் இன்றுவரை மாதச்சம்பளம் பெறுபவர். இதில் ஒவ்வொரு பெரிய/சிறிய செலவுகளுக்கும் ஒரு பிரத்தியேக பெயரிடப்பட்ட கடித உறைக்குள் மாதச்செலவுக்குரிய பணத்தை இட்டுவிடுவார். சிக்கனம் இருக்கவேண்டும், சேமிக்கவேண்டும் அதேவேளை இல்லாதோருக்கு உதவவும் வேண்டும் என்ற கொள்கை உடையவர்.[/size]

[size=4]எனது பதினெட்டு வயதில் எனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தாலும் நானும் இந்த அறிவுரைகளையும் இல்லை அனுபவத்தையும் முடிந்தளவுக்கு கடைப்பிடிப்பவன்.[/size]

  • தொடங்கியவர்

ரதி, வாத்தியார், நெல்லையான், அகூதா, இசை, ஈஸ், ராஜா, சிறி அண்ணா, தப்பிளிக்கும், தொடர்ந்து இந்தத் திரியில் நல்ல பாடல்களை இணைக்கும் யாயினிக்கும் எனது நன்றிகள்... :)

மேலும் மூன்று குறும்படங்கள்

அப்பா - தமிழ் குறும்படம்

ஒரு தந்தையாக இருப்பது....

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.