Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

1164630825SLMC.jpg[/size]

கிழக்கு தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

[size=4]எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளது. [/size]

[size=4]நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து பல தடவைகள் அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுக்களை நடாத்தி வந்தது.

இந்நிலையில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதாக நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. [/size]

http://www.adaderana.lk/tamil/news.php?nid=2707

0

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ.. செய்திட்டம்.. இதைச் செய்யமாட்டமா என்ன...! காக்கா.. கா.. கா என்று தான் கரையும். என்ன தான் தொப்பியை புரட்டிப் புரட்டிப் போட்டாலும் அதன் குணம் மாறாது..! இஞ்ச சிலர்.. மாறுன்னு அவைக்கு வக்காளத்து வாங்கிறவை..! :lol::icon_idea:

mus003gln.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இதில்... ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

ஆளும்கட்சியுடன் இணைவது தானே... முஸ்லீம்களின் கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புடன் சேர்ந்தால்தான் ஆச்சரியம், இதை நாம் ஏற்க்கனவே எதிர்பார்த்ததுதானே,

எந்த சிங்களக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு வால் பிடித்து பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதுதானே இவனுகளின் வேலை .....

மீண்டும் முஸ்லிம்களை சகோதரர்களாக எண்ணும் யாழ் கள உறுப்பினர் சிலருக்கு முஸ்லிம்கள் அப்படி அல்ல என்று புரியவைத்ததற்கு நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ.. செய்திட்டம்.. இதைச் செய்யமாட்டமா என்ன...! காக்கா.. கா.. கா என்று தான் கரையும். என்ன தான் தொப்பியை புரட்டிப் புரட்டிப் போட்டாலும் அதன் குணம் மாறாது..! இஞ்ச சிலர்.. மாறுன்னு அவைக்கு வக்காளத்து வாங்கிறவை..! :lol::icon_idea:

கூட்டமைப்புடன் சேர்ந்தால்தான் ஆச்சரியம், இதை நாம் ஏற்க்கனவே எதிர்பார்த்ததுதானே,

எந்த சிங்களக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு வால் பிடித்து பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதுதானே இவனுகளின் வேலை .....

மீண்டும் முஸ்லிம்களை சகோதரர்களாக எண்ணும் யாழ் கள உறுப்பினர் சிலருக்கு முஸ்லிம்கள் அப்படி அல்ல என்று புரியவைத்ததற்கு நன்றி. :D

இப்போது... முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கும், யாழ் உறுப்பினர்களும் திருந்தி விட்டார்கள் போலுள்ளது.

அந்தக் கோஷ்டியளின், சிலமனை கொஞ்ச நாளாய்க் காணவில்லை. :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கும், யாழ் உறுப்பினர்களும் திருந்தி விட்டார்கள் போலுள்ளது.

அந்தக் கோஷ்டியளின், சிலமனை கொஞ்ச நாளாய்க் காணவில்லை. :D:lol::icon_mrgreen:

:lol: :lol: :lol: :lol:

வாங்கோ வாங்கோ எண்டு தடவி கேட்டாலும் அவங்கள் சிங்களவனோடதான் ஒட்டி இருப்பாங்கள் அதுதான் அவங்கள் கடந்த காலங்களிலும் செய்து வருகிறான்கள் சம்பந்தன் அய்யாவிற்கு புரிவதில்லையா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]'துரோகம்' [/size][size=4]எனும் [/size][size=4]அரசியலும் அரசியல் துரோகங்களும்![/size]

[size=3]மப்றூக்[/size]

[size=3]hakkem_and_Sampanthan.jpgஇலங்கையின் தமிழ் அரசியல் மற்றும் போராட்ட வரலாறுகள் முழுக்க 'துரோகம்' எனும் சொல்லையும் 'துரோகி' என்கிற அடைமொழியினையும் மிகத் தாராளமாக நீங்கள் காண முடியும்.

தமது அரசியல் மற்றும் இயக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும், தடையாகவும் இருந்தவர்கள் மீதும், இருந்து விடுவார்களோ எனக் கருதப்பட்டவர்கள் மீதும் எழுந்தமானமாக இந்தத் துரோக முத்திரைகள் குத்தப்பட்டே வந்திருக்கின்றன!

பல தமிழ் புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் மற்றும் சமூகத்துக்காகப் போராட வந்திருந்த ஏராளமான இளைஞர்களும் துரோகிகளாக்கப்பட்டுப் பரிதாபமாகக் கொன்று குவிக்கப்பட்ட காலங்களை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது!

'துரோகம்' என்கிற சொல் மிகவும் பாரதுரமானதாகும். ஆனாலும், சிலர் - தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தச் சொல்லினை கறையாக மாற்றி அடுத்தவன் மீது விசிறி விடுகின்றனர் அல்லது முத்திரையாகப் பதித்து விடுகின்றார்கள்.[/size]

[size=3]'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது, தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்' என்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இது – ஆபத்தானதொரு அறிக்கையாகும்!

அரசியல் ரீதியாக தமிழ் - முஸ்லிம் சமூக உறவினை வளர்த்தெடுக்க வேண்டியதொரு தருணத்தில், சம்பந்தன் என்கிற மூத்த தமிழ்த் தலைவரொருவர் இவ்வாறு தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது.

அரசியல் கட்சிகள் தமக்கென இலக்குகளை வைத்திருக்கின்றன. அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பல்வேறுபட்ட கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. அந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் வௌ;வேறான கொள்கைகளும் போக்குகளும் இருக்கின்றன.[/size]

[size=3]ஆனால், 'கிழக்குத் தேர்தல்' எனும் விவகாரத்தில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறதோ, அதையே மு.கா.வும் பின்பற்ற வேண்டுமென்று சம்பந்தன் கூறுவது சட்டாம்பிள்ளைத் தனமானதாகும்![/size]

[size=3]'தமது விருப்பு, வெறுப்புகளுக்கிணங்கவே மற்றவர்களும் நடந்துகொள்ள வேண்டும்' என்று சிந்திப்பதும் பேசுவதும் - ஜனநாயக விரோத எத்தனங்களாகும்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூத்த அரசியல் தலைவரான சம்பந்தனே - இவ்வாறு நடந்து கொள்கின்றார் என்பது கவலையளிக்கிறது![/size]

[size=3]கிழக்குத் தேர்தலில் தங்களோடு இணைந்து போட்டியிடுமாறு மு.காங்கிரஸை அழைப்பதற்கான ஜனநாயக உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், தேர்தலில் யாருடனெல்லாம் மு.காங்கிரஸ் - கூட்டு வைக்கலாம் அல்லது வைக்கக் கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ, மேலாண்மைTNA_MG.jpg செய்யவோ முடியாது![/size]

[size=3]'அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது – தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்' என்று சம்பந்தர் கூறும் கோணத்தில் நின்று பார்த்தால்ளூ அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்குவது சிங்கள மக்களுக்குச் செய்யும் துரோகமாகப் பார்க்கப்படும். சிலவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து போட்டியிட்டால், முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினரே ரவூப் ஹக்கீமை துரோகியாகப் பார்க்கவும் கூடும்![/size]

[size=3]நமது விருப்புகளுக்கு மாறான - சக மனிதர்களின் நடத்தைகள் அனைத்தையும் 'துரோகம்' என்கிற சொல்லுக்குள் கொண்டு வந்து நிறுத்துவதன் விளைவு ஆபத்தானது. கடைசியில், யாரோ ஒருவர் - நம்மையே துரோகியாக்கி விட்டுப் போய்விடுவார்கள் என்பதே இதிலுள்ள உச்சகட்டப் பயங்கரமாகும்![/size]

[size=3]'கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகமாகும்' என்று சம்பந்தன் சிலவேளை சொல்லியிருந்தால் - அதைக் கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால், 'தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகம்' என்று அவர் கூறியதனூடாக, தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் எஞ்சியுள்ள உறவுக்கும் குழி தோண்ட முயன்றுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது![/size]

[size=3]தமிழ் தேசியக் கூட்டமைப்பு - கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லையல்லவா? அதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் என்ன? 'வடக்கு – கிழக்கு ஒரே நிலப்பகுதி. வடக்கையும் கிழக்கையும் தனித்தனியாகப் பிரித்தமையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், கிழக்குத் தேர்தலில் நாம் போட்டியிட்டால், வடக்கு – கிழக்கு பிரிப்பை ஏற்றுக் கொண்டதாகி விடும். எனவே – கிழக்குத் தேர்தலை நாம் பகிஷ்கரிக்கின்றோம். மேலும், கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருந்தது.

இதில் பகிடி என்னவென்றால், 'கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தொண்டை கிழியப் பேசிய அதே தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இம்முறை இடம்பெறும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கச்சை கட்டிக் கொண்டு களம் இறங்குகின்றது.

அதாவது, கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த முறை துரோகம், இம்முறை – சாணக்கியம்!

அப்படியென்றால், 'அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை' இந்தத் தேர்தலின்போது துரோகம் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அடுத்த தேர்தலில் சாணக்கியமாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு என்னதான் உத்தரவாதம்?!![/size]

[size=3]'துரோகம்' என்கிற சொல்லுக்கு அத்தனை எளிதில் நாம் வரைவிலக்கணம் கூறி விடமுடியாது. ஆனாலும், 'ஒருவர் நம்மீது வைக்கும் நம்பிக்கைக்கும், அடுத்தவருக்கு நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கும் மாறு செய்வதை' துரோகம் என்கிற சொல்லுக்கான எளிய உதாரணமாகக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் - அதன் ஆரவாளர்களின் விருப்பங்களுக்கு மாறாக நடந்து கொள்வதைத்தான் துரோகமாகக் கருத முடியுமே தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கு மாறாக மு.கா. நடந்து கொள்வதை எவ்வாறு துரோகம் என்று அழைக்க முடியும்?![/size]

[size=3]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் - அனுபவம் மிக்க அரசியல் தலைவராவார். துரோகம், துரோகி என்பவற்றின் பாரதூரங்கள் பற்றியும், அவற்றினைச் சுமந்தவர்களின் வலிகள் குறித்தும் இவர் மிக நன்றாகவே அறிவார்.[/size]

[size=3]சம்பந்தன் - தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தபோது, அவருடைய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் - புலிகளால் 'துரோகி'யாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமையினையும், ஒரு கட்டத்தில் சம்பந்தன் மீதே – புலிகளின் துரோகம் எனும் பழி சுமத்தப்பட்டமையினால் - அவர் எதிர்கொண்ட அவஷ்தைகளையும் அத்தனை எளிதில் சம்பந்தன் எப்படி மறந்தார் என்றுதான் தெரியவில்லை![/size]

[size=3]அடுத்தவர் மீது துரோக முத்திரையைக் குத்துவது – மிகவும் எளிதானது. ஆனால், அதைச் சுமப்பது மிகவும் அவஷ்தையானது – ஆபத்தானது! அவற்றினை அனுபவித்த – சம்பந்தனே, அடுத்தவர் மீது துரோக முத்திரையைக் குத்துவதை நினைக்க ஆச்சரியமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது![/size]

[size=3]தமிழ் தேசியக் கூட்டமைப்மையும், மு.காங்கிரஸையும் நாம் ஒரே தராசில் வைத்தே பார்க்கின்றோம். இவை - தமது நலன்களை முன்னிறுத்திச் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளாகும். இவர்களுக்கிடையில் இடம்பெறும் 'தெருச் சண்டைகள்' குறித்து நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஆனால், இவர்களின் 'வம்புகளில்' சமூகங்களை வலிந்து இழுப்பதையும், தமிழ் - முஸ்லிம் மக்களைச் சீண்டி விடுவதையும் நாம் மௌனிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது![/size]

[size=3]இந்தக் கட்டுரைக்காக சம்பந்தன், துரோகம், துரோகி என்கிற சொற்களை கூகிள் இணையத்தின் தேடு பொறியில் டைப் செய்து பார்த்தேன்!

'மே தினக் கூட்டத்தில் சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன் ஒரு துரோகி' என்று நூற்றுக் கணக்கான இணையத்தளங்கள் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மீது துரோகம் என்கிற முத்திரையினைக் குத்தி வைத்திருந்தன![/size]

[size=3]நன்றி. தமிழ்மிரர்[/size]

இஸ்லாமியர் பலரைக்கொண்ட தமிழ் மிரரின் இஸ்லாமிய விசுவாசம் மீண்டுமொருமுறை!

[size=4]இங்கே தோற்றது இஸ்லாமிய மக்கள். மீண்டும் ஏமாற்றியது அவர்களின் தலைமை. [/size]

கூட்டு மொத்தமாக அகில இலங்கையும் தனக்குத்தானே துரோகம் இழைத்துக் கொண்டுதானிருக்கிறது. வெள்ளையரை எதிர்த்து எந்த போராடாமும் நடத்தாமால் சுதந்திரம் கண்டசிங்கள மக்கள் சர்வாதிகாரத்துக்குள் மெல்ல மெல்ல இலங்கையை தாழ்த்திவந்திருக்கிறார்கள். இதற்கு சிங்களவருடன் சேர்ந்து சகல இன மக்களும் பொறுப்பு. 50:50 கேட்ட G.G. இந்திய பாகிஸ்த்தானியர் சட்டத்திற்கு வாக்களித்தார். இலங்கையில் எவருமே ஒரு சட்டம் ஒரு இனமக்களின் உரிமைகளை மறுத்தால் அது சர்வாதிகாரத்தை நோக்கி போகும் என்பதை அறியாத குழந்தைகள் போல் நடிக்கிறார்கள். இப்போது இலங்கை அடைந்திருக்கிற சர்வாதிகாரத்திலிருந்து வெளியே போவது எளிதல்ல என்பதை சந்திரிக்கா காலம் தெளிவாகக்காட்டியது. அதன் பின்னர் வந்த திருத்தங்கள் இலங்கை தனிய சர்வாதிகாரிகளால் மட்டும்தான் இனிமேலைய காலங்களில் ஆளப்பட்டப்போகிறது என்பதை நிச்சயம் செய்திருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ, சிங்கள மக்கள் தம் மீது கடிவாளம் போட்டு அதை இறுக்கி ஆட்சியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

ஆட்சிக்கு ஆட்சி கட்சி தாவித்திரிந்த முஸ்லீம்கள் இப்போது நன்றாக கடிவாளம் போடப்பட்டிருக்கிறார்கள். ஒரே தந்திரத்தை 65 ஆண்டுகள், சிங்களவரை மோடயாக்களா நினைத்து, பாவித்து வந்த முஸ்லீம் மந்திரிகள் வெள்ளை வானிடமிருந்து தப்ப தம் மதத்தைதான் காவு கொடுக்க வேண்டிய நிலைக்கு மகிந்தாவாலும், கோத்தாவாலும் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் இனித் திமிறமுடியாது என்பதைதான் தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தின் போது அவர்கள் ஒருவரும் அதற்கெதிராக குரல் கொடுக்க முடியாததின் காரணம். அவர்களுக்கு பாசை ஒரு பெரிய பிரச்சனையாக இலங்கையில் இருக்கவில்லை (குறைந்த பட்சம் தமது பாசையை பதுகாக்க முடியாமல், ஆனால் அதை வைத்து பணம் தேட ஒரு காரணம் கற்பித்தார்கள்). முடியுமானவர்கள் சிலர் மூன்று பாசைகளிலும் படித்தார்கள். எனவே பாசையை விட்டுக்கொடு என்றவுடன் ஒத்துப்போனார்கள். இப்போது மதத்தை விட்டுக்கொடு என்றவுடன் எதிர்பார்த்த எதிர்ப்பில்லாமல் விட்டுக்கொடுக்க தாயாரக நடந்துகொள்கிறார்கள்.

சிங்களவர்களுக்குளோ அல்லது முஸ்லீம்களுக்குளோ எந்த காலமும் SJV போல ஒரு அரசியல் தலைவர் இருந்தது கிடையாது. அநாகரிக தர்மபாலமட்டும் சிங்களவருக்கு புத்தசமய உணர்வூட்டியிருந்தார். (பிற்கால சிங்கள் மொழி வெறியர் இதை மதவெறியாக மாற்றியதால்த்தான் இன்று கிறிஸ்தவ சிங்களவர் அரசியலில் இடம் பிடிபதற்காக மதமாற்றம் போவது) கிராமத்துக்கு கிராமம் சில முஸ்லீம் மதவெறியர்கள் மதத்தை காப்பாற்றுபவர்கள் போல தீவிர வாதச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் இன்று முழு சமூகமுமே வெக்கம், நாணமில்லாத சந்தர்ப்ப வாதிகளால் சந்தர்பத்திற்கேற்ப சொற்களுக்கு மட்டும் இலக்கிய விளக்கமளித்து அரசியல் தீர்க்கதரிசனமில்லாத தம் சுயநல அலுவல்கள் முன்னெடுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

பொதுவில் எங்குமே மக்கள் தலைவர்களின் தில்லு முல்லுகளை விளங்கிக்கொள்ளுவதில்லை. சிங்கள மக்கள் DS தொடக்கம், பண்டாரநாயக்கா, சிறிமா, JR, மகிந்தா வரை தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவில்லை. இதே நிலைதான் இலங்கை முஸ்லீம் மக்களுக்கும். ஆனால் இதில் ஈழத்தமிழர்கள் மட்டும் வித்தியாசமாக நடந்து இன்றைய அடிமை எதிர்ப்பு மனநிலைக்குள் சிக்குண்டிருப்பதற்கு ஒருவர் மட்டும் தான் காரணம் போல் தெரிகிறது.

இன்றைய மதத்தை சொல்லி அரசியல் நடத்தும் முஸ்லீம் மந்திரிகள் போலவே GGயும் தமிழை சொல்லி தனது அரசியல் வாழ்க்கையைத்தொடங்கியிருந்தார். ஆனால் GG தலைமை வகித்த காங்கிரசில் தெளிவாக ஒருவர் தமிழை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அப்படி பிரிந்து போன SJV க்கு GG பல இடைஞ்சல்களை செய்ய முடிந்தது தமிழ்மக்களின் ஒத்துளைப்புடனேயே. தமிழரிடம் தன்னும் அந்தக்கலத்தில் அரசியல் முதிர்ச்சி தெளிவாகக் காணப்படவில்லை என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் காங்கிரசிடமிருந்து தான் என்ன கஸ்டங்களை பட்டாலும் SJV தமிழருக்கு ஒரு விசையத்தை படிப்பித்தார். இராமநாதன் காலம் முதல் தமிழ், சிங்கள முஸ்லீம் மக்கள் ஒருவர் மீது ஒருவர் துவேச உணர்வைத்தான் கொண்டிருந்தார்கள். ஒருவரிடமும் சுதந்திர உணர்வு இருந்திருக்கவில்லை. சிறிய அளவில் காணப்பட்ட சோசலிசக்கட்சிகள் மட்டும் துவேசம் காட்டாமல் சுதந்திரம் பற்றிப்பேசின. இவர்களும் மக்களை தாங்கள் சென்றடைய அடைய விரும்பாமல் யதார்த்தமில்லாத ஏகாதிபத்திய எதிர்ப்பு மந்திரமாக சோசலிச மொட்டாக்குள் முகத்தை மூடிகொண்டார்கள். ஆனால் காங்கிரசிலிருந்து பிரிந்து வந்த SJV முதன் முதலாக இலங்கையின் இனங்களில் ஒன்றாக இருந்த தமிழருக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று படிப்பித்தார். தமிழரசுக்கட்சி இலங்கையின் சரித்திரத்தில் முதன் முதலாக சுதந்திரன் என்று ஒரு பத்திரிகையை இலங்கையில் வெளியிட்டது. இந்த தேவதூதன் போன்ற ஒரு மனிதன், தமிழரை காழ்புணர்வுகள் எதுவுமில்லாத தேவர்களாக மாற்றவிட்டாலும் சுதந்திரம் என்ற சுய நினைவுள்ளவர்களாக மாற்றிவிட்டார். இதனால்த்தான் நாம் எமது மொழியாகிய தமிழையோ அல்லது நமது மதங்களாக இப்போது இருக்கும் இந்துக், கிருஸ்தவ மதங்களையோ விட்டுக்கொடுக்கதயாரில்லாமல் போராடுகிறோம். SJV யின் இந்த வ்ழிகாட்டுதலே பிற்காலத்தில் உண்மையாக உயிர்கொடுத்து சுதந்திரத்திரத்திற்கு போராடும் ஒரு தலைவனை உருவாகியதும் கூட.

இப்படி ஒரு தீர்க்கதரிசி சிங்கள மக்களிடம் பிறக்காததினால்த்தான் அவர்கள் இனாமாக வந்த சுதந்திரததை சர்வாதிகாரிகள் என்ற கறையான் அரித்துக்கொண்டுபோக வாளவிருந்தார்கள். அதேமாதிரியே முஸ்லீம்கள் தம் மொழியை தாமாக முன்வந்து தாரை வார்த்துகொடுத்தது மட்டும் அல்ல இன்று மதத்திற்காகத்தன்னும் எழுந்து நிற்கத்தக்க தலைவர்கள் இல்லாமல் தள்ளாடுகிறார்கள். அந்த நிலையில் முஸ்லீம் காங்கிரஸ், முஸ்லீம் மதத்தவர்க்கே துரோகமாக நடந்து கொள்ளும் போது "தமிழருக்கு அது துரோகமாக நடக்கிறது" என்று சம்பந்தர் குற்றம் சாட்டுவது மற்றைய முஸ்லீம்தலைவர்களால் இப்படி எள்ளி நகையாடப்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.