Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் கூட்டாச்சி - அழைப்பு கிடைத்தால் ஆராயத் தயார் ! - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran-mp_150KK..jpg

[size=4]கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப தெரிவித்துள்ளது. இவ்வாறான அழைப்பு கிடைத்தால் அதுகுறித்து ஆராயத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.[/size]

[size=4]கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார்.[/size]

[size=4]கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் பொது வேலைத் திட்டத்தின் ஊடாக அவ்வாறான சிக்கல்களைத் தவிர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் புதிய ஆட்சியை அமைக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முயற்சிக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையெனின் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள பாவம்.படு லூசன்களையெல்லாம் ததேகூட்டமைப்பு உள்வாங்கியிருக்கிறதோ? என்று சந்தேகமாக இருக்கிறது.

இது ஹக்கீமை நல்லவராக்கும் வேலை.

மூவின மக்களும் வாழும் கிழக்கில் தேசிய அரசு என்பது தவறான சிந்தனை இல்லை. ஆனால் அவைகள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுத்ததன் பின்பு நடைபெற வேண்டும்.

இன்றைய நிலையில் கிழக்கில் தேசிய அரசு அமைந்தால், ஒரு தீர்வுக்கான எமது போராட்டத்திற்கு அது பாரிய பின்னடைவாக அமையும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாம் சர்வதேசத்திடம் போவது?

சுமந்திரன் சிங்களவர்களுடன் கிறிக்கட் விளையாடியது போன்றதுதான் அரசியலும் என்று நினைத்து விட்டார் போலும்.

பதவிக்கான ஆசை யாரை விட்டுது....

அண்றாடம் சாப்பிட சோறும் பருப்புக்குமே வளி இல்லை கூட்டமைப்பு பிரியாணிக்கு அலையுது...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்புரியவில்லை

ஏனிந்த கோபம் தங்களுக்கு???

இணக்க அரசியல் என்பது இதுதானே?

அதைத்தானே அவர் செய்கின்றார்?

ஆயுத ஒப்படைப்புக்கு பிரபாகரன் இணங்கியிருந்தால்................

இன்று அவரும் இதைத்தான் செய்து கொண்டிருக்கணும்.

(அதனால்தான் அந்த மனுசன் வேறு முடிவெடுத்தார்.)

இப்போ

தமிழினம் இரண்டையும் பார்த்துவிட்டது.

இனி இது தான் வழி என்றும் பலர் இங்கு எழுதுகின்றார்கள்.

இசுலாமியர்கள் தம் மக்கள் சார்ந்து நல்ல முடிவுகளை எடுத்து வருவதாகவும் தற்பொழுதும் கிழக்குமாகாண தேர்தல் வெற்றியின் பின் அரசுடன் சேர்ந்து நிற்க அவர்கள் எடுத்த முடிவு வரலாற்றில் பதியப்படக்கூடிய அளவுக்கு பெறுமதியானது என்றும் இங்கு எழுதுகிறார்கள்.

அதே முடிவை தமிழர் எடுத்தால் துரோகிப்பட்டமா?

என்னைப்பொறுத்தவரை

இசுலாமியரை நம்பி கழுத்தைக்கொடுப்பதைவிட எதிரியிடம் கொடுக்கலாம்.

விசுகு,

சமரச அரசியல் என்பது வேறு. நீங்கள் விளங்கிக் கொண்டது போல் அல்ல. சரணாகதி அரசியலுக்கும் சமரச அரசியலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்கின்ற அடிப்படையை நாம் தகர்க்க முடியாது.

இம் முறை நான் கிழக்கில் நின்ற பொழுது, அங்கே உள்ள தமிழ் மக்கள் சொன்னார்கள். நாம் கூட்டமைப்புக்குத்தான் போடுவோம், அப்படிச் செய்தால்தான் வடக்கில் மட்டும் தமிழர்களுக்குப் பிரச்சனை என்று இல்லை, கிழக்கிலும் தமிழர்களுக்கு பிரச்சனை உண்டு என்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் என்றார்கள்.

கூட்டமைப்பு பெரிதாக எதுவும் செய்யப் போவது இல்லை என்றாலும், நாம் இதற்காக அவர்களிற்குத்தான் போடுவோம் என்று ஒத்த குரலில் சொன்னார்கள்.

சரி ஆட்ச்சியிலை பங்கு பற்றி கொண்டால் பிறகு என்ன...?? தமிழ் மக்களுக்கு அதுக்கு பிறகு என்ன நடக்கும்... எல்லாமே நல்லதாய் தானா...?? தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்சினையே இல்லாமல் போய் விடுமா...??

ஏன் இதை கேக்கிறன் எண்றால் ஆட்ச்சியிலை இருக்கிறவை( கூட்டமைப்பு அரசோடை சேர்ந்து ஆட்ச்சிக்கு வந்தால்) யாருக்காக எப்போது யாரை எதிர்த்து குரல் குடுக்க முடியும்...??

ஒருவேளை வடக்கிலை ஒரு மாதிரியும் கிழக்கிலை ஒரு மாதிரியும் கதைப்பினமோ...???

இப்போ

தமிழினம் இரண்டையும் பார்த்துவிட்டது.

இனி இது தான் வழி என்றும் பலர் இங்கு எழுதுகின்றார்கள்.

இசுலாமியர்கள் தம் மக்கள் சார்ந்து நல்ல முடிவுகளை எடுத்து வருவதாகவும் தற்பொழுதும் கிழக்குமாகாண தேர்தல் வெற்றியின் பின் அரசுடன் சேர்ந்து நிற்க அவர்கள் எடுத்த முடிவு வரலாற்றில் பதியப்படக்கூடிய அளவுக்கு பெறுமதியானது என்றும் இங்கு எழுதுகிறார்கள்.

அதே முடிவை தமிழர் எடுத்தால் துரோகிப்பட்டமா?

என்னைப்பொறுத்தவரை

இசுலாமியரை நம்பி கழுத்தைக்கொடுப்பதைவிட எதிரியிடம் கொடுக்கலாம்.

நீங்கள் சொல்லுற மாதிரியே எடுத்துக்கொண்டாலும் உதை எப்ப செய்து இருக்க வேணும்...?? இப்பவா...?? போர் முடிஞ்சு போய் மூண்டு வருசம் ஆச்சு... !

அந்த நேரமே மகிந்தவுக்கு ஆதரவை குடுத்து இருக்கலாம் சரத் பொன்சேகாவுக்கு பின்னாலை எல்லாம் போய் எதுக்கு கடைசியிலை இப்ப...??

மகிந்த அமைச்ச தெரிவுக்கு குழுவுக்கு உள்ளை போக பயப்படுறவை( காரணம் நியாயமானது எண்டால்) அவரின் ஆட்ச்சியிலை மட்டும் எதுக்கு போகினம்....???

குட்டி கதிர்காமர் தொல்லை தாங்க முடியலை

[size=1]

[size=4]சுமந்திரன் இப்படி கேட்டது கூட சிலவேளைகளில் சிங்கள அரசின் கபட நோக்கை உலகிற்கு மீண்டும் காட்டவாக இருக்கலாம், பொறுத்திருப்போம். அதாவது சிங்களம் இதற்கு இணங்காது.[/size][/size]

[size=1]

[size=4]முறைப்படி அதிக ஆசனங்களை பெற்ற கூட்டமைப்பையே முதலில் ஆட்சி அமைக்க கேட்கவேண்டும். அது கூட தேர்தல் ஆளுனரால் நடாத்தப்படுமோ தெரியவில்லை. [/size][/size]

[size=4]கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக அழைப்பு கிடைத்தால் அதுகுறித்து ஆராயத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.[/size]

இதை முன்பே செய்திருந்தால் கொஞ்சமாவது மரியாதை எல்லா தரப்பிலும் கிடைத்திருக்கும்! முஸ்லிம் காங்கிரஸின் துள்ளலும் அடங்கியிருக்கும்!

அறிக்கை அரசியலுக்கும் நிஜ அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை இப்போதாவது கூட்டமைப்பு (சம்பந்தன், சுமந்திரன்) கற்றுக்கொள்ளுமா?

யாரையும் கலந்தாலோசிக்காமல் மாரித்தவக்கை போல ஐ. தே.க., மு. கா. உடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்கப் போகிறோம் என்று மாரித் தவக்கை போல கத்திய சம்பந்தனும், சுமந்திரனும், இப்போது மூக்கடிபட விழுந்த வேகத்தில் கொஞ்சம் உருப்படியாக கத்த ஆரம்பித்துள்ளார்கள்! தாம் பெற்ற ஆசனங்களை வைத்து என்ன செய்யமுடியும் என்ற அடிப்படை கூட விளங்காமல் "ஜனநாயகம் பேணப்படாவிடால்.. " என்று எச்சரிக்கை வேறு!

என்ன செய்தி என்று ஆங்கில பத்திரிகைகளில் வந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல சுமந்திரன் தேர்தல்ல நிண்டு மக்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் வரட்டும்.....பேசமா வடக்கு கிழக்கு இணைப்புக்கு அரசு ஒத்துகிட்டா கூட்டமைப்பு ஆதரவளிக்கலாம் Muslim காங்கிரஸ் க்கும் ஆப்பு :D

முதல்ல சுமந்திரன் தேர்தல்ல நிண்டு மக்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் வரட்டும்.....பேசமா வடக்கு கிழக்கு இணைப்புக்கு அரசு ஒத்துகிட்டா கூட்டமைப்பு ஆதரவளிக்கலாம் Muslim காங்கிரஸ் க்கும் ஆப்பு :D

இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு சுண்டல்.

.பேசமா வடக்கு கிழக்கு இணைப்புக்கு அரசு ஒத்துகிட்டா கூட்டமைப்பு ஆதரவளிக்கலாம் Muslim காங்கிரஸ் க்கும் ஆப்பு :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி கதிர்காமர் தொல்லை தாங்க முடியலை

தம்பி சரியாகத்தான் சொன்னீர்கள் இவனும் என்னுமொரு கதிர்காமர்தான்.

இவனைப்போன்றோர் இருக்கும்வரை தமிழனின் பிரச்சனை தீராது ....

கள யதார்த்தம் என்று ஒன்று இருக்கு.

இது தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடுதான் .நாங்கள் இங்கு இருந்து நினைப்பது போல் இனி நாட்டில் அரசியல் செய்ய முடியாது .

நாட்டில்,புலம் பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்கள் என்றுமில்லாத அளவு மாறுபட்ட சிந்தனைகளுடன் குழம்பிபோயிருக்கின்றார்கள் .

சர்வதேசம் பெரிதாக எதையும் செய்யும் போலில்லை .அவர்கள் இணக்க அரசியலைத்தான் நிர்பந்திக்க போகின்றார்கள் .உலகம் முழுக்க சுற்றி அடிக்கும் இந்த இராஜதந்திரிகள் எமது நாட்டைவிட மிக கேவலமான நிலையில் மக்கள் வாழ்வதையும் மிக சிக்கலான அரசியலையும் பார்த்திருப்பார்கள் .ஒப்பீட்டு பார்வையில் சிறிலங்கா சொர்க்கமாக அவர்களுக்கு தெரிந்தாலும் அதிசயமில்லை .

இந்தியா நிலைப்பாடு கேட்கவே வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

கள யதார்த்தம் என்று ஒன்று இருக்கு.

இது தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடுதான் .நாங்கள் இங்கு இருந்து நினைப்பது போல் இனி நாட்டில் அரசியல் செய்ய முடியாது .

நாட்டில்,புலம் பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்கள் என்றுமில்லாத அளவு மாறுபட்ட சிந்தனைகளுடன் குழம்பிபோயிருக்கின்றார்கள் .

சர்வதேசம் பெரிதாக எதையும் செய்யும் போலில்லை .அவர்கள் இணக்க அரசியலைத்தான் நிர்பந்திக்க போகின்றார்கள் .உலகம் முழுக்க சுற்றி அடிக்கும் இந்த இராஜதந்திரிகள் எமது நாட்டைவிட மிக கேவலமான நிலையில் மக்கள் வாழ்வதையும் மிக சிக்கலான அரசியலையும் பார்த்திருப்பார்கள் .ஒப்பீட்டு பார்வையில் சிறிலங்கா சொர்க்கமாக அவர்களுக்கு தெரிந்தாலும் அதிசயமில்லை .

இந்தியா நிலைப்பாடு கேட்கவே வேண்டாம் .

அப்ப இனி அடிதடி தான் சரி :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

சமரச அரசியல் என்பது வேறு. நீங்கள் விளங்கிக் கொண்டது போல் அல்ல.

சரணாகதி அரசியலுக்கும் சமரச அரசியலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

இரண்டையும் குளப்பாதீர்கள்

இதில் ஆரம்பித்தால் அதில்தான் முடியும்.

அதை இப்பவே செய்யவேண்டியது தானே என்பதே எனது கருத்து.

நீங்கள் சொல்லுற மாதிரியே எடுத்துக்கொண்டாலும் உதை எப்ப செய்து இருக்க வேணும்...?? இப்பவா...?? போர் முடிஞ்சு போய் மூண்டு வருசம் ஆச்சு... !

அந்த நேரமே மகிந்தவுக்கு ஆதரவை குடுத்து இருக்கலாம் சரத் பொன்சேகாவுக்கு பின்னாலை எல்லாம் போய் எதுக்கு கடைசியிலை இப்ப...??

மகிந்த அமைச்ச தெரிவுக்கு குழுவுக்கு உள்ளை போக பயப்படுறவை( காரணம் நியாயமானது எண்டால்) அவரின் ஆட்ச்சியிலை மட்டும் எதுக்கு போகினம்....???

உண்மைதான்

எப்படியும் அப்படித்தான் வரப்போகுது

இனியும் தாமதமாக்காமல்

இப்பவாவது தொடங்கலாம் என்று தான்..............???

உண்மைதான்

எப்படியும் அப்படித்தான் வரப்போகுது

இனியும் தாமதமாக்காமல்

இப்பவாவது தொடங்கலாம் என்று தான்..............???

அண்டைக்கு வாழ வளி இல்லாமல் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் சனம் எல்லாம் முகாமுக்கை முடங்கி போய் வாழ வளி வேண்டி நிக்கேக்கை இதையே மகிந்தவின் காலை பிடிச்சு இதை செய்திருப்பினமாக இருந்தால் கூட்டமைப்பை வாழ்த்தி இருக்கலாம்... காணாமல் போன எண்ணிக்கையில் கொடுமைகளை எவ்வளவோ குறைத்து இருக்கலாம்.. அண்டைக்கு முகாமுக்கை கூட போகாத ஆக்கள் அவை ... சனம் எல்லாம் நடை பிணமாக போனாப்பிறகு இப்ப ஏன்...???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாகாணசபையில ஒன்றும் இல்லை என்று சொல்லித்தான் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் அதனைப் புறக்கணித்திருந்தது..ஒன்று இல்லாத மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றி தமிழ்மக்களுக்கு உரிய உரிமைகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது.ஆகவே எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்று இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிரசும் அடக்கி வாசித்திருக்கும்.இப்போது தமிழ்கூட்டமைப்பு அவர்களுடன் பேசியதைச் சாக்காக வைத்து முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேரம் பேசுகிறது.ஏற்கெனவே சம்பந்தர் தேர்தல் ஆணையாளருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே நாம் ஆட்சி அமைக்க அனுமதி தாருங்கள் என்று கடிதம் எழுதினரோ அதோடு நிறுத்தி இருந்தால் நிலமை நன்றாக இருந்திருக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கு திண்டர்டமாக இருந்திருக்கும். அமைச்சர் பதவி பறிபோகும் என்று சம்பந்தர் மிரட்டுவார்.. முஸ்லிம் காங்கிரஸ் வெறு வழியின்றி அரசுடன் செரும் அல்லது.கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும்.ஆனால் கூட்டமைப்பு முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்று இறங்கி வந்த பிறகும் கூடஅது தன் முடிவைச் சொல்லாம் இழுத்தடிப்பது.இதே காரணத்தைக் காட்டி முஸ்லிம் ஒருவரை முதலமைச்சமராக கேட்டுப் பெறுவதுடன் அமைச்சர் பதவியையும் தக்க வைத்தக் கொள்ளும் முயற்சியில் அது இறங்கியிருக்கிறது.

ஆனால் சுமத்திரனின் இந்த அறிவிப்பால் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கலாம் என்றாலும். ஒன்றுமே இல்லாத மாகாணசபை ஆட்சிக்காக தமிழ் மக்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைப்பதாகவே இது அமையும்.இதை விட வெற்றிலைச் சின்னத்துடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் நின்றிருக்கலாம்.கூட்டுக் கழித்துப் பார்த்தால் (கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால்) ஜெயானந்தமூர்த்தி தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன பொழுது அதை எதிர்த்த நாம் இப்போது அதற்காக வருத்தப்பட வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள யதார்த்தம் என்று ஒன்று இருக்கு.

இது தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடுதான் .நாங்கள் இங்கு இருந்து நினைப்பது போல் இனி நாட்டில் அரசியல் செய்ய முடியாது .

நாட்டில்,புலம் பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்கள் என்றுமில்லாத அளவு மாறுபட்ட சிந்தனைகளுடன் குழம்பிபோயிருக்கின்றார்கள் .

சர்வதேசம் பெரிதாக எதையும் செய்யும் போலில்லை .அவர்கள் இணக்க அரசியலைத்தான் நிர்பந்திக்க போகின்றார்கள் .உலகம் முழுக்க சுற்றி அடிக்கும் இந்த இராஜதந்திரிகள் எமது நாட்டைவிட மிக கேவலமான நிலையில் மக்கள் வாழ்வதையும் மிக சிக்கலான அரசியலையும் பார்த்திருப்பார்கள் .ஒப்பீட்டு பார்வையில் சிறிலங்கா சொர்க்கமாக அவர்களுக்கு தெரிந்தாலும் அதிசயமில்லை .

இந்தியா நிலைப்பாடு கேட்கவே வேண்டாம் .

புலிக்காச்சல் பிதற்றல் எப்ப முறிந்தது யதார்த்தத்தை கதைக்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.