Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல்.

Featured Replies

புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல்.

வணக்கம் பாருங்கோ:

கண்டறியாதவங்களின்ரை ஆக்கினையாலை நாடு விட்டு நாடு வந்து ஒரு மாதிரி குந்தீட்டம். சொந்த நாட்டைப் பிரிஞ்சு எத்தனை காலமானாலும் இன்னும் தாய்நாட்டைப் பற்றின சிந்தனையோடை தமிழர்களா வாழ்ந்து கொண்டிருக்கிற ஆக்களும் இருக்கினம். ஆனால் வந்து கொஞ்ச நாளுக்குள்ளாவே தாங்கள் வந்த இடத்தை மறந்து ஏதோ இங்கிலாந்து மகாராணியின்ரை பேரக்குஞ்சுகள் போலை தங்கிலீஸ் கதைச்சுக் கொண்டு தமிழரா இன்னும் வாழுற ஆக்களைப் பாத்து சோறு எண்டு பகிடி பண்ணிக் கொண்டு திரியிற ஆக்களும் இருக்கினம்.

அங்கையெண்டால் ஆயிரம் பொழுது போக்கு இருக்குது. அப்படியே நடந்து போய் வாசிகசாலையிலை குந்தியிருந்து பேப்பருகளை புத்தகங்களை வாசிக்கலாம். அங்கை வாற நாலு பேரோடை ஊர்ப் புதினம் உலகத்துப் புதினம் கதைக்கலாம்.அப்படியே பிள்ளையர் கோயிலடிக்கு நடந்து போய் ஒரு அரோகராவைப் போட்டிட்டு நாலைஞ:சு கடலையை வாங்கிக் கொறிச்சுக் கொண்டு காலாற நடக்கலாம். இப்பிடியே பொழுது போயிடும்.

ஆனால் இந்தக் கண்டறியாத தேசத்திலை வருசத்திலை பாதி பனியிலை மிதக்கிறம். மிச்சப் பாதி வெய்யில் கொளுத்தித் தள்ளுது. இந்த லட்சணத்திலை பிள்ளைகளைக் காணுறதே அபூர்வமாப் போச்சுது.

நாங்களும் என்னத்தைச் செய்யிறது. ஏதோ அரசாங்கம் தந்திருக்கிற free பஸ் பாசின்ரை புண்ணியத்திலை அங்கங்கை இருக்கிற மோலுகளுக்குள்ளை குந்தியிருந்து ஊர்க கதை கதைக்கிறதை விட்டால் வேறை என்ன பொழுது போக்கு. உப்பிடியான நேரங்களிலை காணுற மற்ற காதிலை விழுற புதினங்களைக் கேட்டால் இருக்கிற பிறசர் டபிளாகிது.

உப்பிடியா நான் கேள்விப்படுற விசயங்களை உங்கடை காதிலையும் போட்டு வைப்பம் எண்டு போட்டுத் தான் இந்தத் தலைப்பைத் தொடங்கியிருக்கிறன். நீங்களும் வந்து உங்கடை கருத்துக்களைத் தாங்கோ. நான் எழுதிற சில விசயங்களைக் கேக்க உங்களுக்குப் பிடரியைப் பொத்தி வெளுகக் வேணும் போலை இருக்கும். சரி பிடரியிலை வெளுக்கேலாட்டிக்கும் உங்கடை எழுத்துக்களாலை வெளுத்து வாங்குங்கோ. நாலு பெர் கதை பட்டால் தானே எது சரி எது பிழையெண்டது விளங்கும்.

சரி இப்ப பள்ளிக்கூடம் விடுற நேரமாப் போச்சுது. போய் பேரப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வந்து சாப்பாடு குடுக்க வேணும். பிறகு ஆறுதலாக் கதைப்பம் என்ன.......

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல்.

நாங்களும் என்னத்தைச் செய்யிறது. ஏதோ அரசாங்கம் தந்திருக்கிற free பஸ் பாசின்ரை புண்ணியத்திலை அங்கங்கை இருக்கிற மோலுகளுக்குள்ளை குந்தியிருந்து ஊர்க கதை கதைக்கிறதை விட்டால் வேறை என்ன பொழுது போக்கு. உப்பிடியான நேரங்களிலை காணுற மற்ற காதிலை விழுற புதினங்களைக் கேட்டால் இருக்கிற பிறசர் டபிளாகிது.

மோல் அப்படியென்றால் என்ன :D

.

சரி இப்ப பள்ளிக்கூடம் விடுற நேரமாப் போச்சுது. போய் பேரப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வந்து சாப்பாடு குடுக்க வேணும். பிறகு ஆறுதலாக் கதைப்பம் என்ன.......

பேரப்பிள்ளைகளைக் கண்டவர்களுக்கு வேறை என்ன வேலை :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வாத்தியார்

அவர்தான் தொடங்கவே இல்லையே

அதற்குள் இதற்கு இந்த பல்குழல் அடி............??? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வாத்தியார்

அவர்தான் தொடங்கவே இல்லையே

அதற்குள் இதற்கு இந்த பல்குழல் அடி............??? :lol::D :D

விளங்காத சொற்களுக்கு அர்த்தம் புரிந்தால் மட்டுமே

தொடர்ந்து வாசிக்கும் போது விளக்கமாக இருக்கும் :D

விசுகு அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

:icon_idea:

வாத்தியாருக்கே புரியல

நம்ம கதி???????????? :lol::D

  • தொடங்கியவர்

வாத்தியார் கனடாவிலை மோல் எண்ட சொல்லுறது ஒரு அங்காடித் தொகுதி. ஒரு மோலுக்குள்ளை போனால் எல்லாக் கடைகளும் இரு;ககும். அதை விட ஆக்கள் கூடியிருந்து கதைக்க எல்லாம் வசதி செய்திருப்பினம். அனேகமா வயது போன ஆக்கள் தங்கடை நண்பர்களோடை கூடியிருந்து கதைக்க இங்கை தான் வாறவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் சிங்கம் திருப்பி விளக்கம் கேட்காதில்லை. :lol:

  • தொடங்கியவர்

ஏன் வாத்தியார்

அவர்தான் தொடங்கவே இல்லையே

அதற்குள் இதற்கு இந்த பல்குழல் அடி............??? :lol::D :D

விசுகு அண்ணை நீங்கள் இந்தப் பாவியைக் காப்பாத்த இப்பவே தயாராகீட்டியள் போலை. சின்னப் பெடியள் என்னைப் புரட்டி எடுத்தால் நீங்கள் தான் உதவிக்கு வர வேணும்.(பிற்குறிப்பு: இது அரசியல் விடயங்களுக்கான பதிவல்ல. ஆனாலும் ஆங்காங்கே எட்டிப் பாத்தால் பிறகு சண்டைக்கு வரக் கூடாது)

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி முதல்ப்பச்சையை போட்டிருக்கிறன் ராசா

அதை காப்பாத்தணும் கண்டியோ?? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் கனடாவிலை மோல் எண்ட சொல்லுறது ஒரு அங்காடித் தொகுதி. ஒரு மோலுக்குள்ளை போனால் எல்லாக் கடைகளும் இரு;ககும். அதை விட ஆக்கள் கூடியிருந்து கதைக்க எல்லாம் வசதி செய்திருப்பினம். அனேகமா வயது போன ஆக்கள் தங்கடை நண்பர்களோடை கூடியிருந்து கதைக்க இங்கை தான் வாறவை.

விளக்கத்திற்கு நன்றி மணிவாசகன்

நான் இந்தச் சொல்லை இதுவரை கேள்விப்படவில்லை.

நாலு பேர் சேர்ந்து தண்ணி அடிக்கின்ற இடம் என நினைத்தேன்

ம்ம்ம்

:icon_idea:

வாத்தியாருக்கே புரியல

நம்ம கதி???????????? :lol::D

விசுகு அண்ணைக்குப் பகிடியாக இருக்கின்றது.. :D:lol:

  • தொடங்கியவர்

நம்பி முதல்ப்பச்சையை போட்டிருக்கிறன் ராசா

அதை காப்பாத்தணும் கண்டியோ?? :icon_idea:

உதென்ன வெருட்டிறியள். நானே வெலவெலத்துப் போயிருக்கிறன்......

கெதியெண்டு வந்து துலையுங்கோ மணிவாசகன்.நானும் எவ்வளவு நேரம்தான் மோல்வழியகிடக்கிறது.? என்ர ஆதங்கத்தையும் கொட்டவேணும்.

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தாங்க முடியாமல் ஒரு கதையை இங்கு சொல்லத்தான் வேண்டும், மணிவாசகன்!

வெம்பிளி ' Alberton' மரக்கறிக் கடையில் நடந்த நிகழ்வு இது!

நான் இந்தக் கடையில்,முருங்கைக்காய் பார்த்துக்கொண்டிருந்தேன்!

அந்த நாளையில முருங்கைக்காய் விலைக்கும், தங்கத்தின் விலைக்கும் கனக்க வித்தியாசம் இருக்காது!

கலியாணம் கட்டின புதுசில, என்னிட்டையே சமையல் படிச்ச மனுசியும், திரும்ப எனக்கு மரக்கறி வாங்குவது எப்படி எனப் பாடமெடுக்கத் தொடங்கிய கால கட்டம்!

எனவே முருங்கைக் காய்களை, ஆறுதலாக நேரமெடுத்துத தெரிந்து கொண்டிருந்தேன்!

தமிழ்ப் பெண்கள் இருவர் கடைக்குள் வந்தார்கள்!

அவர்கள் முகத்திலிருந்து, ஊரிலிருந்த கொண்டு வந்த 'கருமை' நிறம் இன்னும் வடிவாக நீங்கியிருக்கவில்லை!

அவர்களுக்குள் நடந்த சம்பாசனை இது!

Girl-1: Hey, what are those sticks?

Girl-2: I have seen my mum cooks at home. But I think it is more suitable for cattle.

Girl-1: I don't really know, how people eat this! :icon_idea:

இப்படியும் நம்ம பொண்ணுகள்!

  • தொடங்கியவர்

கெதியெண்டு வந்து துலையுங்கோ மணிவாசகன்.நானும் எவ்வளவு நேரம்தான் மோல்வழியகிடக்கிறது.? என்ர ஆதங்கத்தையும் கொட்டவேணும்.

வணக்கம் நீலமேகம்,வாங்கோ வாங்கோ வந்து தாராளமாக உங்கடை ஆதங்கங்களைக் கொட்டுங்கோ!அதுக்கு நான் எழுதுமட்டும் காத்திருக்கத் தேவையில்லை.நான் வயசு போன ஆக்களின்ரை பிரச்சினையை மட்டும் கதைக்க இதைத் தொடங்கேல்லை. புலத்திலை எங்கடை சனம் படுற பாடுகளை, செய்யிற கூத்துக்களை எல்லாம் எழுதத் தான் இந்தப் பகுதி. அதாலை நீங்களும் உங்கடை கருத்துக்களைப் பதியுங்கோநானும் நேரங்கிடைக்கக்ககை வந்து எழுதுறன்.முதலாவது விசயம் தலைக்கிள்ளை நிக்குது.ரைப் அடிக்க நேரங் கிடைச்சால் இண்டைக்கு எழுதிப் போடுறன்.இப்ப சந்தோசமோ?

இந்த றூட் சரிவருமோ மணி ? பாத்து , இப்பதான் வக்கிரிக்குது எண்டு கேள்வி .

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ மணிவாச‌கன் நானும் வாசிக்க ஆவலாய் உள்ளேன்

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி!

கோமகன் அண்ணா உங்கடை நக்கல் விளங்குது.

நாங்களும் பிள்ளைக் குட்டிக் காறர். நேரங்களைப் பாத்துத் தானே எழுதலாம்.

ரதி:

வாசிக்கிறதோடை நிப்பாட்டிப் போடக் கூடாது. உங்கடை ஊர்ப் புதினங்களையும் எழுத வேணும். அங்கை லண்டனிலை தானே ஏராளமான புதினம் இருக்குது. என்ரை எழுத்துக்களிலையும் கன லண்டன் அனுபவங்கள் வரும்....

புங்கையூரான்

பதிவுக்கு மெத்த்ப பெரிய உபகாரம்.இதூடை நிப்பாட்டாமல உங்கடை பூராயங்களையும் எழுதுங்கோ

அடுத்தது நான் பம்பலுக்காக கொஞ்சம் கையாலை மடியாலையும் போட்டுத் தான் எழுதுவன்?

பிறகு ஆதாரம் காட்டு அது இது எண்டு சண்டைக்கு வரப்படாது...

மற்றது நான் ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொரு புதுத் தலைப்பிலை எழுதிறன் என்ன?

இல்லாட்டில் பிறகு நீ தலைப்பபை மாத்திப் போட்டாய் நீயும் ஒரு மனிசனோ எண்டெல்லாம் கண்டபடி பேசிப் போடுவியள்.

ஒவ்வொரு தலைப்பும் இப்படி இருக்கும்: பு.பெ.பு 1 - ....................

சரியோ! என்ன தலையைப் பிக்கிறியள் புலன்(ம்) பெயர்ந்தவனின் புலம்பல் எண்டதின்ரை சுருக்கம்

சரி முதலாவது தலைப்பு இது தான் : பு.பெ.பு 1 - கண்டறியாத சுத்தத் தமிழும் எங்கடை பிள்ளைகளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.