Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் இனவாத பிக்குவின் அடாவடித்தனம் – பிள்ளையார் சிலை தகர்ந்தெடுப்பு (படங்கள்)

Featured Replies

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.

இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர்.

இவ்வேளை, இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்த விகாரைக்கு கொண்டு செல்ல, ஒரு பௌத்த பிக்கு நடவடிக்கை எடுத்த போது இவ்விடயமாக இந்து மக்கள் பாணமை பொலிஸ் மற்றும் அங்கிருந்த இராணுவ முகாம் அதிகாரிகளிடம் இதை தடுக்குமாறு முறையிட்டனர்.

மேலும், இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் கவனத்துக்கு வந்த போது, அவர் தொலைபேசி மூலம் பாணமை இராணுவ பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு பிக்குவின் இச்செயற்பாட்டை தடுக்குமாறு கோரியிருந்தார்.

இவ்வேளை இப்பௌத்த பிக்கு தொடர்ச்சியாக இந்து மக்களுக்கும், ஆலயத்தினருக்கும் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்பகுதி மக்கள் விநாயகர் விக்கிரகத்தை பாதுகாக்க முயற்சித்த வேளையிலும், இன்று பௌத்த பிக்கு சிங்கள காடையர்களுடனும் ஊர்காவல் படையினருடனும் வந்து இந்து மக்களை தாக்கி இந்துக்களின் பிள்ளையார் விக்கிரகத்தை ஆலயத்துள் புகுந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தினை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும், பிக்குவின் இச்செயற்பாட்டுக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் வகையில் நடாத்தப்படும் செயற்றிட்டங்களை சுட்டிக்காட்டி, இந்துக்களின் மத உரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், மதவிவகார அமைச்சரும், பிரதமருமான தி.மு. ஜயரத்னவை அவசரமாக சந்திப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

panama_pillaiyar_004.jpgpanama_pillaiyar_002.jpgpanama_pillaiyar_001.jpg

http://thaaitamil.com/?p=28067

களவெடுத்த பிள்ளையார் சிலையை வழிபட்டால் அதிகளவாய் செல்வம் கொழிக்கும் என்று ஒரு ஐதீகம் நிலவுவதாய் சொல்கின்றார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றிய விபரணம் ஒன்றை சிறிது காலத்திற்கு முன்பு பார்த்தேன். பிள்ளையார் சிலைகள் அடிக்கடி காணாமல் போவதற்கும், திருடப்படுவதற்கும் கள்ளப்பிள்ளையார் அதிகளவு அருள் சுரப்பார் எனும் நம்பிக்கையே காரணம் என்று சொல்லப்படுகின்றது. தமது விகாரை செல்வம் கொழிக்கவேண்டும் எனும் நோக்கில் பிக்குவும் அதே ஐதீகத்தினை நம்பி கோயில் பிள்ளையாரை தூக்குவதற்கு முயற்சித்தாரோ என்னமோ.

  • கருத்துக்கள உறவுகள்

Ravana.jpg

பாகா சூரனையோ ..ஏகா சூரணையோ பிள்ளையார் ஒரே முழுக்கா முழுங்கிவிட்டு செறிக்காமல் அவதிப்பட்டதாகவும் பலர்(முப்பத்து முக்கோடி தேவர்கள்) அவரின்ட வயிற்றை சுற்றி மயிலறகை தடவி குளிர்மை படுத்தியதாகவும் புராண இதிகாசங்கள் செப்பு கின்றன..

டிஸ்கி:

இத்தனைக்கும் மேலே ராவணன் இமய மலையில் இருந்து தூக்கி கொண்டு தனது அரண்மனையில் சேர்க்க வேண்டிய லிங்கத்தை திரி கோணமலையிலே ஸ்டாப் பண்ணி விட்டார்.. யூ ணோ.. பொறுமை பொறுமை .. கட்டாயம் ஏதாவது செய்வார்..

என்னய்யா வன்னியில், யாழ்பாணத்தில், யார் யாரோ பிள்ளையளை எல்லாம் இந்த ஆமிகாரனுகள் கிழப்பிகொண்டு ஓடுறாங்கள். அதை விட்டிட்டு பாண்மையிலை மொட்டை ஒன்று கிழப்பிக்கொண்டு ஒடின ஒரு பிள்ளையாருக்காக அழுகிறீர்கள். நம்ம பிள்ளையார்கள் எல்லாம் வெறும் கல்லுத்தான் என்று கண்டு பிடித்தன்று திரும்ப கொண்டுவந்து போடுவங்கள். அதற்குள் என்ன அவசரம்.

ஏதாவது பள்ளி வாசலை உடைத்தார்கள் என்றால் அவர்களுக்கும் நன்மை. எமக்கும் நன்மை. அந்த செய்திகளை போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாருக்கு தமிழ் சனத்தை தான் காப்பாற்ற முடியவில்லை.தன்னையும் காப்பாற்ற முடியவில்லை என் நான் நினைக்கவில்லை. போன பிள்ளையார் வருவார் தானே!!!

ஒருவேளை சிங்கள அரச பயங்கரவாதிகள் பிள்ளையானைத் தூக்க காவி உடையில் அவரை அனுப்பியிருக்கலாம்! தகவல் பரிமாற்றச் சிக்கலால் பிள்ளையாரைத் தூக்கியிருப்பார்!

மனிதரின் வாழ்விடங்கள் இழக்கும்போது இறைவனும் இழக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அம்பாறையில் அகற்றினால் அமேரிக்காவில் தமிழன் எனக்கு புகலிடம் தருவான்.........அம்பாறை பிள்ளையார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.