Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது' - மேனன்

Featured Replies

இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில் இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது, தடுக்கப்பட்டுள்ளது, என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார்.

டில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது:

முன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. அணு ஆயுதங்களை போர்க்களத்தில் பயன்படுத்த மாட்டோம் என, துவக்கம் முதலே, இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒரு சில நாடுகள், போருக்கு பயன்படுத்துவதற்காக, அணு ஆயுதங்களை தயாரிக்கின்றன. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலை. சமீபகாலமாக, பெரும்பாலான நாடுகளும், மக்களும், அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற வாதத்துக்கு ஆதரவு தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதற்கு முன், இந்த அளவுக்கு ஆதரவு எழுந்தது இல்லை.

உலகில், அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது. இதற்கு, சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அதேநேரத்தில், நாட்டு மக்களை, வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அரசுக்கு உள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து, மக்களை பாதுகாப்பதற்காக, அணு ஆயுதத்தை வைத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சிவசங்கர் மேனன் பேசினார்.

http://tamil.yahoo.com/இந்-ய-அண-ஆய-ந-142300185.html

  • தொடங்கியவர்

[size=4]மேனனின் கருத்து வேடிக்கையாக உள்ளது.[/size]

[size=4]காரணம், இந்தியாவிற்கு அதி உச்ச ஆபத்தான நாடுகள் பாகிஸ்தானும், சீனாவும். அவை இரண்டுமே அணு ஆயுத நாடுகள். எனவே இந்தியா அணு ஆயுத நாடு என்பதால் அவர்களின் அச்சுறுத்தல் இல்லை என்பது வெறும் பேச்சே.[/size]

[size=4]சீனாவும் பாகிஸ்தானும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தவண்ணமே உள்ளனர்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மேனனின் கருத்து வேடிக்கையாக உள்ளது.[/size]

[size=4]காரணம், இந்தியாவிற்கு அதி உச்ச ஆபத்தான நாடுகள் பாகிஸ்தானும், சீனாவும். அவை இரண்டுமே அணு ஆயுத நாடுகள். எனவே இந்தியா அணு ஆயுத நாடு என்பதால் அவர்களின் அச்சுறுத்தல் இல்லை என்பது வெறும் பேச்சே.[/size]

[size=4]சீனாவும் பாகிஸ்தானும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தவண்ணமே உள்ளனர்.[/size]

ஐயோ அகோதா;

அவர் சொன்னது இலங்கையை பற்றி...

  • தொடங்கியவர்

ஐயோ அகோதா;

அவர் சொன்னது இலங்கையை பற்றி...

:D :D , [size=4]அப்படியும் இருக்கும்! [/size]

[size=4]இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது[/size]
இவ்வளவு நாளும் இலங்கை இந்தியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது. இப்போது இந்தியா இ்ங்கைக்கு ஒரு பாடம் சொல்லிகொடுக்கிறது.

1998 க்கு பின் வந்த கோளைத்தலைவர்களை அணுவாயுதம் பாதுகாப்பதாக ஒரு நம்பிக்கை பிரமையில் இருக்கிறார்கள்.

இதே நம்பிக்கை பிரமையைத்தான் கிருஸ்னமேனன் இலங்கையில் வைத்து இந்தியா எல்லாவறையும் இழக்கத்தகதாக பாதுகாப்பு அறிவுரைகள் கொடுத்து வந்தவர். இப்போது இந்தியாவை அணுவாயுதத்தில் நம்பவைக்க கேட்கிறார்.

Edited by மல்லையூரான்

இதை அணு ஆயுதம் செய்ய முன்னம் சொல்லி இருந்தால் மேற்கு உலகமும் அமெரிக்காவும் வடிவா உதவி இருப்பாங்க. பாகிஸ்தானையும் சீனாவையும் சாட்டி உலகதிட்டை அணு ஆயுத பிச்சை வாங்கிய பிச்சைக்கார நாய்கள் பேசுது பாரு பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது' - மேனன்

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி.

http://www.youtube.com/watch?v=rFKxVEugqko

டமாசுக்கு ஒரு அளவே இல்லாம கிடக்கு... :lol: :lol:

  • தொடங்கியவர்

[size=4]பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளிடம் ஒருநாள் தோல்வியுறும் (எனக்காட்டும்),[/size][size=1]

[size=4] அதன் விளைவாக அவர்கள் கைகளில் ஆணு ஆயுதம் விழும், [/size][/size][size=1]

[size=4]இந்தியா மீது தாக்குதல் நடக்கும் ( சீன - பாகிஸ்தான் கூட்டுத்தயாரிப்பு) [/size][/size]

[size=1]

[size=4]இந்தியா அழிந்தது. பாகிஸ்தான் + சீனா + சிங்களம் : வென்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அகோதா;

அவர் சொன்னது இலங்கையை பற்றி...

இலங்கையா? நான் நம்பமாட்டன்.. :icon_mrgreen: பங்களாதேஷ் அல்லது மாலைதீவா இருக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுத நாட்டின் விமானத்தை தானே தலபான் கடத்தி இந்தியாவை அடிபணிய வைத்து விட்டார்கள்.இனி யாருக்கு அடி பணிய வேண்டும் என்று மேனன் விரும்புகிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.